ஜெயலலிதாவின் உயில் மோடி கையில்; சசிகலா கைது செய்யப்படுவாரா?
பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயில் சிக்கியுள்ளதாகல், எந்த நேரத்திலும் சசிகலா கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான முழு காரணமும், இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பல விதத்திலும் கட்டுக்கதைகள் பரவி வருகின்றன.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான முழு காரணமும், இதுவரை தெரிவிக்கப்படவில்லை. பல விதத்திலும் கட்டுக்கதைகள் பரவி வருகின்றன.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா நடராஜன், அதிமுக.,வின் பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ளார். அவர், எப்போது வேண்டுமானாலும், தமிழகத்தின் முதல்வர் பதவியேற்பார் என, அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயில், பிரதமர் மோடியின் கைகளில் சிக்கியுள்ளதாக, சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தகவல் பரவ தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டே, அவரது சொத்துகள் மற்றும் வாரிசுதாரர் பற்றி விரிவான உயில் எழுதி வைத்துவிட்டார் என்றும், அந்த உயிலை அவருக்கு நெருங்கிய பத்திரிகையாளர் நண்பரிடம் கொடுத்து, பிரபல ஆடிட்டரிடம் சேர்த்துவிட்டார் என்றும் அந்த தகவல்களில் கூறப்படுகிறது.
ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை நம்பவில்லை. அந்த உயிலை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என, அச்சப்பட்டார். எனவேதான், பத்திரிகையாளர் நண்பரிடம் கொடுத்துவைத்தார். அந்த நண்பரும், உடல்நலக்குறைவு பாதித்ததால், நெருங்கிய ஆடிட்டரிடம் கொடுத்துவிட்டார். தற்போது ஜெயலலிதாவும், அந்த பத்திரிகையாளரும் உயிருடன் இல்லை.
எனவே, தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படும் அந்த ஆடிட்டர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் எனவும், தற்போது ஜெயலலிதாவின் உயிலை, மோடியிடமே கொடுத்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உயிலைத்தான் சசிகலா உள்ளிட்ட போயஸ் கார்டன் தரப்பினர் மிகத் தீவிரமாக தேடிவருகின்றனர். உயிலை பார்வையிட்டு, பத்திரப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டார் என, டெல்லி வட்டாரங்களிலும் கூறப்படுகிறது.
ஒருவேளை சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் தள்ளப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்போது, ஜெயலலிதாவின் உயிலில் உள்ளபடி, வாரிசுதாரருக்குச் சொத்துகள் வழங்கப்படலாம் அல்லது ஜெயலலிதாவின் மரணத்தை அடிப்படையாக வைத்தே, சசிகலா டீமை சுற்றி வளைக்க, மோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போயஸ் கார்டன் தரப்பில் இதே பேச்சு அடிபடுகிறது. இதையே மேற்கோள் காட்டி, பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இது வெறும் வதந்தியா அல்லது வரும் நாட்களில் நடக்கப் போகும் அதிரடிகளா என்பது போகப் போகத்தான் தெரியும்.
இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயில், பிரதமர் மோடியின் கைகளில் சிக்கியுள்ளதாக, சமூக வலைதளங்களில் அதிர்ச்சி தகவல் பரவ தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டே, அவரது சொத்துகள் மற்றும் வாரிசுதாரர் பற்றி விரிவான உயில் எழுதி வைத்துவிட்டார் என்றும், அந்த உயிலை அவருக்கு நெருங்கிய பத்திரிகையாளர் நண்பரிடம் கொடுத்து, பிரபல ஆடிட்டரிடம் சேர்த்துவிட்டார் என்றும் அந்த தகவல்களில் கூறப்படுகிறது.
ஜெயலலிதா ஒருபோதும் சசிகலாவை நம்பவில்லை. அந்த உயிலை வெளியிட்டால், அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என, அச்சப்பட்டார். எனவேதான், பத்திரிகையாளர் நண்பரிடம் கொடுத்துவைத்தார். அந்த நண்பரும், உடல்நலக்குறைவு பாதித்ததால், நெருங்கிய ஆடிட்டரிடம் கொடுத்துவிட்டார். தற்போது ஜெயலலிதாவும், அந்த பத்திரிகையாளரும் உயிருடன் இல்லை.
எனவே, தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படும் அந்த ஆடிட்டர், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் எனவும், தற்போது ஜெயலலிதாவின் உயிலை, மோடியிடமே கொடுத்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த உயிலைத்தான் சசிகலா உள்ளிட்ட போயஸ் கார்டன் தரப்பினர் மிகத் தீவிரமாக தேடிவருகின்றனர். உயிலை பார்வையிட்டு, பத்திரப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறிவிட்டார் என, டெல்லி வட்டாரங்களிலும் கூறப்படுகிறது.
ஒருவேளை சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் தள்ளப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்போது, ஜெயலலிதாவின் உயிலில் உள்ளபடி, வாரிசுதாரருக்குச் சொத்துகள் வழங்கப்படலாம் அல்லது ஜெயலலிதாவின் மரணத்தை அடிப்படையாக வைத்தே, சசிகலா டீமை சுற்றி வளைக்க, மோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போயஸ் கார்டன் தரப்பில் இதே பேச்சு அடிபடுகிறது. இதையே மேற்கோள் காட்டி, பிரபல புலனாய்வு வார இதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டுள்ளது. இது வெறும் வதந்தியா அல்லது வரும் நாட்களில் நடக்கப் போகும் அதிரடிகளா என்பது போகப் போகத்தான் தெரியும்.
நன்றி
சமயம்
No comments:
Post a Comment