Thursday 29 March 2018

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

















வாஷிங்டன்:

வடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாகவும், அணுகுண்டுகளை வீசப்போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டி வந்தார்.

அதற்கு பதிலடியாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதன் பிறகு கிம் ஜாங் உன் சற்று இறங்கி வந்தார்.

இதற்கிடையே தென்கொரியா தூது குழு ஒன்று வடகொரியாவுக்கு சென்றது. அவர்கள் ‘கிம் ஜாங் உன்’னை சந்தித்து பேசினார்கள். அப்போது கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

இந்த வி‌ஷயத்தை தூது குழுவினர் அமெரிக்க அதிபரிடம் கூறினார்கள். அதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கிம் ஜாங் உன் சீனா வந்துள்ளார். அவர் சீன அதிபர் ஷி ஜின்பின்னை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிடும்படி அவர் வட கொரிய அதிபரை கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவலை சீன அதிபர் அமெரிக்க அதிபருக்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.



அதில், வடகொரிய அதிபரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்து இருக்கிறேன். கிம் ஜாங் உன் தன்னிடம் பேசியது பற்றி சீன அதிபர் எனக்கு தகவல் அனுப்பினார். அந்த பேச்சு நல்ல விதமாக முடிந்துள்ளது. அதை வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் துரதிருஷ்டவசமாக வடகொரியா மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார். #tamilnews

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

















அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-


இந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.

நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


முன்னதாக மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் பேசும் போது, திராவிட கட்சிகள் போல் இல்லாமல் நாம் தனித்து செயல்பட வேண்டும். அந்த கட்சிகளில் வட்டத்திற்கு ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிக்கு ஒரு செயலாளரை நியமிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினிகாந்த் ஒப்புதலுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்- கே.அன்பழகன், இணை செயலாளர் ஆர். வெங்க டேசன்(எ) ரஜினி பாபு, துணை செயலாளர்கள் - இ.ராஜமூர்த்தி, டி.கல்யாண குமார், வி.முருகன்.

மகளிர் அணி செயலாளர் - விஜயலட்சுமி டொமினிக் ராபர்ட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நவீன் குமார்.

இந்த நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர் களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rajinikanth #RajinikanthPoliticalEntry

Tuesday 20 March 2018

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

















பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். ஆனால், கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது புரியும்போது மனம் உடைந்துபோகிறாள்.

பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் சொல்லும் நியாயமான காரணங்களைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அன்பானவராக, அழகானவராக, அதிக சம்பளம் வாங்குபவராக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருப்பதோடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்யும் நபராக இருக்க வேண்டும். தனக்கென இடமும், நேரமும் ஒதுக்க வேண்டும். தன்னைப் பாராட்டுவதோடு, ரசிக்கவும், வர்ணிக்கவும் வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பதுண்டு.

இப்படி சர்வ லட்சணமும் பொருந்திய ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ள நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், எல்லா மனிதரிடத்திலும் நிறைகுறைகள் இருக்கும். ஒருவர் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருப்பது சாத்தியமில்லை.



‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதுபோல காதலரோ, கணவரோ அவரது குறைநிறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். எல்லா மனிதர்களுமே குறைகள் உடையவர் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பார்க்கும் Optimist மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெரிய வேலையில் கணவர் இருந்தால், அதற்கேற்றார்போல் அலுவலகத்திலும் அவருக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் ‘என்னைவிட வேலை முக்கியமா’ என்று கேட்பதால், சண்டை சச்சரவுகள்தான் மிச்சமாகும்.

கணவன், மனைவி இடையே சரியான புரிதல் இருத்தல், தன் இணையரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, பொது இடத்தில் மற்றவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுதல், யார் தவறு செய்தாலும் தனியாக அழைத்து அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்துரைத்தல், இருபாலரும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை புரிந்து நடத்தல் போன்றவற்றைப் பின்பற்றினால், அது மேற்சொன்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்

குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்

















தேவையான பொருட்கள் :

கேரட் - 2
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
பொடித்த முந்திரி, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப



செய்முறை :

பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவைக்கவும். 

கேரட்டைக் கழுவித் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். 

குக்கரில் நெய்விட்டு, கேரட்டைச் சேர்த்து வதக்குங்கள். 

காய்ச்சிய பாலை அரை கப் எடுத்து அதில் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.. 

ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து மீதமுள்ள பாலை கேரட்டுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். 

குளிர்ந்தவுடன் எடுத்து பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, குடிக்கக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

சூப்பரான கேரட் கீர் ரெடி.

Tuesday 13 March 2018

பெண்களின் அழகை மெருகூட்டும் புடவை

பெண்களின் அழகை மெருகூட்டும் புடவை

















பெண்கள் என்றாலே, அனைவருக்கும் நினைவில் முதலில் வருவது சேலை அணிந்த உருவம் தான். ஆனால், இன்றைய காலத்தில் இருக்கும் அனைத்து ஆடைகளையும் ஆணும் பெண்ணும் போட்டிபோட்டுக் கொண்டு அணிய ஆரம்பித்துவிட்டனர். 

இந்த நிலையில் பெண்களான நாம் நமக்கே உரித்தான சேலையை நேர்த்தியாய் கட்டினாலேயே, பெண்களின் அழகு மேம்பட்டு தெரியும்..! சேலைகளில் பல ரகங்கள் இருந்தாலும், பெண்கள் காட்டன் சேலையை உடுத்தினால் வரும் அழகான மிடுக்கான தோற்றத்திற்கு இணையான தோற்றத்தை வேறு எந்த ஒரு சேலையும் தந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட காட்டன் சேலையை கொசகொசவென்று கட்டாமல், நேர்த்தியாய் கட்டினாலே போதும்; பெண்மையின் அழகு உயர்ந்து புலப்படும். இந்நிலையில் ஒல்லியான பெண்களால் சற்று எளிதாக காட்டன் சேலையை கட்டிவிட இயலும்; ஆனால் சற்று எடை அதிகம் உள்ள பெண்கள் காட்டன் சேலையை நேர்த்தியாய் கட்ட பாடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. 



கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண் கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது.

இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுடிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் குறைவானவர்களே. சேலை கட்டினால் பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.

பொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீள முடையதாக இருக்கும். சேலை கட்டு ம்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொ ள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்தி லிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்ல து 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்க படும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப் படுகிறது.

Sunday 11 March 2018

பெண்களுக்கு உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்

பெண்களுக்கு உடல் பருமனுக்கு காரணமான ஹார்மோன்

















பெண்களுக்கு உடல் பருமன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் அதிகமாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமாக சாப்பிடுவதும் கிடையாது. ஆனால் உடல் எடை கூடிவிட்டதே என பலர் சொல்லக் கேட்டிருப்போம்.

சரியாக உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் ஆண்களுக்கு உடல் எடை கூடுவதில்லை. ஆனால் பெண்களுக்கு ஏன் உடல் எடை கூடுகிறது ஏன் தெரியுமா? ஹார்மோன் சம நிலையில்லாமல் இருப்பதுதான் காரணம்.

இதனால் சும்மா வீட்டில் உட்கார்ந்தாலே உடல் எடை கூடிவிடும். அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.

அப்படி எந்த ஹார்மோன்கள் உங்கள் உடல் எடை கூட காரணமாகும் என தெரிந்து கொள்ள கீழே படியுங்கள்.

பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைதான் ஹைபோதைராய்டிஸம். இதனால் அளவுக்கு அதிகமான உடல் பருமன், மன தளர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், வறண்ட சருமம் ஆகியவை உண்டாகும். தைராய்டு குறைவினால் வளர்சிதை மாற்றம் குறைந்து கொழுப்பு செல்கள் திசுக்களிலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. எதிர்மாறாக தைராய்டு அதிகரித்தால் உடல் எடை மிகவும் குறைந்துவிடும்.

ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பாலின ஹார்மோன். இது சுரக்கும் வரை பல ஆபத்தான நோய்களிலிருந்து பெண்களை காப்பாற்றும். ஆனால் மெனோபாஸுக்கு பிறகு இது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கலோரிகளை கொழுப்பாக மாறி உடல் பருமனை உண்டாக்கிவிடும்.



மெனோபாஸ் சமயத்தில் இந்த ஹார்மோனும் குறைந்துவிடும். இது குறைவதனால் உடல் பருமன் உண்டாகாது. மாறாக உடலில் நீர் தங்கி, உடல் பருமனை தந்துவிடும்.

சில பெண்கள் PCOS எனப்படும் கருப்பை நீர்கட்டி பாதிப்பு இருக்கும். அதாவது கருப்பையில் நிறைய நீர்கட்டிகள் உருவாகி, மாதவிலக்கை சீரற்றதாக்கிவிடும். இதனால் உடல் பருமன், முகத்தில் நிறைய முடி ஆகியவை உண்டாகும். இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரான் என்ற ஹார்மோன் அதிகரிப்பதால்தான். இதனால் ஹார்மோன் சீராக இல்லாமல் உடல் பருமனை தந்துவிடும்.

இன்சுலின் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை ஒழுங்குபடுத்த தேவையான ஹார்மோன். அது குறையும்போது அதிக குளுகோஸ் அளவு அதிகரித்து கொழுப்பாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும்.

கார்டிசால் அதிகரிக்கும்போது பசி அதிகரிக்கும். தூக்கமின்மையும் உண்டாகும். இதனால் மன அழுத்தமும் ஏற்படும். உடல் பருமன், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை எல்லாம் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டது. இதற்கு கார்டிசால் ஹார்மோன் அதிகரிப்பதும் காரணமாகும்.

மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை

மன அழுத்தம் மற்றும் கருத்தரிப்பின்மை

















குறைந்தது ஒரு குழந்தையை பெற்றிருக்கும் தம்பதிகளை விட குழந்தை இல்லாத தம்பதிகள் அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆண்களில், அதிக அளவு மன அழுத்தம் தரும் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) எனும் ஹார்மோன் காரணமாக விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரம் குறைவது, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது இதன் விளைவாக விறைப்புத்தன்மை குறைவு, விந்தணு ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

பெண்களில், அதிக மன அழுத்தம் அவர்களது கருமுட்டை வெளியேறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கற்றதாக மாறச்செய்கிறது. கருமுட்டை வளர்ச்சி இன்மை ஏற்படும் மற்றும் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியேறுவது நடைபெறாமல் போய்விடும். இதனால் அவர்கள் கருத்தரிப்பது சாத்தியமற்றதாகி விடுகிறது.

கருத்தரிப்பின்மையைக் குணப்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்பவர்களின் மன அழுத்தம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்கு இருக்கும் மன அழுத்த அளவிற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் கருத்தரிப்பின்மைக்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது உளவியல்ரீதியிலான காரணங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. மன அழுத்தத்தின் அளவு கருத்தரிப்பின் வெற்றி விகிதத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. 

ஒரு தம்பதி கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துகொண்டும் கருத்தரிக்கவே இல்லை யென்றால், கருத்தரிப்பு சிறப்பு மருத்துவரைப் பார்த்து அவர்களது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த தம்பதிக்கு இருக்கும் பிரச்னை என்னவென்று பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுவிட்டால், அதற்கான சிறந்த சிகிச்சையை அளிக்கும்போது மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அளிப்பதும் மிக முக்கியமாகும்.

Saturday 10 March 2018

திருச்சி மத்திய சிறை மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் அனுமதி

திருச்சி மத்திய சிறை மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் அனுமதி

















திருச்சி:

வாகன ஆய்வின் போது ஏற்பட்ட பிரச்சனையில் எட்டி உதைத்ததில் ரோட்டில் விழுந்து தலையில் காயம் அடைந்து பலியான உஷா தொடர்பான வழக்கில் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் நேற்று காலை 7 மணிக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.6 நீதிபதி ‌ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 21-ந்தேதி வரை அவரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தையல் போட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறை ஆஸ்பத்திரியில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு மற்ற கைதிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சிறையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் உள்ளார். தனது செயல் உஷாவின் உயிரை பறித்ததோடு தமிழக காவல் துறைக்கும் தன்னால் அவப்பெயர் ஏற்பட்டு விட்டதே என புலம்பியுள்ளார். அத்துடன் தனது குடும்பத்தினரின் நிலையையும் கூறி புலம்பியுள்ளார்.


உஷா கர்ப்பிணி என தெரிய வந்ததும் காமராஜூக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் சிறையில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை. சோகத்துடன் காணப்படுகிறார். அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் சிறைக் காவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

உஷாவின் மரணம் சிறைக்கைதிகளுக்கும் தெரிந்துள்ளது. சிறையில் உள்ள ரவுடிகள் ஏற்கனவே போலீசார் மீது கோபத்தில் உள்ளனர். இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு சிறையில் கைதிகள், ரவுடிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என் பதற்காக 24 மணி நேரமும் காமராஜ் தங்கி சிகிச்சை பெறும் சிறை ஆஸ்பத்திரியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன?

கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன?

















சென்னை:

சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலில் வைத்து வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அஸ்வினியை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய நபரை அங்குள்ளவர்கள் அடித்து, உடைத்து கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அழகேசன்

கொலை செய்த நபர் மதுரவாயலைச் சேர்ந்த அழகேசன் (28) என்பது தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் அழகேசன் தொல்லை கொடுப்பதாக அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அவர் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஷ்வினி ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் அனைத்து மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றியது. 

சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

















தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்  தூள் - சிறிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10
மிளகு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா, மிளகாய்த்  தூள்,  மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். 

அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான நண்டு வறுவல் ரெடி.


Monday 5 March 2018

உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

















தேவையான பொருட்கள் :
 
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு  விழுது - 10 கிராம்
 மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
 மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - சிறிதளவு
 தனியாத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு  - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு


 
செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டு எலும்பை நன்றாக சுத்தம் ஒன்றும் பாதியாக நசுக்கி வைக்கவும். 
 
கடாயில் 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும்.
 
அடுத்து அதில் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சத்தூள்உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தண்ணீர் 5 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து தேவையான அளவு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 
சுவைப்பார்த்து அதற்கேற்றவாறு மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து கொள்ளலாம்.
 
சுவைக்க சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.



ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை - திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்



















கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.

நடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

திவ்யபாரதி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.

கங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.


தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார். நகைச்சுவை நடிகை சோபனா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.

நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள்.