நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு: புதுக்கோட்டையில் பிப்-26ல் உண்ணாவிரதம்!
இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து, பிப்ரவரி 26-ம் தேதி புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் ஓஎன்ஜிசி அலுவலர்கள் ஈடுபட்டனர். இதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்தப் பணி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து, பிப்ரவரி 26-ம் தேதி புதுக்கோட்டையில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று உரிமை மீட்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும், நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுப்பது குறித்து பெட்ரோலிய அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment