Sunday 30 April 2017

வில்லனாக அவதாரம் எடுக்கும் வடிவேலு: யாருக்கு தெரியுமா?


















தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்திருப்பவர் `வைகைப் புயல்' வடிவேலு. நகைச்சுவை, நடிப்பு மற்றும் தனது ஒவ்வொரு அசைவின் மூலமும் அனைத்து தரப்பினரையும் சிரித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

சில மாதங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘சிவலிங்கா’ வெளியானது. இப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், வடிவேலு காமெடி பேசும்படி இருந்தது. 



இதைத்தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய்யின் 61-வது படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இதையடுத்து, ஆர்.கே.யுடன் இணைந்து `நீயும் நானும் நடுவுல பேயும்' படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஆர்.கே.யுடன் மற்றொரு நாயகன் போன்ற வேடத்தில் வடிவேலு வருகிறாராம். இதில் காமெடி கலந்த வில்லன் வேடம். இருவருக்கும் எதிரும் புதிருமான பாத்திரம். இந்த படத்தில் வடிவேலு புதிய கெட்-அப்பில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காமெடியிலேயே கலக்குவார். வில்லத்தனம் நிறைந்த காமெடியிலும் சொல்லவா வேணும். தெறிக்க விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் கொண்டு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

கிராம சபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூட தீர்மானம் கொண்டு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

















சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

2013-ஆம் ஆண்டு விடுதலை நாள் அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும்படி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் கோரிக்கை விடுத்தார். அதன்பயனாக 2000-க்கும் மேற்பட்ட கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் பல கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

இது தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளன.



எனவே, புதிய மதுக்கடைகள் திறக்கப்படக் கூடாது; ஏற்கனவே உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று விரும்பும் பொது மக்கள் அதை வலியுறுத்தி நாளை நடைபெறவுள்ள கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, நீர் நிலைகளை பராமரித்தல், மணல் கொள்ளையை தடுத்தல், மீத்தேன் எரிவாயுத் திட்டம் மற்றும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மட்டன் 65 செய்வது எப்படி




குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத மட்டன் - 250 கிராம்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்  (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

* மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).

* ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

* மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும்.

* சூப்பரான மட்டன் 65 ரெடி. 

குறிப்பு :

நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.

அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும். 

வாழ்க்கையை இழக்கும் பெண்கள் உஷார்




திருமணமான பெண்கள் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.


திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.

தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அது போகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.



வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமா



கோடை காலத்தில் தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்று நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர வைத்துவிடுகிறது, வியர்வை.


கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது
எல்லோரும் எப்போதும் பளிச்சென்று தோன்ற விரும்புகிறார்கள். அதோடு மற்றவர்கள் அருகில் செல்லும்போது, தன்னிடம் இருந்து நல்ல மணம் வரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அப்படி அவர்கள் நினைப்பதற்கு மாறாக, அவர்கள் உடலில் இருந்து நாற்றம் வர வைத்துவிடுகிறது, வியர்வை.

கோடையில் இந்த வியர்வையால் ஏற்படும் தொல்லை மிக அதிகம். இப்போது உஷ்ணம் அதிகரிப்பதால் உடலில் இருந்து வியர்வை மிக அதிகமாக வெளியேறுகிறது. அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் நாற்றம் உருவாகிறது.

நமது உடலில் இரண்டு வகை வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ‘ஏக்ரைன்’ என்பது சாதாரண வியர்வை சுரப்பிகள். இவை உடலில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகின்றன. ‘அப்போகிரைன்’ என்ற வியர்வை சுரப்பிகள் அக்குள், பிறப்பு உறுப்பு சருமப்பகுதி, மார்பு காம்பைச் சுற்றியுள்ள கறுப்பு பகுதி போன்ற இடங்களில் காணப்படுகின்றன. வயதுக்கு வந்த பின்பே இந்த சுரப்பிகள் பெரிதாகி, செயல்படத் தொடங்குகின்றன.

மேற்கண்ட சுரப்பிகள் லேசான எண்ணெய்த்தன்மை கொண்ட திரவத்தை சுரக்கின்றன. பொதுவாக அதற்கு தனிப்பட்ட மணம் எதுவும் கிடையாது. நமது சருமத்தில் இருக்கும் பலவகை பாக்டீரியாக்கள் அதோடு சேர்ந்து செயல்படும்போது, அது ஒரு ரசாயனப்பொருளாக மாறி, கெட்ட வாடை வீசத் தொடங்குகிறது. அதோடு சேர்ந்து சேபாஷியஸ் சுரப்பி சுரக்கும் திரவமும் சேர்ந்து மற்றவர்களை முகம் சுளிக்கவைக்கும் வாடை வீச காரணமாகிவிடுகிறது.

இந்த நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்வது?

அப்போகிரைன் சுரப்பிகளில் இருந்து சருமத்தில் வெளிப்படும் வியர்வைத் திரவம் சில மணி நேரம் கடந்த பின்பே பாக்டீரியாக்களோடு சேர்ந்து செயல்படத் தொடங்குகின்றது. பாக்டீரியாக்கள் அதில் சேருவதற்கு முன்னால் கழுவித் துடைத்து சுத்தம் செய்துவிட்டால் வாடைவீசாது. அந்த பகுதிகளை சுத்தம் செய்ய சாதாரண சோப்புகளைவிட வீரியம் குறைந்த சோப்பை பயன்படுத்தவேண்டும். இந்த சோப் மருந்துகடைகளில் கிடைக்கும்.

வியர்வை வாடையை போக்க இரண்டு வகை டியோடரண்டுகள் உள்ளன.

ஒன்று: டாக்டரின் ஆலோசனை பெறாமலே கடைகளில் வாங்கக்கூடியவை. இது அழகு சாதனப் பொருட்கள் பட்டியலில் இடம்பெறக்கூடியது. இது பாக்டீரியாக்களின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுத்து, நாற்றத்தை இல்லாமல் செய்கிறது. அதோடு நல்ல மணத்தை உருவாக்கக் கூடிய சில பொருட்களும் அதில் இருக்கின்றன. ஆனால் வியர்வை உற்பத்தியை குறைக்க இவற்றால் முடியாது.

இரண்டு: ஆன்டி பெர்ஸ்பிரண்ட் வகை. இது சிலவகை மருந்துகள் அடங்கிய கூட்டுக்கலவை. இதில் இருக்கும் ரசாயனங்கள் வியர்வை கட்டமைப்போடு செயல்பட்டு சுரப்பிகளில் இருந்து திரவம் வெளியே வருவதை தடுக்கிறது.

ஸ்பிரே, ரோல் ஆன், ஸ்டிக், ஜெல், லிக்யூட், பவுடர் போன்ற பல வகைகளில் டியோடரண்டுகள் உள்ளன. ஸ்டிக், பவுடர் போன்றவைகளை பயன்படுத்தினால் ஈரத்தன்மை உருவாகாது. அதனால் அவைகளை டிரை டியோடரண்ட் என்று அழைக்கிறோம்.

ஸ்டிக் வகையை சருமத்தில் இரண்டு மூன்று முறை சுற்றிலும் தேய்க்கவேண்டும். கிரீம் டியோடரண்டுகளை கை விரலை பயன்படுத்தி உடலில் பூசவேண்டும். ரோல் ஆன் பயன்படுத்தும்போது, முனைப்பகுதியில் பந்து போன்று காணப்படுவது சுழன்று, உள்ளே இருக்கும் திரவத்தை சருமத்தில் பூசுகிறது.

ஸ்பிரே டியோடரண்ட் பயன்படுத்தும்போது சருமத்தில் மிக நெருக்கமாக அதனை பயன்படுத்தவேண்டாம். சிறிது இடைவெளிவிட்டு பயன்படுத்தினால் போதும். 10 முதல் 15 செ.மீட்டர் இடைவெளி தேவை. சருமத்தில் நெருக்கமாக வைத்து ஸ்பிரே செய்தால் சருமத்தின் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடலில் தீக்காயம் போன்று ஒருவகை காயம் சிலருக்கு உருவாகிவிடும்.

டியோடரண்டுகள் ரசாயன பொருட்களின் கலவைதான். அதில் கலந்திருக்கும் ரசாயன பொருட்கள் சிலருக்கு பிடிக்காமல் அலர்ஜி ஏற்படக்கூடும். சொறி, சிவப்பு நிற திட்டு போன்றவை ஏற்பட்டால் அந்த பிராண்ட் டியோடரண்டை உபயோகிக்கவேண்டாம். 

Saturday 29 April 2017

ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்

ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்


ஆண்களின் ஆளுமையை கூட்டும் நகைகளில் பிளாட்டின நகைகளே பிரதான இடம் பிடிக்கின்றன. பிளாட்டினம் என்பது பெண்கள் அணிகின்ற தங்க நகைகளுக்கு எதிர்பதமான வகையில் வெள்ளை நிறத்தில் உள்ளது. இயற்கையான வெண்மை நிறத்தில், தூய்மையான உலோகமாக பிளாட்டினம் உள்ளது கிடைப்பதற்குரிய பிளாட்டின உலோகம் மிக அரிதானது என்றால் சற்று விலை அதிகமாக உள்ளது.

வெற்றி பெறக்கூடிய ஆண்மகனின் அடையாளமாகவும் பிளாட்டின நகைகள் இருப்பதுடன், ஆண்களின் அழகை, ஆளுமையை வெளிப்படுத்துவதுடன், கம்பீரத் தோற்றத்தையும் பிளாட்டின நகைகள் தருகின்றன.

எந்தவிதமான ஆடவர் சருமத்திற்கு ஏற்றது என்பதாலும், உறுதியான ஆண்களின் உபயோகத்திற்கு ஏற்ற உறுதியானது பிளாட்டினம். பிளாட்டினம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து நாட்டில் நகைகளாக செய்யப்பட்டு அரசர்கள் அணிந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பூமிக்கடியில் மிகக்குறைவான அளவே கிடைக்க கூடியது என்பதால் மிக அரிய உலோகமாக பிளாட்டினம் கருதப்படுகிறது. ஆண்கள் அணியக்கூடிய பிளாட்டின நகைகள் எனும் மோதிரம், செயின் வகைகள், பிரேஸ்லெட், பெனன்ட் போன்றவை வருகின்றன. இந்த நகைகள் ஆண்களுக்கு ஏற்றவாறு தனிப்பட்ட டிசைனில், அழகிய வடிவமைப்பு, கூடுதல் பொலிவுடன் உருவாக்கப்படுகிறது.

கம்பீரமான தோற்றம் தரும் ஹாலோ செயின்கள் :

ஆண்கள் அணிகின்ற பிளாட்டின செயின்கள் என்பது நெருக்கமான இறுக்கிய அமைப்புகள் இல்லாமல் ஹாலோ வடிவமைப்புடன் உள்ளன. ஹாலோ டைப் என்பது பார்க்க ஆனமாய் தோற்றமளிக்கும் ஆனால் காற்றோட்டம் கொண்ட இடைவெளியுடன் காணப்படும். ஹாலோ டைப் செயின்கள் மெல்லிய தட்டை அமைப்பு மற்றும் உருண்ட கனமான அமைப்பு கொண்டவாறும் உள்ளன. இதில் தட்டையான அமைப்பில் டெண்டுல்கர் மாடல் செயின்தான் ஆண்களின் அதிக ஈர்ப்பை பெற்ற செயினாக உள்ளது.

கம்பிகளாக நீண்ட செயின்கள் :

கம்பி போன்ற நீள்செவ்வகம் மற்றும் உருவளை வடிவ மூடிய அமைப்புடன் கூடிய செயின்களும் ஆண்களும் ஏற்றதாக உள்ளது. பக்ள்ஸ் டைப் இணைப்பு கொண்ட செயின்களும் மிக விருப்பமான செயின்களாக உள்ளன.

கட்டழகு கரங்களுக்கு ஏற்ற பிரேஸ்லெட் :

ஆண்கள் உறுதியான கரங்களுக்கு ஏற்ற கம்பீர தோற்ற முடைய பிரேஸ்லெட்கள் கனனச்சிதமான வடிவமைப்புடன் உலா வருகின்றன. இவை வித்தியாசமான அமைப்புகளுடன் பாத்ததும் வியக்கும் வகையில் உள்ளன. பழங்கால வாட்ச் ஸ்ட்ராப் போன்ற இணைப்புகள் கூடிய பளபளப்பு மற்றும் மேட் பினிஷ் பிரேஸ்லெட்கள் வருகின்றன. பக்ள்ஸ் அமைப்பு கொண்ட பிரேஸ்லெட் போன்றவையும் பெரிய அளவிலான பிரேஸ்லெட்களான உள்ளன.

மெல்லிய கயிறு வகை பிரேஸ்லெட்கள் :

கயிறு மற்றும் கம்பி இணைப்புகள் கொண்டவாறு பிரேஸ்லெட்கள் வருகின்றன. ஒற்றையாய் உருளை வடிவ கயிறு போன்ற பிரேஸ்லெட் முதல் பல பின்னல் கயிறு அமைப்புடன் பிரேஸ்லெட் வருகின்றன. அதுபோல் சிறுசிறு வளையங்கள் இணைந்தவாறு நடுவில் பெயர் பட்டை (அ) தட்டையான அமைப்பு கொண்டவாறும் பிரேஸ்லெட் வருகின்றன.

இந்த வகை பிரேஸ்லெட்கள் எல்லாம் மெல்லிய வகையான நகைகளாக உள்ளன. மேலும் செயின் இணைப்பு, பட்டையான கம்பி இணைப்பு கொண்ட பிரேஸ்லெட்களும் வருகின்றன. வெள்ளை நிறத்தில் கொள்ளை கொள்ளும் பிளாட்டின நகைகள் ஆண்களின் ஆளுமைக்கு ஏற்றவாறு உருவாக்கி தரப்படுகிறது. 

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்


தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது.

பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், அதிக மெருகுடன் உருவாக்கப்ட்டு வருகின்றன. இவற்றினை பெண்கள் தினம் தலையலங்காரத்தில் எனவும், விசேஷங்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும் தலையலங்காரத்திற்கு என பயன்படுத்தி வந்தனர்.

நாளடைவில் தலையலங்காரத்திற்கு என பிற வகை உலோக மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்ததும், தங்க தலையலங்கார சாமான்கள் அதிக பாதுகாப்புக்கு உகந்ததாக இருந்தாலும் தினசரி மற்றும் பண்டிகை பயன்பாடுகள் குறைய தொடங்கின. ஆயினும் தலையலங்கார நகைகள் பாரம்பரியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரத்யேகமாக பாதுகாத்து வைத்திருந்தனர். இன்றைய நாளில் தலையலங்கார தங்க நகைகள் மீண்டும் இளவயது பெண்களின் மனதில் ஓர் தனி இடம் பிடித்துள்ளன. இதன் காரணமாக நவீனமும், பழமையும் கலந்த வடிவமைப்பில் அழகிய தலையலங்கார நகைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.



