சீமை கருவேலன் மரங்களை அழிக்க தனியாருக்கு...ஏழு நாள் கெடு! நோட்டீஸ் வழங்கி ஊரக வளர்ச்சித்துறை எச்சரிக்கை

திருப்பூர் : கிராமப்புறங்களில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நில உரிமையாளருக்கு,"ஏழு நாட்களுக்குள் முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்' என்று, தனி அவலர் மூலம் "நோட்டீஸ்' வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை அழிக்க, தன்னார்வலர்களுடன் இøந்து, மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும், கக்கெடுப்பு முடிந்து, மரங்களை அழிக்கும் பணி துவங்கியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் கக்கெடுப்பு நிறைவடையவில்லை. கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்க, பல்வேறு அமைப்பினரும் முன்வந்துள்ளனர். அரசு நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க,ஊரக வளர்ச்சித்துறை, நேற்று முதல் "நோட்டீஸ்' கொடுக்க துவங்கியுள்ளது.சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நில உரிமையாளர், நிறுவன உரிமையாளருக்கு, "நோட்டீஸ்' வழங்கப்பட்ட நாளில் இருந்து, ஏழு நாட்களுக்குள் சீமை கருவேலன் மரங்களை அழிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை அழிக்க, தன்னார்வலர்களுடன் இøந்து, மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது. வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும், கக்கெடுப்பு முடிந்து, மரங்களை அழிக்கும் பணி துவங்கியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் கக்கெடுப்பு நிறைவடையவில்லை. கிராமப்புறங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்க, பல்வேறு அமைப்பினரும் முன்வந்துள்ளனர். அரசு நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் நிலத்தில் உள்ள மரங்களை அழிக்க,ஊரக வளர்ச்சித்துறை, நேற்று முதல் "நோட்டீஸ்' கொடுக்க துவங்கியுள்ளது.சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள நில உரிமையாளர், நிறுவன உரிமையாளருக்கு, "நோட்டீஸ்' வழங்கப்பட்ட நாளில் இருந்து, ஏழு நாட்களுக்குள் சீமை கருவேலன் மரங்களை அழிக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீசில், "தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு 42, 44, 45 மற்றும் 134ன் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986 மற்றும் 2011 விதிகளின் படியும், அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.ஊராட்சி எல்லைக்குட்பட்ட கிராமத்தில், சீமைக்கருவேல மரங்கள், முட்புதர்கள் நிறைந்துள்ளது. மண் வளம் மற்றும் மழை வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில், ஏழு நாட்களுக்குள் முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.
தவறும்பட்சத்தில், பொதுமக்கள் நலன்கருதி, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக, இடம் சுத்தம் செய்யப்படும். அதற்கான செலவு தொகையை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, மக்கள் நல்வாழ்வு சட்டம், 1939ன்படி, சம்பந்தப்பட்டவர் களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு, தனி அவலர் கையொப்பமிட்டு, இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தவறும்பட்சத்தில், பொதுமக்கள் நலன்கருதி, ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக, இடம் சுத்தம் செய்யப்படும். அதற்கான செலவு தொகையை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, மக்கள் நல்வாழ்வு சட்டம், 1939ன்படி, சம்பந்தப்பட்டவர் களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு, தனி அவலர் கையொப்பமிட்டு, இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment