Monday 20 February 2017

‘‘காரியம் நடக்கணும்னா, நாங்க என்ன வேணா செய்வோம்’’ அமைச்சரின் அராஜக பேச்சு! நீங்களே வீடியோவ கேளுங்க!


தமிழகத்தில் பரபரப்பான சூழலுக்கு இடையே சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சசி ஆதரவு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெற்றது.
சசிகலா குடும்பத்தின் ஆதரவில் பழனிச்சாமி அணி வெற்றி பெற்றது தமிழக மக்களிடம் பெரும் கொந்தளிப்பையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் பழனிச்சாமி அணியில் அமைச்சராக இருக்கும் ஒருவர் மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. ‘‘காரியம் நடக்க வேண்டுமானால் காட்டியும் கொடுப்போம்…. கூட்டியும் கொடுப்போம்… தேவைப்பட்டால் உயிரையும் எடுப்போம்” என மிரட்டும் விதமாக பேசியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சசிகலா போஸ்டரை கிழித்ததாக அதிமுக தொண்டரை நடுரோட்டில் வைத்து தனது ஆதரவாளர்களுடன் அடித்து உதைத்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இந்நிலையில், தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது கட்சிக்காரரை செல்போன் மூலம் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அதில் “நான் சொன்னால் வெட்டுவதற்கு நூறு பேர் இருக்காங்க.. நடு ரோட்டில் வைத்து தலையை தனியாக எடுத்துருவேன்’’ என பேசியிருக்கிறார்.
மேலும், எதிர்தரப்பில் பேசும் நபரில், அவனிடம் சொல்லி வையுங்கள், இல்லை அவன் வீடு புகுந்து வெட்டி கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சர் ஒருவர் இப்படி அடாவடியாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments: