Thursday 23 February 2017

அபசகுணமாகும் அழுகிய தேங்காய்! தெரிய வேண்டிய உண்மைகள்!



நம்முடைய வீட்டில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் முக்கிய பயன்பாடாக விளங்குவது தான் தேங்காய். ஒரு கண், இரண்டு கண், மூன்று கண் என்று தேங்காய்க்கு கண்கள் இருக்கின்றது.
அப்படிப்பட்ட தேங்காயைப்பற்றிய வரலாறுகள் இந்து மதத்தில் நிறைய இருக்கின்றது. கண் நரம்பு இல்லாத தேங்காய் கிடைக்காததால் கன்னியாகுமரி பகவதி அம்மன் திருமணம் முடியாமல் நிற்பதாக சாஸ்திரம் கூறுகிறது.
ஆகவே ஒரு கண் தேங்காய் பிரம்மனாகவும், இரண்டு கண் தேங்காய் லஷ்மியாகவும், மூன்று கண் தேங்காய் சிவனாகவும் போற்றப்படுகிறது.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு. தேங்காய் உடைக்கும் பொழுது அழுகி இருந்தால் தேவையில்லாத பயம், குழப்பம், கலக்கம் மற்றும் ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக் கொள்வார்கள்.
ஒரு சிலா் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதை போல தானும் பயந்து மற்றவா்களையும் பயமுறுத்துவார்கள். ஆனால் அழுகிய தேங்காய் ஆனந்தத்தின் அறிகுறி என்பது யாருக்கெல்லாம் தெரியும் என்பது தெரியவில்லை.
அழுகிய அனைத்து தேங்காயும் காரியம் சித்தி ஆவதன் அறிகுறி. ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர் தான் வரும் அதே போல தான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்னங்கள், கண்திருஷ்டி, ரோகம், ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது.

No comments: