Monday 30 January 2017

மாடித்தோட்ட தொட்டியாக தெர்மாகூல் பெட்டி.


அன்றாடம் அதிகரித்துவரும் மட்காத குப்பைகளில் தெர்மாகூலும் ஒன்று. பிளாஸ்டிக் கூட்டுப்பொருளான ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் தெர்மாகூல். இந்தப்பொருளாலான பெட்டிக்கு வெப்பநிலையைக் காக்கும்தன்மை உள்ளதால், பனிக்கட்டிகள் வைக்க, மலர்களை அடைத்து அனுப்ப என பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் ஒரு தடவை பயன்படுத்தியதும் தூக்கி வீசப்படுவதுதான் அதிகம். இப்படி வீசப்படும் இந்த தெர்மாகூல் குப்பை பிளாஸ்டிக்குகளுக்கு இணையாக சுற்றுச்சூழலுக்கு சவால் விட்டுக்கொண்டு நிற்கிறது.
இதோ, தன்னால் முடிந்த அளவுக்கு இந்த தெர்மாகூல் கழிவுகளுக்கு ஒரு வழியைக் கண்டறிந்திருக்கிறார், மதுரை, ஜவகர்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம் பிரசாத். தெர்மாகூல் பெட்டிகளைச் சேகரித்து, அவற்றில் செடிகளை வளர்த்து மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார்.
செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ராம் பிரசாத்தைச் சந்தித்தோம், “எனக்கு சின்ன வயசுல இருந்தே செடிகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். தொட்டி வாங்கி வளர்க்க காசு அதிகம் செலவாகும் என்று யோசித்த போதுதான் தெர்மாகூல் பெட்டி யோசனை வந்தது. இதை மறுசுழற்சியும் பண்ண முடியாது. எரிச்சா நச்சுப்புகை வரும். அது நுரையீரலுக்கு ரொம்ப கெடுதல். அதனால் அதையே மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வந்து சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்று முடிவு செய்தேன். இரண்டு தெர்மாகூல் பெட்டிகளை கொண்டு வந்து பொன்னாங்கண்ணி, புதினா கீரைகளை வளர்த்துப் பார்த்தேன். இரண்டுமே நன்றாக வளரவே.. கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, சீனி அவரை, பாகல், பொன்னாங்கண்ணி, சிறுகீரை, பாலக்கீரை என்று தனித்தனி பெட்டிகளில் வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களாக தெர்மாகூல் பெட்டிகளில்தான் செடிகளை வளர்த்து வருகிறேன் என்றார்.
இரசாயன உரங்களால் அதிக பாதிப்பு வரும் என்று செய்திகளில் படித்ததிலிருந்து மாடித்தோட்டத்திற்கு இயற்கை உரம்தான் போடவேண்டும் என முடிவு செய்தேன். காய்கறிக் கழிவுகள் மூலமாக நானே உரம் தயாரிக்கிறேன். பெரிய தெர்மாகூல் பெட்டியில் மண், காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு, நிலக்கடலைத் தோல், வெங்காயச் சருகு என்று சமையலறைக் கழிவுகள் எல்லாவற்றையும் போட்டு மேலே கொஞ்சம் மண் போட்டு வைத்து விடுவேன். தினமும் இந்தப் பெட்டியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறிக்கொண்டே இருந்தால், 20 நாட்களில் அதெல்லாம் மட்கி உரமாகிவிடும். இந்த இயற்கை உரத்தை செடிகளுக்குப் போட்டால் செடிகள் நன்றாக வளர்கிறது. அதனுடன் மண்புழு உரத்தையும் சேர்த்து போடுகிறேன். பூச்சிகளை விரட்ட வேப்பெண்ணெய், மாட்டுச் சிறுநீர் பயன்படுத்துகிறேன்.
தெர்மாகூல் பெட்டியில் செம்மண், மணல், கொஞ்சம் மட்கிய சாணத்தையும் போட்டு விதைச்சுடுவேன். பெட்டியில் தண்ணீர் வெளியேற சின்னத்துளை போட வேண்டும்.
இதில் செடிகளை வளர்க்கும் போது தண்ணீர் சீக்கிரம் ஆவியாவதில்லை. எடை குறைவாக இருப்பதால் இடம் மாற்றுவது சுலபம். அகலமாக இருப்பதால் கொடி வகைகள் படர்ந்து வளர்கிறது. காய்கறிகள் மட்டுமின்றி பூச்செடிகள், குரோட்டன்ஸ் செடிகளையும் வளர்க்கிறேன்.
ஆட்டோவில் சவாரி போகும்போது வரும்போது எல்லாம் ரோட்டில் எங்காவது தெர்மாகூல் பெட்டி இருக்கிறதா என்று பார்ப்பேன். கண்ணில் தென்பட்டால் எடுத்து வண்டியில் வைத்துக்கொள்வேன். இதற்கு கொஞ்சம் கூட வெட்கப்பட மாட்டேன். சில கடைகளில் சொல்லிவைத்தும் பெட்டிகளை வாங்கிக் கொள்வேன். பெட்டி கிடைத்தவுடனே அதில் ஒரு செடியை வைத்துவிடுவேன். இப்போது மொத்தம் 52 பெட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறேன்”. என்றார்.
நன்றி
பசுமை விகடன்

புடலை மற்றும் பீர்க்கன் சாகுபடி செய்யும் முறை



ஒரு ஏக்கர் நிலத்தில் புடலை, பீர்க்கன் சாகுபடி செய்யும் விதம் பற்றி காண்போம்.
புடலை, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்ணிலும் வளரும். வீரிய ரக புடலைக்கு பட்டம் தேவையில்லை. புடலை வயது 160 நாட்கள், பீர்க்கன் வயது 180 நாட்கள், இவற்றை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். தொழுவுரம் கொட்டி, உழவு செய்து தயாராக உள்ள, 6 அடி இடைவெளியில் ஓர் அடி அகலத்தில் நீளமான பார் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரின் மத்தியில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் குட்டை புடலை விதையை ஊன்ற வேண்டும். விதையை ஊன்றுவதற்கு முன்பாக சாணிப்பால் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரே பாரில், முதலில் ஒரு குறும்புடலை விதை, ஓர் அடி விட்டு மீண்டும் ஒரு குறும்புடலை விதை, மூன்றாவது அடியில் பெரும்புடலை விதையை ஊன்ற வேண்டும். இதே முறையில் மாற்றி மாற்றி இரண்டு பாத்திகள் புடலை நடவு செய்த பிறகு, மூன்றாவது பாத்தியில் செடிக்கு செடி ஓர் அடி இடைவெளியில் பீர்க்கன் விதைகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்த பிறகு, மூன்றாவது நாள் புடலையும், ஐந்தாவது நாள் பீர்க்கனும் முளைக்கும். செடிகளில் நான்கு இலை வந்தவுடன், ஒரு பிரி சணல் கயிறு மூலம் செடியையும் பந்தலையும் இணைக்க வேண்டும். கயிற்றின் ஒரு முனையை செடியின் அடி இலையிலும், அடுத்த முனையை பந்தலிலும் கட்டிவிட வேண்டும். மூன்று நாளைக்கு ஒரு முறை சணலில் சுற்றிவிட வேண்டும். பக்க சிம்புகள் இருந்தால் கிள்ளி எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கொடி வேகமாக பந்தலை அடையும். கொடி பந்தலைத் தொட்டதும், வாழை நார் மூலமாக, கொடிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கம்பிகளில் கட்டி விடவேண்டும். 25 முதல் 30 நாளைக்குள் கொடி பந்தலில் படர்ந்து விடும். அந்த நேரத்தில் வளர்ச்சி ஊக்கியாக பயோ உரங்களை ஏக்கருக்கு 50 கிலோ வரை கொடுக்கலாம்.
இந்த உரத்தை செடியின் தூருக்கு அருகில், கையால் கொஞ்சம் பள்ளம் பறித்து, அதில் வைத்து மண் அணைத்துவிட வேண்டும். நிலத்தின் ஈரம் காயாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். மூன்று பாசனத்துக்கு ஒரு முறை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை கரைத்து பாசன நீருடன் கலந்துவிட்டால், செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். அதேசமயம், அதிக பாசனமும் கூடாது. 30-ம் நாளுக்கு மேல் பூவெடுக்கும். அந்த நேரத்தில் சில பயோ டானிக்குகளை தெளித்தால் பூக்கள் உதிராமல் பிஞ்சாக மாறும். குறும்புடலை, நீளபுடலை இரண்டும் 45 நாட்களுக்கு மேல் காய் அறுவடைக்கு தயாராக இருக்கும்.
பீர்க்கன் மகசூலுக்கு வர 65 முதல் 80 நாட்கள் வரை ஆகும். அதுவரை, குறும்புடலை இரண்டு தினங்களுக்கு ஒருமுறையும், பெரும்புடலை மூன்று நாட்களுக்கு ஒரு முறையும் அறுவடை செய்யலாம். 80 நாட்களுக்கு மேல் ஒருநாள் விட்டு ஒருநாள் பீர்க்கன் அறுவடை செய்யலாம். ஆக, சுழற்சி முறையில் தினமும் ஏதாவது ஒரு காய் அறுவடை நடந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், அதிகப்படியான இலைகளை கைகளால் கிள்ள வேண்டும். அப்போதுதான் புதுக்கிளைகள் தோன்றி அதிக பூக்கள் வைக்கும்.
பூச்சி, நோய் தாக்குதலைப் பொறுத்தவரை, அசுவிணி தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கு பயோ மருந்தை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அடுத்ததாக வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதற்கும் பயோ மருந்து கடைகளில் மருந்து கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். சாறு உறிஞ்சும்பூச்சி, தத்துப்பூச்சி, வெள்ளைக்கொசு தாக்குதலும் அதிகளவு இருக்கும். அதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தெளிக்கலாம். மற்றபடி பீர்க்கன், புடலை இரண்டுக்கும் ஒரே பராமரிப்பு முறைதான்.
சாணிப்பால் விதை நேர்த்தி
தூசி, மண் இல்லாத பசும் சாணத்தை தேவையான தண்ணீர் ஊற்றி பால் பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும். அதில் விதைகளைக் கொட்டி, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, விதைகளை எடுத்து பருத்தி துணியில் கொட்டி, நீரை வடிகட்ட வேண்டும். அதை துணியில் முடிச்சாக கட்டி, லேசாக தண்ணீரில் நனைத்து 6 மணி நேரம் நிழலில் வைத்துவிட வேண்டும். அதன் பிறகு விதைகளை எடுத்து நடவு செய்தால் முளைப்புத் திறன் நன்றாக இருக்கும்.
நன்றி
பசுமை விகடன்

கால்நடைகளின் உஷ்ணத்தை விரட்டும் வெந்தயம் !


கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்து விளக்குகிறார், தஞ்சாவூரில் உள்ள கால்நடை மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். புண்ணியமூர்த்தி.
“கோடைக்காலங்களில் வெப்பம் அதிகமாகத் தாக்கினால், மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி குறைதல், கருவுறத் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட உணவு உட்கொள்ளுதலும் குறையும். இதனால் புரதச்சத்து, நார்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். எனவே, கோடை வெப்பம் நேரடியாக கால்நடைகளைத் தாக்காதவாறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம். மாடுகளை நிழலில் கட்டி வைக்க வேண்டும். அடர்ந்த உயரமான நிழல் தரும் மரங்கள் கால்நடைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். கால்நடைகளை சுற்றிலும் 10 மீட்டர் விட்டத்துக்கு நிழல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் குடிப்பதற்கு எல்லா நேரங்களிலும் தரமான குடிநீர் தயாராக இருக்க வேண்டும். வறட்சியான பகுதிகளில், உச்சிவெயில் நேரங்களில் மாடுகள் மீது நீர்த்திவலைகளைத் தெளிக்க வேண்டும்.
ஒரு மாட்டுக்கு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பெருநெல்லிக்காய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் தீவனத்தோடு கலந்து கொடுக்க வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஒருநாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தினமும் இதுபோல் ஒருவேளை கொடுக்க வேண்டும். மொந்தன் வாழைப்பழம், நெல்லி முல்லி, வெந்தயம் இவை மூன்றுமே மாடுகளின் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய அற்புத மருந்துகள்” என்றார்.
தொடர்புக்கு, செல்போன் : 98424-55833
நன்றி
பசுமை விகடன்


சாப்பிட கூடியதும்… கூடாததும்!

இன்று பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை?
தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உருளையும், பீட்ரூட்டும் அறவே தவிர்க்க வேண்டும். இனிப்பு குறைவாகவும், துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிடுவது அவசியம். மாம்பழம், சப்போட்டா, வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரையின்படி உண்பது நல்லது.
தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்பு சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது. காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்ந்த குடிநீரை குடிக்கலாம். வெட்டி வேர் போட்ட பானை நீர், சீரகத்தண்ணீர் தினசரி பயன்பாட்டுக்கு நல்லது.
இரவு தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப்பயறு கூட்டுடன் பயன்படுத்தலாம். காலை, பஜ்ரா ரொட்டி எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என, அளவாக சாப்பிடலாம். மேலும், நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறு தானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை.

திருமணத்துக்குப் பிறகு பெண்கள் இனிஷியல் மாற்ற வேண்டுமா?

பெண்கள் பெரும்பாலும், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள். அதே நினைவில், தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள். அவர்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோ அப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும்போது, அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமீபத்தில், வங்கித் தேர்வு எழுத வந்த பெண்களுக்கும் இதே சிக்கல் நேர, திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எனக் கேட்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே சிலர் தேர்வு எழுத முடியாமல்கூட போய்விட்டது.

இனிஷியல் மாற்றம்… பெண்களுக்கு மட்டும் ஏன்?
ஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்னைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? வழக்கறிஞர் அருள்மொழியிடம் கேட்டோம்.
“பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. உண்மையில் பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்னை எப்போது வந்தது? அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும்போதுதான். ஒரு பெண் திருமணத்துக்கு முன் தந்தைக்கும், திருமணத்துக்குப் பின் கணவனுக்கும், கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே, பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.
மதங்கள் பெண்கள் பெயர்களை இழக்கச் செய்கின்றனவா?
இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். திருமணப் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும். கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. எலிஸபெத் எனும் பெண் டேனியலைத் திருமணம் செய்தபின், மிஸஸ் டேனியல் என்றே அழைக்கப்படுகிறார். இஸ்லாம் முறையில் முன்பெல்லாம் திருமணப் பத்திரிகையில் பெண்ணின் பெயருக்குப் பதில் ‘அழகிய மணமகளை’ என்றுதான் இருக்கும். இந்த ஆண்மைய சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கண வரின் பெயர் இனி ஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. 

அரசியலமைப்புச் சட்டப்படி…
ஒரு பெண், ஆணைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.
ஒரு பெண் தன் தந்தையின் பெயரைத்தான் இனிஷிய லாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தன் தந்தையின் பெயரோடு, தாய் பெயரையும் இணைத்து இனிஷியலாக வைத்திருக் கலாம். அல்லது, தந்தை பெயர் இல்லாமல் தாய் பெயரை மட்டும்கூட இனிஷியலாக வைத்திருக்கலாம். 

இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை அரசிய
லமைப்புச் சட்டம் பெண் களுக்கு வழங்கியுள்ளது” என்று தெளிவுபடுத்தினார் அருள்மொழி. 


அது சுயமரியாதை சார்ந்தது!
ஒரு பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்துக்குப் பிறகு தன் நேசத்துக்கு உரிய தந்தையை தன் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான். பெண்ணியச் செயற்பாட்டாளர்  ஓவியா வின் பார்வை இது…
“நேசித்து திருமணம் செய்திருந்தாலும்கூட, தன் இனிஷியலை மாற்றிக் கொள்ளும்போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.
திருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களா கவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இது அவசியமற்றது என்பதே என் கருத்து. சில வீடுகளில் ஆண்கள் வற்புறுத்தி அவர் பெயரை இணைக்கச் சொல் வதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள் ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளா வின் சில பகுதிகளில் விதி விலக்காக அம்மாவின் பெயரை இணைக்கிறார்கள். ஒரு பெண்ணின் தந்தை சரி யில்லாதவராக, குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும்கூட அவரின் பெயரை அந்தப் பெண் இறுதிவரை சுமக்கவே வேண்டியிருக்கிறது. இதில் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை பலரும் முன் வைப்பதேயில்லை.
என் மகனின் பெயர் ஜீவசகாப்தன். அவருக்கு என் பெயர் மற்றும் கணவரின் பெயரின் முதலெழுத்தையும் சேர்த்து ஓ.வி.ஜீவசகாப்தன் என்று பள்ளியில் சேர்த்தோம். பள்ளி யில் ஏதேனும் ஒரு பெயரை மட்டும் வைக்க வேண்டும் எனச் சொன்னபோது, ‘அப்படி யென்றால் அவன் அம்மாவின் பெயரே இருக்கட் டும்’ என்றார் என் கணவர். பிறகு இருவரின் பெயருடன் பதிவு செய்தார்கள். இப்போது என் பேத்தியின் பெயரும் எஸ்.ஜெ.இதய சிற்பி என அம்மா-அப்பா இருவர் பெயரின் முதலெழுத்தோடு தான் பதிந்திருக்கிறோம்.” 
ஆண்களுக்கு மட்டுமல்ல… பெண்களுக்கும் தனித்த அடை யாளம் இருக்கிறது. அதை இழக்காமல் வாழ்வோம்!

பூக்கள் பூக்கும் தருணம்!-டீன் ஏஜ் ஹெல்த்

லரே…’ என மலர் டீச்சரை அழைப்பதைப் போலவே பெண்களை மலரோடு ஒப்பிடுகிறோம். மலருக்கு பூக்கும் பருவம் வருவதைப்போலவே பெண்ணுக்கும் பூப்பெய்தும் பருவம். இக்காலகட்டத்தில் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இந்தச் சூழலில் பெண்குழந்தைகளுக்குத் தேவையான விழிப்பு உணர்வை எப்படி, யார் கற்றுத் தருவது? அது ஏன் அம்மாவாக இருக்கக் கூடாது! பெண் குழந்தைகள் பூப்பெய்துதல் பருவம் வருகையில் அவர்களை எப்படித் தயார் செய்ய வேண்டும்? டிப்ஸ் அளிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.
*குழந்தைப் பருவத்தில் இருந்து, பதின்பருவத்தை அடைகிற நிலையே
பூப்பெய்துதல். இப்பொழுதில் உடல் அளவிலும் மனதளவிலும் மாற்றங்கள் அடைவதும் வளர்ச்சிக்கான அறிகுறியே என தெளிவுபடுத்த வேண்டும்.
*பொதுவாக, பருவம் எய்தும் காலகட்டம் 11 – 14 வயது. உடல்நிலையைப் பொறுத்து இது மாறக்கூடும். இன்னும் இளம் வயதிலேயேகூட பூப்பெய்துகின்றனர். எனவே, சற்று முன்னரே குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றி சொல்லித்தர வேண்டும்.

*
எட்டு அல்லது ஒன்பது வயது தொடங்கிய பெண்குழந்தைகளிடம், `உன் மார்பகப் பகுதிகள் வளர்ச்சியடையும். இந்த வளர்ச்சி இரண்டு – மூன்று ஆண்டுகள் வரை இருக்கலாம். சிலருக்கு ஒரு மார்பகம் அதிக வளர்ச்சியும், இன்னொரு மார்பகம் சற்று குறைவான வளர்ச்சியாகவும் இருக்கலாம். பயம் தேவை இல்லை. இது இயல்புதான்’ என்று உணர்த்த வேண்டும்.
* `அக்குள் பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளிலும் ரோமம் வளரும். அப்படி வளரும்போது, பூப்பெய்துதலுக்குத் தயாராகிறாய்’ என்பதையும் கூற வேண்டும்.

*
மாதவிடாய் என்பது பிறப்புறுப் பிலிருந்து ரத்தம் கசிவது. இது இயற்கையான செயல். உடலில் ஏற்படும் மாற்றம். 3-5 நாட்கள் வரை நீடிக்கும். மலம், சிறுநீர் போல இந்த குருதிப்போக்கும் ஒருகழிவுதான் என்பதைப் புரியவைக்க வேண்டும். இது நோய் கிடையாது. வளர்ச்சியின் அடையாளமே என்பதையும் உணர்த்த வேண்டும்.
ஏன் இப்படி என்று கேட்டால், பெண்ணாக இருந்து தாய்மை அடைவதற்கான வளர்ச்சி என்று சொல்லித்தரலாம். பெண் குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பூப்பெய்துவர். இதன் அடையாளமாக, பிறப்புறுப்பில் குருதிப்போக்கு ஏற்படும் எனச் சொல்லிக்கொடுத்தால், பூப்பெய்தும்போது தேவை இல்லாத பயமும் குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
சானிட்டரி நாப்கினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னரே கற்றுக்கொடுப்பதால், நீங்கள் இல்லாதபோது, பள்ளியில் முதன்முதலாக மாதவிடாய் வந்தால் உதவியாக இருக்கும். இதை ஒரு நோயாகக் கருதுவதும் தவிர்க்கப்படும்.
*பள்ளி அல்லது ட்யூஷன் நேரங்களில் முதன்முறையாக உதிரப்போக்கு இருந்தால், ஆசிரியரிடம் தனக்கு நேர்ந்ததைக் கூறி சானிட்டரி நாப்கின் கேட்கலாம்… தவறு ஒன்றுமில்லை என்றும் சொல்லுங்கள்.

பூப்பெய்தும் பருவத்தில் முகத்தில் பருக்கள் வரலாம். சிலருக்குக் குரலும் மாறலாம். இது, ஹார்மோன் மாற்றங்களால் என்பதைப் புரியவைப்பது அவசியம். இந்த மாற்றங்கள் இயற்கையானவையே என்பதையும் கூறுங்கள்.
*ஹார்மோன் மாற்றங்களால் மனமாற்றங்கள் ஏற்படும். சில குழப்பங்கள் இருக்கும். சில குழந்தைகள் தனிமையைத் தேடுவர். அதனால் குழந்தையிடம் தாய், நண்பர் போல மாறிவிட வேண்டும். இதனால், பல பிரச்னைகளையும் குழப்பங்களையும் தவிர்க்கலாம்.
* எல்லா விஷயங்களையும் பற்றி தயக்கம்இல்லாமல் பேசுவதற்கும், அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் சுலபமான வழி அவர்களிடம் ஃப்ரெண்ட்லியாக இருப்பதே.
பதின் பருவத்தில்தான் தங்களுக்கென ஓர் தனி அடையாளமோ அங்கீகாரமே வர வேண்டுமென நினைப்பார்கள். தன்னுடைய கருத்தை குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று வாதிடுவார்கள். அதை தர்க்கம் செய்வதாகவோ, தங்களை எதிர்த்துப் பேசுவதாகவோ தவறாக புரிந்துகொள்ளாமல், ‘சமூக பார்வையில் எது நல்லது? எது தீமை?’ என்பதை எடுத்துச் சொல்லி, பாதை தவறாமல் தடுத்திட வேண்டும்.

பதின்பருவத்தில் எதிர்பாலின் மேல் ஒருவித ஈர்ப்பு ஏற்படத் தொடங்கும். அவற்றைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் மனரீதியான விளைவுகளை ஸ்மார்ட்டாக கையாள கற்றுக்கொடுங்கள். சிலர் குடி, போதை போன்ற தவறான பழக்கவழக்கங்களை விளைவு அறியாமல் கற்று தங்களை இழப்பதுமுண்டு.இந்தப் பட்டாம்பூச்சி பருவத்தில் பெற்றோரின் கண்காணிப்போடு, அன்பும் அரவணைப்பும் மிக அவசியம்.
*பூப்பெய்துவதற்கு ஓர் ஆண்டு முன்னர்தான் வளர்ச்சி அதிகமாக (Peak Height Velocity) இருக்கும் என்பதால், ஊட்டச்சத்து மிக்க உணவுகளைத் தருவது அவசியம். கால்சியம், இரும்புச்சத்து, புரதசத்து ஆகியவை முக்கியம். கேழ்வரகு, பேரீச்சம்பழம், சிறுதானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், பருப்பு, பயறு வகைகள், நட்ஸ், முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றைக் கொடுக்கலாம். 

தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஆகியவை சீராக இருக்க, தினம் 30-45 நிமிடங்களுக்காவது ஏதேனும் உடலுழைப்பு வேண்டும். நடனம், சைக்கிளிங் போன்றவற்றை அவர்கள் விருப்பப்படித் தேர்ந்தெடுக்கலாம்.  இது அவர்கள் உயரமாவதற்கும் உதவி புரியும்.
* பூப்பெய்துதல் பருவத்தில் சிலர் அதிக தைரியம் உடையவர்களாகவும், சிலர் அதிக அச்சம் உடையவர்களாகவும் குண மாற்றம் அடைவார்கள். அதுவும் இயல்பானதே என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

சிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்!

ருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.
சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.
“பொதுவாக இவர்களின் மனநிலை, ‘சிசேரியன் பிரசவம்னா எந்த ரிஸ்க்கும் இல்லை’ என்பதாக இருக்கிறது. அது அறியாமைதான்’’ என்கிற மகப்பேறு மருத்துவர் டாக்டர் நித்யா தேவி, சிசேரியன் சூழல்கள் பற்றியும் கூறுகிறார்.

எப்போது சிசேரியன் அவசியம்?
“பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 – 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம். பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்…
* முந்தைய பிரசவம் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில்…
தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால்…
கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது, கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருக்கும்போது…
பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால்…
கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் பொசிஷன் மாறுபட்டு இருந்தால்…
குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால்…
கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால்…
தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்…
கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்…
இரட்டைக் குழந்தைகள் எனில்…
 வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது…
கர்ப்பப்பையில் நீர்ச்சத்துக் குறையும்போது…
30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது…
தாயின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்படும் சிசேரியன் (CDMR – Cesarean Delivery on Maternal Request)
ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தையை வெளியே எடுக்க விரும்புவது, பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை நாட்கள், ஃபேன்ஸி தினங்களில் குழந்தை பிறக்க விரும்புவது, ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கை, இவற்றுடன் பிரசவ வலிக்குப் பயந்து கர்ப்பிணியும் அவருடைய குடும்பத்தினரும் சிசேரியன் செய்ய மருத்துவர்களிடம் கோருவது… இந்தக் காரணங்களுக்காகக் கூட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப் பிருக்கும் சூழலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
1970 – 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15% ஆக அதிகரித்தன. இப்போது அவை 30% ஆக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.
சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்!
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக  உதிரப்போக்கு ஏற்படலாம்.
* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.
* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.
  * சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.
* நிறைமாதமான 37 – 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள்  எதிர்காலத்தில் உடல்  மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்” என்கிறார்  டாக்டர் நித்யா தேவி.

சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!
* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள்  இதற்கு கைகொடுக்கும்.
* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.
* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?

புதிதாக சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவி, மானியம் பற்றிய தகவல்களைக் கூறுகிறார் சென்னை எம்.எஸ்.எம்.இ (MSME- Ministry of Micro, Small & Medium Enterprises) வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநரான புனிதவதி.
புதிதாகத் தொழில் தொடங்கும் பெண்களுக்கு புதிதாக இயந்திர – தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க அரசு மூன்று திட்டங்களில் கடனுதவி வழங்க உதவி செய்வதுடன், அவற்றில் 25 சதவிகித தொகையை மானியமாகவும் வழங்குகிறது.
1. வேலை இல்லாதோருக்கு வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.3 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
2. பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் தொழில்களுக்கு ரூ.10 லட்சமும், உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு http://bit.ly/2aCchF8 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
3. புதிய சுயதொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டத்தில் அதிகபட்சமாக சர்வீஸ் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  

* முதலில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், தொழிற்சாலை அமைக்கும் இடம், தொழிலை வெற்றிகரமாக நடத்திச்செல்ல திட்டமிட்ட பிளான் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, தொழில் தொடங்கவிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள வங்கியில் வழங்க வேண்டும். திட்ட அறிக்கையை  வங்கி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தப் பகுதிக்கு உட்பட்ட மாவட்ட தொழில் மையத்தில் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.
முதல் திட்டத்துக்கு மட்டும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். பின்னர் அம்மையத்தினரால், விண்ணப்பதாரர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார். தொடர்ந்து மேற்கண்ட மூன்று திட்டங்களில் உங்களுக்குப் பொருத்தமானதை தேர்வுசெய்து, உங்களுக்கு கடனுதவி செய்யலாம் என நீங்கள் குறிப்பிட்ட வங்கிக்கு சிபாரிசு செய்வார்கள். தொடர்ந்து வங்கியில் கடனுதவி பெறலாம்.

* எம்.எஸ்.எம்.இ டெவலப்மென்ட் இன்ஸ்டிட்யூட் சார்பில் சுயதொழில் செய்வ தற்கான ஒரு நாள், ஒரு வாரத்துக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாகவும் கட்டண முறையிலும் நடத்தப்படுகின்றன. இதில் தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில், அதை வெற்றிகரமாகச் செய்வது, மார்க்கெட்டிங், லோன் பெறும் வழிமுறைகள் உள்பட சுயதொழில் பயிற்சியாக அளிக்கப்படும். குறிப்பாக dcmsme.gov.in இணையதளத்தில் சுயதொழில் தொடர்பான தகவல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சி நிகழ்வுகள், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியிடப்படும். உள்நாட்டில், வெளிநாட்டில் நடைபெறும் கண்காட்சிகளுக்கு செல்லும் பெண் சுயதொழில் முனைவோர்களுக்கு அவர்களுக்கு ஆகும் பயணச் செலவில் 80-100 சதவிகிதத்தொகை மானியமாகக் கொடுக்கப்படுகிறது. பெண்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை mahilaehaat-rmk.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக டிஸ்ப்ளே செய்யலாம்.
* சுயதொழில் செய்ய நினைப்பவர்கள் தங்களுக்கான துறையை சரியாகத் தேர்தெடுத்து தங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என பலமுறை யோசித்து, அதற்கு ஏதாவது தடை இருந்தால் சரிசெய்ய வேண்டும். பின்னர் தாங்கள் தயாரிக்க உள்ள பொருளின் தேவை, போட்டியாளர்கள், அதனை எந்த வழிகளில் விற்பனை செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதுபோன்ற பல விஷயங்களை ஆராய்ந்த பிறகே, புதிய தொழிலைத் தொடங்க வேண்டும். உற்பத்திப் பொருளை சிறிய அளவில் அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்து பார்த்தாலே, சாதக பாதக அம்சங்கள் ஓரளவு தெரிந்துவிடும். பின்னர் அதனை மெருகூட்டி, மேம்படுத்தி தொழில் தொடங் கலாம். சுயதொழில் செய்யும் பலருக்கும் மார்க் கெட்டிங் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருக்கிறது. தரமான பொருளை உற்பத்தி செய்து விற்கத் தெரியாமல் இருப்பவர்களும், மட்டமான பொருளை உற்பத்தி செய்து நன்றாக மார்க்கெட்டிங் செய்பவர்களும் கூட இருக்கிறார்கள். நம் பொருள் தரமாக இருப்பதுடன் அதனை எந்தெந்த வழிகளில் எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ, அந்த யுக்திகளைக் கையாளுவது பலன் கொடுக்கும். பணம் கொடுத்து மீடியாக்களில் விளம்பரம் செய்வது ஒரு ரகம். தரமான பொருட்களை விற்பனை செய்வதால் ஒரு வாடிக்கையாளர் மூலமாக அடுத்தடுத்த வாடிக்கையாளர்கள் கிடைப்பது மற்றொரு ரகம். கால மாற்றத்துக்கு ஏற்ப நம் பொருட்களை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வதும் அவசியத்தேவை.
* சுயதொழில் தொடங்கும் முன்பு ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால், தொடங்கிய வுடன் ஒருமுறை முறைகூட நெகடிவாக யோசிக்கக் கூடாது. சுயதொழில் செய்தால் ஏற்ற இறக்கம் கட்டாயம் வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை தைரியமாக எதிர்கொண்டு மீண்டும் லாபத்தை நோக்கிய பாதையில் செல்ல வேண்டும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் புனிதவதி.

பெண் நலம் காப்போம்!

10 வயது பிரச்னைகள்:
 கால்சியம் ​​பற்றாக்குறை
 இரும்புச்சத்துப் ​​பற்றாக்குறை
 நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
தீர்வு:
 தவறாமல் அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும்
11 -20 வயது பிரச்னைகள்:
 பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்
 சு​கா​தாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
தீர்வு:
 ஹெ.பி தடுப்பூசி,இரும்புச்சத்து, கால்சியம் அளவைப் பராமரிப்பது பாலியல் விழிப்புஉணர்வு பற்றிய அறிவைப் பெறுவது
21 – 40 வயது பிரச்னைகள்:
 ரத்தசோகை
 ஃபோலிக் அமிலக் குறைபாடு
 பி.சி.ஓ.டி
 பருமன்
தீர்வு:
 கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
 ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது
 தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது
41-60 வயது பிரச்னைகள்:
 மெனோபாஸ் பிரச்னைகள்
 அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்
 எலும்பு அடர்த்திக் குறைவு,
 அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்
 அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள்
 சர்க்கரை நோய்
தீர்வு:
 தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது
 கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள்
 கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
 தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது
60 வயதுக்கு மேல் பிரச்னைகள்:

 இதய நோய்கள்
 சர்க்கரை நோய்
 கண் நோய்க​ள்​
 எலும்பு அடர்​த்திக்​ குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு
தீர்வு:
 சமச்சீர் உணவு – குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புகள் உள்ள உணவுகள்.
 தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது.

அரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை..


அரப்பு – மோர் கரைசல்தேவையான பொருட்கள்:
5 லிட்டர் மோர், 1 லிட்டர் இளநீர், 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்), 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.
தயாரிப்பு:
மோர் மற்றும் இளநீர் நன்கு கலக்கவும். இலைகளை நன்கு கலக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளுடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும். வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும். நைலான் வலையை பயன்படுத்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.
நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும். நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.
குறிப்பு: எங்களுடைய இலக்கு விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இதனால் தான் நாங்கள் பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளைப் பரிந்துரை செய்கிறோம். அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை நாம் அது சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. நீங்கள் மோருடன் இந்த திரவ சேர்க்க புளித்து விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி (கொக்குலசு ) விட்டு, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழம் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.
பயன்பாடு:
500ml to 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்ற திறன் வாய்ந்தது அதே சாத்தியம் உள்ளது.
நன்றி
என்மதுபாலன், B.sc (Agri),
இயற்கை வேளாண்மை ஆலோசகர்,
தர்மபுரி.

Sunday 29 January 2017

15 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தக்காளி…



தக்காளி சாகுபடி குறித்துக் கூறிய அஜய், ”நிலத்தை நன்றாக உழவு செய்து, அதற்கு மேலே அரையடி உயரத்துக்குத் தென்னைநார் கழிவைப் பரப்பி, ரெண்டரை அடிக்கு ஒரு லேட்ரல் குழாய் அமைச்சோம். சொட்டுநீர்க் குழாயில் துளையிருக்கிற இடத்திற்கு நேராக இரண்டு பக்கமும் விதையை ஊன்றினோம். சொட்டுநீர் மூலமாக பாசனம் செய்யும்போதெல்லாம் ஜீவாமிர்தம் கலந்து கொடுத்தோம். 15 நாளைக்கு ஒருமுறை பஞ்சகவ்யா கொடுத்தோம்.
காய் பிடிச்ச பிறகு மூணு முறை மீன் அமினோ அமிலம் தெளிச்சோம். செடிகள் காய்ச்சு தள்ளிடுச்சு. ஒரு நாள் விட்டு ஒருநாள், 150 கிலோவில் இருந்து 250 கிலோ வரை காய் கிடைச்சது. எனக்கு மகசூல் வந்த நேரத்தில் பக்கத்து விவசாயிகள் தக்காளியை, கிலோ ரெண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இது இயற்கை என்பதனால் ஒரு நண்பர் என் தக்காளியை கிலோ 30 ரூபாய்க்கு எடுத்துக்கொண்டார். அது மூலமாக எனக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இப்பொழுது தக்காளி உள்பட எல்லாக் காயும் மகசூல் முடிஞ்சிருக்கு. முள்ளங்கியும், கேழ்வரகு மட்டும் வயலில் இருக்கு. வழக்கமாக முள்ளங்கியை விரும்பிச் சாப்பிடமாட்டாங்க. ஆனா, இயற்கையில்  விளைந்த இந்த முள்ளங்கியோட சுவைக்காக இதைச் சாப்பிட்டவங்க கேட்டுக்கேட்டு வாங்கிக்கொள்கின்றனர்.” என்றார்.
நன்றி
பசுமை விகடன்

சாத்துக்குடி

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.
செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.
sat
இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதில் உள்ள லெமனாய்ட்ஸ் என்ற ரசாயனம் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
untitled
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். மேலும் கொழுப்பைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இதில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்துக்கு இயற்கைப் பொலிவை தருகிறது. இதனால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சருமப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

கலர் கலராய் கவரும் காலணி


ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல; விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது.
எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
எனக்கு தெரிந்த ஒரு பெண் சற்று உடல் எடை அதிகமாக கொண்டவர். இப்போதெல்லாம், டி.வி. நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்துபோகும் மாடல்கள் ஒய்யாரமாக அணிந்துவரும் ஹீல்ஸ் செருப்பை தானும் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை.
அந்த மாடல் செருப்பு தனக்கு ஒத்து வருமா? என்ற சந்தேகத்துடன், பெரிய ஷோரு ம்களுக்குச் சென்று தேடிபிடித்து அதை வாங்கி வந்துவிட்டார். அவரது கால் சைசுக்கு தகுந்தாற்போல் பெரிய அளவிலேயே ஹீல்சை தேர்வு செய்திருந்தார்.
எதற்கும் ஹீல்சை பார்ட்டிகளுக்கு அணிந்து போவதற்குமுன், வீட்டில் அதை போட்டுக்கொண்டு கொஞ்சம் டிரெய்லர் பார்ப்போமே… என்ற எண்ணத்தில், அதை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடக்க முயற்சித்தார்.
ஆனால், முதல் அடியே பலமாக விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு காலை ஹீல்சுக்குள் விட்டவர், இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் தொபுக்கடீர்னு கீழே விழுந்து அடி வாங்கிக்கொண்டதுதான் மிச்சம்.
பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.
எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு ஆரம்பம் ஒன்று இருக்கும். இந்த செருப்புக்கு என்றும் வரலாறு உண்டு.
சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர். அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள்தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்துகொண்ட பெருமைக்கு உரியவர்கள்.
இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக கோர்த்து, அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான், பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நுறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கபட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.
செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.
இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.
எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.
இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள்.
இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.
இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன.
இந்த செருப்பு வகைகளுடன் மேரி ஜேன் என்ற செருப்பும் இன்றைய புட்வேர் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த செருப்பை வடிவமைத்து உருவாக்கியவர் அமெரிக்க பெண்ணான மேரி ஜேன். அவரது பெயரிலேயே அவர் உருவாக்கிய செருப்பு அழைக்கபடுகிறது. ப்யூர் லெதரால் உருவாக்கப்படும் இந்த செருப்பு, அதை அணிந்து கொள்ளும் பெண்களின் கால்களை கடிக்காது. மாறாக, மென்மையை கொடுக்கிறது.ஹீல்ஸ் வகை செருப்புகள் பெண்களுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றன. குட்டையான பெண்கள் அதை அணிந்துகொண்டால் உயரமான பெண்ணாகி விடுகிறார்கள்.
இந்த ஹீல்ஸ் வகை செருப்பை அணிந்து கொண்டால் முட்டு வலி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். பொருத்தமான ஹீல்சை தேர்வு செய்து அணிந்தால் இந்த பயம் தேவையில்லை. புதிதாக ஹீல்சை அணியும்போது வலி இருக்கலாம். நாளடைவில் அது சரியாகிவிடும். புதிதாய் எந்த செருப்பு வாங்கி அணிந்துகொண்டாலும் கடிக்கும்தானே…?
ஹீல்சில் பிளாட் மற்றும் பாயின்ட்டட் மாடல்கள் இன்று நிறைய கிடைக்கின்றன. 40 முதல் 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்கள் மாத்திரமே பாயின்ட்டட் மாடல் ஹீல்சை அணிந்துகொள்ளலாம். மற்றவர்கள் அணிந்தால் சிரமமாக இருக்கும். நடக்கும்போது கால் இடறி விழுந்துவிடக்கூடும். அதேநேரம், பிளாட் மாடல் ஹீல்ஸ்களை எந்த வயதினரும், எவ்வளவு உடல் எடை கொண்டவர்களும் அணிந்து கொள்ளலாம்.
மேலும், ஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த விஷயங்கள் : ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும். பாயின்ட்டட் ஹீல்ஸ் தேர்வு செய்யும்போது, அதில் உள்ள ஹீல்சின் உயரம் 2 முதல் 4 இஞ்ச் வரை மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வது (நடந்து செல்வதற்கும், உடல் நலத்திற்கும்) நல்லது.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி ஒர்க் செருப்புகள் உள்ளன. இவற்றை மிகச்சிலரே விரும்பி அணிகின்றனர்.

பாலிவுட் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர், தங்களைவிட உயரமான தீபிகா படுகோனே, சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய் போன்றோருடன் நடிக்கும்போது பிளாட் மாடல் ஹீல்ஸ் அணிந்து கொள்கின்றனர்.

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது


மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.
புரதச்சத்து:
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கார்போஹைடிரேட்:
கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
கொழுப்பு சத்து:
உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
வைட்டமின்கள்:
*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
*”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
*இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.
மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.

டேக் கேர் பாதம்!

னிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால், நாம் பராமரிக்கத் தவறும் உறுப்பு, கால்கள். இதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். கால்களை ஆரோக்கிய மாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.
சுத்தமாக வைத்திருக்க…
வழிமுறை 1:
கால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் எப்சம் உப்பு (Epsom salt), ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு, 20 நிமிடங்கள் வரை காலை வைத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான துண்டால் கால்களை ஒத்தி எடுக்க வேண்டும்.
வழிமுறை 2:
கடையில் கிடைக்கும் பியுமிஸ் கல் (Pumice stone) அல்லது சாஃப்ட் பிரஷ் வாங்கி கால்களில் பிரஷ் செய்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வழிமுறை 3:

கால்களைச் சுத்தம் செய்த பிறகு, நல்ல தரமான மாய்ஸ்சரைசர் க்ரீமை கால்களில் தடவலாம். கால்களைச் சுத்தம் செய்ததுபோல, கைகளையும் சுத்தம் செய்யலாம்.
ஆரோக்கியமாகப் பராமரிக்க…
10 நாட்களுக்கு ஒரு முறையாவது நகங்களை வெட்டிப் பராமரிக்க வேண்டும். நகத்தை சதை தெரியும் வரை ஒட்ட வெட் டாமல், சிறிய அளவில் நகம் இருப்பதுபோல வெட்டலாம். முடிந் தவரை அவரவருக்கு எனப் பிரத்யேக நகவெட்டிகளை வைத்திருப் பது நல்லது.
பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை, கால் இடுக்குகளில் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதுபோல எண்ணெயை நகங்களிலும் தடவலாம்.
நீர் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கீழே வைத்து, கால்களை அதன் மேல் வைத்து உருட்டியபடி, ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
கால்களில் கறுப்பாக அடையாளம் விழுகிற மாதிரியான செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கலாம்.
தரமான நகப்பூச்சுகள், அசிடோன் ஃப்ரீ (Acetone free) ரிமூவர்களைப் பயன்படுத்துவது நல்லது.
ஜோதிட பாடங்கள் - ( பாடம் - 02 )

முதல் பாடத்தை நன்றாக படித்து மனதில் பதித்துக் கொண்டு விட்டீர்களா?
சரி , அடுத்த பாடத்தை கவனிப்போம்...


எல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம்  , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான்  அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி. 

இன்னைக்கு நடைமுறைலே யாருக்கும்  அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.


எந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம். 

ராசி அதிபதிகள் :


கீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள். 




மேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.
ரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.
மிதுனம், கன்னி - அதிபதி - புதன்
கடகம் - அதிபதி  - சந்திரன் 
சிம்மம் - அதிபதி - சூரியன்
தனுசு , மீனம் - அதிபதி - குரு
மகரம் , கும்பம் - அதிபதி - சனி

ராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .

சரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும்.  இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர். 

சாதரணமா  ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா,  ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும். 

அதைப் போல ,  சில வீடுகள்  - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து  பரிதாபமாக இருக்கும். 

இதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம்  என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..
அவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.





இதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். 



சூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.
இதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.

நல்லா புரியுதுங்களா? இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

மேலே உள்ள அட்டவணையைப்  பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.
யாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க.  
இது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.





சரி, இப்போ ஒரு - செயல்முறைப் பயிற்சி : ( Practical) 

இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் ஜாதகம், நமது தற்போதைய முதல்வர் , கலைஞர் அவர்களுடையது :  இதிலே எந்த , எந்த கிரகம் என்ன நிலைலே இருக்குதுன்னு பாருங்க  : 





எப்படி பார்க்கணும் ? 


முதல்லே எடுத்ததும் - நீங்க பார்க்க வேண்டியது , லக்கினம்......


இவருக்கு - என்ன லக்கினம் ?  -   கடகம் ...   (குட்... நீங்களும் கண்டு பிடிச்சு இருப்பீங்க.. இல்லையா? )


இவருக்கு என்ன ராசி ? - சந்திரன் எங்கே இருக்கிறார் ? - ரிஷபத்திலே. So , இவருக்கு  ரிஷப ராசி.



சரி, இப்போ மத்த கிரகங்களைப் பார்க்கலாம்...

சூரியன் - ரிஷபத்திலே . ரிஷபம் அவருக்கு - பகை வீடு. 
சந்திரன் - ரிஷபம் , உச்ச வீடு.  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
செவ்வாய் - மகரம் - உச்ச வீடு  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
புதன் - மிதுனம் - ஆட்சி வீடு ( மூன்று மடங்கு - பலம். )
 குரு - விருச்சிகம் - நட்பு வீடு.
சுக்கிரன் - மிதுனம் - நட்பு வீடு
சனி - துலாம் - உச்ச வீடு  ( ஐந்து  மடங்கு - பலம் ... )
ராகு / கேது - பகை வீடு.

மொத்தமா மூணு - உச்ச கிரகங்கள் , ஒரு - ஆட்சி கிரகம் , ரெண்டு கிரகம் - நட்பு ஸ்தானம், .... 

மீதி - மூணு கிரகம் - சரி இல்லைன்னு வச்சுக்கலாம். (இப்போதைக்கு நமக்கு தெரிந்த விதிகள் படி.... )

யார் ஒருத்தருக்கு , நீசம் இல்லாம, ஒரு ஒரு கிரகம் ஆட்சியோ, உச்சமோ இருந்தாலே அவங்களுக்கு.. வாழ்க்கை நல்லா இருக்கும். .. மூணு கிரகம் னா அவரு , கிட்டத் தட்ட ராஜா தான்.. இவருக்கு எப்படி னு பாருங்க..  கொடுத்து வைச்ச மனுஷன்..
மத்த அம்சங்களைப் பத்தி , பின்னாலே விரிவா அலசுவோம்.. 

சாமி எல்லாம் இல்லை.  ஜாதகம்லாம்  பொய்யி னு அவர் சொன்னா.. போச்சா?  அவருக்கே ரகசியமா எத்தனை ஜோதிடர்கள் இருக்கிறாங்களோ..? 

இன்னொரு விஷயம் நல்ல நோட் பண்ணிக்கோங்க. ....  ராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..

சரி, இப்போதைக்கு இந்த ரெண்டு படங்களை தெளிவா , படிச்சு புரிஞ்சுக்கோங்க...
மீதி அடுத்த பாடத்திலே பார்க்கலாம்...   OK வா?

யாருக்காவது இந்த பாடங்களிலே சந்தேகம் னா... பின்னூட்டத்திலேயே ( கமெண்ட்ஸ்) கேளுங்க... இதைத் தவிர சந்தேகம் னா... மெயில் லெ கேளுங்க...

------------------------   ( ஓகே.......  ஜூட்  )