Wednesday 23 August 2017

புளூ வேல் விளையாட்டால் பறிபோகும் உயிர்கள்: தீவிரமாக கண்காணிக்குமாறு உ.பி. போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு

புளூ வேல் விளையாட்டால் பறிபோகும் உயிர்கள்: தீவிரமாக கண்காணிக்குமாறு உ.பி. போலீஸ் டி.ஜி.பி. உத்தரவு

















லக்னோ:

தற்கொலை விளையாட்டு என்ற பெயர் பெற்றுள்ள புளூ வேல் (நீல திமிங்கலம்) எனும் ஆன்லைன் கேம், விளையாடுபவருக்கு தினசரி ஒரு பணி என மொத்தம் 50 நாட்கள் வழங்கப்படும். இதன் இறுதி பணி கேமினை விளையாடுவோரை தற்கொலை செய்ய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் சவாலை முடித்ததும் கேமினை விளையாடுபவர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.



இணையத்தில் இதுபோன்ற ஆபத்தான கேம்கள் சமூக வலைத்தள உதவியின்றி விளையாட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் பலரும் இந்த கேம் விளையாட துவங்கி, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் ஏற்படுகிறது. 

2015- 2016 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் புளூ வேல் விளையாடி 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சமீபகாலமாக இந்தியாவிலும் புளூ வேல் இளம் உயிர்களை பறித்து வருகிறது. 

புளூ வேல் ஆபத்தை உணர்ந்து இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புளூ வேல் விளையாட்டுக்கு அழைத்து செல்லும் அனைத்து ‘ஆப்ஸ்’களையும் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளது.

எனினும், புளூ வேல் மோகம் நமது மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரிடையே தீராத தாகத்தையும் மோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் இந்த ஆன்லைன் விளையாட்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற ஆப்களின் மூலம் ரகசியமாக விளையாடப்பட்டு வருவதாக தெரிகிறது.



புளூ வேல் விளையாட்டு மோகத்தால் கடந்த மாதம் 30-ம் தேதி மும்பையில் 14 வயது சிறுவன் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தான். கடந்த 12-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தனது வீட்டு பாத்ரூமுக்குள் தற்கொலை செய்துகொண்டு பலியானான். 

சமீபத்தில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆஷிக்(20) தனது படுக்கை அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், புளூ வேல் எனப்படும் விபரீத விளையாட்டால் தொடர்ந்து பல உயிர்கள் பலியாகிவரும் நிலையில் இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு உ.பி. போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புளூவேல் எனப்படும் இந்த மரண விளையாட்டை நிர்வகித்து வருபவர்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதை பரப்பாமல் கண்காணித்து தடுக்குமாறும், பரப்புவோர்மீது உத்தரப்பிரதேசம் மாநில போலீசாருக்கு அம்மாநில போலீஸ் டி.ஜி.பி. சுல்கான் சிங் இன்று உத்தரவிட்ட்டுள்ளார்.

இந்த மரண விளையாட்டுக்கு சிறார்கள் மற்றும் மாணவர்கள் பலியாகாமல் இருக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை போலீசார் நேரில் சென்று சந்தித்து இந்த விளையாட்டின் தீமையைப் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆபத்தான இந்த விளையாட்டில் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என தனது உத்தரவில் டி.ஜி.பி. சுல்கான் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 9 August 2017

நல்லெண்ணெயில் விஞ்ஞானத்தை புகுத்திய நமது முன்னோர்கள்!!!



மது பாட்டனும், பூட்டனும் என்னத்த சாதிச்சாங்க...என்று நாம் அவ்வப்போது சலிப்பதுண்டு. ஆனால் அவர்கள் செய்து வைத்த ஒவ்வொரு விடயத்திலும் ஏதோ ஒரு தத்துவம் அடங்கித்தான் கிடக்கிறது என்பதற்கு இதோ இந்த நல்லெண்ணெயும் ஒரு உதாரணம்.

எங்கும் இல்லாத சில விடயங்கள் மதுரைக்கு மட்டுமே உண்டு. கடலில் கலக்காத வைகை, மனதை மயக்கும் மல்லிகைப்பூக்கள், இதே மல்லிகை போன்ற இட்லியும், கொத்துமல்லி சட்னியும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது போல் மதுரையில் ஒரு விடயம் நீண்ட நாட்களாக இருந்தது. அது மரச்செக்கில் பிழிந்து எடுத்த கமகமக்கும் நல்லெண்ணெய். மதுரை சிம்மக்கல் அருகில் இருக்கிறது செல்லத்தம்மன் கோவில்.

இந்த பகுதியில் வாணிப செட்டி குடும்பத்தை சேர்ந்தவர்கள் நல்லெண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களது கடையில் நல்லெண்ணெய் வாங்க எப்போதும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இப்படி வருபவர்கள் கைகளில் எல்லாம் சில்வரால் ஆன ஒரு குடுவை இருக்கும். இந்த குடுவையோடு வந்து வரிசையில் நிற்பார்கள். தங்கள் முறை வந்தவுடன் கடையில் அளந்து கொடுக்கும் நல்லெண்ணெயை வாங்கிச் செல்வார்கள். 

அப்படி என்ன தான் இவர்கள் விற்கும் இந்த நல்லெண்ணெயில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒரு தடவை புகைப்படக்காரருடன் சேர்ந்து அங்கே போனோம். கடைக்காரர் எப்போதும் போல் விற்பனையில் படு மும்முராக இருந்தார். நாங்கள் இந்த எண்ணெயின் ரகசியங்களை தெரிந்து கொள்ள வந்திருப்பதாக சொன்னவுடன் ஆர்வத்துடன் பேச தொடங்கினார். தனது நல்லெண்ணெய் பற்றி இன்னும் பல மக்களுக்கு தெரியட்டுமே என்று தான் ஆர்வமாக பேட்டி கொடுப்பதாக நினைத்தேன்.

அவரும் சொல்லத் தொடங்கினார். 'அதாவது தேங்காய் எண்ணெயில் இருந்து எண்ணெய் எடுத்து அதற்கு தேங்காய் எண்ணெய், கடலையில் இருந்து எண்ணெய் எடுத்து கடலை எண்ணெய் என்று நமது முன்னோர்கள் பெயர் வைத்தார்கள். ஆனால் எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்து விட்டு, அதற்கு மட்டும் நல்லெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ஏன் இப்படி?
அதற்கு எள் எண்ணெய் என்று தானே பெயர் வைத்திருக்க வேண்டும்? அனால் வைக்க வில்லை.  இந்த எண்ணெயின் எல்லையில்லாத நன்மைகளை பார்த்து விட்டு,  நல்லதை செய்யக்கூடிய நல்லெண்ணெய் என்பதை அதன் பெயரிலேயே சுட்டிக்காட்டிவிட்டார்கள்.

இன்றைக்கும் கடைகளில் நல்லெண்ணெய் பல பிராண்டுகளில் விற்கப்படுகிறது. ஆனால் நாங்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் அவர்கள் விற்கும் நல்லெண்ணெய்க்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நல்லெண்ணெய் என்பது, பெரிய இயந்திரங்கள் மூலம் எள்ளை அரைத்து பெறப்படும் எண்ணெய். ஆனால் நாங்கள் கடந்த 120 ஆண்டுகளாக மரச்செக்குகளில் தான் எள்ளை போட்டு ஆட்டி எண்ணெயை பிழிந்து எடுக்கிறோம். அதாவது எள்ளுடன் கருப்பட்டியை சேர்த்து சிறிதுசிறிதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதன் மூலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியே வரும். 

இப்படி மரச்செக்கிலிருந்து பிழியப்பட்டு வரும் எண்ணெயை பித்தளையால் ஆன பாத்திரத்தில் தான் வடித்தெடுப்போம். அதுவும் குறிப்பாக இந்த எண்ணெயை எடுத்து ஊற்ற பயன்படும் பித்தளை பாத்திரம் என்பது எங்களுக்காகவே பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இந்த பித்தளை பாத்திரத்தின் உட்புறத்தில் ஈயம் பூசப்பட்டிருக்கும். இதை வைத்து தான் செக்கிலிருந்து வரும் எண்ணெயை எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி சேமிப்போம். இதே போல எங்களின் வாடிக்கையாளர்கள் எங்களிடம் எண்ணெய் வாங்க வரும் போது சில்வர் பாத்திரத்தை தான் கொண்டு வரச்சொல்லி அதில் தான் எண்ணெயை ஊற்றி கொடுப்போம்.

இதன் அறிவியல் தத்துவம் எங்களுக்கு முன்னோர்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து ஆட்டப்பட்ட எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணையை, பித்தளையில் ஈயம் பூசப்பட்ட பாத்திரத்தின் மூலம் செக்கிலிருந்து எடுத்து ஊற்றி சில்வர் பாத்திரத்தில் சேமிக்கப்படும் நல்லெண்ணெய்க்கு சில அபாரமான குணங்கள் இருப்பதை நடைமுறையில் தெரிந்து வைத்திருந்தார்கள்.

இந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும். இன்றைக்கு இந்தியாவில் பெரிய நிறுவனமாக இருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தினரின் குடும்பத்தினருக்கு மதுரை தான் பூர்விகம். அவர்கள் குடும்பத்தினரின் சமையல் எல்லாத்துக்கும் எங்கள் செக்கு நல்லெண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். இது போல் மதுரையில் இருந்த பல பிரபலங்களும் எங்கள் எண்ணெயை வாங்கி தான் சமைப்பது வழக்கம்.