விதவிதமான தலையலங்கார நகைகள் :

தலையலங்காரத்திற்கு என நெற்றிச்சுட்டி, ஜடை வில்லை, சூர்ய பிரபை, சந்திர பிரபை, ஜடை, தற்கால கிளிப் மற்றும் ஹேர்பின்கள், கொண்டை ஊசி, குஞ்சரம் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் 22 காரட் தங்கத்தில் கற்கள், மணிகள் பதித்தவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன. அத்துடன் இந்த தலையலங்கார நகைகள் 18 காரட் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டும் கிடைக்கின்றன.

ஆயினும் என்றும் பெண்கள் விரும்பும் தங்கத்தில் உலா வரும் தலையலங்கார பொருட்கள்தான் மதிப்பும், வரவேற்பும் பெறுகின்றன. தலையலங்கார நகைகள் முன்பு மணப்பெண் மற்றும் விழாவிற்கு உரிய பெண்கள் அணிவதாக இருந்தது. இன்று மணப்பெண் தோழியின் உறவு பெண்கள் என அனைத்து பெண்களும் அணிந்து அசத்துகின்றனர்.



தங்க ஜடையும் குஞ்சரமும் :

தலைமுடியில் பின்னப்பட்ட ஜடையின் மேற்புறம் தங்கத்தில் செய்யப்பட்ட ஜடை அமைப்பு அலங்காரத்திற்கு என அணியப்படுகிறது. மேல் முதல் கீழ் வரிசை சிரமாக பறவைகள், பதக்கங்கள், மலர்கள், தகடு வேலைப்பாடு கொண்ட ஜடை அமைப்பு அணியப்படும். இது நூல்கள் கொண்டு முடி ஜடையின் கட்டும் அமைப்பில் இருக்கும். மெல்லிய தகடு, மணி, பதக்க அமைப்பினை ஜடைகள் எடை குறைந்தவாறு கிடைப்பதால் விலை அதிகம் என பயப்பட வேண்டும். மேலும் ஜடையில் தொங்கும் குஞ்சரங்கள் எனாமல் பூசப்பட்டு வண்ண குஞ்ரங்களாக தொங்குகின்றன.

நவீன தலை சொருகு நகைகள் :

தலையின் உச்சி மற்றும் ஓரப்பகுதிகளில் சொருகுகின்ற கிளிப் மற்றும் கல் பதித்த ஹேர்பின்கள் தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விதவிதமான பூக்கள், கிளிகள், மயில் உருவ அமைப்பின் தங்க கிளிப்கள் பெண்களின் தலையில் ஒய்யாரமாய் நடனமிடுகின்றன. அத்துடன் ஹேர்பின்கள் சற்று அகலமானதாக கற்கள் நீள் வரிசையாக பதியப்பட்டு கிடைக்கின்றன. பழங்கால சூர்ய பிரபை, சந்திர பிரபையும் சில மாறுபட்ட வடிவில் உள்ளன.

வேளாண்மை என்பது சூதாட்டமா?




இந்தியப் பொருளாதாரத்தின் ஆன்மா கிராமங்கள் என கருதினார் தேசப்பிதா காந்தியடிகள். கிராமங்கள் வேளாண்மையின் ஆன்மாவாக கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே விவசாயிகள் மரணம் என்பதுதான் செய்தியாக இருக்கிறது அதனை யாரும் சக மனிதனின் பிரச்சனையாகவோ, தினம்தோறும் மூன்று வேளையும் நமக்கு உணவழிக்கும் குடியானவனின் பிரச்சனையாகவோ இந்த சமுதாயம் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் இன்று முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக, பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் யாவும் விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான். ஆளுங்கட்சியோ ஆட்சியை ஐந்தாண்டு காலம் கடத்துவதற்கும், எதிரிக்கட்சிகள், உதிரிக்கட்சிகள் அனைத்தும் அடுத்த ஐந்தாண்டுக்கு ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் பிரச்சனைகளுக்குத் தான் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பார்கள் என்பது தான் எதார்த்த நிலையாக இருக்கின்றது.
இந்திய மக்கள் தொகையில் சராசரியாக 48.5 சதவீதம் மக்கள் வேளான்மைத்துறையை வேலைவாய்ப்புக்காக சார்ந்து இருக்கிறார்கள், இவர்களனைவரும் மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்கள் கிராமங்களில் வசித்துவருகின்றர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 18 முதல் 25 சதவீதம் வரை கடந்த பத்தாண்டுகளில் வேளாண்மைத்துறையின் பங்களிப்பு உள்ளது (பால் மற்றும் மீன் போன்றவைகளுக் வேளாண்மைக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்). தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் வேளாண்மையை தொழிலாக செய்கின்றனர். 2012 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி மாநில மொத்த நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதம் மட்டுமே விவசாயத்துறையின் பங்களிப்பு ஆகும், இவ்வாறான சூழ்நிலையில் தான் தமிழகம் இருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு இவ்வாறு சொல்கிறது” உழவர் நலனை மையமாகக் கொண்டு பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு புரட்சிகர உத்திகளை புகுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்தொழிலை, வணிக கோணத்திலும் இலாபகரமான, தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்,  விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” இதுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி 14 வரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சோறுடைத்த சோழ நாட்டுப்பகுதியில் மட்டும் தங்கள் உயிரை இந்த நாட்டிற்கு தந்திருக்கின்றார்கள். இதற்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள் யாரெனத்தெரியவில்லை. இப்போது அரசு எடுத்திருக்கும் ஒரே நடவடிக்கை நிலவரிகளை ரத்து செய்வது, கடன்களுக்கான சலுகைகளை நீட்டிப்பது, வறட்சி மாநிலமாக அறிவித்தது ஆகியவற்றை தற்போது செய்திருக்கின்றார்கள். இதேபோன்று வறட்சி பாதித்த மாநிலமாக பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்ததை ஏதோ எதிர்கட்சிகளின் போராட்டத்தால் அரசு பணிந்த மாதிரி எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனையின் காரனங்கள் என்ன? அவற்றை அரசு எவ்வாறு அனுகவேண்டும், அதற்கான தீர்வுகளை நோக்கி யாரும் பயனித்ததாக தெரியவில்லை, ஊடகங்களின் முன் தோன்றும்போது மட்டும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வெற்று முழக்கங்கள் தான்.
இந்த விவசாயிகளின் மரணங்களின் பின் உள்ள சமூக பொருளாதார விளைவுகளைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை, அரசுக்கு உரியமுறையில் ஆலோசனை சொல்லவும் ஆளில்லை என்றே தான் என் பார்வையில் கருதுகிறேன். விவசாயம் இலாபகரமான தொழிலாக இல்லாமலும், இளைஞர்கள் இத்தொழில் ஈடுபடாமலும் இதன் விளைவால் நகரங்களை நோக்கி நகர்வது அதன் விளைவால் நகரமயமாக்கல், சமூக தீமைகள் நடைபெறுவதையும் சிந்திக்கவில்லை என்றேதான் கருதுகிறேன். கடந்த ஆண்டு சுவாதி கொலைவழக்கு மிகவும் விரிவாக அலசி ஆராயப்பட்டது, அப்போது பேசப்பட்ட செய்திகள், நுகர்வுக்கலாச்சாரம், சினிமா, மது, போன்ற காரணங்கள்தான் பேசப்பட்டன. இடப்பெயர்வு அதன் சமூக விளைவுகளைப் பற்றி சிந்திக்கப்படவில்லை. ஏன் அந்த இளைஞன் சென்னைக்கு வரவேண்டும் என்பதைப்பற்றி விவாதங்களே எழவில்லை. இதன் பின்னால் இருப்பது விவசாயத் தொழில் இலாபகரமாக இல்லை, இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லை, இது தான் காரணம். தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்தை நீங்கள் எடுத்துக்கொண்டாலும் அங்கு 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவில்லை. அதற்கு கல்வி வளர்ச்சி காரணமாக இருந்தாலும், கல்வி கற்ற இளைஞன் வேலைவாய்ப்பு இல்லாமல் நகர்ப்புறத்திற்கு வந்து செய்யக்கூடிய பணி, பெரும்பாலும் உடலுழைப்பு சார்ந்ததாகத்தான் இருக்கிறது. இதே உடலுழைப்பை அவன் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லை, இருந்தாலும் பெற்றோர் அனுமதிப்பதில்லை. விவசாயம் சார்ந்த தொழில்களான, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற பணிகளில் கூட ஈடுபடுவதில்லை.
விவசாயிகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அரசு விவசாயக்கூலிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தரும் 100 நாள் தான் அவர்களுக்கு வேலை மற்றபடி வேலைகள் கிடையாது, அவர்களுக்கு அரசின் எந்த ஒரு நலத்திட்டமோ கிடைப்பதில்லை. நிலமுடையவர்களுக்கு பயிர் இழப்பீட்டு மானியம், நிலவரி ரத்து போன்ற பயன்கள் விவசாய கூலிகளுக்கு கிடைப்பதில்லை.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் 70வது தேசிய மாதிரிப் புள்ளி விவரம் ( NSSO) அறிக்கையின் படி நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து இது வரைக்கும் 41 சதவீத மக்களுக்கே தொழில் நுட்ப அறிவைக் கொண்டு சேர்க்க அரசுக்கு முடிந்திருக்கிறது. ஆனால் வீட்டுக்கு 4 செல்லிடப்பேசியை கொண்டு செல்ல வெறும் 10 ஆண்டுகள் தான் அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அரசுகளுக்கு வேளாண்மை மீதுள்ள அக்கறையை. விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு, இதைத்தான் காரணமாக சொல்லி வருகிறது, வேளாண் ஆராய்ச்சி, தொழில் நுட்ப அறிவுக்குறைவு, பாசனப்பிரச்சனைகள், நீராதாரம், பருவமழை, கடன் முறையாக கிடைக்காமை, எந்திரமயமாகுதல் குறைவு, சந்தைப்படுத்துதல், பதப்படுத்தும் முறைச் சிக்கல்கள், துண்டாடப்பட்ட நிலம், மண்ணின் தன்மை இவைகளை பட்டியலிட்டு வருகிறதே தவிர அதற்கான தீர்வுகளைச் சொல்லவில்லை. அரசுகள் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கும் நிதியின் அளவு குறைவு. செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை.
மக்கள் தொகையில் இவ்வளவு பேர் வேளான்மையைச் சார்ந்திருந்தும், இவ்வளவு பெரிய வாக்குவங்கி இருந்தும் ஏன் விவசாயிகளின் பிரச்சனை பொதுப் பிரச்சனையாக ஒரு சமூக பிரச்சனையாக மாறவில்லை என்றால், சாதி , வட்டாரம், அரசியல் கட்சிகள் சார்ந்த விவசாய சங்கங்கள் ஆகியவைதான் காரணம். இவர்களனைவரும் ஒரே அணியில் இல்லை.
நீங்கள் அடுத்த கேள்வியை கேக்கலாம் இந்தியா ஆண்டுதோறும் 250 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறது. நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் இது சாதனையல்லவா என்று. உற்பத்தி மட்டும் கூடிக்கொண்டே போனால் போதுமா ? அதன் பலன்களை யார் அனுபவிப்பது? உலக பட்டினிக் குறியீட்டில் மொத்தம் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 118 நாடுகளில் 97வது இடத்தில் இந்தியா உள்ளது. 250 மில்லியன் டன் உணவு உற்பத்தியை வைத்து எதனைச் சாதித்தோம். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கழித்தும் உணவுக்காக உற்பத்தி என்பதனை மாற்றி, இலாபத்திற்காக உற்பத்தி என்பதனை நாம் எப்போது அடையப்போகிறோம்.
இந்தியாவையும், தமிழ் நாட்டையும் பொறுத்தவரை அதிக அளவில் நெல்லும், கோதுமையும், தான் உற்பத்திக்கு முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. காரணம் இவை இரண்டும் தான் உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் என்பதற்காக. செய்திகளில் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் விவசாயி தக்காளி விலையில்லை என்பதற்காக அதை பறிக்காமல் விட்டுவிடுவதும், பறித்தபின் வீணாகக் கொட்டுவதையும் அடிக்கடி காணலாம், இதற்கு யார் காரனம் அரசுகள் தான். இங்கே வேளாண் சந்தைகள் முறையாக ஒருங்கினைக்கப்படுவதுமில்லை. ஒரு பொருளின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள உண்மை நிலவரத்தினை வேளாண்துறை விவசாயிக்கு தெரிவிப்பது கிடையாது. உதாரணமாக ஒரு கிராமத்தில் ஒரு சாகுபடியில் மக்காச்சோளம் அதிக விலை கிடைத்தது என்றால் பக்கத்திலிருக்கும் கிராமத்தினரும் மக்காச்சோளத்தையே பயிரிடுவர் அதிக விலை கிடைக்கும் என்பதற்காக, ஆனால் சந்தை நிலவரமோ அதிக மக்காச்சோள வரத்து இருப்பதன் காரணமாக விலை குறைய நேரிடும், இது மாதிரி சந்தர்ப்பங்களில் வேளாண்துறை முறையாக விவசாயிகளுக்கு வழிகாட்டினால் ஓரளவு இலாபம் கிடைக்கும், மேலும் வேளாண் விலை பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொடர்பாக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து கடனுதவியும் செய்வதன் மூலம், வேலைவாய்ப்பையும் மக்கள் இடம்பெயர்வதையும் தவிர்க்கலாம்.
விவசாயிகளின் பிரச்சனையை தற்காலிக தீர்வை நோக்கிய கண்ணோட்டத்திலே அரசுகள் அனுகுகின்றன. விவசாயிகளின் பிரச்சனையை களைவதற்கு 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள் வெற்றுத்தாள்களில் தூங்குகின்றன. நீண்ட காலத்திட்டங்களை அறிவிக்கின்றன ஆனால் செயல்படுத்தும்போது கானல் நீராகின்றது. இந்திய வேளாண்மை வேண்டுமானால் பருவமழையின் சூதாட்டமாக இருக்கலாம், விவசாயிகள் பிரச்சனை, வேளாண்மைப் பிரச்சனை ஆகியவை அரசுகளின் சூதாட்டம்தான் என்பதில் மாற்றுச்சிந்தனைக்கே இடமில்லை. என்பது தான் எனது நிலைப்பாடு. விவசாயம் என்பது தன்னிறைவு, அதிக உற்பத்தி என்ற நிலையிலிருந்து இலாபம் சார்ந்தது என மாற வேண்டும்.
ஐயாச்சாமி முருகன்

செஞ்சந்தன மரம்




அணுக்கதிர் எதிர்ப்பு
விஞ்ஞானப் பெயர் : Pterocarpus santalinus (Papilionaceae)
சமஸ்கிருதம் : ரக்தசந்தனா
ஹிந்தி : லால் சந்தன்
ஆங்கிலம் : Red Sanders
தமிழ் : சந்தன வேங்கை (மறு பெயர்)
ஒரே மொழியில் ஒரே மரத்துக்குப் பல பெயர்கள் உண்டு. பல மரங்களுக்கு ஒரே பெயர் உண்டு. ஆகவேதான் உலகப் பொதுமொழியாக தாவரவியல் பாடத்துக்கு லத்தீன் மொழி வழக்கு கையாளப்படுகிறது. இதன் மூலம் தமிழ் விஞ்ஞானியும் இந்திய விஞ்ஞானியும் லத்தீன் பொது வழக்கைக் கொண்டு சரியான தாவரத்தை அல்லது மரத்தைச் சரியானபடி அடையாளம் கண்டுகொள்ள எளிதாகிறது. செஞ்சந்தனத்தின் லத்தீன் தாவரவியல் பெயர் டிரோகார்ப்பஸ் சந்தாலினஸ் (Pterocarpus santalinus).
கன்று விற்பவர்கள் செல்வம் கொழிக்கும் செஞ்சந்தனம் என்று விளம்பரம் செய்து. ஒரு கன்று ரூ. 100 என்று கூட விற்று விடுவதுண்டு. சித்தையன்கோட்டை ஆத்தூர் ராமசாமிக்கு சந்தன வேங்கை என்றால் புரிகிறது. செஞ்சந்தனம் என்றால் புரியவில்லை. இரண்டும் ஒன்றுதான். அவர் ரூ. 5/-க்கு ஒரு கன்றை வழங்குகிறார்.
பழைய பைபிள் கதையில் அழுக்காயிருந்த சினாய் ஏரியில் மோசஸ் ஒரு கம்பை வீசியெறிந்து நீர் தூய்மையானதாகச் சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா? மோசஸ் கையில் இருந்த அந்த அபூர்வமான அதிசயக் கம்பு செஞ்சந்தனமாகும். இதில் அப்படி என்ன அதிசயம்? அம்மரம் அணுக்கதிர் வீச்சை எதிர்தாங்கிக் கொள்ளும். இது அணுயுகம். இந்த மரம் தென்னாட்டில் மட்டுமே அதிகம்.
அபின், கஞ்சா கடத்துவது போல் சித்தூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கர்நூல், கடப்பா பிராந்தியங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் மிகுந்து விளங்கிய முதிர்ந்த மரங்கள் எல்லாம் வெட்டிக் கடத்தப்பட்டுவிட்டன. கடத்தியவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். ஜப்பானில் உள்ள பெரிய அணு உலைகளில் நம்மூர் சந்தன வேங்கை மரத்துக்கு இவ்வளவு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இன்று இந்தச் செஞ்சந்தனம் என்ற சந்தன வேங்கை அரிதாகிவிட்டாலும் விரைவில் பணக்காரராகிவிடலாம் என்ற எண்ணத்தில் பல விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்துக் கன்று வாங்கி நட்டுள்ளனர். இவர்கள் அறியவேண்டிய விஷயம் என்னவெனில், சந்தனத்தைப் போல் இது வேகமாக வளராது. வேங்கையைப்போல் அடிமரமும் வேகமாகப் பெருக்காது.
அன்பளிப்பாக எனக்குக் கிடைத்த ஒரு மரத்தை நட்டு நான்கு வருடமாகிறது. உடன் நட்ட சந்தனம் 20 அடி உயரம் வளர்ந்துள்ளது. இதுவோ 9 அடி தான் வளர்ந்துள்ளது. இதன் இயல்புப்படிதான் இது வளரும். நன்கு முதிர்ந்த மரம் கூட 3 அடிக்கு மேல் பருமன் வராது. உயரம் 40 அடி வளர்ந்தால் பெரிய காரியம். இந்த மரத்தின் சிறப்பு இதன் கடினத்தன்மை. ஒரு கன மீட்டர் மரத்தின் எடை 1 டன் வளரும். வைரப்பகுதி அதிகம். ஆகவே இதன் விலையும் வைரம்போல் விற்கலாம். காயக்காய இதன் கடினத்தன்மை கூடுவதால் இது அணுக்கதிர் வீச்சை உள் வாங்கினாலும் மரம் பழுதுபடாதாம். கரையான் அரிக்காது. ஒலி அலையைத் தடுக்கும் திறன் கொண்டது. வெப்பத்தைக் கடத்தாது. வறண்ட புதர்க்காடுகளில் இது சிறப்பாக வளர்கிறது.
இம்மரத்தூளை நைஸாக அரைத்து, நறுமணமூட்டிகளாகத் துணிப்பையில் 50 கிராம் போட்டு வைத்தால், பூச்சி வராது. சந்தனத்துக்குரிய குணம், மணம் எல்லாம் சந்தன வேங்கைக்கும் உண்டு. இது சந்தன மரத்தை விடக் கடினமானது.
இவ்வளவு விஷயங்கள் இந்த மரத்தில் இருப்பினும் கூட, மாவட்டம் தோறும் உள்ள வன விரிவாக்க மையங்களில் விசாரித்தால், சைமா ரூபா தருகிறேன், சிசு தருகிறேன் என்பார்கள். சந்தனம் இருக்காது, செஞ்சந்தனம் இருக்காது. தனியார் நர்சரிகளில்தான் வைத்துள்ளனர். இருப்பினும் செஞ்சந்தன மரம் விநியோகிக்கும் கருணாநிதி மட்டும் ஒரு கன்று 10 ரூபாய்க்குத் தருவார். சிலருக்கு இலவசமாகவும் மரம் வழங்கும் கருணாநிதி விழுப்புரம் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர். இவரிடம் செஞ்சந்தனம் தவிர, வேறு பலவகை ராசிச் சிறப்பு – நட்சத்திரச் சிறப்புள்ள அரிய மரங்களும் கிட்டும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செஞ்சந்தன நெற்று கிட்டும்.
மலைப்பகுதிகளில் சில முதிர்ந்த மரங்களை விட்டு வைத்துள்ளார்கள். சில வனத்துறை அலுவலர்களிடம் அனுமதி பெற்று விதைகளைச் சேகரித்து நாற்றுப் போடலாம். சந்தன வேங்கையின் கீழ் கன்றுகளும் வரும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுஉலை அச்சுறுத்தல் உள்ளது. கூடவே கூடங்குளமும் பயமுறுத்துகிறது. செஞ்சந்தன மரங்களை வளர்த்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது. சந்தன மரத்துக்குச் சொல்லப்பட்ட எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. செஞ்சந்தன மரக்கன்று கிடைக்கும் முகவரி:
திரு. ராமசாமி
பழனி மலைப் பாதுகாப்புக் கழகம், மரப்பண்ணை நர்சரி கன்னிவாடி – அஞ்சல், திண்டுக்கல் மாவட்டம் Cell: 98654-37876

தீவனம் கிடைக்காததால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறப்பு..!



தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி மனிதர்களை மட்டுமல்லாமல், கால்நடைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பச்சை பசேலென்ற இயற்கை காட்சிகளுக்கு பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஐந்து மாதங்களாக நாள் ஒன்றுக்கு ஐந்து மாடுகள் தீவனம் மற்றும் தண்ணீர் இல்லாமல் இறந்து போயுள்ளன. மோயர், மசினக்குடி, பலகோலா ஆகிய கிராமங்களில் மட்டும் கிட்டத்தட்ட 300 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தன்னுடைய 60 மாடுகள், தீவனம் இல்லாமல் இறந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார் மோயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன். தற்போது வரை மேய்ச்சலுக்காக சென்ற அவரது ஐந்து மாடுகள், இன்னும் திரும்பவில்லையாம். எனவே நாளை சென்று அவை உயிரோடு இருக்கின்றனவா? என பார்க்க வேண்டும் என நொந்து போய் பேசுகிறார் நாராயணன்.
கடந்த வாரம் இதே கிராமத்தில் 20 ஆடுகள் இறந்து போயுள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்வதில்லை எனவும் பிணக் கூராய்வு கூட செய்வதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பிணக் கூராய்வு செய்யும் கால்நடை மருத்துவருக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை மாவட்ட நிர்வாகம் அளிப்பதில்லை என்பதால் மருத்துவர்கள் பிணக் கூராய்வு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனராம். இதனால் இறந்து போகும் மாடுகளுக்கான பிணக்கூராய்வை, மாட்டின் உரிமையாளர்களே மேற்கொள்ள சொல்கிறார்களாம். ஆனால் அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும் விவசாயிகள், இறந்த கால்நடைகளின் உடல்களை அடக்கம் செய்து விடுகிறார்களாம்.
”கால்நடைகள் எங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அவை எங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் போலத்தான். கடந்த ஆண்டு கால்நடை தீவனத்திற்காக மட்டும் சுமார் 8 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் என்னால் அவற்றை காப்பாற்றப்பட முடியவில்லை.” என வருத்தப்படுகிறார் நாராயணன்.
கடந்த 2000-ஆம் ஆண்டு இதே போன்ற வறட்சியை தமிழகம் சந்தித்தது. அப்போதும் இதே போல கால்நடைகள் மடிந்தன. ஆனால் இடையில் பெய்த கோடைக்கால மழையால், சில வாரங்களில் கால்நடைகள் இறப்பது தடுக்கப்பட்டது.
நீலகிரியில் உள்ள ஒரு கிராமத்தை பார்வையிட சென்றபோது, சுமார் ஒரு கி.மீ சுற்றளவிற்குள் 59 மாடுகளின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததாக, அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் பாரதிதாசன் கூறுகிறார். “ஒரு கி.மீக்குள் 50 பசுக்கள் இறந்து கிடந்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. இதே மாடுகளை புலிகள் அடித்துக் கொன்றிருந்தால், அது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாகியிருக்கும். தீவனம் கிடைக்காததால், பல மாடுகள் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணுகின்றன. இதுவும் அவை இறப்பதற்கு முக்கிய காரணம்.” என பாரதிதாசன் தெரிவித்தார்.
நன்றி:

Wednesday 26 April 2017

தென்னிந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறையை தடுக்க மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி..!



கடந்தாண்டு போதுமான கரும்பு உற்பத்தி இல்லாததால், தென்னிந்தியாவை சேர்ந்த பல சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படவில்லை. இதனை கருத்தில் கொண்டுள்ள இந்திய அரசு, வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை மூலப் பொருட்களை இறக்குமதி செய்துகொள்ள ஜூலை 30-ஆம் தேதி வரை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் முடங்கிக் கிடக்கும் சர்க்கரை ஆலைகள் முழு வீச்சில் செயல்படுவது மட்டுமின்றி, சர்க்கரை பற்றாக்குறை ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள 5 டன் சர்க்கரை மூலப் பொருட்களில், 3 டன் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1.5 டன் மகராஷ்டிராவுக்கும், அரை டன் மேற்கு வங்காளத்திற்கும், ஒடிசாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், வட மாநிலங்களில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது. ஆனால் மகராஷ்டிரா, தமிழகம் மற்றும் சில தென்னிந்திய மாநிலங்களில் கரும்பு விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்ததால், 2016-17-சர்க்கரை ஆண்டு முடிவான செப்டம்பர் மாதத்தில் தெற்கு பிராந்தியத்தில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி:

வீட்டுக் கூரையாக வரகு வைக்கோல்




வரகு வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மக்கிய பிறகு உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துவார்கள். இதன் வைக்கோல் தண்ணீர் பட்டாலும் நீண்ட நாட்களுக்கு மக்காமல் இருக்கும். கிராமப்புறங்களில் பொருட்களைப் பானையில் சேமித்து வைப்பதற்காகக் கீழ் அடுக்கு நகராமல் இருப்பதற்காகப் பிரிமணை (பிரியாலை) செய்து வைப்பார். இது நெடுநாட்கள் வரை மக்காமல் இருக்கும்.
பழங்காலத்தில் கிராமப்புறங்களில் செங்கற்களை அடுக்கிக் கிணறு தோண்டும் போது வெளிப்புறமாக செங்கற்களைச் சுற்றி வரகு வைக்கோலைக் கயிறாகத் திரித்து வெளிப்புறம் இடைவெளி இல்லாமல் சுற்றி ஊற்று நீருடன் மணல் கசிவைத் தடுத்துக் கிணறு தோண்டுவார்கள். இந்த வைக்கோல் பல ஆண்டுகளுக்கு மக்காமல் இருந்து மண்ணரிப்பைத் தடுக்கும். களிமண்ணையும் வரகு வைக்கோலையும் கொண்டு தானியக் குதிர்கள் செய்வார்கள்.
வீட்டுக் கூரையாகச் சங்க காலத்தில் வரகு வைக்கோல்கள் வேயப்பட்டதை உணர முடிகிறது.
ஏனல் உழவர் வரகுமீ(து) இட்ட
கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை
மென்தினை நுவணை முறைமுறை பகுக்கும்
புன்புலம் தழீஇய புறஅணி வைப்பும் – 30: 22-25
  • பாலைக் கௌதமனார் – பதிற்றுப்பத்து
தினை விதைக்க உழுது பயிர் செய்யும் குன்றவர், வரகு வைக்கோலால் வேயப்பட்ட கூரையின் மேல், மணமிக்க காட்டு மல்லிகை படர்ந்த மனைகளில்; மெல்லிய தினைமாவை (நுவணை) வரும் விருந்தினர்க்கு முறையாக அளித்துண்ணும்; புன்செய் நிலங்கள் சூழ்ந்து கிடக்கும் முல்லைநிலத்தைச் சேர்ந்திருக்கும் குறிஞ்சிப் பகுதியும்.

விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் விருது.





விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் விவசாயம் குறுஞ்செயலிக்கு தமிழக அரசாங்கத்தின் மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.
‛முதல்வர் கணினி தமிழ் விருது’ என்னும் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தமிழ்மொழி வளர்ச்சியைக் கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு ‘முதல்வர் கணினி தமிழ் விருது’’ வழங்கி. தமிழக அரசாங்கம் ஆண்டுதோறும் கௌரவித்து வருகிறது.
2015 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு விவசாயம் குறுஞ்செயலி தெரிவு செய்யப்பட்டது.
விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம் அந்தச் செயலியை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி செல்வ.முரளிக்கு நேற்று (25-04-2017) விருது வழங்கிச் சிறப்பித்தார்.
விவசாயம் குறுஞ்செயலி உருவாகக்காரணமான இயற்கை விவசாயப் பிதாமகன் திரு.நம்மாழ்வார் அவர்களுக்கும், உலகின் அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குறுஞ்செயலிக்காக இன்றுவரை உழைத்து வரும் விசுவல்மீடியா குழுமங்களின் தொழில்நுட்பர்கள் சதிஷ், புவனேஸ்வரி, சத்யா, கோகிலா, பிரியா, காயத்ரி, தேவயானி, செந்தில்குமார், வனிதா ஆகியோருக்கும், பசுமை விகடன் இதழுக்கும், மேலும் இந்த குறுஞ்செயலியை நிறுவி பல கருத்துக்களைக் கூறி பகிர்ந்துக்கொள்ளும் பயனாளர்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம்.
இந்த பொன்னான தருணத்நேதில் விசுவல்மீடியா குழுமம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. உங்களின் தொடர் ஆதரவு எப்போதும் எங்களை வழி நடத்தும். நம்மை மேலும் செம்மைப்படுத்தும், உயர்த்தும் என்பதைக் கனிவோடு நினைவூட்டுகிறோம்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளி என்ற ஒரு சிறிய ஊரிலிருந்து இயங்கும் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த இந்த விருது எங்களுக்கும், எங்கள் ஊழியர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தை நாங்கள் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவோம்.
விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாகர விவசாயம் குழுவில் சார்பில் அக்ரிசக்தி என்ற புதிய நிறுவனம் விவசாயி்களுக்கு என்று ஒரு விற்பனை சந்தையை உருவாக்கி விரைவில் வெளியிட உள்ளது. மேலும் விவசாயி்களுக்குத் தேவையான அளவில் சிறிய அளவிலான கூட்டுறவு சந்தைமுறையினையும் வெளியிட முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது.
செல்வமுரளி

இந்திய விவசாயம் சரியான பாதையில் செல்வதாக உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து..!




காலநிலை மாறுதல் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை இந்திய விவசாயம் சமாளித்து, எதிர்காலத்தில் காலநிலை மாறுதலுக்கு ஏற்ற விவசாயத்தில் இந்தியா சிறந்து விளங்கும் என சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய உணவு மற்றும் விவசாய அமைப்பிற்காக இந்திய பிரதிநிதி சியாம் கட்கா,” ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்தியாவில் விவசாய கட்டமைப்பு முன்னேறியுள்ளது என்பதுதான். மேலும் பல விவசாய கல்லூரிகளும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. தனியார் அமைப்புகள் கூட விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய ஆராய்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும், ஆராய்ச்சி செய்யும் திறமை இந்தியர்களுக்கு உண்டு. அதனால்தான் 1960-ஆம் ஆண்டிலிருந்து உணவு உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க முடிந்திருக்கிறது.
கால நிலை மாறுபாட்டின் விளைவாக நிலவக்கூடிய தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாரு, மாற்றுப் பயிர்கள் மற்றும் மாற்று பயிர் முறைகளை எதிர்காலத்தில் இந்திய விவசாயிகள் பின்பற்றக் கூடும். எடுத்துக்காட்டுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மகராஷ்டிர மாநிலத்தில், அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு பதிலாக, கங்கை நதியோர மாநிலமான பிகார் மற்றும் பிரம்மபுத்திரா நதியோர மாநிலமான அசாம் போன்றவற்றில் பயிரிட வேண்டும்.
பிகார், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை தீட்டியுள்ளது.” என சியாம் கட்கா கூறியுள்ளார்.
உணவு மற்றும் விவசாயம் என்ற அமைப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு கால நிலை மாறுபாட்டுக்கு ஏற்றவாறு விவசாய பயிர்களிலும், தொழில்நுட்பங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
நன்றி:

Tuesday 25 April 2017

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி? – காமசூத்திரம்





பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை

விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணிடமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள்வோம்.

இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கிறது.

அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரியவில்லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது.அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.

அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக்க வேகத்துக்கேற்ப அவள் இன்பத்தில் துடிப்பதை ஆண்மை வெகுவாக ரசி க்கிறது. இவ்வாறு, பெண்மை தான் அனுபவிக்கப்படும் இன்பத்தை அனுபவிப்பதை, ஆண்மை தன் கண் ணால் பார்த்து காதால் கேட்டு அனுபவிக்கிறது.

இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண்ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு ஆகும். இந்நிலையில், ஆண்மை பெண்ணின் உதடு துடிக்கும் துடிப்பை ரசிக்கிறது. அவள் கண்கள் திறந்த நிலையில் ஆண்மை அவள் கண்களின் மூலம் எதோ ஒன்றுக்குள் உடுருவுகிறது. ஆண்களே! முயற்சித் துப் பாருங்கள்.

மிகவும் இன்ப நிலையில் உள்ள பெண்ணின் கண்களைப் பாருங்கள். அதில் மற்றொரு உலகத்துக்கான வழி தென்படுகிறது. அச்சமயத்தில், விந்து நீக்கம் ஏற்படும். ஆனால், விந்தை நீக்காமல், அவள் பார்வையில் நுழையுங்கள். குறைந்தது ஒரு முறையேனும் அவ்வாறு அவள் பார்வையில் நுழையுங்கள். செக்ஸ் தெளிவு பிறக்கும்.

இந்த ‘பார்த்தலே’, ஆண்மைக்கு மிகுந்த இன்பத்தை கொடுக்கிறது. அதனால்தான், பெண் உடல் அங்கங்களை ஆண் பார்க்க மிகவும் விருப்பப்படுகிறான். அது அவன் தவறல்ல. அது அவனுள் வெளிப்படும் ஆண்மை யின் வேலையே!

இந்த ‘பார்த்தலே’, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களை ஆண்கள் பார்க்க தூண்டுகிறது. இதனாலேயே, நீலப்படம் எங்கும் நிறைந்துள்ளது.இப்படி பெண்ணின் உடல் அங்கங்களை பார்க்க விரும்புபவர்களை கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், நீலப் படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், இந்த உல கம் முழுக்க ஒதுக்கப்பட்ட இடமாகி விடும்.

அதே போல், இன்று நீலப் படங்களைப் பார்க்கும் பெண்களை நடத்தை சரியில்லாதவர்கள் என்று ஒதுக்கினால், நடத்தை சரியுள்ள பெண்களை விரல் விட்டுதான் எண்ணனும்.அதனா ல், இயற்கை உந்துதலை ஏற்றுக் கொ ள்வோம். ஆண்மை, பெண்மை வெளிப் பாட்டினை ஏற்றுக் கொள் வோம்.

அடுத்து, ‘இயங்குதல்’ மூலம், ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது. இம்முறையில், ஆண், பெண்ணின் நிலையை கவனிப்பதில்லை. அவன் தன் முழு வேகத்தையும் பயன் படுத்தி, தன் முழு வெறியையும் வெளிப்படுத்தி, அவளை தடவி, கடித்து, குதறி இன்புறுகிறான். இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண் ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு, உதடு, மார்பகங்கள் மற்றும் பின் புறம் ஆகும். இந்த முறையின் உச்சமே பெண்ணிடம் வன்முறையிலான செக்ஸ் ஆகும்.

