Saturday 18 February 2017

மறுமலர்ச்சி பெறும் இளநீர்! புது பொலிவுடன் பாட்டில்களில்! தமிழன்டா


ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் வெளிநாட்டு குளிர்பானங்களின் மீது இருந்து மவுசு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக உள்நாட்டு அதுவும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு போன்றவற்றை மக்கள்  பெரிதும் விரும்ப துவங்கியுள்ளனர்.
வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி போன்றவற்றை இனிமேல் விற்பனை செய்ய மாட்டோம் என்றும் வியாரிபாரிகள் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் இயற்கை முறையில் தயாராகும் இளநீர், மோர், பதநீர், கரும்புச்சாறு போன்ற பானங்கள் எல்லாம் புதுப்பொலிவும், புதிய மாற்றத்துடனும் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இளநீர் வாங்கி குடிக்கலாம் என்றால் இளநீர் கடையைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் கண் கட்டிவிடும். தற்போது இந்த இளநீர் புதிய மாற்றத்துடன் பாட்டில்கள், பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளன.
ரசாயன கலப்படம் இல்லாமல் இயற்கையான இந்த இளநீரில் எந்த ரசாயன கலப்படமும் இல்லாமல் நாம் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம், கால்ஷியம், இரும்பு சத்துடன் குளுக்கோஸ் போன்றவை கிடைக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்பவர்களுக்குச் சத்தான பானங்களாக   இளநீர் அளிக்கின்றனர்.
இப்படிப் பட்ட இளநீர் பாக்கெட்களில், பாட்டில்களில் எல்லாம் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இளநீர் கூழ், பானம், கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள டிவி புரம் ஃபார்மஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் நிர்வாக அதிகாரி பைஜு என்பவர்.
இளநீர் இயற்கையான பானம் என்பது ஒரு சிறப்பு. நான்கு மாதங்கள் கெடாமல் இருக்கும் இளநீர் கூழ் நான்கு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
பைஜூவை நீங்கள் தொடர்புகொள்ள விருப்பினால் பைஜு என் டி, கௌப்ராடு இளநீர் திட்டம், டி வி புரம், வைக்கம், கோட்டயம் மாவட்டம். தொலைப்பேசி: 9747150330 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: