Tuesday, 7 February 2017

ராமர் தம்பி லக்ஷ்மணனிடம் ராவணன் கூறிய 3 ரகசியங்கள்

லக்ஷ்மணனிடம் ராவணன் கூறிய 3 ரகசியங்கள்

இந்து மதத்தில் பெரிதாக போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் சாகும் தருவாயில் இருந்த ராவணன், ராமனின் தம்பி லக்ஷ்மணனிடம் கூறிய 3 வாழ்க்கை ரகசியங்கள் குறித்து கீழே காணலாம்.

இலங்கையை ஆண்ட மாமன்னர் ராவணன், ராமரின் மனைவி சீதையின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, அவரை கவர்ந்துச் சென்றதால் ராமனுடன் போரிட்டு ராவணன் வீர மரணமடைந்தார். போரின் முடிவில் தோல்வியைத் தழுவிய ராவணன் உயிருக்கு போராடிய நிலையில், ராமர் தனது ஆருயிர் தம்பி லக்ஷ்மணனை அனுப்பி வாழ்க்கை பாடத்தை கற்று வருமாறு கட்டளையிட்டார்.


அண்ணன் ராமரின் ஆணையை ஏற்று ராவணன் அருகே சென்ற லக்ஷ்மணனிடம் ராவணன் எதுவும் கூறவில்லை. சில நிமிடம் ராவணனின் தலை பக்கம் நின்றுவிட்டு திரும்பிய லக்ஷ்மணன், தன்னிடம் ராவணன் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த ராமர், ஒருவரிடம் நாம் பாடம் கற்கும்போது, கற்பிப்பவரின் தலை பக்கம் நிற்காமல் கால் பக்கமாக நின்று கற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து மீண்டும் சென்று ராவணனின் கால் பக்கமாக நின்ற லக்ஷ்மணனிடம் வாழ்க்கைக்குரிய 3 முக்கிய பாடங்களை கற்பித்தார்.

1. முதலாவது பாடம்: வாழ்வில் எந்த ஒரு சுப காரியத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும். அதேபோல் கெட்ட காரியத்தை எந்த அளவிற்கு தாமதப்படுத்த வேண்டுமோ அந்த அளவிற்கு தாமதமாக செய்ய வேண்டும்- ராமனை பற்றி தெரியாமல் தங்குமிடத்திற்கு தாமதமாக வந்ததால் தனக்கு இந்த நிலை நேர்ந்துவிட்டது என்று ராவணன் கூறியுள்ளார்.

2. இரண்டாவது பாடம்: எப்போது நமது எதிரியை குறைவாக எண்ணக் கூடாது. குரங்கையும், கரடியையும் குறைவாக மதிப்பிட்டதால் அவர்களுடனான போரில் தோற்றேன். பிரம்மனிடம் சாகா வரம் கேட்ட ராவணனுக்கு, குரங்கு மற்றும் மனிதனால் மட்டும் உன்னை கொல்ல முடியாது என்று பிரம்மா கூறினார். அப்போது, இந்த 2 உயிரினங்களுக்கு தன்னை கொல்ல தகுதியில்லை என குறைத்து மதிப்பிட்டதால் தான் வாழ்க்கையை இழந்ததாக ராவணன் கூறியுள்ளார்.

3. மூன்றாவது பாடம்: வாழ்க்கையில் ஒருவரது ரகசியத்தை எந்தக் காரணம் கொண்டும் உலகத்தில் யாரிடமும் கூறக் கூடாது. நான் அப்படி விபிஷனிடம் தனது மரணம் குறித்த ரகசியத்தை பகிர்ந்தது தான் என் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு என்று கூறியுள்ளார்.

ஸ்ரீமத் பகவத் கீதையில் ராமன் கூறிய உபதேசங்கள் மட்டுமின்றி, சாகும் தருவாயில் ராவணன் கூறிய இந்த 3 வாழ்க்கை ரகசியங்களும் அனைவரது வாழ்விலும் பொருந்தும்.

No comments: