Saturday 25 February 2017

நாடு நலம்பெற தமிழகத்தை தியாகம் செய்வது தப்பில்லை : பாஜக தலைவர் இல.கணேசன்.!


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு நலம்பெற வேண்டும் எனில் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தும் எரிவாயு திட்டத்தால் நாட்டிற்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.
நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது. ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர்.
இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயத்திற்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது. தனி மனிதனும் நாட்டிற்காக தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.
எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அந்த திட்டத்தினை எதிர்ப்பது எதிர்கட்சிகளின் திட்டமாகும். சில தியாகங்கள் இருந்தாலும் விவசாயிகள் நலன் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: