Wednesday 25 April 2018

மண், மக்கள், மகசூல்! - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..!

மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சிவக்குமார், வீ.நாகமணி
ண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது! 

தோட்ட மண், காற்றையும் தண்ணீரையும் சரியான அளவில் தனக்குள் செல்ல அனுமதித்து, பயிர் வளர ஏதுவான சூழலை உருவாக்குகிறது என்று சென்ற இதழில் பார்த்தோம். ‘பயிர்கள் வளர, மண்ணுக்கு நீர் அவசியமென்று புரிகிறது. ஆனால், காற்று தேவைப்படுமா’ என்று சிலர் கேட்கலாம். மண்ணுக்குள் வசிக்கும் உயிர்களுக்கு, ஏன் நுண்ணுயிர்களுக்குக்கூடக் காற்று அவசியம். பயிர்கள் தங்களது வேர்களில் உருவாக்கும் பொருள்களில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும். அவற்றை உடைத்து, எளிதில் தங்களுக்குத் தேவையான சக்திக்காக கார்பனாக மாற்றும் பணியை நுண்ணுயிர்கள் செய்கின்றன. இதற்கு ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.
இந்த அறிவியல் தெரியாவிட்டாலும்... ‘மண் கெட்டித்தட்டினாலோ, மண்ணில் வாசனை இல்லாமல் போனாலோ, மண்ணைப் புரட்டிப் போடவேண்டும்’ என நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். காற்று உள்செல்வதால் பயிர்கள் நன்கு வளர்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த அவர்கள், ஏர் மூலம் உழத் தொடங்கினர். ஏர் உழ, உழ வளமான மண் பஞ்சுபோல மேலே வந்தது. காற்று உள்ளே சென்றது. அதனால், நுண்ணுயிர்கள் வளரத் தேவையான சூழல் உருவானது. மேலும் அவர்கள், நுண்ணுயிர்களுக்கு உணவாக நவதானியப் பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுதனர். பயிர்ச்சுழற்சியை மேற்கொண்டனர். நெல்லுக்கு அடுத்து நிலக்கடலையையோ, பயறு வகைகளையோ பயிரிட்டதன் மூலம் அவற்றின் வேர்முடிச்சுகளில் பாக்டீரியாக்கள் பெருகின. அந்த நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள பொருள்களைச் சிதைத்து, மண்ணுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்தைக் கொடுத்தன. இப்படி நம் மண்ணையும் அதிலுள்ள உயிர்களையும் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்தனர். 

அவர்கள், மண்ணையும், எருவையும், மண்புழுக்களையும் ஒருங்கிணைத்துச் சொந்த மண்ணிலேயே, ஓர் உரத் தொழிற்சாலையைப் போல நுண்ணுயிர்களைப் பெருக்கினர். ஆனால், இன்று நடப்பது என்ன? மண் சூழலைப் பற்றிய புரிதல் இல்லாமல், அசோஸ்பைரில்லம், அசிட்டோபாக்டர், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்களைப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நுண்ணுயிர் உரத் (Microbial Fertilisers) தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டன. ‘நீ மண்ணை எப்படி வேண்டுமானாலும் பாழ்படுத்திக் கொள். மகசூலைப் பெருக்க என்னிடம் மருந்திருக்கிறது’ என அந்த நுண்ணுயிர் பாக்கெட்டுகளை நம்மிடம் விற்கிறார்கள். இன்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மண்ணுக்கும் ‘உணவே மருந்து’ என்ற கலாசாரம் மாறி, ‘மருந்தே உணவு’ என்ற போக்கு உருவாகியுள்ளது. ஒரே ஆறுதல், மருந்து இயற்கை மருந்தாக இருப்பதுதான். ஆனால், இந்தப்போக்கு நீடித்தால், மண்ணை நலமுடன் நம்மால் பாதுகாக்க முடியாது.
‘மண் நலனில், கடைகளில் கிடைக்கும் உயிர் உரங்கள் கூடாது என்பதில்லை, அவை போதாது’ என்பதே என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு. அதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும்போது வேண்டுமானால்... பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பத்தில் ஏழு மடங்காக இருக்கலாம். அவற்றை உயிர்ப்புடன் வைக்கத் தாங்கு பொருளாக (Carrier material) எரு அல்லது லிக்னைட் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நுண்ணுயிர்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, வேளாண் துறையையோ, கடைகளையோ அடைந்து, விவசாயிகளின் கைகளுக்கு வந்தடையும்போது, அவற்றின் எண்ணிக்கை பத்தில் இருமடங்கு அல்லது மும்மடங்கு என்ற அளவில் இருந்தாலே அதிகம். சில நேரங்களில், வேளாண் துறைத் திட்டங்களில் கொடுக்கப்படும் நுண்ணுயிர் பாக்கெட்டுகள், காலாவதி அடையக்கூடிய சமயங்களில்தான் விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்றன. அதனால், பாக்கெட் உயிர் உரங்கள் பயனற்றுப் போய் விடுகின்றன.

அவை பயனற்றுப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு ஸ்பூன் அளவிலான மட்குள்ள மண்ணில், கோடிக்கணக்கில் நுண்ணுயிர்கள் இருக்கும் என்று பார்த்திருக்கிறோம். கோடிக்கணக்கில் உள்ள நுண்ணுயிர்களில், நன்மை தரும் நுண்ணுயிர்களே பலவகைகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு வகை அல்லது ஒருசில வகை நுண்ணுயிர்களை மட்டுமேதான், நாம் பாக்கெட் உயிர் உரங்களில் பெற முடியும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சாதம், சாம்பார், ரசம், வற்றல் குழம்பு, மோர், பாயசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை... எனப் படைப்பதுதான் விருந்து. இவற்றில் ஏதாவதொன்றை மட்டுமோ அல்லது இரண்டை மட்டுமோ இலை நிறையப் போட்டு வைத்தால் அது விருந்தாகுமா? இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன். நம் வீடுகளில் பாலில் உறைமோர் ஊற்றித் தயிராக்குவோம். இரவு மிதமான சூட்டிலுள்ள பாலில் உறைமோரை ஊற்றி வைத்தால், மறுநாள் காலை, சுவையான தயிர் கிடைத்துவிடும். ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் எல்லா நாள்களிலும் ஒரே சுவையுடன் இருப்பதில்லை. 

பாலைத் தயிராக்கும் லேக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உறைமோரில் உள்ளன. அந்த நுண்ணுயிர்களே பாலைத் தயிராக உறையச் செய்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மற்றும் அந்த நுண்ணுயிர்களின் வகைகள், தட்ப வெப்பத்துக்கு ஏற்ப மாறுபடும். அதனால்தான் எல்லா நாள்களிலும் தயிரின் சுவை ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஆனால், கடைகளில் விற்கப்படும் தயிர் அல்லது யோகர்ட் எப்போதுமே ஒரே சுவையில் இருப்பதையும் நாம் உணர்ந்திருப்போம். அதற்கும் காரணம் உண்டு. அந்தத் தயிரைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட வகை நுண்ணுயிர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றை மட்டுமே பாலைத் தயிராக்கப் பயன்படுத்துவார்கள். அதனால்தான் சுவை என்றும் மாறுவதில்லை. பல்வேறு வகையான நன்மை செய்யும் நுண்ணுயிர்களால் உருவான தயிர் நல்லதா? ஒரே வகை நுண்ணுயிரால் உருவான பாக்கெட் தயிர் நல்லதா என்று யோசியுங்கள். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் போன்ற இயற்கை இடுபொருள்களை மண்ணில் பயன்படுத்தும்போது... அதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களும், நுண்ணுயிர்களுக்கு உணவாகும் பொருள்களும், நுண்ணுயிர்களை மண்ணில் பெருக்கி மண்ணின் நலத்தைக் கூட்டுகிறது. ஆனால், உயிர் உரங்கள், குறிப்பிட்ட வகை நுண்ணுயிர்களை மட்டுமே மண்ணில் பெருக்கும். எனவே, வீட்டுத் தயிர் வேண்டுமா அல்லது கடையில் விற்கும் பாக்கெட் தயிர் வேண்டுமா என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 

வீட்டுத் தயிர் தயாரிக்கும் முறையைப் போல, நுண்ணுயிர்களைப் பெருக்குவதன் மூலம் மண்நலத்தைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்பதற்குக் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் ‘தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை’யை உதாரணமாகக் கூறலாம். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் அவரின் பண்ணையிலிருந்து மண்புழுக்கள் பற்றி நான் பேசிய விகடன் டிவி வீடியோவை (பகுதி 1) மீண்டும் ஒருமுறை பாருங்கள். அவரின் பண்ணையில், மரங்களிலிருந்து விழும் இலை தழைகளை யாரும் பெருக்கி வாருவதில்லை. நடைபாதை, பயிரிடும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் இலை தழைகளால் மூடப்பட்டு இயற்கையான மூடாக்கு அங்கே அமைந்துள்ளது.
மாடுகள், அங்கும் இங்கும் நடமாடி நினைக்கும் இடங்களில் எல்லாம் சாணம் போடுகின்றன. அதனால், மேல் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி, மண்புழுக்களும் அதிகம் காணப்படுகின்றன. நாங்கள் அவர் பண்ணைக்குச் சென்றபோது மழைக்காலமாகக் கூட இல்லை. ஆனாலும், மண்ணை ஒரு சதுர அடி அளவுக்குத் தோண்டினால், குறைந்தது 10-15 மண்புழுக்களை அங்கே காணமுடிகிறது. ‘ஒரு சதுர அடி மண்ணில் 15-20 மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் நலமாக இருக்கிறது’ எனச் சர்வதேச அமைப்பான ‘இயற்கை வேளாண் இயக்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (IFOAM)’ தெரிவிக்கிறது. 

எனவே, தெய்வசிகாமணி அவர்களின் மண் நலமாக இருக்கிறது என்று நாம் துணிந்து கூறலாம். இப்படி மண்நலம் பேணும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், மண்ணை நலமாக்க அவர் செய்யும் முயற்சிகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.  தெய்வசிகாமணியைப் போல ஆக்கபூர்வமான வேளாண்மையைச் செய்ய வேண்டுமென்றால், நம்மூர் முதியவர்களிடம் பாரம்பர்ய விவசாய முறைகளைப் படியுங்கள். அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். மண்ணின் நலன் காக்கும் முதல்படி, நம்மிடம் ஏற்கெனவே உள்ள பொக்கிஷங்களான மரபுசார் விவசாய முறைகளை மீட்டெடுப்பதே என்பதை நினைவில் வையுங்கள். 

-முயற்சி தொடரும்

இலைவழி ஊட்டம் எப்போது கொடுக்கலாம்?

பெரும்பாலான இடங்களில் வளமற்ற மண், ஒரு பெரும் பிரச்னையாக இன்று நம்முன் நிற்கிறது. நீண்டகாலத் திட்டமாக மண்நலம் காக்கும் முயற்சியில் நாம் இறங்கினாலும், தற்காலிகமாகப் பயிர்களுக்கு நேரடியாக ஊட்டமளிப்பதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம், விளைச்சல் இழப்பையும் தவிர்க்கலாம். 

செடிகளின் இலைகளிலும், தாள்களிலும் நுண்துளைகள் (Stomata) உள்ளன. இவை நுண்ணூட்டங்களை நேரடியாக எடுத்துக்கொள்ளும் திறன் பெற்றவை. இந்த இலைத்துளைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. வெயிலில் இந்த இலைத் துளைகள் மூடிக்கொள்ளும். 

வறண்டப் பகுதிகளிலும், பாலை வனங்களிலும் உள்ள தாவரங்களின் இலைத் துவாரங்கள் நீரிழப்பைத் தவிர்க்க பெரும்பாலும் மூடியே உள்ளன. இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மீன் அமினோ அமிலம், பழத்திறமி போன்றவற்றை மண்ணிலும், இலைவழி ஊட்டமாகவும் (Foliar Feed) பயன்படுத்துகிறோம். இவற்றிலுள்ள நுண்ணூட்டங்கள், இலைகள் மற்றும் தாள்களின் வழியே உட்சென்று செடிகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். 

இலையூட்டக் கரைசல்களை, விடியற் காலை அல்லது மாலை நேரத்தில்தான் தெளிக்க வேண்டும். வெயில் நேரத்தில் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் என்பதால், நண்பகல் நேரத்தில் தெளிப்பது பயனளிக்காது. அதேபோல், 5-10 சதவிகிதம் இலைவழி ஊட்டக்கரைசல், 95-90 சதவிகிதம் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டுமென்பதே பொதுவான விதி.

நன்றி : விகடன்

ஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு!


ரும்புக்கான விலையை உயர்த்தக்கோரியும், நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும் இந்தியாவில் போராட்டம் நடக்காத நாளே இருக்காது. அந்த அளவுக்கு அனைத்து மாநிலங்களிலும் கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையிலும் இயற்கை முறையில் குறைவான செலவில் கரும்புச் சாகுபடி செய்து... அதை விற்பனை செய்ய ஆலைகளை நம்பியிருக்காமல், மதிப்புக்கூட்டல் மூலம் சொந்தமாக வெல்லம் தயாரித்து நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்.பாளையம் எனும் கிராமத்தில் இருக்கிறது ரவிச்சந்திரனின் தோட்டம். காலைப் பொழுதொன்றில் பண்ணையில் இருந்த ரவிச்சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.
“பாரம்பர்யமான விவசாயக் குடும்பம் எங்களுடையது. 1978-ம் வருஷம், படிப்பை முடிச்ச உடனே விவசாயத்துக்கு வந்துட்டேன். நெல், கரும்பு, வாழைனு விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். அப்போ முழுக்க ரசாயன விவசாயம்தான். படிப்படியா மகசூல் குறைஞ்சுக்கிட்டே வரவும், 1990-ம் வருஷத்துல மண்ணைச் சோதனைக்கு அனுப்பினேன். மண்ல சத்தே இல்லைனு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் ரசாயன உரங்களைக் குறைச்சுக்கிட்டுத் தொழுவுரம், ஆட்டு எருனு பயன்படுத்த ஆரம்பிச்சேன். கொஞ்சம் மாறுதல் தெரியவும் 2000-ம் வருஷத்துல இருந்து ரசாயன உரங்களை நிறுத்திட்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திட்டு வர்றேன். 
2010-ம் வருஷத்துல, ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் நடத்துன ஒரு பயிற்சியில கலந்துகிட்டேன். அது ரொம்பப் பிடிச்சுப் போகவும் முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிட்டேன். எங்க குடும்பத்துக்கு மொத்தமா 55 ஏக்கர் நிலம் இருக்கு. மொத்த நிலத்துலயும் நான்தான் விவசாயம் செய்றேன். இதுக்கு கிணத்துப்பாசனம்தான் கைகொடுத்திட்டு இருக்கு. 18 ஏக்கர் நிலத்துல கரும்பு, 10 ஏக்கர் நிலத்துல நெல்லி, 6 ஏக்கர் நிலத்துல சப்போட்டா, 16 ஏக்கர் நிலத்துல மரங்கள் இருக்கு. மீதி 5 ஏக்கர் நிலத்துல நெல், வாழைனு பயிர் செய்திட்டிருக்கேன்” என்று முன்கதை சொன்ன ரவிச்சந்திரன் கரும்புச் சாகுபடி குறித்துப் பேசினார்.
“இந்த மண்ணுல கரும்பு நல்லா வளருங்கிறதால, முன்னாடி அதிகப்பரப்புல கரும்புச் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். சர்க்கரை ஆலைக்கு  கரும்பை அனுப்பிட்டு இருந்தேன். அதுல கட்டுபடியான விலை கிடைக்கலை. பணத்தையும் ஒழுங்காகத் தராம இழுத்தடிச்சாங்க. அதனால, இனிமே கரும்புச் சாகுபடியே வேணாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு வந்த பிறகுதான் மறுபடியும் கரும்புச் சாகுபடியை ஆரம்பிச்சேன். அதே மாதிரி ஆலைக்கு அனுப்பக் கூடாதுனு முடிவு பண்ணி, நானே வெல்லம் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சேன். ஆண்டு முழுவதும் கரும்பு கிடைக்கிற மாதிரி, சுழற்சி முறையில 18 ஏக்கர் நிலத்துல கரும்பு நடவு செஞ்சுருக்கேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, ரெண்டு ஏக்கர் நிலத்துல அறுவடை பண்ணி வெல்லம் தயாரிச்சிட்டிருக்கேன். கரும்பு நடவு செஞ்சு எட்டு வருஷம் ஆகுது. மறுதாம்பு வந்துட்டே இருக்கு. 100 வருஷங்கள்கூட மறுதாம்பு வரும்னு சொல்றாங்க. முதல் மூணு அறுவடையில ஒரு ஏக்கருக்கு 30 டன் வரை மகசூல் கிடைச்சது. இப்போ சராசரியா ஏக்கருக்கு 25 டன் கிடைச்சுட்டுருக்கு” என்ற ரவிச்சந்திரன் விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.
“ஒரு டன் கரும்பை அரைச்சா 550 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை ரெண்டு ஏக்கர் நிலத்துல அறுவடை செய்றப்போ 50 டன் கரும்பு கிடைக்குது. அதுல இருந்து 27,500 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். அதைக் காய்ச்சுறப்போ 5,000 கிலோ வெல்லம் கிடைக்கும். ஒரு கிலோ வெல்லம் 98 ரூபாய்னு விற்பனை செய்றேன். 5,000 கிலோ வெல்லம் விற்பனை மூலமா 4,90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல எல்லாச்செலவும் போக 3,50,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. ஒரு ஏக்கருக்குச் சராசரியா 1,75,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
சுழற்சி முறையில தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுட்டுருக்கு. வெல்லமாகக் காய்ச்சி விற்பனை செய்றதாலதான் இந்த அளவுக்கு லாபம். அப்படிச்செய்யாம ஆலைக்கு அனுப்புனா, சாகுபடிச் செலவுக்குக்கூடக் கட்டுபடியாகாது” என்ற ரவிச்சந்திரன் நிறைவாக, ‘‘ஆரம்பத்துல இயற்கை முறையில உற்பத்தி செய்ற வெல்லத்தை மார்க்கெட்டிங் செய்றது கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சு. வெள்ளை நிறமா இல்லாம காபி கலர்ல இருக்கிறதால பெரும்பாலான மக்கள் விரும்ப மாட்டேங்குறாங்க. ஆனா, இதோட மகத்துவம் தெரிஞ்சவங்க தேடிப்பிடிச்சு வாங்கிட்டுப் போறாங்க. நான் ஒரு கிலோவாக பாக்கெட் போட்டு நேரடியா விற்பனை செய்றேன். மொத்த வியாபாரிகளும் எங்கிட்ட வாங்கிட்டு போய் விற்பனை செய்றாங்க. சென்னை மாதிரியான பெரிய நகரங்கள்ல நல்ல வரவேற்பு இருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.  

தொடர்புக்கு,
ரவிச்சந்திரன்,
செல்போன்: 94432 36983

வெல்லம் தயாரிப்பு 

ஒரு டன் அளவு கரும்புகளைச் சாறு பிழியும் இயந்திரத்தில் போட்டுச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சாற்றை 550 லிட்டர் கொள்ளளவு கொண்ட தாச்சுவில் ஊற்றி நெருப்பைப் பற்ற வைக்க வேண்டும். காய்ந்த கரும்புச்சக்கைகளை எரிபொருளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கரும்புச்சாறு சூடேற ஆரம்பித்தவுடன் கசடுகள் மேல்நோக்கி மிதக்க ஆரம்பிக்கும். அவற்றை வடிகட்டி மூலம் அகற்றிவிட்டு 4 கரண்டி ஆப்ப சோடாவைச் சேர்த்துக் கலக்கி விட வேண்டும். 

நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், 200 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பாகு கெட்டியாகத் திரள ஆரம்பிக்கும் சமயத்தில், அதைப் பலகையில் கொட்டிக் கிளறி கால் மணிநேரம் ஆறவிட வேண்டும். மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து ஆற விட வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் மரப்பெட்டியில் அடுக்கி வைக்க வேண்டும். எறும்பு ஏறாமலும், ஈரக்காற்றுப் படாமலும் சேமித்து வைத்தால், பல ஆண்டுகள் ஆனாலும் வெல்லம் கெட்டுப்போகாது.

இப்படித்தான் சாகுபடி செய்யணும் 

ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்புச் சாகுபடி செய்வது குறித்து ரவிச்சந்திரன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே... 

ஆலைக்கரும்புக்கு ஆவணிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நான்குமுறை உழுது, 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து பாசனம் செய்ய வேண்டும். நிலம் காய்ந்த பிறகு, ஓர் உழவு செய்து, 8 அடி இடைவெளியில் பார் பிடிக்க வேண்டும். தேவையான அளவு நீண்ட கணு உள்ள விதைக்கரணைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஜீவாமிர்தக்கரைசலில் மூழ்க வைத்து எடுத்து, ஒவ்வொரு பாரிலும் ஓர் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மறுநாள், 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 

தொடர்ந்து பத்து நாள்களுக்கு ஒருமுறை இதுபோலப் பாசனம் செய்து வர வேண்டும். நிலம் காய்வதுபோல இருந்தால், இடையில் பாசனம் செய்து கொள்ளலாம். 3-ம் மாதத்தில் கரும்புச்செடிகளின் தூரில் மண் அணைத்து விட வேண்டும். தேவைப்பட்டால் களைகளை அகற்றி வர வேண்டும். 

அவ்வப்போது கரும்புத்தோகைகளை அகற்றி, மூடாக்காகப் போட்டு வந்தால் களைகள் வராது. ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். இலைக்குருத்துப்புழு தாக்கினால், 12 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அக்னி அஸ்திரா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த பத்து மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

நன்றி : பசுமை விகடன்


``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ - பாலகுமாரன் #LetsRelieveStress

ழுத்துச் சித்தர் பாலகுமாரனைப் பற்றி எந்த அறிமுகமும் தேவையில்லை. எழுபதுகளில் எழுத்துலகில் கால்தடம் பதித்து, பாலகுமாரன் தீட்டிய நாவல்கள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை, நிகழ்த்தியவை. `மெர்க்குரிப் பூக்கள்', `இரும்புக் குதிரைகள்', `பயணிகள் கவனிக்கவும்' என நீள்கிற பட்டியலில் `உடையார்' வரை அவர் தீட்டிய நாவல்கள் காலங்களைக் கடந்து கதைகள் பல பேசும் உயிர்ச் சித்திரங்கள். அவரிடம் ``மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி?’’ என்கிற கேள்வியை முன்வைத்தோம்.  
``எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை. மன அவசங்கள் எனக்கு வந்ததே இல்லை. `ஆஹா, இனி முடிந்து போய்விட்டது. முன்னேறவே முடியாது' என்று நான் நினைத்ததில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இடது, வலதாகவெல்லாம் இருந்திருக்கிறேன். 
பாலகுமாரன்
`எது செய்யினும், இந்த இடம் தாண்டிப்போகும். வேறு ஒரு காலகட்டம் நமக்கு உண்டு.  நாம் நிச்சயம் ஜெயிப்போம்’ என்கிற நம்பிக்கை. வேறு ஒரு மொழியில் சொல்லப்போனால், ஒரு மமதை எனக்குள் இருந்தது. `நாம் ஜெயிக்காமல் போனால் வேறு யார் ஜெயிக்க முடியும்?’ ஏன்... இதற்கு என்ன அடிப்படை? நான் உழைப்பாளி. கடுமையான உழைப்பாளி. மான் கால் இடறி விழுகிற வரை புலி துரத்தும். அதேபோல ஒரு செயலைச் செய்து முடிக்கிற வரை ஓய மாட்டேன். `செய்ய வேண்டும்' என்று எண்ணுவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்வேன். இறங்கிவிட்டால், செய்து முடிப்பதுதான் எனது லட்சியமாக இருக்கும். ஆக செயல் செய்வதில் ஆர்வமும் அதை நோக்கிய மும்முரமும் திறனும் இருப்பின், இந்த மன அவசம் வராது. `இனிமே நமக்கு விடியாது’னு நினைச்சவனுக்குத்தான் இது.
பாலகுமாரன்
`எவன்லாம் திட்டினானோ அவன்லாம் மண்டி போடுவான். இனி வாழ்க்கையில், யாரெல்லாம் பெரிய கொம்புனு தன்னை நினைச்சானோ அவன் இனி வாய் பொத்தி நிற்பான்' என்று எப்போது இழிவுபடுத்தப்பட்டேனோ அப்போதே நினைத்தேன். 
மிகவும் ஏழ்மையான... புத்தியில் தெளிவில்லாதபோதும் ஒரு 'வெற்றி நம்பிக்கை' இருந்தது. அண்டர்லைன்... வெற்றி நம்பிக்கை. அதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை. என்னால உழைக்க முடியும். அவ்வளவுதான் இருந்தது. உழைச்சுக்கூட பார்த்தது இல்லை. இதற்கு இன்னும் அடிப்படையாக ஒரு விஷயம். 
ஒரு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். ராயப்பேட்டை கௌடியா மடத்தில் ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. அந்தக் கிருஷ்ணன் கோயில்ல ஒரு பிரம்மச்சாரி இருந்தார். அவர்கிட்ட போய், `நான் ஜெயிக்கணும். அதுக்கு நான் என்ன செய்யணும்?’ அப்படினு கேட்டேன். `எனக்கென்ன தெரியும்? எனக்கொண்ணும் தெரியாது. நானே இங்கேதான் கத்துக்க வந்திருக்கேன். நீ வேணா போய் கிருஷ்ணரைக் கேளு’ன்னார். 
பாலகுமாரன்
கிருஷ்ணர்கிட்ட போய் கேட்டா, அவர் ஒண்ணும் பேசுற மாதிரி தெரியலை. திரும்பவும் அந்தப் பிரம்மச்சாரிக்கிட்டேயே வந்தேன். என்ன... அவருக்கொரு 25 வயசிருக்கும். எனக்கு 18 வயசு. அந்தப் புள்ளையாண்டன், `எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லித் தர்றேன். `கிருஷ்ணா கிருஷ்ணா'னு இடையறாது 100 தடவை கோயிலைச் சுற்று... ஏதோ ஒண்ணு தெரிஞ்சு போயிடும்’னு சொன்னார். அந்தக் கோயிலைச் சுற்ற ஆரம்பிச்சேன். நூறு தடவை சுற்றி இருக்க மாட்டேன். 68 தடவையோ 69 தடவையோதான் சுற்றி இருப்பேன். அவ்வளவுதான்.
அயர்ச்சியோடு, என்னமோ மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் பரவியது. மூச்சு பெருசா கனத்து வாங்கியது. இழுத்து இழுத்து மூச்சு வாங்கியது. தள்ளியிருந்த பிரம்மச்சாரி அருகில் வந்து, `இப்போ மூச்சை இழுத்து இழுத்து விடுகிறாயே, இதுதான் வித்தை’ன்னார். 
`சுற்றி வந்ததாலதானே மூச்சை இழுத்து மூச்சை விடுறே. இப்போ சுற்றி வராம நின்ற இடத்திலேயே அதே அளவு மூச்சை இழுத்து, மூச்சை விடு. கணக்கெல்லாம் ஒண்ணும் வேணாம். நுரையீரல் முழுவதும் நிரம்பும் வரை இழுத்து நிறைந்ததும், மொத்தமா விட்டுவிடு. அப்போ நுரையீரல் தவிக்கும். வேகமாக இழுக்கும்.’ 
பாலகுமாரன்
நான் அதைத்தான் பண்ணினேன். நுரையீரல் முழுவதையும் காலிசெய்ய, நுரையீரல் தவித்தது. காற்றை முழுவதும் இழுத்தது. எப்படி இழுக்கும்? வேகமாக இழுக்கும். கடைசி அறை வரை சென்று நங்னு போய் இடிக்கும். நுரையீரலைப் பெரிதுபடுத்தியது. ரத்த ஓட்டத்தை அதிகரித்தது. மூளையைச் சுறுசுறுப்பாக்கியது. 
நண்பர்களே! அப்போது நான் ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்தேன். வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும், இரவு 12 மணி வரை படிப்பேன். பிறகு தூங்குவேன். காலை 5 மணி வரை தூக்கம். அதன் பிறகு யோகா, மூச்சுப்பயிற்சி செய்து முடித்ததும், மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிப்பேன். காலை ஏழு மணிக்கு குளிச்சிட்டு, ஏழரை மணிக்கெல்லாம் புறப்பட்டு அலுவலகம் போய்விடுவேன்.  படிப்பு, எழுத்து, யோகாசனம் இவை மூன்றும் கிரமமாக இருந்தன.
பாலகுமாரன்
வயிறு நிரம்பச் சாப்பிடறதே இல்லை. விரும்பி ஆசைப்பட்டு, `ரொம்ப ருசி, ரொம்ப ருசி'னு சாப்பிடறதே இல்லை. அது என்னவோ ஆரம்பத்திலிருந்தே அதை எதனாலோ நான் தடுத்து வைத்திருந்தேன். சாப்பாடுன்னா கடகடனு மூணு நிமிஷத்துல சாப்பிட்டு  கை அலம்பிடணும். அதை நக்கி நக்கித் திங்கிறதுன்னா எனக்கே என்னைப் பார்த்தா அருவருப்பு வரும். ருசியைப் பத்தி யாருகிட்டயும் பேசுறதுகூட அருவருப்புனு தோணும். `இன்னிக்கு நீ ரொம்ப நல்லா பண்ணி இருக்கே. வத்தக்குழம்பு...' அப்படினெல்லாம் சொல்ல மாட்டேன்.


இலையில விழுந்தது. நன்னா இருக்கோ நன்னா இல்லியோ சாப்பிட்டு முடிச்சிடுவேன். அது பத்தி அபிப்பிராயமே சொல்லக் கூடாது. பசிக்குச் சோறு, அவ்வளவுதான். அதை வாய் நிறையவெச்சிக்கிட்டு பேசுறதுங்கிறது உலக மகா ஆபாசம். உணவு பத்தின சாக்கியம் இல்லாதபோது உழைப்பு பற்றிய எண்ணம் அதிகரிக்கும். 
சாப்பிட்டதும் சின்ன இளைப்பாறுதல். தூக்கம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல ரெடியாகிடுவேன். ரொம்ப நல்லா இருக்கும். சில சமயம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாள் விடுமுறையாக இருக்கும். இரவு ரெண்டு மணி வரை எழுதலாம், படிக்கலாம்னு இருப்பேன். ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதால் மன அழுத்தம், மன அவசம் ஏற்படுவதில்லை. 
எனக்கொரு வித்தை தெரியும். அந்த வித்தை காசு கொடுக்குமா, கொடுக்காதா? அது எனக்குத் தெரியாது. ஆனா, `ஐ வில் பி தி பெஸ்ட்மேன்'. இந்த வித்தை எனக்குக் கைவந்தது. அதுக்கு என்ன பண்ணணும்? திரும்பத் திரும்ப எழுதணும். `மெர்க்குரிப் பூக்கள்' நாவலை, கிட்டத்தட்ட 400 பக்கங்கள் உள்ள நாவலை... மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதினேன். அப்போ ஒரு பர்ஃபெக்‌ஷன் கிடைச்சுது. அப்போதுதான் நாவல் எழுதுவதன் அடிப்படை எனக்குப் புரிந்தது. இதுதான் வித்தை கத்துக்கிற நேரம். வித்தை கத்துக்க நினைப்பவன் சோம்பலுக்கு இடம் கொடுக்கவே கூடாது. 
பாலகுமாரன்
யார் சோம்பித் திரிகிறான் என்றால், எவன் அதிகம் உண்கிறானோ அவன் சோம்பித் திரிவான். எவன் ருசித்து உண்கிறானோ, அவன் சோம்பித் திரிவான். நல்லா வயிறு பிடிக்கச் சாப்பிட்டு வந்துவிட்டால், உட்காரத் தோன்றும். சாயத் தோன்றும். தூங்கத் தோன்றும். ராத்திரி தூங்கவேண்டிய நேரத்துலகூட நான் தூங்கறதில்லை. `ஹேய், பாலகுமார்' அப்படின்னா டக்குனு எழுந்திரிச்சிடுவேன்.
உடம்பு அப்படியே துடிப்புலேயே இருக்கும். அதுக்குக் காரணம் மூச்சுப்பயிற்சி. குறைவாக உண்ணுதல். குறைவாகப் பேசுதல். `எனக்கு 28 வயசு, சிநேகிதக்காரங்க கூட ஒண்ணா சினிமாவுக்குப் போவோம்.' சரி. என்ன இருக்கு இதுல? 
`அந்தப் படம் மூணு தடவை பார்த்துட்டேன்டா. பரவாயில்ல வா, நாலாவது தடவை பார்க்கலாம்'னு ஒருத்தன் சொன்னா... தரித்திரம்னா இது. ஒரு படத்தை சிநேகிதக்காரனுக்காக நாலாவது தடவை பார்க்கிறான்னா அவன் பரம தரித்திரன். அவன் நேரம்கொல்லி. 
பசித்திருத்தல், மௌனமாக இருத்தல், விழித்திருத்தல். நாலு மணி நேரம் தூக்கம் போதும் சார். ஒரு வாலிப வயசுல நாலு மணிநேரத் தூக்கம் போதும். மத்திம வயசுல ஆறு மணி நேரம். என்னை மாதிரி 75 வயசாயிடுச்சா? அப்போ எட்டு மணி நேரம் தூங்கலாம். அதுவே எங்கே தூங்குறேன்? அதுல ரெண்டு மணி நேரம் முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.
ஆக, என்னை நான் உற்றுப் பார்க்கிற நேரம் அதிகரிக்கிறது. `பாலகுமாரன் என்ன பண்ற நீ? ஏதோ சின்ன கோபம் இருக்கே... அது என்ன கோபம்?’ அந்தக் கோபத்தை நான் அப்படியே பிளந்து போட்டுவிடுவேன். 
யாரோடு பேசுவதற்கு ஒண்ணும் இல்லைனு தோணுதோ, அவன் கத்துக்கிறதுக்கும் ஒண்ணுமில்லைனு அர்த்தம். இது வந்துடுச்சுனா... இந்தத் தெளிவு இருபது வயதில் வந்துவிட்டால், யாரோடு பேச வேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்போது பேச வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எவ்வளவு நேரம் விழித்திருக்க வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிடக் கூடாது, எப்போது மற்றவர்களோடு பேச வேண்டும்,  எப்போது தன்னோடு பேச வேண்டும் என்கிற தெளிவு நமக்கு இருக்க வேண்டும். 
`சார், இன்னிக்கு முழுக்க நீங்க சொன்ன மாதிரி இருந்தேன். ஆனா, நான் ஜெயிக்கலியே சார்'னு கேட்டால், இன்னிக்கு இல்லைனா பரவாயில்லை. நாளைக்கு நீ ஜெயிப்பே. ஒரு ரிசல்ட் வருவதற்கு நாலு வருஷம் அஞ்சு வருஷம் ஆகும். ஜெயிக்கணும்ங்கிற முயற்சி அந்த மனக்கிலேசத்தைத் தீர்க்கும். 
பாலகுமாரன்
`வேலை இருக்கே’னு நொந்துக்கிறதுக்கெல்லாம் நேரமே கிடையாது. `ஐ திங் ஐ யம் எ ஃபெயிலியர்' இப்படி அழுவுறதுக்கே நேரம் கிடையாது. ஒண்ணு எழுதணும்... இல்லை படிக்கணும். இல்லை வேற ஏதாவது செய்யணும். நீங்க சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவா? விற்ற கடைக்கே மறுபடியும் போங்க. `சும்மா வந்தேன் அண்ணாச்சி... நல்லா இருக்கீங்களா?' அப்படினு கடைக்காரங்ககிட்ட பேசுங்க. எந்த நேரமும் சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவாகவே இருங்க. 
ஆசிரியரா... எந்த நேரமும்  ஆசிரியராக இருங்கள். மனதுக்குள் பாடம் நடத்திக்கொண்டே இருங்கள். நீங்கள் டான்ஸ் மாஸ்டரா? உள்ளே ஜதி போட்டுக்கொண்டே இருக்கணும். இதுதான் தன்னுடைய செயலோடு ஒன்றிப் பிணைந்திருத்தல். அவனுக்கு மன அழுத்தம் மன அவசம் வராது. எவனுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லையோ, எவன் சோம்பலின் உச்சகட்டமோ அவனுக்கு எல்லாவித மன அழுத்தமும் வரும். எனவே, நீங்கள் உங்களை ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்'' எனக்கூறி விடை கொடுத்தார்.

ஆன்லைனில் எம்பிஏ படிக்கிறதால என்னென்ன நன்மைகள் தெரியுமா?



MBA என்பது உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு படிப்பு. MBA உங்களுக்குள் இருக்கும் மேலாண்மைத் திறனை வெளிக்கொணர்கிறது. இந்தக் கல்வி மாணவர்களுக்கு முழுமையான வியாபார மேலாண்மை நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதால், ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் இதைத் தங்கள் பணியிடங்களில் பயன்படுத்த முடிகிறது. ஆன்லைன் கல்வித்திட்டத்தில் சிறந்து விளங்கும் MIBM குளோபலில் பல்வேறு கல்வித் தேர்வுகள் உள்ளன. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் உள்ள மேலாண்மை வகுப்புகளின் நன்மைகளை புரிந்துகொள்ள உதவும் பல கவுன்சிலர்கள் இங்கே உள்ளதால் மிகவும் எளிதாகிறது. 
 இந்த ஆன்லைன் MBA வகுப்புகள், உங்களுக்கு மேலாண்மை கருத்துகள் மற்றும் கோட்பாடுகளுக்கு அப்பால் பல விஷயங்களையும் கற்றுத் தருகின்றன. ஆன்லைன் MBA என்பது வியாபார மேலாண்மை மேற்படிப்பு ஆகும். இது கல்லூரியில் உள்ள அதே போன்ற பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அதே சமயம், ஒரே இடத்தில் அமர்ந்து பாடங்களை படிக்கத் தேவையில்லை என்ற சுதந்திரத்தை அளிக்கிறது. அவரவர் வேகத்திற்கு தகுந்தாற்போல பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. சிறந்த கல்வியறிவை அளிப்பதோடு, கற்ற பின் கிடைக்கும் நல்ல சம்பளமும், இந்தப் படிப்பு முக்கியத்துவம் பெற காரணமாகிறது. இது, பொதுவாக இரண்டு வருட முழு நேர படிப்பாக இருக்கிறது. புதிதாக பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், வியாபார உலகைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், பணியில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் தேர்ந்தெடுத்துப் படிக்க ஏதுவாக இருப்பது இரண்டு வருட ஆன்லைன் எம்பிஏ படிப்பு. நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது என்பதால் ஆன்லைன் பல்கலைக்கழகத்தில் சேர்வது மிகவும் எளிது.
EMBA என்பது  வியாபார மேலாண்மை நிர்வாக அதிகாரிக்கான மேற்படிப்பு ஆகும். இந்த மேற்படிப்பு, தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட விரும்பாமலும், மேற்படிப்பு படிக்க விருப்பமும் உள்ள நபர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பணியாளர்களுக்கு, மிகுந்த பயனளிக்கிறது ஆன்லைன் EMBA. இது அவர்களுக்கு பணியில் இருந்துகொண்டே படிப்பையும் தொடர சரியானத் தேர்வாக இருக்கிறது. EMBA படிப்பு MBA படிப்பின் அதே பாடத்திட்டத்தைக் கொண்டிருந்தாலும் வேகமாக படித்து முடிக்கும் வகையில் உள்ளது. ஆனால், EMBA, எம்பிஏ-வைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு டொமைன்களையே தேர்வாக அளிக்கிறது. இந்த எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ பயில பணி அனுபவம் நிச்சயம் அவசியமாகிறது.
BBA படிப்பிற்கு... 
பிபிஏ படிப்பு, மாணவர்களுக்கு மேலாண்மை பிரச்னைகள் மற்றும் நிஜ வாழ்வில் வியாபாரத்தில் வரும் பிரச்னைகளைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது. ஆயினும் இது சற்று மேலோட்டமான துவக்கநிலை மட்டுமே ஆகும். ஒரு சாதுர்யமான மாணவன் உயர்கல்வியில், சிறந்த விருப்பப் பாடத்தினை தேர்வு செய்வான். எம்பிஏ போன்ற உயர்கல்வி பாடத்திட்டம், வியாபாரத்தின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழ்ந்த பாடத்தை நமக்குப் பயிற்றுவிக்கிறது. கற்பவர்களின் உள்ளே இருக்கும் தலைமைப் பண்பை வளர்க்கிறது. பிபிஏ படித்து முடித்த மாணவர்கள், உடனடியாக பணியில் சேர்வது அவர்களுக்கு அனுபவத்தை அளிக்கும். அந்த அனுபவம், அவர்கள் மேன்மேலும் வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு, கல்லூரியில் சென்று படிப்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் பள்ளிகள் பேருதவியாக இருக்கின்றன. பல்வேறு பாடத்திட்டங்கள், விருப்பப்பட்ட பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி, படிக்கும் நேரம் ஆகிய வசதிகளை ஆன்லைன் பட்டப்படிப்புகள் அளிப்பதால், பணி செய்துகொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. 
MIBM குளோபல், மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதால், படித்துக்கொண்டே வேலை செய்ய விரும்புவர்களின் தேவையை முழுமையாகத் தீர்க்கிறது.  ஆன்லைன் எம்பிஏ பாடத்திட்டம், கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது ஆகும் செலவைவிட மிகவும் குறைவாக இருப்பதால், இது மிகவும் அனுகூலமான பயனை அளிக்கிறது. மேலும் மாணவர்கள் கடன் சுமையை மனதில் கொண்டு, MIBM குளோபல் கல்விக் கட்டணத்தை பல்வேறு வழிமுறைகளில் செலுத்த வழிவகை செய்துள்ளது. கொடுக்கப்பட்ட தேர்வுரிமைகளில், பிபிஏ படிக்க, ஆன்லைன் முறையில் பல சலுகைகள் இருப்பதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக இருக்கிறது. பிறகு, மேற்படிப்பையும் MIBM குளோபலில் தொடர்ந்தால், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவனின் 
“ஸ்மார்ட்” தேர்வாக அது இருக்கும்!

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்த நிர்மலாதேவி- புதிய தகவல்

















விருதுநகர்:

பேராசிரியை நிர்மலா தேவி கைதான நாள்முதல் அவரை கணவர் சரவண பாண்டியன் வந்து சந்திக்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவரது உறவினர் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.

திருமணமானது முதல் நிர்மலாதேவிக்கும், அவரது கணவர் சரவணபாண்டியனுக்கும் சுமூகமான உறவு இருந்தது இல்லை.

ரெயில்வே பொறியாளராக சென்னையில் பணியாற்றிய சரவணபாண்டியன், நிர்மலாதேவி செயல்களால் அதிருப்தி அடைந்து அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

அவர் ஊர் திரும்பிய பிறகும் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் விவாகரத்து செய்ய முயன்றபோது நிர்மலாதேவி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் சரவணபாண்டியன் அதனை கைவிட்டு விட்டார்.

இதற்கிடைய மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்த நிர்மலாதேவி கடந்த ஆண்டு திடீரென மாயமாகி விட்டார். ஒரு மாதமாக அவர் வீடு திரும்பாததால் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அப்போது நிர்மலாதேவி மும்பையில் உள்ள ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. அவரை உறவினர்கள் சமாதானம் செய்ததின் பேரில் ஊர் திரும்பினார். இருப்பினும் சரவண பாண்டியனுக்கும், அவருக்கும் மன ஒற்றுமை ஏற்படவில்லை. இதனால்தான் கடந்த மாதம் முதல்வாரம் விவாகரத்து கேட்டு அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரவண பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்

ஓராண்டு தடையினால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்

















சிட்னி:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. 

இதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது.

பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். செய்தியாளர் சந்திப்பின்போது மக்களிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடமும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். 


இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வார்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். சிட்னி நகரில் 10 மில்லியன் டாலர் செலவில் வார்னர் ஒரு வீடு கட்டி வருகிறார். தற்போது இந்த வீட்டின் கட்டுமான பணிகளை வார்னரும் இணைந்து செய்து வருகிறார். வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். #DavidWarner #BallTamperingIssue #constructionworker

Friday 20 April 2018

பாலியல் தொல்லை கொடுப்பதாக கதறி அழுத நடிகைகள் - மேலும் பலரின் பெயர்கள் வெளியாகியதால் பரபரப்பு



















நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்து இருப்பது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளன. ஸ்ரீரெட்டி மற்றும் அவரை ஆதரிக்கும் நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் ஐதராபாத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-



“தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.

நடிகர் பவன் கல்யாண் அமராவதியில் ரூ.200 கோடியில் வீடு கட்டுகிறார். நடிகைகள் கஷ்டங்களை அவர் கண்டுகொள்வது இல்லை. கோனா வெங்கட், அப்பாராவ் உள்பட பலர் பெண்கள் கற்பை சூறையாடுகிறார்கள். புதிய படங்களில் வாய்ப்பு கேட்கும் ஆண்களிடம் பணம் கேட்கிறார்கள். பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். 80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்”.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

பேட்டியின்போது செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கதறி அழுதனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #SriReddy #SriLeaks 

மணப்பெண்ணை தேர்வு செய்ய மறுப்பு தெரிவித்த ஆர்யா


















நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமான அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பெண் தேடியும் பொருத்தமான மணப்பெண் அமையவில்லை. இதனால் டெலிவிஷன் நிகழ்ச்சி மூலம் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடிவு செய்து தன்னை மணக்க விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் அவரை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். அதில் இருந்து 16 பேரை தேர்வு செய்து நேர்காணல் நடத்தி வந்தார்.



இந்த நிகழ்ச்சி டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு பெண்ணாக வெளியேற்றப்பட்டு சுஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகிய 3 பேர் இறுதி போட்டிக்கு வந்தனர்.

இவர்களில் இருந்து ஒருவரை ஆர்யா மணப்பெண்ணாக தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. மூன்று பேருமே மணக்கோலத்தில் வந்து இருந்தனர். ஆனால் யாரையும் மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்யவில்லை. ஒருவரை தேர்வு செய்தால், மற்ற 2 பெண்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மனம் புண்படுவார்கள். எனவே இந்த மேடையில் என்னால் மணப்பெண்ணை தேர்வு செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு

















புதுடெல்லி:

நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

எனவே, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்என பரவலான கருத்து முன் வைக்கப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.

இதற்கிடையே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை 27-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #tamilnews

Wednesday 18 April 2018

பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க

பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க

















நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை….

* சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

* மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.



* பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.

* மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

* எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.



* எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்.

* உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.

* மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

* சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

கோடை காலத்தில் தயிர் - மோர் சிறந்தது எது?

கோடை காலத்தில் தயிர் - மோர் சிறந்தது எது?

















சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

பால், தயிர் போன்ற உணவுப் பொருள்களை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால்தான் அது, உடல் சூட்டை உண்டாக்கும். மற்றபடி தயிர் நியூட்ரலைஷிங் ஏஜென்ட்டாகச் (Neutralizing Agent) செயல்படும். உடலின் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்தும். வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும். தயிரில் உள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan) செரோட்டனினாக (Serotonin) மாறி மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும். 

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும். மோருடன் இஞ்சி, பெருங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம். சாதமாகச் சாப்பிடும்போது தயிரைப் பயன்படுத்தலாம், தவறில்லை. 

ஆயுர்வேத மருத்துவத்தின்படி  தினமும் சாப்பிடக் கூடாத உணவுகளில் தயிரும் ஒன்று. தினமும் தயிர் சாப்பிட்டால் உடலில் அதிகக்மருத்துவர் பாலமுருகன் கொழுப்பு, சீழ்கட்டி, சரும நோய்கள், சுவாசப் பிரச்னைகள், இருமல் போன்றவை உண்டாகும் என ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 



தயிர்தான் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அதிலிருந்து வெண்ணையைக் கடைந்து எடுத்துவிட்டு மோராகப் பயன்படுத்தலாம். மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும். கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். 

உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும். ஆனால் தயிர் உடலுக்குச் சூட்டைத்தான் கொடுக்கும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும். 

தயிரில் மொத்தம் ஐந்து வகைகள் இருக்கின்றன. புளிக்காத தயிர், இனிப்புச் சுவையுடைய தயிர், புளித்த தயிர், மிகவும் புளித்த தயிர், பயன்படுத்தவே முடியாத அளவுக்குப் புளித்த தயிர். இவற்றில் சரியான அளவில் புளித்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்ளக் கூடாது. உடல் குளிர்ச்சிக்காக இதை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. அது சூட்டைத்தான் ஏற்படுத்தும். 

தயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அது மோர் கிடையாது. தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர். 

கோடைக்காலத்தில் தயிரை விடவும், மோரைப் பயன்படுத்துவதே சிறப்பான நன்மை தரும்.