அதனால், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுபவியுங் கள். செக்ஸ் பெருங்கடல். அதில் முழுமையாக முழ்குங்கள். நிச்சயம் முத்தேடுப்பீர்கள். ஆனால், கவனம். செக்ஸ் செய்யும் ஒவ்வொரு தட வையும் விந்து நீக்கம் செய்யுங்கள்.

செக்ஸ்ஸின் உச்சம் விந்து நீக்கமே. ஒவ்வொரு தடவையும் விந்து நீக்கம் செய்வதால் ஆண்களின் சக் தி ஒன்றும் குறைந்து பொய் வி டாது. இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும் என்பதுபோல் விந்து வெளியாக வெளியாக உறிக்கொண்டே இருக்கும். ஆகவே அதைப் பற்றிய பயமோ கவலையோ வேண் டாம்.

விரும்பினால் சில நேரம் விந்து நீக்கம் செய்யாமலும் உடலுறவு கொள்ளலாம். அப்படி உடலுறவு கொள்ளும்பொழுது, குறைந்தது அரை மணி நேரம் செய்யுங்கள். விந்து நீக்கம் இல்லாமல் முடித்துக் கொள்ளுங் கள். சற்று சிரமம்தான். ஆனால் நடைமுறையில் முடியக்கூடிய செயல்தான்.

விந்து வெளியாகிவிட்டால், மறு நாள் மறுபடியும் செக்ஸ் செய்யலாம் தான். ஆனால், இன்ப அளவில் வேறுபாடு உண்டு. முதல் நாள் விந்து வெளியாகாவிட்டால், மறுநாள் செக்ஸ் முதல் நாளை விட கூடுதல் இன்பம் அளிக்கும். அதற்கு மறுநாள் இன்னும் கூடுதல் இன்பம் கிட்டும். இப்படியே இன்பத்தை கூட்டிக் கொ ண்டே சென்றால், ஒரு கட்டத்தில், செக்ஸின் போது இன்பம் தாங் காமல் உடல் அதிர ஆரம்பித்து விடும். வேண்டுமானால், அப்பொழு து விந்துவை வெளியாக்குங்கள். மிகப் பெரிய பரவச நிலையை அனுபவிப்பீர்கள். உங்கள் துணைக்கும் அந்த பரவசம் கிட்டும். எல்லாம் நம் உடலில் உள்ள மின்சக்தி பண்ணும் வேலை. இப்படி வெளியாக்கப்படும் விந்துதான், குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது.

அதனால்தான் அக்காலப் பெரியோ ர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், சில வாரங்கள், விரதம் என்று செய்யச்சொல்லி, மறை முகமாக விந்து சேமிப்பை வலியுறுத் தினர். தரமான விந்து சேர அவகாசம் தேவைப்படுவதால், பக்தியின் பெயரால், விந்து நீக்கத்தை தடுத்தனர்.
நாம், சபல உலகத்தில் வாழ்வதால், நம்மால் செக்ஸ் செய்து கொண்டே விந்து சேமிக்க முடியுமா? முடியும். நிச்சயம் முடியும். கவலையே வே ண்டாம்… இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும்.

இளைஞர்களுக்கு உதவும் புதிய பண்ணை தொழில்-யோகர்ட் தயிர் தயாரிப்பு


வீடுகளில் சாதாரணமாக பாலில் உறையூட்டி தயிர் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த தயிரை விட குறிப்பிட்ட நுண்ணுயிர்கலவைகளை சேர்த்து தயாரிக்கப்படும் யோகர்ட் தயிர் என்பது சுவையானது. இதனை வர்த்தகரீதியாக பால் பண்ணையாளர்களோ, புதிய பண்ணை தொழில்வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களோ தயாரித்து விற்பனை செய்ய முடியும்.

யோகர்ட் தயிர்


யோகர்ட் தயிர் என்பதும் ஒரு உறையூட்டப்பட்ட பால் பொருள் தான். இந்த தயிரானது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் போன்ற நுண்ணுயிர்க் கலவைகளை சேர்த்து புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.


யோகர்ட் தயிருக்கும் சாதாரணத் தயிருக்கும் உள்ள வேறுபாடுகள்


1. சாதாரண தயிரில் கொழுப்பு சாராப் பொருட்களின் சதவிகிதம் என்பது 8.5 சதம் வரை இருக்கும். அதாவது, தயிரில் இருக்கும் கொழுப்பை தவிர்த்து மீதமுள்ள திடப்பொருட்களின் அளவு என்பது 8.5 சதவீதம் இருக்கும். ஆனால் யோகர்ட் தயிரில் இந்த திடப்பொருட்கள் 11 முதல் 12 சதவீதம் வரை இருக்கும். இதனால் யோகர்ட் தயிரின் தரமும், மிருதுத்தன்மையும் உயருகிறது.


2. சாதாரண தயிர் தயாரிக்க பல்வேறு நுண்ணுயிர் கலவைகளை நாம் உபயோகிக்கிறோம். ஆனால் யோகர்ட் தயிர் தயாரிக்க நாம் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்லஸ் மற்றும் லேக்டோபேசில்லஸ் பல்கேரிக்கஸ் ஆகிய நுண்ணுயிரிகளை 1:1 என்ற விகிதத்தில் கலந்து தயாரிக்கிறோம்.


3. நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு தேவைப்படும் வெப்ப அளவு இந்த இரண்டு பண்டங்களுக்கும் வேறுபடுகிறது. சாதாரண தயிர் தயாரிக்க 13 முதல் 16 மணி நேரத்திற்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆனால் யோகர்ட் தயிருக்கு 4 மணி நேரத்திற்கு 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் போதுமானது.


சிறப்புகள்


1. யோகர்ட் தயிரில் உள்ள நுண்ணுயிரிகள் பாலில் உள்ள சர்க்கரைப் பொருளை சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்டோஸ் ஆக மாற்றுகின்றன. இதனால் இந்த தயிரை நோயாளிகளுக்கும், ஒவ்வாமை கொண்ட குழந்தைளுக்கும் கூட கொடுக்கலாம்.


2. யோகர்ட் தயிர் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது.

 
3. இதில் புரதச்சத்து, போலிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற உயிர்ச்சத்துக்களின் அளவும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் அளவும் அதிகமாக இருக்கிறது.


4. யோகர்ட் தயிரின் சிறப்பே அதன் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் பண்பில் தான் அடங்கி இருக்கிறது. யோகர்ட் தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகள், அபாயகரமான நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. இதனால் மனிதருக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, புற்று நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.


5. இரத்தத்தில் கொழுப்பு சத்து அளவு உயர்வதையும், அதனால் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றையும் யோகர்ட் தயிர் தடுக்கிறது.
எனவே, மருத்துவ குணம் கொண்ட இந்த யோகர்ட் தயிரை தயாரித்து விற்பனை செய்ய பால்பண்ணையாளர்களும், இளைஞர்களும் முன்வரலாம். இதனால் புதிய தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த யோகர்ட் தயிர் தயாரிப்பதற்கான பாக்டீரியாக்கள் சென்னை கால்நடை கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்: டாக்டர்கள். பண்ணை முருகானந்தன்( பேராசிரியர் மற்றும் தலைவர், இரா.உமாராணி, பூ.பூவராஜன். கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.