தென்கயிலாயமாக போற்றப்படும் ஸ்ரீகாளஹஸ்தி தலத்தில் மகா கும்பாபிஷேகம்
ஸ்ரீகாளஹஸ்தி: உலக புகழ் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்ய உகந்த தலமாக சிறந்து விளங்குகிறது. இதற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலத்திலிருந்து மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தலத்துக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கை வார இறுதி நாட்களில் பல மடங்கு அதிகரிக்கிறது. இந்த கோயிலுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதும் ராகு, கேது தோஷ நிவாரண பூஜைகள் மட்டுமே. இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போதைய நிலையில் மாதம் சுமார் ரூ.1.5 கோடி வரை வருவாயாக கிடைக்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.60 கோடியாக ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு வருவாயாக கிடைக்கிறது.
இதில் ராகு, கேது பூஜைகள் மூலம் வரும் வருவாயே அதிகம் என கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராகு, கேது பூஜைகளில் ஈடுபட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, மனவேதனை, வியாபார விருத்தி, குடும்ப தகராறு, நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கோயிலில் 4 கால ருத்ராபிஷேகங்களும், திருக்கல்யாண உற்சவம், ருத்ர ஹோமம், சண்டி ஹோமம் போன்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெறுகின்றனர். தென்கயிலாயம், பாஸ்கர க்ஷேத்திரம், சத்வோமுக்த க்ஷேத்திரம் போன்ற பெயர்களால் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தியில் சிலந்தி, பாம்பு, யானை போன்றவை சிவ ஆராதனை செய்து முக்தி பெற்றன.
ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் 3 ஜீவன்களின் பக்தி ஆராதனைகளின் பலனாக ஏற்பட்டது. ஸ்ரீ என்றால் சிலந்தி, காள என்றால் பாம்பு, ஹஸ்தி என்றால் யானை. பிரம்மனின் சாபத்தால் ஊர்தவநாதன் என்ற சிற்பி பூலோகத்தில் சிலந்தியாகவும், சிவபெருமானின் ஆபரணமான பாம்பு சாபத்தினால் இங்கு பிறப்பெடுத்து வில்வ மரம் கீழ் அமைந்த சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தது. சிவகிங்கரன் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாக பிறந்து, சிலந்தி, பாம்பு வசிக்கும் இந்த வில்வ வனத்திலேயே வசித்து சிவபெருமானை வழிபட்டு வந்தது. இந்நிலையில் சிவனை பாம்பு வழிபடுவதை தடுத்து தான் தும்பிக்கையில் சேகரித்து வந்த நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்தது.
தொடர்ந்து யானையின் இச்செயலால் கோபமடைந்த காளம் (பாம்பு) ஒருநாள் சிவலிங்கம் அருகில் மறைந்திருந்து அபிஷேகம் செய்யும் யானையின் தும்பிக்கையின் துளை வழியாக உடலில் நுழைந்து கும்பஸ்தலத்தில் வலி ஏற்படுத்தியது. இதனால் வலி தாங்க முடியாமல் யானை தன் தலையை பாறாங்கல்லில் மோதி இறந்துவிட்டது. யானையோடு பாம்பும் இறந்துவிட்டது. அப்போது சிவபெருமான் தோன்றி யானைக்கும், பாம்பிற்கும் சாபவிமோசனம் அளித்து கைலாய பதவியை அளித்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் மகாகும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ(சிலந்தி) காள(பாம்பு) ஹஸ்தி (யானை) மற்றும் பரத்வாஜ முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலம் என்பதால் மகாசிவராத்திரியின் போது முதலில் பக்த கண்ணப்பருக்கு கொடியேற்றி சிறப்பு பூஜைகளோடு உற்சவங்களை தொடங்குவதைபோல் மகாகும்பாபிஷேகத்திற்கு முன்னதாக இவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதாக கோயிலின் பிரதான அர்ச்சகர் சாம்பய்ய குருக்கள் தெரிவித்தார். கி.பி 3ம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி செய்த தொண்டை மண்டலம் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. ராஜராஜனின் பின் ஆட்சி பீடமேறிய ராஜேந்திர சோழன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலை கட்டியதற்கான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. சோழர்களின் ஆட்சிக்கு பிறகு விஜயநகர பேரரசர்களான சாலுவ ராஜா, ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், ஸ்ரீகாளஹஸ்தி ஜமீன்தார்கள் இக்கோயிலின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளனர்.
ஸ்ரீகாளஹஸ்தி வாயு தலம் என்பதற்கு சாட்சியாக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் (மூலவர் சன்னதியில்) பக்கத்தில் உள்ள 2 தீபங்கள் லிங்கத்தின் சுவாசம் மூலம் வெளிப்படும் காற்றினால் அசைந்தபடியே உள்ளன. இது சுயம்பு லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பும், மிகப் பழமை வாய்ந்த கோயிலானாலும் இதுவரை 4 முறை மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக சரித்திரத்தில் உள்ளது. 1901ம் ஆண்டில் ராமநாதம் செட்டியாரின் வம்சாவளிகளால் 10 ஆண்டு காலம் கோயில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு முதன்முறையாக 1912ம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 1969ம் ஆண்டு 2வது முறையும், 1974ம் ஆண்டு 3வது முறையும், கடந்த 2000ம் ஆண்டு 4வது முறையும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றாலும், பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போது 2017ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் கடந்த 1ம் தேதி தொடங்கியது. 2ம் தேதி ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பதியிலிருந்து ஸ்ரீகாளஹஸ்தி வரும் சாலையிலும், பைபாஸ் சாலை அருகிலும், சென்னை காளஹஸ்தி சாலையிலும் என நகருக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் மின்விளக்குகளால் வரவேற்பு தோரணங்களும், 4 மாட வீதிகளும், கோயிலை சுற்றிலும் உள்ள கோபுரங்கள், அனைத்து பரிவார சன்னதிகளும் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.
இதேபோல் அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட டன் கணக்கிலான பல வண்ண பூக்களை கொண்டும், பல வகை பழங்களை கொண்ட மாலைகளுடனும் கோயிலும், கோபுரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மகா கும்பாபிஷேகத்தையொட்டி நகருக்குள் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவார்கள் என்பதால் வாகன போக்குவரத்தும் பைபாஸ் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வரும் பஸ்களும், இங்கிருந்து செல்லும் பஸ்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
புதிய ராஜகோபுரம்
தென்கயிலாயமான ஸ்ரீகாளஹஸ்தியில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கடந்த 1516ம் ஆண்டில் ராஜ கோபுரத்தை கட்டினார். 96 அடி நீளமும், 64 அடி அகலமும், 144 அடி உயரத்திலும் 7 நிலைகளில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. ராஜகோபுரத்தில் இந்திய சிற்ப கலையை பறைசாற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சுதை சிற்பங்களும், கற்சிற்பங்களும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன. ஸ்ரீ காளஹஸ்தியின் அடையாள சின்னமாகவே இருந்த ராஜகோபுரம் பழமை வாய்ந்தது.
இந்த கோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே 26ம் தேதி இடிந்து விழுந்தது. இதனால் அதே இடத்தில் புதிய ராஜகோபுரம் கட்ட ஆந்திர மாநில அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் நெல்லூர் நவயுகா நிறுவனத்தினர் ராஜகோபுரத்தை இலவசமாக கட்டித் தர முன் வந்து அரசிடம் அனுமதி பெற்று, அப்போதைய முதல்வர் ரோசய்யா 2010 ஆகஸ்ட் 29ம் தேதி புதிய ராஜகோபுரத்திற்கு பூமி பூஜை செய்தார். பழைய ராஜகோபுர கோபுரத்தை போலவே நவயுகா நிறுவனத்தினர் புதிய ராஜகோபுரத்தை 144 அடி உயரத்திலும், 65 அடி அகலமும், 90 அடி நீளமும் ஏழு நிலைகளில் கட்டினர். 35 அடி உயரம் வரை கருங்கற்களாலும், மீதமுள்ளதை செங்கல்லால் கட்டப்பட்டது. பழைய ராஜகோபுரத்தில் இருந்ததை போன்றே புதிய கோபுரத்திற்கும் 9 தங்க கலசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்தது.
இதில் ராகு, கேது பூஜைகள் மூலம் வரும் வருவாயே அதிகம் என கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ராகு, கேது பூஜைகளில் ஈடுபட்டால் திருமணத்தடை, குழந்தையின்மை, மனவேதனை, வியாபார விருத்தி, குடும்ப தகராறு, நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கோயிலில் 4 கால ருத்ராபிஷேகங்களும், திருக்கல்யாண உற்சவம், ருத்ர ஹோமம், சண்டி ஹோமம் போன்ற பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளை பெறுகின்றனர். தென்கயிலாயம், பாஸ்கர க்ஷேத்திரம், சத்வோமுக்த க்ஷேத்திரம் போன்ற பெயர்களால் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தியில் சிலந்தி, பாம்பு, யானை போன்றவை சிவ ஆராதனை செய்து முக்தி பெற்றன.
ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயர் 3 ஜீவன்களின் பக்தி ஆராதனைகளின் பலனாக ஏற்பட்டது. ஸ்ரீ என்றால் சிலந்தி, காள என்றால் பாம்பு, ஹஸ்தி என்றால் யானை. பிரம்மனின் சாபத்தால் ஊர்தவநாதன் என்ற சிற்பி பூலோகத்தில் சிலந்தியாகவும், சிவபெருமானின் ஆபரணமான பாம்பு சாபத்தினால் இங்கு பிறப்பெடுத்து வில்வ மரம் கீழ் அமைந்த சிவலிங்கத்தை பூஜை செய்து வந்தது. சிவகிங்கரன் சிவபெருமானின் சாபத்தால் பூலோகத்தில் யானையாக பிறந்து, சிலந்தி, பாம்பு வசிக்கும் இந்த வில்வ வனத்திலேயே வசித்து சிவபெருமானை வழிபட்டு வந்தது. இந்நிலையில் சிவனை பாம்பு வழிபடுவதை தடுத்து தான் தும்பிக்கையில் சேகரித்து வந்த நீரால் அபிஷேக ஆராதனைகள் செய்தது.
தொடர்ந்து யானையின் இச்செயலால் கோபமடைந்த காளம் (பாம்பு) ஒருநாள் சிவலிங்கம் அருகில் மறைந்திருந்து அபிஷேகம் செய்யும் யானையின் தும்பிக்கையின் துளை வழியாக உடலில் நுழைந்து கும்பஸ்தலத்தில் வலி ஏற்படுத்தியது. இதனால் வலி தாங்க முடியாமல் யானை தன் தலையை பாறாங்கல்லில் மோதி இறந்துவிட்டது. யானையோடு பாம்பும் இறந்துவிட்டது. அப்போது சிவபெருமான் தோன்றி யானைக்கும், பாம்பிற்கும் சாபவிமோசனம் அளித்து கைலாய பதவியை அளித்தார். இந்நிலையில், இன்று நடைபெறும் மகாகும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீ(சிலந்தி) காள(பாம்பு) ஹஸ்தி (யானை) மற்றும் பரத்வாஜ முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலம் என்பதால் மகாசிவராத்திரியின் போது முதலில் பக்த கண்ணப்பருக்கு கொடியேற்றி சிறப்பு பூஜைகளோடு உற்சவங்களை தொடங்குவதைபோல் மகாகும்பாபிஷேகத்திற்கு முன்னதாக இவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதாக கோயிலின் பிரதான அர்ச்சகர் சாம்பய்ய குருக்கள் தெரிவித்தார். கி.பி 3ம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி செய்த தொண்டை மண்டலம் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. ராஜராஜனின் பின் ஆட்சி பீடமேறிய ராஜேந்திர சோழன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலை கட்டியதற்கான சரித்திர ஆதாரங்கள் உள்ளன. சோழர்களின் ஆட்சிக்கு பிறகு விஜயநகர பேரரசர்களான சாலுவ ராஜா, ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், ஸ்ரீகாளஹஸ்தி ஜமீன்தார்கள் இக்கோயிலின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளனர்.
ஸ்ரீகாளஹஸ்தி வாயு தலம் என்பதற்கு சாட்சியாக ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் (மூலவர் சன்னதியில்) பக்கத்தில் உள்ள 2 தீபங்கள் லிங்கத்தின் சுவாசம் மூலம் வெளிப்படும் காற்றினால் அசைந்தபடியே உள்ளன. இது சுயம்பு லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பும், மிகப் பழமை வாய்ந்த கோயிலானாலும் இதுவரை 4 முறை மட்டுமே கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக சரித்திரத்தில் உள்ளது. 1901ம் ஆண்டில் ராமநாதம் செட்டியாரின் வம்சாவளிகளால் 10 ஆண்டு காலம் கோயில் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு முதன்முறையாக 1912ம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 1969ம் ஆண்டு 2வது முறையும், 1974ம் ஆண்டு 3வது முறையும், கடந்த 2000ம் ஆண்டு 4வது முறையும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றாலும், பல்வேறு காரணங்களால் 16 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போது 2017ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் கடந்த 1ம் தேதி தொடங்கியது. 2ம் தேதி ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பதியிலிருந்து ஸ்ரீகாளஹஸ்தி வரும் சாலையிலும், பைபாஸ் சாலை அருகிலும், சென்னை காளஹஸ்தி சாலையிலும் என நகருக்குள் வரும் அனைத்து சாலைகளிலும் மின்விளக்குகளால் வரவேற்பு தோரணங்களும், 4 மாட வீதிகளும், கோயிலை சுற்றிலும் உள்ள கோபுரங்கள், அனைத்து பரிவார சன்னதிகளும் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.
இதேபோல் அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட டன் கணக்கிலான பல வண்ண பூக்களை கொண்டும், பல வகை பழங்களை கொண்ட மாலைகளுடனும் கோயிலும், கோபுரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மகா கும்பாபிஷேகத்தையொட்டி நகருக்குள் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவார்கள் என்பதால் வாகன போக்குவரத்தும் பைபாஸ் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வரும் பஸ்களும், இங்கிருந்து செல்லும் பஸ்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
புதிய ராஜகோபுரம்
தென்கயிலாயமான ஸ்ரீகாளஹஸ்தியில், விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் கடந்த 1516ம் ஆண்டில் ராஜ கோபுரத்தை கட்டினார். 96 அடி நீளமும், 64 அடி அகலமும், 144 அடி உயரத்திலும் 7 நிலைகளில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. ராஜகோபுரத்தில் இந்திய சிற்ப கலையை பறைசாற்றும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சுதை சிற்பங்களும், கற்சிற்பங்களும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன. ஸ்ரீ காளஹஸ்தியின் அடையாள சின்னமாகவே இருந்த ராஜகோபுரம் பழமை வாய்ந்தது.
இந்த கோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே 26ம் தேதி இடிந்து விழுந்தது. இதனால் அதே இடத்தில் புதிய ராஜகோபுரம் கட்ட ஆந்திர மாநில அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் நெல்லூர் நவயுகா நிறுவனத்தினர் ராஜகோபுரத்தை இலவசமாக கட்டித் தர முன் வந்து அரசிடம் அனுமதி பெற்று, அப்போதைய முதல்வர் ரோசய்யா 2010 ஆகஸ்ட் 29ம் தேதி புதிய ராஜகோபுரத்திற்கு பூமி பூஜை செய்தார். பழைய ராஜகோபுர கோபுரத்தை போலவே நவயுகா நிறுவனத்தினர் புதிய ராஜகோபுரத்தை 144 அடி உயரத்திலும், 65 அடி அகலமும், 90 அடி நீளமும் ஏழு நிலைகளில் கட்டினர். 35 அடி உயரம் வரை கருங்கற்களாலும், மீதமுள்ளதை செங்கல்லால் கட்டப்பட்டது. பழைய ராஜகோபுரத்தில் இருந்ததை போன்றே புதிய கோபுரத்திற்கும் 9 தங்க கலசங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்தது.
நன்றி
தினகரன்
No comments:
Post a Comment