Tuesday 25 July 2017

இதை மட்டும் சாப்பிடுங்க.. ஆண்மை குதிரையை விட வேகமாக ஓடும்!

horse-race

தாம்பத்தியத்தில் ஆண்மையை குதிரை வேகத்தில் ஓட வைக்கும் அதிசய மூலிகைகள் நமது ஊரிலே கிடைக்கிறது. அப்புறம் எதற்கு ஆங்கில மருந்துகளை நாடி செல்ல வேண்டும்.
ஆண்மை இழந்து போச்சேனு கவலை வேண்டாம். இதோ அதற்காகத்தான் அமுக்கிரா கிழங்கு வகைகள் இருக்கின்றன. சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என இரண்டு வகைப்படும்.
இதில் அதிக வீரியம் கொண்டது சீமை அமுக்கிரா கிழங்கு, இது ஆண்கள் உடலுறவு நேரத்தை அதிக நேரம் தாக்கு பிடிக்க வைக்கும் தன்மை கொண்டது.
இதனை சாப்பிட்ட உடன் ரத்த ஓட்டம் அதிகமாக பெருக்கி உடலுறவின் போது குதிரை வேகம் திறன் கொடுக்கும் வல்லமை கொண்டது.
இதனை எப்படி சாப்பிடலாம்:
சீமை அமுக்கிரா கிழங்கை பொடியாக்கி நெய்யுடன் சேர்த்து கலந்து குடித்து வரலாம். இதனால் விந்து பெருமளவு உற்பத்தியாகும். குழந்தை இல்லாதவர்களும் இதை தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைக்கும்.
மேலும், மனரீதியாக பாதிக்கப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க உதவும். உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லமை கொண்டது.

Saturday 22 July 2017

உடலை இரும்பாக்கும் தமிழக நாட்டு பசும்பால்! குழந்தைகளுக்கு இலவசமாக கிடைக்கிறது!




இந்தியாவின் பிரம்மன் ரக பசுமாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இன்று அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஜெர்சி மாடுகளின் பாலையும், பாக்கெட்டுகளில் ரசாயணம் கலந்து விற்கப்படும் பாலையும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.
இதற்கு காரணம் சதி தான். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாஸ்கர், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு பசு மாடுகளை பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
ஒரு லிட்டர் பாலை ரூ. 80க்கு விற்று வருகிறார். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்.
இந்த பால் பல்வேறு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது.
குஜராத்தின் கிர் பகுதி பசு இனத்தில் இருந்தும் ஒரு மாட்டை வளர்த்து வருகிறார்.
இந்த பசுவானது கிர்காடுகளில் உள்ள சிங்கங்களையே கொம்பால் முட்டி வீழ்த்திவிடுமாம்.
ரசாயண பாக்கெட் பால் விலை குறைவு என்பதால், ஏழை எளிய மக்கள் வேறு வழியில்லாமல் வாங்குகின்றனர். இதனை அரசு தான் தடுக்க வேண்டும்.

Thursday 20 July 2017

ஓஹோ..பொண்ணுங்க கள்ளக்காதலை நாடுவது இதுக்குத்தானா..! உஷார் ஆண்களே.. உஷார்..!

அழகி க்கான பட முடிவு


ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று, கனவே கண்டுவிடுவார்கள்.

சில ஆண்களுக்கு ஒல்லியான பெண்ணைப் பிடிக்கும், சில ஆண்களுக்கு ஓரளவான பெண்ணைப் பிடிக்கும், மேலும் சில ஆண்களுக்கு குண்டு பெண்களைப் பிடிக்கும்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், உடலுறவில் அதிக நாட்டம் இல்லாத ஆண்களுக்குத் தான் குண்டான பெண்களைப் பிடிக்கும் என்கிறார்கள்.
காரணம் குண்டான பெண்களுடன் உடலுறவு மேற்கொள்வது மிகவும் சுலபம். சில ஆண்கள் ஓரளவு பருமன் உள்ள பெண்களை விருப்புகிறார்கள்.

இவர்கள் நடுத்தர ஆண்கள் ஆவர். மேலும் சில ஆண்கள் மிகவும் ஒல்லியான பெண்களையே விருப்புவது வழக்கம்.

இவர்கள் பெரும்பாலும் கில்லாடிகள். ஆண் குறி சற்று நீளமாக உள்ளவர்கள், மற்றும் அதிக செக்ஸ் நாட்டம் உள்ளவர்கள், மற்றும் ஆண் குறி முறுக்கேறி கடும் செக்ஸில் ஈடுபடும் ஆண்களே பெரும்பாலும், ஒல்லியான பெண்களை விரும்புவார்கள்.

