Tuesday 21 February 2017

‘‘இனி பேங்க் அக்கவுண்ட் வேணாம்; ஆதார் எண்ணே போதும்’’ மத்திய அரசு அதிரடி

‘‘இனி பேங்க் அக்கவுண்ட் வேணாம்; ஆதார் எண்ணே போதும்’’ மத்திய அரசு அதிரடி


நாடு முழுவதும் உள்ள வங்கிகளில்  கணக்கு வைத்திருப்போர் ஆதார் எண் பதிவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, மொத்தம் 40 கோடி வங்கிக் கணக்குகள் இதுவரை ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், பேடிஎம், ஏர்டெல், இந்தியா போஸ்ட் ஆகியவைகளின் மூலம் பேமெண்ட் பேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க் கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக துவங்கப்பட்டது.
இந்நிலையில், மக்களின் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், இனி வங்கி கணக்கு இல்லாமலேயே பணத்தை செலுத்தவும், பெறவும் முடியும். இதற்காக ஆதார் எண் மூலம் சேவையை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துவருகிறது.
இந்த சேவை, இந்திய முழுவதும் உள்ள சுமார் 650 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: