Saturday 25 February 2017

வீட்டில் செல்வம் குவிய; வளங்கள் பெருக; இதோ அதற்கான ரகசியங்கள்


ஒரு சில நபர்கள் வீட்டில் செல்வம் குவியவில்லை அல்லது எவ்வளவு தான் சம்பாதித்தாலும் கையில் நிற்கவே மாட்டேங்கிறது என்று புலம்பக்கூடிய சூழல்களை பார்க்க முடிகின்றது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும், சம்பாதித்த மாதிரியே இல்லை என்ற கவலை உள்ளவர்களும் இருக்கின்றார்கள். அதுபோன்றவர்களுக்கான முக்கிய ஆலோசனைகளைப்பற்றி பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது வீட்டில் உள்ள சில பொருட்கள் இருக்கும் திசையை பொருத்து, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை ஏற்படும். அதனால், நம் வீட்டில் உள்ள சில பொருட்களை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கடிகாரம்
கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக் கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது தான் நல்லதாம். ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும்.
கண்ணாடி
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டுமாம். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.
குதிரை ஓவியம்
குதிரைகள் ஓடும்படியான ஓவியத்தை படுக்கை அறையில் அலங்கரிப்பதற்காக வைத்து இருப்பார்கள். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்குமாம்.
குறிப்பாக, குதிரை ஓவியத்தை நுழைவு வாயில், சமையல் மற்றும் குளியல் அறையை நோக்கி தொங்க விடக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர் புறத்தில் தொங்க விட வேண்டும்.
மணி ப்ளாண்ட்
மணி ப்ளாண்ட் என்ற செடியை நமது வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். எனவே இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே மிகவும் சிறந்தது.

No comments: