Saturday 25 February 2017

இந்த இறை வழிபாடு செய்தால் உங்கள் வீட்டில் செல்வங்கள் குவியுமாம்! கண்டிப்பாக செய்யுங்கள்



துர்க்கை தேவியானவள் நவராத்திரி, விஜயதசமி நாட்களில் நடைபெறும் பூஜையின் போது, தேவியின் மலை மகளாக இச்சா சக்தி அனைத்தையும் பெருகிறாள்.
எனவே நாம் இந்த நாட்கள் துர்க்கை அம்மனை மனதில் நினைத்து, அவளை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால், நமது மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்து, நமக்கு ஞான சக்தியை அளித்து, நமக்கு வேண்டிய அனைத்து செல்வங்களையும் கொடுத்து அருளிப்பாள்.
மேலும் நாம் எப்போதும் துர்க்கை தேவியின் ஆசியுடன் இருப்பதற்கு, ஒன்பது நாட்கள் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.
துர்க்கை தேவிக்கு ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள்
  • முதல்நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
  • இரண்டாம் நாள் நெய்வேத்தியம்: தயிர்ச்சாதம்.
  • மூன்றாம் நாள் நெய்வேத்தியம்: வெண்பொங்கல்.
  • நான்காம் நாள் நெய்வேத்தியம்: எலுமிச்சை சாதம்.
  • ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்: புளியோதரை.
  • ஆறாம் நாள் நெய்வேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
  • ஏழாம் நாள் நெய்வேத்தியம்: கற்கண்டுச் சாதம்.
  • எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
  • ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்: அக்கர வடசல், சுண்டல்
இந்த ஒன்பது விதமான நெய்வேத்தியங்களை தேவிவின் பக்தியுடன் பின்பற்றி வணங்கி வந்தால், நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும்.
விஜயதசமி, நவராத்திரி தினத்தன்று துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தேவிகளையும் பூஜை செய்து வந்தால், நம் நலம் பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.
மேலும் விஜயதசமி மற்றும் நவராத்திரி அன்று புதுவேலை, கல்வி, இது போன்ற செயல்களை தொடங்குவதற்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்து பூஜை செய்தால், நாம் தொடங்கும் செயலில் பன்மடங்கு செல்வம் கிடைக்கும்.

No comments: