Friday 23 June 2017

தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்



தரமான விதை தென்னை எடுக்கும் வழிமுறைகள்

நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னைமரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும். நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

தென்னையில் ரகங்கள்

தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன. உதாரணமாக ஜாவாத் தீவில் ஜாவா நெட்டை மற்றும் ஜாவா ஜயண்ட் என்ற ரகங்கள் உள்ளன.  இதில் ஜாவா நெட்டை ரகம் என்பது நாம் சாதாரணமாக காணும் நெட்டை தென்னை போல் காய்கள் காணப்படும். ஆனால் ஜாவா ஜயண்ட் ரகம் என்பது சாதாரண நெட்டை தேங்காயை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரிய காய்கள் கொண்ட ரகமாகும். பருப்பின் கனமும் அதிகமாக இருக்கும். இந்த பருப்பில் 71 சதவீதம் எண்ணெய் பதம் காணப்படுகிறது. 
ஜாவா ஜயண்ட் வகை மரங்களில் ஒரு பூம்பாளையில் 8 முதல் 10 காய்கள் மட்டுமே காணப்படும். இது போன்று அந்தமான் சாதா நெட்டை, அந்த மான் ஜயண்ட் என இரண்டு ரகங்களும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டு ரக தேங்காயில் காய் பெரியதாகவும், பருப்பு அதிக கனத்துடனும் காணப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் இங்கு மேற்கு கடற்கரை நெட்டை, கிழக்கு கடற்கரை நெட்டை என இரண்டு ரகங்கள் உள்ளன. இதில் மேற்கு கடற்கரை நெட்டை நன்கு தடித்து பருமனாகவும், கொண்டை பெரிதாகவும் இருக்கும். 

ஒரே காலத்தில் 12 முதல் 13 பூம்பாளைகள் காணப்படும். ஒரு ஆண்டில் 80 முதல் 100 காய்கள் காய்க்கும். இது கேரளா பகுதியில் அதிகம் காணப்படுகிறது. ஆந்திரா, ஓரிசா மற்றும் தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மரங்களை கிழக்கு கடற்கரை நெட்டை என்று அழைக்கிறோம். இதன் பருமன், கொண்டை மற்றும் ஓலைகளின் நீளம் சற்று சிறுத்து காணப்படுவதுடன் காயின் பருமனும் சற்று குறைந்து காணப்படும். இந்த வகை மரங்கள் ஆண்டுக்கு 100முதல் 120 காய்கள் வரை காய்க்கும். இது தவிர தமிழகத்தில் அதிக பருப்பு, பெரிய காய்கள் 13 முதல் 16 பூங்குலைகள் உடைய ஈத்தாமொழி நெட்டை, ஐயம்பாளையம் நெட்டை மற்றும் நடுத்தர காய்களை கொண்ட திப்பத்துர் வகை மரங்களும் உள்ளன.
இது போன்று இளநீர் ரகம் எனப்படும் குட்டை ரகங்களும் உள்ளன. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறமுடைய காய்கள் தரும் தனி மரங்கள் காணப்படும். இந்த குட்டை ரகத்தில் பெரிய காய்களை உடைய மலேசிய வகையும், சிறிய காய்களை உடைய சாவக்காடு குட்டை வகையும் உள்ளன. 

தாய் மரங்கள் தேர்வில் கவனிக்க வேண்டியவை

தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும். இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன. ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.

வயது

விதைக்காக மரங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் வயதும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அதாவது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நன்றாக காய்க்க தொடங்கிய பல நூறு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்வது நல்லது. ஆனாலும் சாதாரணமாக காய்க்கின்ற ஒரு சில மரங்களின் ஒரே பூங்குலையில் 70 காய்களும், மீதமுள்ள மற்ற குலைகளில் 5 அல்லது 10 காய்களும் மட்டுமே காய்ப்பதை காண முடியும். இது போன்ற மரங்களிலிருந்து விதை தேங்காய் தேர்வு செய்து கன்றுகளை நட்டால் சீரான காய்ப்பு திறன் இருக்காது. சீரான காய்ப்பு திறனை கண்டறிய சில வழி முறைகள் உள்ளன. உதாரணமாக, விஞ்ஞானிகள் 3 ஆண்டு சராசரி விளைச்சலின் அடிப்படையில் மேற்கு கடற்கரை நெட்டை வகையின் திறன் சராசரி 80 முதல் 100 காய்கள் எனவும், கிழக்கு கடற்கரை நெட்டை வகை 100 முதல் 120 காய்கள் எனவும் கண்டறிந்துள்ளனர். இதற்கடுத்து பல்வேறு தாய்மரங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றின் முளைப்பு திறன் மற்றும் வீரிய கன்றுகள் உருவாகும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாய்மரங்களை தேர்வு செய்ய வேண்டும். 
இது தவிர காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு. ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். 

தென்னங்கன்றுகளை எந்த அளவு குழிகளில் நடவேண்டும்?

தென்னங்கன்றுகளை 3 அடி ஆழம் மற்றும் 3 அடி  அகலம் உள்ள குழிகளில் நடவேண்டும். இதற்கு காரணங்கள் உண்டு. தென்னை மரத்தின் தூர் பகுதியானது அதன் ஆண்டு வளர்ச்சியின் போது ஒரு கனஅடி அளவை பெறுகிறது. இந்த தூரிலிருந்து 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் சல்லி வேர்கள் பக்கவாட்டாக சென்று மரத்தை அசையாமல் தாங்கி பிடிக்கின்றன. இது தவிர இந்த வேர்கள் தினமும் சத்துக்கலந்த 35 மில்லி நீரை உறிஞ்சி மேல் நோக்கி அனுப்புகின்றன. 

எனவே, தென்னங்கன்றை நடும் போது 3 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழிகளில் ஒரு அடி ஆழத்தில் முன்பு தோண்டி எடுக்கப்பட்ட மேல் மண்ணை நடுப்பகுதியில், வேர்ப்பகுதியில் வேர்களுடன் காணப்படும் சுமார் ஒரு அடி காய்ப்பகுதி இருக்கும் படி கையால் ஒரு அடி குழி எடுத்து காயை அதனுள் பதித்து மண்ணை காலால் மிதித்து விட வேண்டும். பின்னர், வாரம் ஒரு முறை சொட்டு நீர் பாசன முறைப்படி நீர்பாய்ச்சி வர வேண்டும். தேவைப்பட்டால் தென்னை அல்லது பனை ஒலையை கிழக்கு, மேற்கு திசைகளில் வைத்து வெயில்படாதபடி சுமார் 3 மாதம் பாதுகாக்கலாம்.
 
நட்டபின் குழியினுள் 2 அடி ஆழம் காலியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் காயின் மேல் பகுதியில் மண் விழாதபடி இருந்தால் சிறிய பெரிய வண்டுகளினால் இளம் தண்டினுள் காணப்படும் குருத்தோலை தாக்கப்படாமலும், கன்றுகள் சாகடிக்கப்படாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா

















வாஷிங்டன்:

தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா ஆண்டுதோறும் பெருமளவு நிதி உதவியும் செய்து வருகிறது. 

தீவிரவாதத்தை திறம்பட எதிர்ப்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்த நிதி அளிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது. அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், நிதி வழங்கும் விவகாரத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். 

ரிக் நோலன்

பாகிஸ்தானுக்கு நேட்டோ அல்லாத மிகப்பெரிய நட்பு நாடு (MNNA) என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கப்பட்டது. 

கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்தை வழங்கினார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த அந்தஸ்தின் கீழ்,  பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுத விற்பனை நடைமுறைகளை துரிதப்படுத்துவது, அமெரிக்க கடன் உத்தரவாத திட்டம் ஆகிய சலுகைகளை பாகிஸ்தான் பெற முடியும். 

மேலும், அமெரிக்காவின் அதிநவீன ராணுவ தளவாடங்களை கையிருப்பாக வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்க முடியும். 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

குடியரசு கட்சியின் எம்.பி டெட் போ மற்றும் ஜனநாயக கட்சியின் எம்.பி ரிக் நோலன் ஆகிய இருவரும் கூட்டாக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.  

டெட் போ

அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் உறுப்பினராகவும் இருக்கும் டெட் போ கூறுகையில், தனது கையில் இருக்கும் அமெரிக்கர்களின் இரத்தக்கரைக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். 

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இரட்டை வேடத்துடன் அமெரிக்காவுடனான நட்பை கொண்டுள்ளது. ஒசாமா பின்லேடனுக்கு புகலிடம் அளிப்பதில் இருந்து தலிபான்கள் ஆதரவு வரை பாகிஸ்தான் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் அப்போதைய  பாதுகாப்புத்துறை செயலர் ஆஷ் கர்டர், பாகிஸ்தான் ஹக்கானி நெட்வொர்க்கிற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த நிதியில், சுமார் 300 மில்லியன் டாலர் தொகையை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 15 June 2017

பால் கலப்படமும்... அதற்கு பின்னால் உள்ள சர்வதேச சதியும்...!

பால்

பாலுக்கும் தண்ணீருக்கும் உள்ள பந்தத்தைவிட நெருக்கமாக இருக்கிறது, பாலும்... அண்மைய சர்ச்சைகளும். தரமற்ற பால், பாலில் கலப்படம் என்று பால் குறித்து உலாவும் சர்சைகள் அனைத்தும் நம் மூளையில் இருக்கும் அமிக்டாலாவுக்கு அதிகம் வேலை வைப்பதாக இருக்கிறது. உண்மையில், நம்மூர் பால் தரமற்றதா... அமைச்சர், தம்குடிகள் மீது உள்ள அக்கறையில்தான் பாலில் கலப்படம் என்கிறாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால், பாலில் ஆடையாகப் படர்ந்திருக்கும் சர்வதேச அரசியல் தெரிகிறது. அந்த அரசியல் நம் உள்ளூர் பால் விற்பனையாளர்களையும், விவசாயிகளையும் காவு வாங்க வன்மத்துடன் காத்திருப்பது தெரிகிறது. 
பாலில் படர்ந்திருக்கும் அரசியல் இதுதான்:
RCEPபிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான (Regional Comprehensive Economic Partnership) தாராள வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை ஆசியான் நாடுகளிடையே (புர்னே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஆசியான் நாடுகள் தவிர்த்து ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இருக்கின்றன. அதாவது, உலக மக்கள்தொகையில் 50 சதவிகிதத்தை நிரப்பும் நாடுகள் மற்றும் உலக உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவிகிதம் பங்களிக்கும் நாடுகள் வளர்ச்சிக்கான கூட்டுத் தாராளமய பொருளாதாரப் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கின்றன.
தாராளமயம், கூட்டுப் பொருளாதாரம், வளர்ச்சி என வார்த்தைகள் வசீகரித்தாலும், அங்கு விவாதிக்கப்படும் விஷயங்கள் எதுவும் நம் எளிய விவசாயிகளுக்கும், நமக்கும் நன்மைபயப்பதாகத் தெரியவில்லை. ஆம், இந்தத் தாராள வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை என்பது சந்தையை எந்த அளவுக்குத் திறந்துவிடுவது என்பதைச் சுற்றியே சுழல்கிறது. அதாவது, இந்த ஒப்பந்தம் செயல்வடிவம் பெறும்பட்சத்தில், இறக்குமதிக்கான வரி பெரும் அளவில் தளர்த்தப்படும். அந்நிய நேரடி முதலீட்டைக் கண்காணித்துவரும் ஓர் அமைப்பு, இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்பட்சத்தில் இறக்குமதி வரி 0 - 3 சதவிகிதம் வரை குறையும் என்கிறது.
குறிப்பாக, பால் மீதான வரி முற்றாகக் குறைக்கப்பட்டுப் பெருமளவில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் இருக்கும் நியூசிலாந்து தேசம் உலக அளவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அது, தன் தேசத்தின் பால் பொருள்களை இந்தியாவுக்கு மற்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பிற தேசங்களுக்குத் தங்குத்தடையின்றி ஏற்றுமதி செய்யத் திட்டமிடுகிறது. 
பால் சர்ச்சையும்... சர்வதேச ஒப்பந்தமும்:
பால் அரசியல்சரி... அதற்கும் பால் குறித்த இப்போதைய சர்ச்சைகளுக்கும் என்ன சம்பந்தம்...? இருக்கிறது... நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. ஏற்கெனவே, நம் தேசம் பால் உற்பத்தியில் தன்னிறவை அடைந்த தேசம். ஒரு பொருள் உள்நாட்டிலேயே அபரிவிதமாக உற்பத்தியாகும்போது, அதே பொருளை வெளியிலிருந்து ஒருவர் வந்து விற்க வேண்டுமென்றால், முதலில் உள்நாட்டில் உற்பத்தியாகும் அந்தப் பொருள் குறித்து ஒரு தவறான பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டும். அந்தப் பொருள் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கவல்லது, தரமற்றது என்ற புனைவுகளைப் புனைந்து அந்தச் சந்தையில் சேதம் உண்டாக்க வேண்டும். அப்போதுதான், அந்தச் சந்தையைக் கைப்பற்ற முடியும். இது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். 
இதைப் புரிந்துகொள்ள நீங்கள் வெளியிலிருந்தெல்லாம் தரவுகள் தேட வேண்டாம். பால் சந்தையை கொஞ்சம் ஊன்றிக் கவனித்தாலே போதும். ஆம், முதலில் பால் சந்தை நம் எளிய விவசாயிகளின் கைகளில் இருந்தது. அவர்கள் இரண்டு மூன்று மாடுகளை வைத்துக்கொண்டு நான்கு தெருக்கள் வட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்குப் பால் விற்றுக்கொண்டு இருந்தார்கள். இதனால் உள்ளூர்ப் பொருளாதாரமும் வலுவாக இருந்தது. இந்தப் பெரும் சந்தையைக் கைப்பற்றத் துடித்த பெரும் நிறுவனங்கள்... அந்தப் பால் ஆரோக்கியமற்றது, அசுத்தமானது என்று அவதூறுகளைப் பரப்பி, பால் உற்பத்தி மற்றும் சொந்தமாக வணிகம் செய்துகொண்டு செழுமையாக வாழ்ந்துகொண்டு இருந்த விவசாயிகளை, தங்களுக்குப் பால் விற்பனை செய்யும் ஏஜென்டுகளாக மாற்றின. பால் சந்தையை முழுவதுமாகக் கைப்பற்றின. இப்போது அதே யுக்தியைப் பயன்படுத்தி அந்தச் சந்தையை வெளிநாடுகள் கைப்பற்றப் போகின்றன. 
பால் சந்தையை இந்திய நிறுவனங்கள் கைப்பற்றியதிலும் தகிடுதத்தங்கள் இருந்தாலும், இந்தியப் பெரும்முதலாளிகள், கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து... இந்திய விவசாயிகளிடமிருந்துதான் பாலைக் கொள்முதல் செய்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறியபின் நியூசிலாந்து கோ-க்களின் பால் இந்தியச் சந்தையில் ஓடும். 
இந்த ஒப்பந்தத்தின் விளைவுகளைச் சரியாகக் கணித்த அரசு, கேரள அரசு மட்டும்தான். அண்மையில், கேரள பால்வளத் துறை அமைச்சர் கே.ராஜு, ''இந்த ஒப்பந்தத்தில் உள்நாட்டுப் பால் உற்பத்தியும், அதைச் சார்ந்த பொருளாதாரமும் முடங்கும்'' என எச்சரித்திருக்கிறார். கேரள அரசாங்கமும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
தேவை... அண்மைப் பொருளாதாரம்!
அனந்து அப்படியானால், பாலில் கலப்படம் இல்லை என்கிறீர்களா.. இந்தியச் சந்தையில் ஓடும் பால் அனைத்தும் ரசாயனம் கலக்காததா...? நிச்சயம் அனைத்தும் தரமானது என்றும் ரசாயனம் கலக்காதது என்றும் சொல்லிவிட முடியாது.  பதப்படுத்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ரசாயனம் இருக்கிறது. பாலில் யூரியாவரை கலக்கப்படுகிறது என்கிறார்கள் வேளாண் செயற்பாட்டாளர்கள். ஆனால், அதற்காக இன்னொரு தேசத்திலிருந்து வரும் பால் மட்டும் ஆரோக்கியமானது என்று எப்படிச் சொல்ல முடியும்? 
சரி... இதற்கு என்னதான் தீர்வு...? 
எளிமையான தீர்வை முன்வைக்கிறார் வேளாண் செயற்பாட்டாளர் அனந்து. அவர் முன்வைப்பது அண்மைய பொருளாதாரம் என்னும் தத்துவத்தை. அவர் சொல்கிறார், “நம்முடன் எந்த உணர்வு பிணைப்பும் இல்லாமல் வெளியிலிருந்து வரும் எந்தப் பொருளிலும் கலப்படம் இருக்கும்... தரமற்றவையாக இருக்கும். இதிலிருந்து நாம் மீள வேண்டும். ஆரோக்கியமான உணவைத்தான் உண்ண வேண்டும், பருக வேண்டும் என்று விரும்புவோமானால்... அண்மைய பொருளாதாரத்தை ஊக்குவியுங்கள். உங்கள் பகுதிகளில் விளையும், உற்பத்தி ஆகும் பொருள்களை வாங்குங்கள். விவசாயிகளிடம், சிறு வணிகர்களிடம் ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இதனால் உள்ளூர்ப் பொருளாதாரமும் வளரும்... நுகர்வோருக்கும் தரமானப் பொருள்கள் கிடைக்கும்” என்கிறார்.

நன்றி : விகடன்

Sunday 11 June 2017

`காலா' ரஜினிக்கு மனைவியாகும் ஈஸ்வரி?


















பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `காலா'. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா' குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன. அந்த வகையில் ரஜினியின் முக்கிய வில்லனாக நானா படேகர், அரசியல்வாதி கெட்டப்பில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். 

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் `காலா' படத்தில் கரிகாலனின் மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன. மற்றொரு நாயகியான அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Ads by ZINC

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார். 


தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது: தமிழிசை பேச்சு



தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது: தமிழிசை பேச்சு
நெல்லை:
பா.ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் தாமிரபரணி நதியை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி பாபநாசத்தில் இருந்து தாமரை யாத்திரை தொடங்கப்பட்டது. தாமிரபரணி கரையோர பகுதிகள் வழியாக இந்த யாத்திரை சுற்றி நேற்று மாலை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் யாத்திரை முடிவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அவர் பெண்களுடன் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் மங்கள ஆரத்தி எடுத்து, மலர் தூவி தாமிரபரணி ஆற்றுக்கு வழிபாடு செய்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க., காலூன்ற முடியாது. புறவாசல் வழியாக வரமுடியாது என கூறுகிறார்கள். அவர்கள் முடியாது என சொல்வதன் மூலம் இன்னும் ஆழமாக வேரூன்றி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எல்லாம் தி.மு.க.தான் காரணம். தாமிரபரணியை தூர்வார வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளியது தி.மு.க.தான். ராகுல் எந்த இடத்திற்கு எல்லாம் செல்கிறாரோ அந்த மாநிலங்களில் எல்லாம் காங்.,கட்சி தோல்வியடையும்.
தமிழகத்தில் இன்னும் அதிகமாகவே தோல்வியடையும். தமிழகத்தில் காங்., கட்சி எங்கே உள்ளது. திருநாவுக்கரசர் இருக்கிறார். எந்த கட்சி அவருக்கு எம்.பி., பதவி கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு அவர் தாவிவிடுவார். தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததே தி.மு.க.தான். இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமானால் அது பாஜ.க.,வால் மட்டுமே முடியும். கல்வியில் இந்தியை திணிக்க மாட்டோம்.
அதேநேரத்தில் மொழியை வைத்து மக்களை வஞ்சித்தது தி.மு.க.தான். எத்தனை வெடிகுண்டு பார்சல் வந்தாலும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வராமல் என் உயிர் போகாது என சபதம் செய்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க. துணையில்லாமல் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அஸ்திவாரத்தை பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம்.
யார் ஊழல் செய்தாலும் திகார் சிறைக்கு செல்லவேண்டியது தான். இன்னும் சில மாதங்களில் 2 ஜி ஊழல் தீர்ப்பு வரவுள்ளது. இந்த தீர்ப்பிற்கு பிறகு தான் திகார் முன்னேற்ற கழகமா? திராவிட முன்னேற்ற கழகமா என்பது தெரியும். டெல்லி செங்கோட்டையில் மலர்ந்த தாமரை, ஜார்ஜ் கோட்டையிலும் மலரும். இன்னும் 3 மாதத்தில் தமிழக அரசியல் சூழ்நிலையை மாற்றிக் காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் தூர்வார வேண்டும்.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து, கிடப்பில் உள்ள நதிநீர் மேம்பாட்டு திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அரசியல் லாபத்துக்காக குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்கிறார். தி.மு.க. சரியான எதிர்கட்சியாக செயல்படவில்லை. தமிழகத்தை நெடுங்காலமாக ஆண்ட திராவிட கட்சிகள் நீர்நிலைகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எனக்கு மிரட்டல் வரலாம் என்று கருதுகிறேன். அதுபற்றி நான் கவலைப்பட வில்லை. எனது தீவிர அரசியல் பயணம் வழக்கம்போல் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எதுவுமே நடக்காம… அது எப்படிய்யா..? என் வாயால சொல்வேன்? டி.ராஜேந்தர் கொடுத்த ‘நச்’



தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியலில் பெரும் குழப்பமும், சர்ச்சைகளும் நிலவி வருகிறது. தமிழகத்தில் ஏதோ வெற்றிடம்.. வெற்றிடம் என்கிறார்கள். அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
இந்த வெற்றிடத்தால பெரிய களேபரமே நடக்கிறது. அவர் தான் சரியா ஆள், இவர் தான் சரியான ஆள் என ஆளாளுக்கு வரிந்து கட்டி கொண்டு அரசியலில் பரபரப்பாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த அணி தேறுமா இல்ல அந்த அணி தேறுமா என ஆருடம் வேற பார்க்கிறார்களாம். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு ரசிகர்களை சந்திக்கிறேன்னு அவர் வேற அரசியல் பற்றி கருத்து தெரிவிக்க, பலர் எதிர்ப்பும், சிலர் ஆதவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கலாய்ப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தர் கூறுகையில், ஒரு திரைப்படம் வெளியே வந்தால் தான் அந்த படம் குறித்து விமர்சனம் செய்யமுடியும். வெளிவராத படத்திற்கு நான் எப்படி விமர்சனம் செய்ய முடியும்…?
அதே போல, முதலில் கல்யாணம் நடக்க வேண்டும், பின் சாந்தி கல்யாணம், அதற்கு பிறகு தான் குழந்தை பிறக்கும். குழந்தை பிறந்த பின் அது ஆணா, பெண்ணா என தெரிந்த பிறகுதான் பெயர் வைக்க முடியும். எதுவுமே நடக்காமல் எப்படி பதிலளிப்பது என அவரது பாணியிலேயே நச்சுன்னு கூறியிருக்கிறார்.

Thursday 8 June 2017

ஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி? – காமசூத்திரம்


பாலியல் குறித்த‍ விழிப்புணர்வு தம்பதிகளிடம் இல்லாத காரணத்தால், பல இடங்களில் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றங்களின் படிகளை ஏறிவருகின்றனர். இதுபோன்ற தம்பதியர்களுக்கிடையில் விழிப்புணர்வு ஏற்படுத்த‍வும், அதுபற்றிய சந்தேகங்களை தெளிபடுத்துவதே இந்த கட்டுரையின் நோக்க‍ம். மேலும் இந்த கட்டுரை ஓர் இணையத்தில் எடுக் க‍ப்பட்டு மீள் பதிவுசெய்ய‍ப்பட்ட‍தாகும்.  தயவுசெய்து வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். இள வயதினர் படிக்க‍ அனுமதி இல்லை. மற்ற‍படி யாதொரு உள்நோக்க‍மும் இல்லை

விளக்கத்தை எளிமையாக்க ஆண்மை ஆணிடமும் பெண்மை பெண்ணிடமும் வெளிப் படுவதாக எண்ணிக் கொள்வோம்.

இரு வகையில் ஆண்மை பெண்மை யை அனுபவிக்கிறது.

அவை ‘பார்த்தல்’ மற்றும் ‘இயங்குதல்’ (பொருத்தமான சொல் தெரியவில்லை) ஆகும். பார்த்தலில், ஆண்மை, பெண் உடலைத் தடவி, வருடுகிறது.அந்த சுகத்தில் அவள் முனகு வதைப பார்த்து ஆண்மை இன்பம் அடைகிறது.

அடுத்து, ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைத்தலில், அவள் துடிக்கும் துடிப்பை ஆண்மை ரசித்து அனுப விக்கிறது. ஆண் உறுப்பின் இயக்க வேகத்துக்கேற்ப அவள் இன்பத்தில் துடிப்பதை ஆண்மை வெகுவாக ரசி க்கிறது. இவ்வாறு, பெண்மை தான் அனுபவிக்கப்படும் இன்பத்தை அனுபவிப்பதை, ஆண்மை தன் கண் ணால் பார்த்து காதால் கேட்டு அனுபவிக்கிறது.

இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண்ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு ஆகும். இந்நிலையில், ஆண்மை பெண்ணின் உதடு துடிக்கும் துடிப்பை ரசிக்கிறது. அவள் கண்கள் திறந்த நிலையில் ஆண்மை அவள் கண்களின் மூலம் எதோ ஒன்றுக்குள் உடுருவுகிறது. ஆண்களே! முயற்சித் துப் பாருங்கள்.

மிகவும் இன்ப நிலையில் உள்ள பெண்ணின் கண்களைப் பாருங்கள். அதில் மற்றொரு உலகத்துக்கான வழி தென்படுகிறது. அச்சமயத்தில், விந்து நீக்கம் ஏற்படும். ஆனால், விந்தை நீக்காமல், அவள் பார்வையில் நுழையுங்கள். குறைந்தது ஒரு முறையேனும் அவ்வாறு அவள் பார்வையில் நுழையுங்கள். செக்ஸ் தெளிவு பிறக்கும்.

இந்த ‘பார்த்தலே’, ஆண்மைக்கு மிகுந்த இன்பத்தை கொடுக்கிறது. அதனால்தான், பெண் உடல் அங்கங்களை ஆண் பார்க்க மிகவும் விருப்பப்படுகிறான். அது அவன் தவறல்ல. அது அவனுள் வெளிப்படும் ஆண்மை யின் வேலையே!

இந்த ‘பார்த்தலே’, அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்களை ஆண்கள் பார்க்க தூண்டுகிறது. இதனாலேயே, நீலப்படம் எங்கும் நிறைந்துள்ளது.இப்படி பெண்ணின் உடல் அங்கங்களை பார்க்க விரும்புபவர்களை கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், நீலப் படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று ஒதுக்கினால், இந்த உல கம் முழுக்க ஒதுக்கப்பட்ட இடமாகி விடும்.