அவர்கள் உடலுறவில் ஈடுபடும் வேளை, உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க விரும்புவார்கள். இவர்களே, தமது மனைவி இல்லையேல் காதலி ஒல்லியாக இருக்கவேண்டும் எனவும் நினைப்பார்கள்.

தாம் உடலுறவு கொள்ளும்போது, பெண்ணின் ஊறுப்பு மிகவும் சிறியதாக இருக்கவேண்டும், என்றும் மற்றும் உடலுறவில் இன்பம் இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்களும் இவர்களே.

எனவே பெண்கள் ஆனாலும் சரி ஆண்கள் ஆனாலும் சரி, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது, அழகைப் பார்த்து, வெள்ளை நிறத்தைப் பார்த்து தேர்ந்தெடுப்பதை விடுத்து, தமக்கு பிடித்த உடல்வாகோடு உள்ள ஆண்களை தேர்வு செய்வது நல்லது.

பெண்கள் என்ன தான் காதல் வேறு, காமம் வேறு என்று கதை அளந்தாலும், ஒரு பெண்ணுக்கு கட்டில் சுகம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால், அவள் எப்பொழுதும் தன் கணவனோடு எரிந்து விழுந்து தான் வாழ்க்கையை நடத்துவாள்.

அதுவே 90% சதவீதமான பெண்களில் காணப்படுகிறது. இதில் 5% சதவீதமான பெண்கள், வேறு துணையை நாடுகிறார்கள். மேலும் சில பெண்கள், இதற்காக கள்ளக் காதலை நாடுகிறார்கள்….


உடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்!


உடலுறவுக்காட்சிகள் க்கான பட முடிவு
பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஆரோக்கியமான உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலுறவு என்பது முக்கிய காரணியாக உள்ளது. மேலும் உடலுறவு உங்களை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.
ஆராய்ச்சிகளின் மூலம் வெளிவந்த, உடலுறவு கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. சளி மற்றும் காய்ச்சல்

வாரத்தில் இரண்டு முறை உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் அளவிற்கு நோயெதிர்பு சக்தி அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2. உடல் எடை குறைகிறது
உடலுறவு கொள்வதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதயத்தின் துடிப்பும் அதிகரிக்கிறது. மேலும் உடலுறவுகொள்வது ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு சமமானதாக உள்ளது. 3. மாதவிடாய் பிரச்சனை
3. மாதவிடாய் பிரச்சனை
உடலுறவு மாதவிடாய் பிரச்சனையை ஒழுங்கு செய்யும் ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்கிறது. மேலும் எதிர்மறையான மேனோபாஸ் அறிகுறிகளை குறைக்கிறது. 4. தலை மற்றும் உடல்வலி
4. தலை மற்றும் உடல்வலி
உடலுறவு வைத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் செயல்பட ஆராம்பிக்கிறது. இது உடல் மற்றும் தலைவலியை போக்க உதவியாக உள்ளது. 5. மார்பக புற்றுநோய்
5. மார்பக புற்றுநோய்
முப்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை இந்த மார்பக புற்றுநோய் தான். உடலுறவு வைத்துக்கொள்வதால், மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைகிறது.
6. நறுமணங்களை உணரும் திறன் 
நறுமணங்களை உணரும் திறன் ஆரோக்கியமான உடலுறவு, உங்களின் நறுமணங்களை உணரும் திறனை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்வை தருகிறது. 7. மனஇறுக்கம் குறையும்
7. மனஇறுக்கம் குறையும்
காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மன இறுக்கம் குறைகிறது.

Thursday 13 July 2017

பொதுமக்களுக்கு ஆதரவாக கதிராமங்கலத்தில் மாணவர்கள் போராட்டம்

பொதுமக்களுக்கு ஆதரவாக கதிராமங்கலத்தில் மாணவர்கள் போராட்டம்
கதிராமங்கலம் பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி



















கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களை விடுவிக்க கோரியும், சமையல் கியாஸ் இல்லாமல் சமைக்க முடியும் என்பதை வலியுறுத்தியும் கிராம மக்கள் ஊரில் இருந்து வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் தோப்பில் குடியேறி வருகிறார்கள்.

நேற்று 2-வது நாளாக தோப்பில் குடியேறினர். அங்கேயே விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் பகுதி மாணவர்கள் கதிராமங்கலத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.


இதற்கிடையே கதிராமங்கலம் மாணிக்க நாச்சியார்கோவில் முதல் திரவுபதியம்மன் கோல் வரை பிரதான சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் குடிநீரின்றி அவதிப்படுவதாக சில நாட்களுக்கு முன் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை முறையான குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குடிநீர் கேட்டு ஓரிரு நாட்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.

பந்தநல்லூர் சாலையில் 35-ம் எண் கொண்ட எண்ணெய் கிணற்றிலிருந்து வெளியான கச்சா எண்ணெய் கசிவால் ஸ்ரீராம் என்பவர் வயல் பாதிக்கப்பட்டது.



இதற்கு இழப்பீடாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அவருக்கு ரூ. 59 ஆயிரத்து 635-க்கு இழப்பீடு காசோலையை அனுப்பி உள்ளது. ஆனால் வயலில் தேங்கி உள்ள கச்சா எண்ணெய் மழை காரணமாக மற்ற வயல்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பிளிப்கார்ட் தளத்தில் ரூ.999 விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ இ4 பிளஸ்?

பிளிப்கார்ட் தளத்தில் ரூ.999 விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோ இ4 பிளஸ்?

















புதுடெல்லி:

மோட்டரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் நேற்று (ஜூலை 12) நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படும் மோட்டோ இ4 பிளஸ் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோ இ4 பிளஸ் வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி இன்று வழங்கப்படுகிறது. புதிய எக்சேஞ்ச் சலுகையின் கீழ் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போனினை ரூ.999க்கு வாங்க முடியும். இந்தியவில் ஃபைன் கோல்டு மற்றும் ஐயன் கிரே நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள இ4 பிளஸ் மாடல்களுக்கு எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது.


ப்ளிபிகார்ட் சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ப அதிகபட்சம் ரூ.9000 வரை பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையை தவிர இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா மற்றும் பைபேக் கியாரண்டியின் கீழ் ரூ.4000 வரை வழங்கப்படுகிறது.


மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச்2.5D வளைந்த கிளாஸ் எச்டி டிஸ்ப்ளே 
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் 
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 
* 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி 
* மெமரியை நீட்டிக்கும் வசதி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் f/2.0 அப்ரேச்சர் 
* 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ் 
* 5,000 எம்ஏஎச் பேட்டரி 
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Friday 7 July 2017

ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது தமிழகம் : கமல்ஹாசன் ஆவேசம்


















தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சி விட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி, மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரி விதிப்பால் தமிழ் சினிமா அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்கள், திரையரங்குகளை காலவரையின்றி மூடி விட்டனர். தமிழ் திரையுலகம் ஸ்தம்பித்து நிற்கிறது.

தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியின் கிழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை பொறுத்தவரை சினிமா துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட என்னால் முடிந்தவரை நான் முயற்சி செய்கிறேன். சுயநலமுள்ள அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை.



தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரியை கருத்தில் கொண்டு சினிமாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கு விலக்கு அளித்துள்ளன. கேரள சினிமா துறையினர் அம்மாநில முதல்வரிடம் வரி விதிப்பு குறித்து வேண்டுகோள் வைத்தனர்.

அவர் உடனடியாக திரைப்படத்துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா அரசுகளும் சினிமா துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது. தமிழகத்தில் நிலவும் ஊழலில் சினிமாத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக்கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கடனை வசூலிக்கும் போது வங்கிகள் விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்

கடனை வசூலிக்கும் போது வங்கிகள் விவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்

















மதுரை:

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த பலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வெளிவருகின்றன.

எனவே தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், வங்கிகள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும் விவசாயிகள் நலன் கருதி நவீன தொழில் நுட்ப முறையை புகுத்தி விவசாயத்தை காக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிபதிகள் முன்பு வந்தபோது இதே போன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. எனவே மனுதாரர் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி மனுதாரர் இதே மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாய பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது, கடன்களை வசூலிக்கும் போது கண்டிப்புடன் நடக்கக்கூடாது, விவசாயிகள் நலன் சார்ந்த விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Sunday 2 July 2017

வரி செலுத்தாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது: அருண்ஜெட்லி எச்சரிக்கை

வரி செலுத்தாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது: அருண்ஜெட்லி எச்சரிக்கை

















புதுடெல்லி:

வரி செலுத்தாமல் இனி யாரும் தப்பிக்க முடியாது என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு, சேவை வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இனி மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, டெல்லியில் நேற்று நடந்த இந்திய பட்டயக் கணக்காயர் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-

சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் இந்த அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதுபோன்ற சீர்திருத்தங்களை அரைகுறை முயற்சியுடன் மேற்கொண்டால் எந்த பலனும் கிடைக்காது. எனவேதான் நாட்டில் தக்க தருணத்தில் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.



