Friday 26 May 2017

கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!!


கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர்.
அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம்.
அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்?  என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் - பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான  கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்…..
‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா    நினைக்கிறாங்களே….
என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு
குழந்தை.ப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தப் பத்து நிமிடங்களை எல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், கலவிக்கான பத்து நிமிடங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஏனென்றால், கலவியும் அதில் கிடைக்கும் சந்தோஷமும், அதன்விளைவாக உருவாகும் குழந்தையுமே இன்றைய உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
anagarigam_30  கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! - பகுதி-1) anagarigam 30கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் 
பூமியில் அழிந்துபோயிருக்கும்.
செக்ஸ் உறவு என்பது நமது நாட்டில் அருவருக்கத்தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாகப் பேச இயலாத, மறைக்கக்கூடிய ஒரு பிரச்னையாகவே இன்னமும் இருக்கிறது.
சிக்மண்ட் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர், ‘மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதுபோல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக்கூடிய செக்ஸ் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
மேலும், செக்ஸ் உணர்வில் மனிதர்கள் திருப்தி அடையவில்லை என்றால் பல மன நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.
இவருக்கு வெகு காலம் முன்னரே நமது முன்னோர்கள், செக்ஸின் அவசியத்தை வலியுறுத்தி, கோயில்களில் சிற்பங்களாவும், புனித நூல்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் எது சரியான, நியாயமான செக்ஸ் .உணர்வு? எது செக்ஸ் பிரச்னை?
என்பதில் நன்கு படித்தவர்களுக்கும், பெரிய அறிவாளிகளுக்கும் தெளிவற்ற மனநிலையே உள்ளது.
ஜான் புரூஸ்னன் என்ற அறிவியல் அறிஞர், செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தைக் கூறியுள்ளார்.
அதாவது, ‘ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை 
மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து  சராசரியாக 5 நிமிடம் முதல் 10 இமிடம்

வரை உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட 

திருப்திநிலையை   அடைந்து சுமார் 30 நிமிடங்கள் 

வரை அமைதி  பெறுவதே ஆகும்’ என்று சொல்லியிருக்கிறார்

  இன்று வரை, செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதனாலே பெண்கள் முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
இன்று பல்வேறு பிரச்னைகள், இல்வாழ்க்கைச் சிக்கல்கள், தகராறுகள், சண்டைகள், விவாகரத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் விடை சொல்வதற்காகவே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
ஆண்-பெண் இருவரும் சேர்ந்து இன்பத்தை அனுபவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை ஆண்களும் பெண்களும் புரிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுகமாகும்.
லிங்கம்
உள்ளே நுழையும் முன்…
இந்த உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே காமத்தின் குழந்தைகளே.
காமத்தை ரசனையுடன் ஆணும் பெண்ணுமாக இணைந்து மேற்கொண்டு உச்சகட்ட இன்பத்தை அடைவதுதான் பேரின்பம்.
அந்தக் காலத்தில் பேரின்பம் என்பதையே லிங்க வழிபாடாகப் பூஜித்து வந்தார்கள் என்பதற்கு கஜுராஹோ கோயில் சிற்பங்களும், கொக்கோகம் போன்ற பல்வேறு காம நூல்களும் சாட்சியாக விளங்குகின்றன.
அன்றைய வழிபாட்டில் வணங்கப்பட்ட லிங்கமும், அதன் கீழே இருக்கும் ஆவடையும் ஆண்-பெண் உறுப்புகளின் அம்சமாகவே உருவகிக்கப்பட்டுள்ளது.
அதாவது குழந்தைப்பேறு மட்டுமின்றி, உடல் இன்பமும் தரக்கூடிய மனித உறுப்புகளையும், காம எண்ணங்களையும் கடவுளாகவே வணங்கியிருக்கிறார்கள்.
Kama_Rati  கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! - பகுதி-1) Kama Rati‘மன்மதன் ரதி’
இன்னும் சொல்லப்போனால், மனிதர்கள் எப்போதும் காமத்தை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மன்மதன் ரதி’ என்று தேவர்களை உருவாக்கி வணங்கி வந்திருக்கிறார்கள்.
மனிதர்களால் போற்றி வணங்கப்பட்ட நிலையில் இருந்த காமத்தின் நிலை, இன்று தடுமாற்றமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த 21-ம் நூற்றாண்டிலும் உச்சகட்டம் அல்லது க்ளைமாக்ஸ் அல்லது ஆர்காசம் என்று பேசினால், ஏதோ அருவருப்பான ஒன்றைப் பற்றிப் பேசுவதுபோல் முகத்தைச் சுளிக்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். உச்சகட்டம் என்றால் என்னவென்று விவரிக்கும் முன் சில கற்பனைகள்…
நல்ல பசியுடன் சாப்பாட்டு மேசையில் ஆசையுடன் சாப்பிட ஒருவர் உட்காருகிறார். தலை வாழை இலையில் மல்லிகைப்பூபோல் சூடான சாதம், கேரட் அல்வா, வெண்டைக்காய் வதக்கல், வாழைக்காய் வறுவல், கொத்தமல்லி துவையல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், பூசணிக்காய் சாம்பார், மிளகு ரசம், மோர், பாயசம் என்று மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் உணவு பரிமாறப்படுகிறது.
அமர்க்களமான விருந்தை சந்தோஷமாகச் சாப்பிடத் தொடங்கி, நாலைந்து வாய் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே, அந்த உணவு முழுவதும் பறிக்கப்பட்டால் அந்த நபருக்கு எப்படி இருக்கும்?
ஒரு திரையரங்கில், சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியும் எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான காட்சி அமைப்புகளுடன் படம் நகர்வதை சந்தோஷமாக ரசித்துக்கொண்டிருக்கும்போது, 
மின்சாரக் கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்டால் எப்படி 
இருக்கும்?

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பத்து பந்துகளில் பதினைந்து ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இரண்டு விக்கெட்டுகள் என்ற நிலையில் இந்தியா விளையாடிக்கொண்டிருக்கிறது.
கை நகங்களைக் கடித்தபடி பரபரப்பாக பார்த்துக்கொண்டிருக்கும்போது, டக்கென்று கரண்ட் போய்விட்டால் எப்படி இருக்கும்? மேலே குறிப்பிட்டதில் சாப்பாடு, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் இன்பத்தை நன்றாகவே அனுபவித்துக்கொண்டிருந்தாலும், உச்சகட்ட இன்பமான ‘பேரின்பத்தை’ அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள் என்பது உண்மைதானே?
இந்த ஏமாற்றம்  என்றாவது ஒருநாள் நிகழ்ந்தால், அதைச் தற்செயல் என்று தவிர்த்துவிடலாம். ஆனால் தினமும் நிகழ்ந்தால்…? ஆம், பலருக்கு அப்படித்தான் நிகழ்கிறது.
இல்வாழ்க்கையில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருமே இந்தப் பேரின்பம் என்றால் என்னவென்றே தெரியாமல், காமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உச்சகட்டத்தைப் பேரின்பம் என்று எப்படிச் சொல்லலாம்? என்று சண்டைக்கு வரவேண்டாம். பேரின்பம் என்பது ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளுடன் கரைந்துபோவது.
காமத்தில் பேரின்பம் என்பது இயற்கையோடு இயற்கையாக கரைந்துவிடுவது.
இந்த உச்சகட்டம் என்பதன் அர்த்தம்கூட தெரியாமல், ஆண்களும் பெண்களும் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதற்கு ஓர் ஆணுறை தயாரிக்கும் நிறுவனம் நடத்திய ரகசிய சர்வேதான் சாட்சி.
ஆண்களிடம் உச்சகட்டம் குறித்து கேட்டபோது, அவர்கள் சொன்ன ஒரே பதில், ‘உறவில் விந்து வெளியேறுவதுதான் உச்சகட்டம்’.
அதே நிறுவனம் பெண்களிடம் ரகசிய சர்வே நடத்தியபோது எத்தனைவிதமான விடைகள் கிடைத்தன தெரியுமா?
* அப்படின்னா… கர்ப்பம் அடைவதா?
* ஆண்களுக்கு விந்து வெளியேறுவது
* உறவுக்குத் தயாராக பெண்ணுறுப்பில் திரவம் கசிவது
* நீண்ட நேரம் உறவுகொள்வது
* வாய் வழி உறவுகொள்வது
* உறவு முடிந்துபோதல்
* தெரியவில்லை
* இது ஆண்களுக்கு மட்டும்தான். பெண்களுக்கு இல்லை
* ஆண்களுக்கு விந்து வெளியேறும்போது கிடைக்கும் உணர்வு
* ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் கிடைப்பது
* இதுவரை நான் அனுபவிக்காதது
* அது ஏதோ கெட்ட விஷயம்
* செக்ஸில் புது உணர்ச்சியை எட்டுவது
* ஆண்களுக்கு விந்து வெளியேறுதல்; பெண்களுக்கு உடல் முறுக்கிக்கொண்டு இன்பத்தை சத்தமாக வெளியிடுதல்
* சத்தம் போட்டுக்கொண்டே இன்பத்தை அனுபவிப்பது
* பெண் உறுப்பில் வாய் வைத்துச் சுவைக்கும்போது கிடைக்கும் அனுபவம்
* பகலில் இன்பம் அனுபவிப்பது
* சுய இன்பம் செய்வதில் மட்டும் கிடைப்பது
இங்கே பட்டியலிடப்பட்டிருப்பது மிகவும் குறைந்த அளவு விடைகள் மட்டுமே.
ஆனால், பெரும்பாலானவர்களின் கருத்துகள் மேலே குறிப்பிட்டவற்றை ஒற்றியே இருந்தன.
இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த புள்ளிவிவரத்துக்காக தேர்வு செய்யப்பட்ட பெண்கள் அனைவருமே ஓரளவு படித்தவர்கள் என்பதுதான்.
ஆண்-பெண் இருவருமே செக்ஸ் அனுபவத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியாமல்போவதால், அவர்களது இல்லற வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இருவருமே கிடைக்காத ஒன்றைத் தேடி ஏமாந்த நிலையில் உறவுகொள்ளத் தொடங்கி, பிறகு உச்சகட்டம் என்பதையே மறந்துபோய் விடுகிறார்கள்.
முந்தைய காலத்தில் ‘ஆணுக்குப் பெண் அடிமை’. ‘கல்லானாலும் கணவன்’ என்று பெண்களை அடக்கி வைத்திருந்த காரணத்தால், உச்சகட்டம் என்ற ஆனந்த அனுபவத்தை, அடிமை வாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் விலையாகவே பெண்கள் நினைத்தார்கள்.
அதனால் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்கும் உச்சகட்டம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், செக்ஸ் உறவில் திருப்தியற்ற நிலையில்தான் தாங்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.
மேலும், இன்று இன்டர்நெட் போன்ற சாதனங்கள் மூலம் பல்வேறு வகையான செக்ஸ் படங்களைப் பார்க்கும் ஆண், பெண் இருவரும், அதுபோல் தங்களது துணையும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து ஏமாந்துபோகிறார்கள்.
மனத்துக்குள் தம்பதியருக்கு ஆயிரம் ஆயிரம் ஆசைகள் 
இருந்தாலும்இப்படி அடக்கப்படும் ஆசைகள் ஏமாற்றமாக மாறி, வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் பூகம்பமாக வெடித்து குடும்ப ஒற்றுமையை சிதறடிக்கிறது.
இன்று பெண்களுக்கும் பொருளாதார நம்பிக்கை இருப்பதால், தங்களது நிறைவேறாத ஆசைகளுக்குக் காரணமான கணவனைப் பிரிந்து செல்ல தைரியமாக முடிவெடுக்கிறார்கள்.
படுக்கையறையில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்த தம்பதிகளில் ஒரு சதவீதத்தினர்கூட விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்வதில்லை என்பதும் மேற்கண்ட ஆய்வில் வெளிவந்திருக்கும் தகவல் ஆகும்.
உச்சகட்டம் என்பது எல்லோராலும் எளிதில் எட்டிப்பிடிக்கக்கூடியது என்பதுதான் உண்மை. எப்படி எட்டுவது என்பதை இனிவரும் அத்தியாயங்களில் தொட்டுத்தொட்டுப் பார்கலாம்
டாக்டர். டி. காமராஜ்
தொடரும்…..


பெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில்


பெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில்

‘நீ இல்லன்னா நான் இல்ல…ஐ லவ் யூ…என்னை விட்டுட்டுப் போய்டமாட்டியே…இப்படி இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரிப்பீட் காதல் வசனங்களைப் பேசிக்கொண்டே இருப்பது…
அடுத்து லெவலுக்கு அப்டேட் ஆகணும்ல ப்ரோ…? அதனாலதான் 1500 காதலிகளிடம் தன்னுடைய காதலர்கள் எப்படி இருக்கிறார்கள்…அவங்களுக்குள்ள நடக்குற ‘காதல், ஊடல், காமம் எல்லாம் திருப்திகரமா இருக்கா…?
அவங்க எந்த அளவுக்கு சந்தோஷமா இருக்காங்க…?’ என்று சர்வே நடத்தியிருக்கிறது ஒரு ஆய்வு நிறுவனம்.
காதலிகள் கூறிய பதில்களில் இருந்து எந்த நாட்டு காதலர்கள் மிகச்சிறந்தவர்கள் என்று ஒரு பட்டியலையே தயாரித்து உள்ளது. (நம்ம ஊரு பசங்க கிட்ட இத சொல்லி பாருங்க… காதலுக்கு ஏதுய்யா ஊரு, பேரு, நாடு… அப்டீன்னு பெரிய பாடமே எடுப்பாங்க. )
காதல்
சரி, இந்த சர்வே படி உலகத்தின் மிகச்சிறந்த காதலர்களை கொண்ட நாடு ஸ்பெயின் என்று அங்கீகரித்திருக்கிறார்கள்….ஸ்பெயின் பசங்களுக்கு ஏன் அவ்வளோ மவுசுன்னு கேட்டா…அவர்களின் அழகுக்கும், ஆண்மைக்கும் பெண்கள் பார்த்த மாத்திரத்திலேயே மயங்கிவிடுவார்களாம்.
அதனால ஸ்பெயின் பசங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா குழந்தை அழகாக பிறக்கும் என்று கூறுகிறார்கள் அந்நாட்டு காதல் கண்மணிகள்.
மேலும் இவர்கள் காமத்தில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படும் ஆண்கள். ‘எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடித்தேன்’ என்று ஜல்சா வித்தையெல்லாம் காட்டுறாங்கன்னா பாத்துக்கோங்க…#ஸ்பெயினுக்கு ஒரு டிக்கெட் பார்சல்…
‘பெஸ்ட்’ என்ற ஒன்று இருந்தால், ‘ஒர்ஸ்ட்’ என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும். அதன்படி பெண்களுக்கு பிடிக்காத மிக மோசமான காதலர்களை கொண்ட நாடுகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். கூடவே அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார்கள். மோசமான பட்டியலில் முதலில் இருக்கும் நாடு,
1. ஜெர்மனி
ஜெர்மனியில் குளிர் எப்போதும் வாட்டி எடுக்கும் அளவுக்கு மிக அதிகம். அதனால் குளிக்கும் வாய்ப்புகளும் மிக குறைவு. காதலிகள் அனைவரும் தனது ஜெர்மன் காதலன் அருகே வந்தாலே துர்நாற்றம் அதிகமாக இருக்கிறது.
இதனால் இன்டிமசி குறைகிறது என்று கூறியிருக்கிறார்கள். சிக்மண்ட் பிராயிடே, ‘காம உணர்ச்சிகளை தூண்டுவது நல்ல நறுமணம் தான். அது சென்டாக இருக்கலாம்…பெர்ஃப்யூமாக இருக்கலாம்.’ என்று கூறியிருக்கிறார். அதனால ஜெர்மன் பசங்களா நல்ல சென்ட் அடிக்க கத்துக்கோங்க…
2. இங்கிலாந்து
இங்கிலாந்து காதலர்களின் எதிரி சோம்பல் தான். படுக்கையில் ஒன்று கூடி எழுவது ஏழேழு ஜென்மம் எடுத்த மாதிரி என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள் இங்கிலாந்து காதலிகள். #எல்லா கோட்டையும் அழி மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்போம் அப்டீன்னு விளையாடிருந்தா இந்நேரம் இந்த பிரச்னை வந்துருக்குமா?
3. ஸ்வீடன்
ஸ்வீடன் காதலர்கள் இங்கிலாந்து காதலர்களுக்கு நேரெதிர். எல்லாத்துலயும் எடுத்தேன், கவிழ்த்தேன் பேர்வழிகள். இவர்களுக்கு காதலில் இருந்து காமம் வரை அதிரடி வேகம் தான். பிரேக்-அப் கூட இப்படித்தான் இவர்களுக்கு என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள் இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத இங்கிலாந்து காதலிகள்.
4. ஹாலந்து
ஹாலந்து காதலர்கள் தங்களது காதலிகள் மீது அளவுக்கதிகமான அதிகாரத்தை செலுத்துகிறார்களாம். இது காதலிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
எங்களுக்கு ஒரு ஈக்குவல் ரிலேஷன்ஷிப் தான் வேணும் என்று கதறுகிறார்கள் காற்று வெளியிடை நாயகிகள். #அதிகாரத்தை உங்கள் டிக்ஷ்னரியில் இருந்து தூக்கிவிடுங்கள் உங்கள் காதல் கண்மணிகளுக்காக..ப்ளீஸ்..
love_20165  பெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் love 20165
5. அமெரிக்கா
அமெரிக்கா காதலர்கள் பலான படங்களை பார்த்துவிட்டு அதே பாணியை காதலிகளிடம் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியான முரட்டுத்தனத்தை தாங்க முடியாத காதலிகள் தனது காதலர்களை மோசமானவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
6. கிரீஸ்
கிரீஸ் காதலர்களுக்கு குரங்கு கையில் பூமாலையை கொடுத்த கதைதான் .இவர்களிடம் காதலிகள் மாட்டிக்கொண்டு படும்பாடு… பெரும்பாடு. எப்போதும் அன்புத்தொல்லைகளை கொடுத்து அலைக்கழித்து விடுவார்கள். எப்படியோ நல்லா இருந்தா சரித்தான்.
துருக்கி7. வேல்ஸ்
வேல்ஸ் நாட்டு காதலர்கள் சுயநலவாதிகள். இவர்களின் சுயநலம் காதலிகளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்கள் இப்படி இருந்தால் எப்படி இவர்களை நம்பி குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
என்னதான் தெய்வீக காதலா இருந்தாலும் எத்தனை நாளைக்கு தான் இவங்க ரெண்டு பேரு முகத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டே இருக்குறது. மூனாவதா பாக்க ஒரு குழந்தை முகம் வேணும்ல..
p104_20337  பெண்களுக்குப் பிடிக்காத மோசமான காதலர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் p104 203378. ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து காதலர்கள் பெரிய லௌட் ஸ்பீக்கரை முழுங்கியது போல் எப்போதும் கத்தி பேசும் ரகம். இவர்களுக்கு அந்தரங்கள் பேசப்படும் ஹஸ்கி வாய்ஸ் மிஸ்ஸிங். கத்தி பேசும் இவர்களை உலகம் நாகரீகமற்றவர்களாகத் தான் பார்க்கிறது.
9. துருக்கி
துருக்கி மிக வெப்பமான நாடு என்பதால் வியர்வை அதிகம். இந்த அதிகப்படியான வியர்வை நாற்றம் காதலிகளை தள்ளி வைக்கிறது. வியர்வை சிந்தி உழைக்கிறார்கள் போல. அடிக்கடி குளு குளு தேனிலவுக்கு கூட்டிட்டு போய் வந்தா இந்த பிரச்னையே வராது. .
10. ரஷ்யா
ரஷ்ய காதலர்கள் உடம்பில் இருக்கும் அடர்த்தியான ரோமங்கள் காதலிகளுக்கு பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட ஆண்களை சாதாரணமாக பெண்கள் விரும்புவதும் இல்லை.
சரி, அப்படி என்றால் இந்திய காதலர்களை என்ன சொல்வது…? என்ற கேள்விக்கு இந்திய ஆண்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது, மோசமானவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியாது.
இவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள். அதனால் தான் மோசமான நாடுகளிலும் இந்தியா இல்லை. சிறந்த நாடுகளிலும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது…? சரியான இடத்தில் சரியான உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் காதல் மன்னர்கள் இந்தியர்கள். #ரசனைகாரங்கய்யா நம்ம ஊர்காரங்க.

கொலுசு – பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்


கொலுசு – பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்

தொன்று தொட்டு பெண்கள் நகைகளுக்கு முக்கியமாக கொடுத்து வருகின்றனர்.பெண்கள் அணியும் அணிகலன்களில், கொலுசு அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகவுள்ளது.
பெண்கள் கழுத்து, காது, மூக்கு,கைகள் போன்ற உறுப்புகளில் தங்கத்தால் செய்த அணிகலன்களை அணிந்து கால்களில் மட்டும் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போடுகிறார்கள்.
பெண்கள் கொலுசு போடுவதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது,
• பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணிகிறார்கள்.
• பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகளை கட்டுப்படுத்துகின்றது.
• பெண்கள் கொலுசு அணிவதால், அவர்களின் இடுப்புப் பகுதியானது சமநிலைப் படுத்தப்படுகின்றது.
• குழந்தைகளுக்கு கொலுசு அணிவதால், அவர்களின் எந்த திசையில் செல்கிறார்கள் என்பதை அவர்கள் நடக்கும் போது கொலுசின் ஓசைகள் மூலம் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர்கள்.
• கொலுசை நாம் வெள்ளியில் செய்து போட்டுக் கொள்வதினால், கொலுசில் உள்ள வெள்ளியானது நமது ஆயுளை விருத்தி செய்யவும், உடலின் சூட்டை தனித்து குளிர்ச்சியாகவும் மாற்றுகின்றது.
• பெண்கள் காலில் அணியும் வெள்ளிக் கொலுசானது, நம் உடம்பில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை தடுத்து சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றது.

நள்ளிரவில் பெண்கள் அறைக்குள் நுழைந்து மாட்டிக்கொண்ட காமெடி நடிகர்


















தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார். 

அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு சௌகரியமாக இல்லையாம். இதனால், தன்னுடைய உதவியாளரிடம் அந்த அறையை மாற்றுமாறு சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம்.



படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பியவர், எப்போதும்போல் தனது அறைக் கதவை திறந்தாராம். உள்ளே பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். நிறைய பெண்கள் அவருடைய அறையில் படுத்துக் கிடந்தார்களாம். என்னடா வம்பா போச்சு என்று அதிர்ந்தவர் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.

அதன்பிறகுதான், அவரது மூளையில் தனது உதவியாளரிடம் அறையை மாற்றச் சொன்னது ஞாபகத்துக்கு வந்ததாம். அறையை மாற்றிய விபரத்தை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதவியாளரிடம் அந்த காமெடி நடிகர் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், அந்த அறையில் இருந்த பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த காமெடி நடிகரை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனராம்.

இதையடுத்து, அந்த காமெடி நடிகர் நடந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, அதன்பிறகே அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாம். 

வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது எப்படி?


வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது எப்படி?


தனிக்குடித்தன வாழ்க்கையை தொடங்கும் இளம் தம்பதிகள் குழந்தை பிறந்ததும், அதனை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல், தடுமாற்றத்திற்கு ஆளாகிறார்கள். மூத்த குடும்ப உறுப்பினர்களின் குழந்தை வளர்ப்பு அனுபவத்தை கேட்டு பெற முடியாமலும், அவர்களுடைய அரவணைப்பு கிடைக்காமலும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை வளர்ப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

* பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குளிப்பாட்டக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி வர வேண்டும். பின்னர் மிருதுவான டவலை கொண்டு துடைக்க வேண்டும். குளிப்பாட்டுவதற்கு முன்பு குழந்தைகளுக்கான பிரத்தியேக லோஷனை உடலில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். பாரம்பரிய முறையில் எண்ணெய் பயன் படுத்துவதும் நல்லது.

* வெளி இடங்களுக்கு கொண்டு செல்லும்போது குழந்தை காற்றோட்டமான சூழலில் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். மென்மையான ஆடைகளையே உடுத்த வேண்டும். ஜிகினா, ஜரிகை பதித்த ஆடைகளை தவிர்க்கலாம். அழகான ஆடை, குழந்தைக்கு அசவுகரியத்தை கொடுத்துவிடக்கூடாது. குழந்தையின் உடலை உறுத்தாத, மிருதுவான, பருத்தி ஆடைகளை அணிவிப்பது சிறந்தது.

* பச்சிளம் குழந்தைகளை எப்போதும் தூக்கி வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவராக மாறி, மாறி தூக்கி கொஞ்சுவதும் கூடாது. அதேவேளையில் குழந்தையை தொட்டிலிலேயே போட்டு வைக்கவும் கூடாது. அது குழந்தைக்கு சோர்வை ஏற்படுத்திவிடும்.



* பச்சிளம் குழந்தையை ஜாக்கிரதையாக தூக்க வேண்டும். மூன்று, நான்கு மாதங்கள் கடந்த பிறகுதான் கழுத்து, தலை பாரத்தை தாங்கும் வலிமையை பெறும். அந்த காலகட்டத்தில் குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்க வேண்டும். அதன் பார்வைத்திறன், கேட்கும் திறன், பொருட்களை உன்னிப்பாக கவனித்து பார்க்கும் திறன் போன்ற வற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை முகம் பார்த்து சிரிப்பதை உறுதி செய்ய வேண்டும். அரவணைத்து முத்த மிடும்போதும், தூக்கி கொஞ்சும்போதும் அது வெளிப்படுத்தும் அசைவுகளை கவனிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருப்பதாக தோன்றினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

* ஆறு மாதங்கள் வரையில் தாய்ப்பால் தவிர வேறு எதையும் கொடுக்கக்கூடாது. குழந்தை தவழ தொடங்கும்போது தரைப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தவழும்போது அதற்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் மென்மையான தரை விரிப்புகளை விரிக்க வேண்டும்.

* ஆறுமாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் திடஉணவு கொடுக்க தொடங் கலாம். வேக வைத்து மசித்த காய்கறிகள், மசித்த பழங்கள், ராகி, அரிசி கலந்த கஞ்சி போன்றவற்றை கொடுத்து வரலாம். குழந்தை முட்டி போட்டு தவழ்ந்து, எழுந்திருக்க தொடங்கும்போது விளையாட்டு பொருட் களை காண்பித்து ஊக்கப்படுத்த வேண்டும். பல வண்ண நிறங்களை கொண்ட விளையாட்டு பொருட்கள் அதன் கவனத்தை ஈர்க்கும்.

* பத்து மாதங்கள் நெருங்கும்போது குழந்தைகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். வீட்டையே வட்டமடிக்க தொடங்கி விடும். எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுவிடும். அதனால் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவைகளின் கைக்கு எட்டும் தூரத்தில் எந்த பொருளையும் வைக்கக்கூடாது. குறிப்பாக கனமான பொருட்களை வைக்கக்கூடாது. அவைகளை பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் ஆர்வத்தில் கீழே இழுத்து போட்டு விடக் கூடும். குழந்தைகளுக்கு காயம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு வயதை நெருங்கியதும் குழந்தையின் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். வயிற்று போக்கு, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற வியாதிகள் அடிக்கடி வரும். உடனே டாக்டரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

* குறிப்பிட்ட மாத இடைவெளியில் தொடர்ந்து குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியிருக்கும். அதனை சரிவர கவனித்து காலதாமதமின்றி செய்ய வேண்டும். குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தடுப்பூசி மிக அவசியம்! 

Thursday 25 May 2017

சொந்த வீடு வாங்குபவர்களுக்கு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

சொந்த வீடு வாங்குபவர்களுக்கு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்

















சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்க முடிவு செய்யும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு உள்ள ஆரம்ப குழப்பம், அடுக்குமாடி குடியிருப்பில் ‘பிளாட்’ வாங்குவதா..? அல்லது தனி வீடு வாங்குவதா..? என்பதாகும். அந்த முடிவை எடுப்பதில் தனிப்பட்ட விருப்பம், குடும்ப ரீதியான நிர்பந்தம் மற்றும் பொருளாதார நிலை போன்றவை முக்கியமான இடத்தில் இருக்கின்றன. நமது விருப்பம், குடும்ப சூழல், பட்ஜெட் உள்ளிட்ட இதர காரணங்கள் ஆகியவற்றையும், நிபுணர்களது, கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் மனதில் கொண்டு சரியான முடிவுக்கு வரலாம்.

• காற்றோட்டமாகவும், சுதந்திரமாகவும் இருக்க தனி வீடு உகந்தது. நாம் ஊரில் இல்லாத சமயங்களில் வீடு மற்றும் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பொருத்தமானது.

• திருமணம், குழந்தைகள், வயதானவர்கள் என்ற குடும்ப ரீதியான அடிப்படையிலும் வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல், பணியிடத்துக்கும், வீட்டுக்கும் உள்ள தூரம் ஆகியவற்றை மனதில் கொண்டு புறநகர் பகுதி அல்லது நகருக்குள் வீடு அல்லது ‘பிளாட்’ என்ற முடிவை எடுக்கலாம்.

• அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும்பட்சத்தில் பிளம்பிங், எலக்ட்ரிகல் மற்றும் கழிவு நீர் போன்றவற்றில் பிரச்சினை வரும்பட்சத்தில் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். தனி வீடாக இருந்தால், பராமரிப்புகளை தனியாக சரி செய்ய வேண்டியிருக்கும்.

• பிளாட் எனும்போது மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட இதர பராமரிப்புகள் போன்றவற்றை குடியிருப்பு நிர்வாகிகள் பார்த்துக்கொள்வார்கள். மேலும், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை போன்றவற்றுக்கு ஆட்கள் தயாராக இருப்பார்கள்.

• பிளாட் எனும்போது ஒட்டு மொத்த அபார்ட்மெண்ட் பகுதியையும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அனைவரும் இணைந்து அழகாக பராமரிப்பு செய்து கொள்ளலாம். நமது பிளாட்டை விற்க வேண்டிய நிலையில் வெளித்தோற்றம் காரணமாக நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

• அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்கள், இயன்ற வரையில் அதன் கட்டுமான பணிகள் நடக்கும்போதே கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நமக்கு தேவையான மாற்றங்களை முன்னதாகவே செய்ய இயலும்.



• அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் முன்னர், அதற்கான வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதா..? என்பதை கவனிப்பது அவசியம். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் குறைகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

• வீடு என்பது ஒரு வகை முதலீடு என்ற அடிப்படையில் மறு விற்பனையின்போது என்ன விலைக்கு போகும் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இடத்தின் மதிப்பு உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கட்டிடத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும். அதாவது, 20 வருடம் ஆன தனி வீட்டுக்கும், அடுக்கு மாடி குடியிருப்புக்கும் மறு விற்பனையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதை கவனிக்கவேண்டும். தனி வீடு அமைந்த, நிலத்தின் மதிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

• பொதுவாக, அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பாதுகாப்புக்காக முன்புற கேட்டில் காவலாளிகள் இருப்பார்கள். யாரெல்லாம் குடியிருப்புக்குள் வந்தார்கள்..? என்பது போன்ற தகவல்கள் அவர்களால் பதிவு செய்யப்படும்.

• பூங்கா, நீச்சல்குளம், விளையாடும் வசதிகள், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கான இட வசதிகள் அபார்ட்மெண்ட் அமைப்பில் இருப்பதோடு, குழு மனப்பான்மையோடு அனைவரிடமும் பழகவும் வாய்ப்பு கிடைக்கும்.

• அடுக்கு மாடிகளில் குடியிருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும் சமயங்களில், வீட்டை வாடகைக்கு விடும் பொறுப்பை அபார்ட்மெண்ட் அசோசியேஷன் வசம் எளிதாக ஒப்படைக்க இயலும்.

• வாகனங்கள் நிறுத்த அடுக்குமாடிகளில் தனித்தனியான இடவசதி செய்யப்படும். தனி வீடுகளில் இவ்விஷயத்தில் சற்று கூடுதலான கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

• ‘கம்யூனிட்டி டெவலப்மெண்ட்’ என்பது அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் சாத்தியம். மேலும், முதியோர்கள் அல்லது குழந்தைகளின் மனநலனுக்கு உகந்த சூழல்கள் அங்கு ஓரளவாவது சாத்தியம். மருந்துகள், மளிகை பொருட்கள் போன்றவை எளிதாக கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

• அடுக்குமாடிகளில் குடும்ப உறுப்பினர்களுக்காக அறைகளை விரிவு செய்து கொள்ள இயலாது. தோட்டம் அமைப்பது, பிராணிகள் வளர்ப்பது போன்றவை பிளாட்களில் எளிதான காரியமில்லை.

• அடுக்குமாடி மற்றும் தனி வீடு ஆகிய இரண்டிலும் உள்ள சாதகமான அம்சங்களோடு வீடுகள் வேண்டுமானால், கூடுதல் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட ‘ரெசிடென்ஷியல் புராஜெக்ட்டுகளின்’ வில்லா வகை வீடுகள் சரியாக தேர்வாக இருக்கும். 

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவது எப்படி?

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவது எப்படி?
கர்ப்பகாலம் என்பது ஒரு பெண்ணிற்கு மிகவும் உன்னதமான காலம், அப்போது உங்களுக்கு பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். இதோ உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்துகொள்ளலாம்.. 






















* சீன பாலின விளக்கப்படம், குழந்தையின் பாலினத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு பலங்கால முறையாகும். பல அம்மாக்கள் இது உண்மையாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதில் பெண்ணின் கருத்தரித்த வயதையும், கருத்தரித்த மாதத்தையும் கொண்டு பிறக்கப்போவது ஆணா அல்லது பெண்ணா என அறிந்து கொள்ளலாம்.

* உங்களது திருமண மோதிரத்தை ஒரு நூல் அல்லது தலை முடியில் கோர்த்து அதை வயிற்றிற்கு மேலே சுத்தி விட்டால், அது வலுவான வட்ட இயக்கத்தில் சுற்றினால், உங்களுக்கு பிறக்கப்போவது பெண் குழந்தை, அல்லது முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடினால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை. இது துல்லியமான முறையில்லை.



* இது கருவுற்ற பெண்ணின் வயிற்று பகுதியை பார்த்து கணிக்கப்படுகிறது. கருவுற்ற பெண் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு நிற்கும் போது தொப்புள் பகுதி உடலின் மேல் புறமாக இருப்பது போல தோன்றினால், அது பெண் குழந்தை. அல்லது அடிப்பகுதி நோக்கி இருந்தால் அது ஆண் குழந்தை. இது பெரும்பாலும் ஆதரமற்ற ஒரு பரிசோதனை தான்.

* பாலின முன்கணிப்புக் கோட்பாடுகளின்படி, ஒரு குழந்தையின் இதய துடிப்பும், ஒரு பெண் குழந்தையின் இதய துடிப்பும் கணிசமாக வேறுபடும். இந்த கோட்பாடு குழந்தையின் பாலினத்தை அடையாளம் காண உதவும். குழந்தையின் இதயம் நிமிடத்திற்கு 140 துடிப்பிற்கும் குறைவாக இருந்தால், அது ஒரு பையன் என்றும், ஒரு நிமிடத்திற்கு 140 க்கு மேல் இருந்தால், பெண் என்றும் கூறப்படுகிறது.

* குழந்தையின் விஷயத்தில், பிறக்க போவது ஆணா, பெண்ணா என்று தாய்க்கு கர்ப காலத்தில், தோன்றும் உள்ளுணர்வு பெரும்பான்மையாக பொய் ஆவது இல்லை.

* உங்களுக்கு எடுக்கும் பசி கூட உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரியப்படுத்தும். உங்களுக்கு அதிகமாக இனிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது பெண்ணாக இருக்கும். உப்பு அல்லது புளிப்பு பசி எடுத்தால், பிறக்க போவது ஆண் குழந்தை. உங்களுக்கு எந்த சுவையில் உள்ள உணவை அதிகம் சாப்பிட தோன்றுகிறது என்று கணக்கெடுத்து வைப்பது உங்கள் குழந்தையின் பாலினத்தை பற்றி அறிய உதவும்.



* காலையில் தொடர்ந்து நோய்வாய்ப்படுதல் பெண் குழந்தைக்கான அறிகுறியாகும். பெண் குழந்தைக்கான ஹார்மோன்கள் அதிகமாக வளர வேண்டியிருப்பதால், தாய் நோய்வாய்ப்பட வாய்ப்புகள் உள்ளது.

* சருமம் உடைதல் கர்ப்ப காலத்தில் நடக்கும் பொதுவான மாற்றமாகும். ஆனால் உங்களுக்கு அதிக காலங்கள் இந்த சருமம் உடைதல் பிரச்சனை நீடித்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகும், ஏனென்றால் பெண் குழந்தை தாயின் அழகை திருடுகிறதாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அடிப்படை கணிப்புகள் சரியாக இருக்கும்!

* அல்ட்ராசவுண்ட் சோதனை வயிற்றில் இருக்கும்போது குழந்தையின் உடலை ஒரு ஸ்கிரீனிங் முறையில் காண்பதாகும். 18-24 வாரங்கள், அல்ட்ராசவுண்ட் டெஸ்டை பெற இது சிறந்த காலம் மற்றும் அது நம்பகமான தகவலை அளிக்கிறது.

* டிரானோ பரிசோதனை ஒரு எளிய வழியாகும். இந்த பரிசோதனைக்கு ஒரு பாத்திரத்தில் தாயின் சிறுநீரை சேகரிக்க வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் டிரோனோ சேர்க்க வேண்டும். இவை இரண்டும் கலந்து வரும் நிறம் பச்சையாக தோன்றினால், பெண் குழந்தை. அதன் நிறம் நீலமாக தோன்றினால் பிறக்க போவது கட்டாயமாக ஆண் குழந்தை தான்.