அதே போல், இன்று நீலப் படங்களைப் பார்க்கும் பெண்களை நடத்தை சரியில்லாதவர்கள் என்று ஒதுக்கினால், நடத்தை சரியுள்ள பெண்களை விரல் விட்டுதான் எண்ணனும்.அதனா ல், இயற்கை உந்துதலை ஏற்றுக் கொ ள்வோம். ஆண்மை, பெண்மை வெளிப் பாட்டினை ஏற்றுக் கொள் வோம்.

அடுத்து, ‘இயங்குதல்’ மூலம், ஆண்மை பெண்மையை அனுபவிக்கிறது. இம்முறையில், ஆண், பெண்ணின் நிலையை கவனிப்பதில்லை. அவன் தன் முழு வேகத்தையும் பயன் படுத்தி, தன் முழு வெறியையும் வெளிப்படுத்தி, அவளை தடவி, கடித்து, குதறி இன்புறுகிறான். இதில், அதிகம் பயன்படுத்தப்படும் பெண் ணின் உடல் பகுதி, பெண் உறுப்பு, உதடு, மார்பகங்கள் மற்றும் பின் புறம் ஆகும். இந்த முறையின் உச்சமே பெண்ணிடம் வன்முறையிலான செக்ஸ் ஆகும்.

அதனால், வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அனுபவியுங் கள். செக்ஸ் பெருங்கடல். அதில் முழுமையாக முழ்குங்கள். நிச்சயம் முத்தேடுப்பீர்கள். ஆனால், கவனம். செக்ஸ் செய்யும் ஒவ்வொரு தட வையும் விந்து நீக்கம் செய்யுங்கள்.

செக்ஸ்ஸின் உச்சம் விந்து நீக்கமே. ஒவ்வொரு தடவையும் விந்து நீக்கம் செய்வதால் ஆண்களின் சக் தி ஒன்றும் குறைந்து பொய் வி டாது. இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும் என்பதுபோல் விந்து வெளியாக வெளியாக உறிக்கொண்டே இருக்கும். ஆகவே அதைப் பற்றிய பயமோ கவலையோ வேண் டாம்.

விரும்பினால் சில நேரம் விந்து நீக்கம் செய்யாமலும் உடலுறவு கொள்ளலாம். அப்படி உடலுறவு கொள்ளும்பொழுது, குறைந்தது அரை மணி நேரம் செய்யுங்கள். விந்து நீக்கம் இல்லாமல் முடித்துக் கொள்ளுங் கள். சற்று சிரமம்தான். ஆனால் நடைமுறையில் முடியக்கூடிய செயல்தான்.

விந்து வெளியாகிவிட்டால், மறு நாள் மறுபடியும் செக்ஸ் செய்யலாம் தான். ஆனால், இன்ப அளவில் வேறுபாடு உண்டு. முதல் நாள் விந்து வெளியாகாவிட்டால், மறுநாள் செக்ஸ் முதல் நாளை விட கூடுதல் இன்பம் அளிக்கும். அதற்கு மறுநாள் இன்னும் கூடுதல் இன்பம் கிட்டும். இப்படியே இன்பத்தை கூட்டிக் கொ ண்டே சென்றால், ஒரு கட்டத்தில், செக்ஸின் போது இன்பம் தாங் காமல் உடல் அதிர ஆரம்பித்து விடும். வேண்டுமானால், அப்பொழு து விந்துவை வெளியாக்குங்கள். மிகப் பெரிய பரவச நிலையை அனுபவிப்பீர்கள். உங்கள் துணைக்கும் அந்த பரவசம் கிட்டும். எல்லாம் நம் உடலில் உள்ள மின்சக்தி பண்ணும் வேலை. இப்படி வெளியாக்கப்படும் விந்துதான், குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டியது.

அதனால்தான் அக்காலப் பெரியோ ர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், சில வாரங்கள், விரதம் என்று செய்யச்சொல்லி, மறை முகமாக விந்து சேமிப்பை வலியுறுத் தினர். தரமான விந்து சேர அவகாசம் தேவைப்படுவதால், பக்தியின் பெயரால், விந்து நீக்கத்தை தடுத்தனர்.
நாம், சபல உலகத்தில் வாழ்வதால், நம்மால் செக்ஸ் செய்து கொண்டே விந்து சேமிக்க முடியுமா? முடியும். நிச்சயம் முடியும். கவலையே வே ண்டாம்… இறைக்க இறைக்கத்தான் கேணி ஊறும்.

விவசாயிகளுக்கு பயன் தரும் நீர்வள நிலவள திட்டம்


வேளாண்மை உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் வளர்ச்சியானது, நீரினை பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்துவதில் அடங்கியுள்ளது. இதனை அடைந்திட பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திட நீர் வள அமைப்புகளை வலுப்படுத்துவதும் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளை ஒருங்கிணைப்பதும் அவசியமாகிறது.

இதனை கவனத்தில் கொண்டு நீர்வள நிலவள திட்டம் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயிரிடும் பயிர்களுக்கு ஜீவநாடியாக உள்ள பாசன கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நீர்வள நிலவள திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாசன நிலங்களுக்கு முதுகெலும்பாக உள்ள பாசன உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பதுடன், பாசன கால்வாய் அமைப்புகளை புணரமைத்து அதன் பழைய நிலைக்கு கொண்டுவருதல் மற்றும் குளங்களை புதுப்பிப்பது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.

முக்கிய நோக்கங்கள்

நவீன நீர்சேமிப்பு பாசன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாசன சேவை முறையை மேம்படுத்துதல்

நீர் பயனீட்டாளர் சங்கம் அமைத்தல் மற்றும் நீர்வள மேலாண்மையில் விவசாயிகளை ஈடுபடுத்துதல்

வேளாண்மை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்று பயிர் சாகுபடி செய்தல்

62 உபவடி நிலங்களில் உள்ள பாசன அமைப்புகளை கொண்டு பயன்பெறும் பாசன பரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல்
வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் பயன்பெறும் உழவர்களின் வருவாயை அதிகரித்தல்

வேளாண்மையை சார்ந்த இதர தொழில்களான மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவைகள் மூலம் பண்ணை வருவாயை அதிகரிக்க செய்தல்

விற்பனை செய்யும் வகையில் மகசூலை பெருக்குவது மற்றும் விளைபொருட்களை அதிகமாக சந்தைக்கு கொண்டு வர செய்தல்
இந்த திட்டத்தின் கீழ் நீர்வள ஆதார துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை விற்பனை துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வள துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்படுகின்றன.

திட்டப்பணிகள்

பாசன அமைப்புகளை நவீனப்படுத்துவதின் கீழ் இந்த திட்டம் இரண்டு உட்பணிகளாக செயல்படுகின்றன.

நீர் சேதாரத்தை குறைக்கவும் மற்றும் ஏரியிலிருந்து நீரினை கொண்டுவரும் திறனை மேம்படுத்தவும் தேவையான சீரமைப்புகளை மேற்கொள்ளுதல்

வரத்து கால்வாய்களை சீராக்குதல் மற்றும் தூர்வாருதல் மூலமாக நீர்நிலைகளின் கொள்ளளவை மேம்படுத்துதல்

அதிக உபயோக வட்டாரங்களில் நிலத்தடி நீரினை சேகரிக்கும் கட்டமைப்பை அமைத்தல்

சுற்றுச்சூழலை கணித்தல் மற்றும் உபவடி நிலங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க ஆய்வு மேற்கொள்வது

பாசன வேளாண்மைக்கான அமைப்பினை நவீனப்படுத்துதல்

நவீன முறையில் திறமையான வரைமுறைக்குட்பட்ட பாசன சேவையை அளிப்பதே நோக்கம். இது தொடர்பான பணிகள் நீர்வள ஆதார துறை மற்றும் பாசன நீர் பயனீட்டாளர்கள் சங்கம் மூலமாகவும் செயல்படுத்தப்படும். அதாவது குறிப்பிட்ட பகுதியின் நீர் ஆதாரங்கள் முக்கிய நீர் பயனீட்டாளர் சங்கங்களுடன் விவாதித்து வடிவமைத்து மேம்படுத்தப்படும்.

நீர்வள ஆதார துறையில் உள்ள அனைத்து அலுவல்களையும் இணைய தளம் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கப்படும்.

விவசாயிகளுக்கு பயிற்சி,சுற்றுலா மற்றும் கருத்தரங்குகள் நடத்த ஆதரவளிக்கப்படும்.
விவசாயிகள் பங்கு கொள்ளும் பாசன மேலாண்மை மற்றும் முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பயிற்சி பிரிவுகளை அமைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்காக பாசன ஆராய்ச்சி நிதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.


விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?

தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.
முளைப்புத் திறன்

விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.

புறத்தூய்மை

பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

இனத்தூய்மை

விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.

விதை ஈரப்பதம்

விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம். 

விதை நலம்

பயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
பொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.
தகவல்: கு.சிவசுப்பிரமணியம், க.சுஜாதா, ரா.கீதா, க.செல்வராணி, அ.புனிதா மற்றும் ஜெ.பத்மா.

விதை அறிவியல் மற்றும் நுட்பத் துறை, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.

Monday 5 June 2017

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!



















நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.


இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்

Sunday 4 June 2017

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

ரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி... காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்... 
ஆப்பாயில்
பலன்கள்...
      
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை...
புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். 
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.
 
முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..
முட்டை
இதய நோய் வருமா?
`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.
எத்தனை சாப்பிடலாம்?
தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
கரு
எச்சரிக்கை!
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எதனுடன் சாப்பிடலாம்?
முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

"நெல் மணக்கும் திருவாரூர் திருவிழாவில் கலந்துக்கவே நான் குணமாகனும்!"- 'நெல்' ஜெயராமன்

பாரம்பர்ய நெல் ரகங்கள்

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். 

அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் 'நெல்' ஜெயராமன். அப்போது நம்மாழ்வார் இவரிடம் நாட்டு ரக நெல்மணிகளைக் கொடுத்து அதன் உற்பத்தியைப் பெருக்குமாறும், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்குமாறும் சொல்லியிருக்கிறார். 

நம்மாழ்வார் சொன்னது போலவே திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழா 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொர் ஆண்டும் நடத்தி வருகிறார். நெல் ஜெயராமன் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கிறார். பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டதாலேயே இவர் 'நெல்' ஜெயராமன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். 

ஆனால் இவர் கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர், அதே தெம்போடு குணமடைந்து வருகிறார். இப்போது அடுத்த நெல் திருவிழாவிற்கான தேதிகளையும் அறிவித்திருக்கிறார், ஜெயராமன்.

பாரம்பர்ய ரகங்கள்
இதுபற்றி 'நெல்' ஜெயராமனிடம் பேசினோம். "நீண்ட மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பிறந்ததுபோல இருக்கிறது. விவசாயிகள் செயற்கை விவசாயத்தால் படும் கஷ்டம் அளவில்லாதது. இதுதவிர, பாரம்பர்ய நெல் ரகங்களை நம்பி பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய மறுக்கிறார்கள். 

2006-ம் ஆண்டு நம்மாழ்வார் ஐயாவால் துவக்கி வைக்கப்பட்ட நெல் திருவிழா, இம்முறை வரும் 17, 18 ஆகிய தேதிகளில் 11-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த நெல் திருவிழாவை நடத்துவதற்காகவே வேகமாக குணமடைந்து வருகிறேன். திருத்துறைப்பூண்டி டி.வி.ஆர் சாலையிலுள்ள ஏ.ஆர்.வி - தனலெட்சுமி திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், பாரம்பர்ய உணவு மற்றும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகளும் உண்டு. 


ஜெயராமன்
























இந்த விழாவில் 156 வகையான பாரம்பரிய நெல் 6000 விவசாயிகளுக்குத் தலா 2-கிலோ வீதம் வழங்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஐ.ஏ.எஸ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி ஐ.ஏ.எஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஐ,.ஏ.எஸ், மலேசியா பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் சுப்பாராவ், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கக வேளாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

தமிழ்நாடு வேளாண்மைத்துறை முதன்மை அதிகாரிகள், நபார்டு வங்கி முதன்மை அதிகாரிகள், தஞ்சாவூர் இந்திய உணவு பதனிடும் கழக ஆராய்ச்சியாளர்கள், புதுவாழ்வுத் திட்ட அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்கு வங்களாம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். விழாவின் கருத்தரங்கில் பாரம்பர்ய நெல் சாகுபடி அதன் மருத்துவக் குணங்கள், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், விளை நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, 

உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும், விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும்" என்றார்.

Friday 2 June 2017

இனி விவசாயிகள் மாடுகள் வளர்க்க கூடாது..! ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை: ஒரு அதிர்ச்சி தகவல்!



மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.
அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்..கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும்.
முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இவ்வளவு “ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌” விதிகளும் எதற்காக? மாடுகளைக் காப்பாற்றுவதற்காகவா?
இல்லை..!. ஒருவரும் நாட்டு மாடுகளை வளர்க்காமல் போகட்டும் என்பதற்காகவே..!
இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த பின்னர், இனி எந்த விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் பிரியப்படுவார்களா என்ன..?
த‌ன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்ற மாட்டுக்கு அவ‌ன் எப்ப‌டி உண‌வ‌ளிப்பான்…? வ‌ய‌தான‌ மாடுக‌ளை விற்கக்கூட‌ முடியாது.
சரி, அப்ப‌டி இந்த‌ அரசுக்கு இவன் மீது என்ன கோபம்? இங்குதான் #ச‌ர்வ‌தேச‌பொருளாதார‌அர‌சிய‌ல் விளையாடுகிற‌து…!
நாட்டுப் பசுக்களை இனி ஒருவனும் வளர்க்கவே ஆசைப்படக்கூடாது.அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்..!
நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும்.
1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) 100 கோடி லிட்டர் பால் தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள்.மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும்.
ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌,மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம்.
அப்படியானால் “வருஷத்துக்கு 14,40,000 கோடி ரூபாய்” வணிகம்..! – இதுதான் அவ‌ர்க‌ள் நோக்க‌ம்.
இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்குகின்றன. அவர்கள் வியாபாரம் இங்கு கொழிக்க வேண்டும். அதற்கு இந்த‌ கார்ப்ப‌ரேட் கைக்கூலி அர‌சு சோர‌ம் போகிற‌து.
ஜெர்சி இன ப‌சுவின் விந்துக்களுக்குக்கூட அவர்கள் காபிரைட் வாங்கி வைத்திருக்கின்றார்கள்.
நம் விருப்பம் போல் அந்த மாடுகளை நாம் இனவிருத்தி செய்து வளர்த்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும்.
பல ஆண்டுகள் கழித்து இந்த தேசம் அதை உணர்ந்து, திருந்தி வரப் பார்க்கும் போது…. மோடியும் இருக்க மாட்டார்.. நாட்டு மாடுகளும் நாட்டில் இருக்காது.
அதன் பிறகு அவன் வைத்ததுதான் இங்கு சட்டம். விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌த்தின் பெரும் ம‌க்க‌ள் தொகையே அழிந்துவிடும்.
த‌‌ய‌வுசெய்து சிந்தித்து செய‌ல்ப‌டுங்க‌ள். இது வெறும் சிறுபான்மை ம‌ற்றும் த‌லித்துக‌ள் மீதான‌ போர‌ல்ல‌..!
“இது வெறும் ம‌த உணர்வு சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒட்டுமொத்த‌ இந்திய விவ‌சாய‌த்தின் எதிர்கால‌ம்”என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..!
ஒரு விஷயம் இங்கு தெளிவாக உணர்த்துகிறது. இனி விவசாயிகள் யாரும் மாடு வளர்க்க கூடாது என்றும் ஜல்லிக்கட்டிற்கும் நிரந்தரத் தடை என்றும்  நேரிடையாகச் சொல்லாமல் மாடே வளர்க்க  முடியாத நிலைக்கு மதிய அரசு செய்து விட்டது என்கிறார்கள் இயற்களை ஆர்வலர்கள்.
உண்மைதான் பகீர் என்று இருக்கிறது.