அனைவரும் வரி செலுத்தவேண்டும் என்பதை மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், நமது நாட்டின் இயல்பான அமைவிற்கு ஏற்ப அரசுக்கு உண்மையான வரித்தொகை வருவதில்லை. வரி வசூல் என்பது மிகவும் குறைவாக உள்ளது.

இதன் காரணமாக ராணுவம், சுகாதாரம், கல்வி, மற்றும் கிராமப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளுக்கு நம்மால் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாமல் போகிறது.

நாமும் எவ்வளவு காலத்துக்குத்தான் மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டே இருப்பது?... மக்களின் மனதில் வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும்.

முந்தைய ஆட்சி காலத்தின்போது, வரி செலுத்துவதில் உள்ள அமைப்பில் இருந்த ஓட்டைகளை மக்கள் பயன்படுத்திக் கொண்டனர். நாட்டுக்கு வரி செலுத்தக் கூடாது என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி இருந்தது. இனி இதுபோன்ற சிந்தனையை அவர்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-

இதுபோன்ற மாற்றம் நடைபெறும்போது அமைதியற்ற நிலை இயற்கையாகவே காணப்படும். ஆனால் இதுபற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. சரக்கு, சேவை வரிக்கு எதிராக எந்த மூலையில் இருந்து எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், அதற்கு மத்திய அரசு அடிபணிந்து விடாது. தற்போதைய ஜி.எஸ்.டி. முறை மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டது. எளிமையானது.

இதனால் வரி செலுத்துவோர் மிகவும் பயன் அடைவார்கள். மேலும் அவர்களுக்கு ஒரேயொரு இடைமுகம்தான் உள்ளது. அதுவும் இணையதளத்தின் வாயிலாக உள்ளது. முன்பு பல்வேறு கையாளுதல் முறைகள் மற்றும் தனிப்பட்ட முறைகள் என பல இடைமுகங்கள் இருந்தன. இது ஊழல் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மக்களில் பெரும்பான்மையானோர் வரி செலுத்தாமல் இருப்பது தங்களுடைய அடிப்படை உரிமை என்று கருதுகின்றனர். இந்த வாதத்தை எங்களது அரசு ஏற்றுக்கொள்ளாது. நீங்கள் சாலைகளையும், மற்ற வசதிகளையும் அரசிடம் இருந்து பெற்று கொள்ளலாம். அதற்காக வரி செலுத்த வேண்டியது இல்லை என்று நினைத்தால் அதை அரசாங்கத்தால் ஏற்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வணிகர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டதற்கு, “வரி செலுத்தும் பொறுப்பு வர்த்தகர்களை சார்ந்தது அல்ல. நுகர்வோர் ஏற்கனவே அதற்கான வரியை செலுத்தி விடுகின்றனர். நுகர்வோர் வரி செலுத்த முன்வரும்போது, அதுபற்றி வர்த்தகர்கள் ஏன் கவலைப்படவேண்டும்” என்று பதில் அளித்தார்.

இன்னொரு கேள்விக்கு அவர், “ஜி.எஸ்.டி. மீதான நடைமுறைகள் இணையதளத்தின் வழியாக நடைபெறும் என்பதும், இனி முறையற்ற ரசீதுகளுக்கு இடமில்லை என்ற காரணமுமே வர்த்தகர்களின் கவலைக்கு காரணமாக இருக்கலாம். ஜி.எஸ்.டி.யை திறமையாக கையாள்வதன் மூலம் வரி செலுத்தும் அடித்தளம் வலுப்படும். வரி ஏய்ப்பு தடுக்கப்படும். ஒரே நாடு ஒரே வரி என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது என்பதால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அவசர கதியில் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனரே என்ற கேள்விக்கு, பதில் அளித்த அருண்ஜெட்லி, “சரக்கு, சேவை வரி விதிப்பு முறை தாமதமாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 15 ஆண்டுகள் விவாதிக்கப்பட்ட பிறகே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே இதை முதிர்ச்சியற்றது என கூறுவது சரியானது அல்ல” என்றார்.