எங்களுக்கு பெரிய அளவுக்கு இந்த தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், நாங்கள் 4 வது தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதனை விடவும் மனதில்லை' என்றார். நாங்கள் இவரை பார்த்து பேசியது  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு. தற்போது இந்த இடத்தில் மரச்செக்கு எண்ணெய் விற்கப்படுவதில்லை. இங்கு இந்த விடயத்தை பதிவிட காரணம் இப்படி எத்தனையே பாரம்பரியமான தயாரிப்பு முறைகள் மறைந்து போய்க் கொண்டே இருக்கின்றன. இதில் தமிழர்களின் வாழ்வோடு இடம் பிடித்த செக்கு நல்லெண்ணெயும் காணாமல் போனது வருத்தியது.


பொதுவாக பெண் குழந்தைகள் பருவமடைந்த நிலையில் அவர்களுக்கு உளுந்தை களியாக கிளறி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கொடுப்பார்கள். இது இடுப்பு பகுதிக்கு நல்ல வலுவை தரும் என்பார்கள். தற்போது இந்த பழக்கம் எல்லாம் மறைந்து விட்டது. இத்துடன் இந்த செக்கு நல்லெண்ணெயும் தான். செக்கு நல்லெண்ணெய்க்கும், தற்பேர்து பாக்கெட்டுகளில் அடைத்து வரும் நல்லெண்ணெய்க்கும் என்ன அப்படி வித்தியாசம் இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் இப்படி சொன்னார்....

" அதாவது பெரிய பெரிய எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய இரும்பு உலக்கைகளை கொண்டு எள்ளை ஆட்டி எண்ணெயை பிழிவார்கள். அப்போது கடுமையான வெப்பம் இந்த உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படுவதுண்டு. அந்த வெப்பத்தால் இயற்கையாகவே நல்லெண்ணெயில் மறைந்திருக்கும் சில அதிசயமான குணசாங்கள் குறைந்து போய்விடும்.

ஆனால் மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்லெண்ய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே" என்றார்.

ஆக...படிப்பு குறைவாக இருந்தாலும் நமது முன்னோர்கள் இன்றைய விஞ்ஞானிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை எப்படியெல்லாம் நிருபித்திருக்கிறார்கள் பாருங்கள்.

Tuesday 1 August 2017

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்!

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை ‘கால சர்ப்பதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது.  ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஏதாவது ஒரு கிரகம் இதைவிட்டு வெளியே சென்றாலும், அது தோஷம் இல்லை. ராகு கேதுவால் ஏற்படும் காலசர்ப்ப தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்ன என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

ராகு கேது
”கால சர்ப்பதோஷம் என்றதும் பயப்படத்தேவையில்லை. இது  தீமை செய்யாது. பலவீனமான கிரகங்கள் அல்லது வீடுகள் இவற்றுக்கு ராகு, கேது பார்வை, சேர்க்கை  பெற்றால் மட்டுமே கால சர்ப்பதோஷம் தீமை செய்யும். இந்த தோஷம் பல வகைப்படும். அவை பின் வருமாறு:
1.  அனந்த கால சர்ப்பதோஷம் (விபரீத கால சர்ப்பதோஷம்):  லக்னத்தில் ராகுவும் 7- ம் வீட்டில் கேதுவும் அமைந்து இவற்றிற்கு இடையில் மற்ற கிரகங்கள் அமைவது.  27 வயது வரை சிரமமும் பிறகு நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
2.  குளிகை கால சர்ப்பதோஷம்:  2 -ம் வீட்டில் ராகு 8 – ம் வீட்டில் கேது :  இந்த அமைப்பு எதிர்பாராத பொருள் இழப்பையும், பூர்வீக சொத்துகளை இழக்கும் நிலையும், உடல் நலக் குறைவு, விபத்து போன்றவையும் ஏற்படும். 32 வயதுக்கு மேல் யோகம் ஏற்படும்.
கிரகங்கள்
3.  வாசுகி கால சர்ப்பதோஷம்: 3 – ம் வீட்டில் ராகு 9-ம் வீட்டில் கேது:  இந்த அமைப்பு ஜாதகரின் தொழிலில் அல்லது அவரது வேலையில் பிரச்னைகளைக் கொடுக்கும். சகோதரி, சகோதரர்களுக்குள் பிரச்னை, தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்காமை, துணிந்து எதையும் செய்யமுடியாமல் இருப்பது போன்ற பலனைத் தரும். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.  
4.  சங்கல்ப கால சர்ப்பதோஷம்:  4-ம் வீட்டில் ராகு 10-ம் வீட்டில் கேது:  குடும்ப வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை அழுத்திக்கொண்டே இருக்கும். இதனால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும் . 42 வயதுக்கு மேல் நல்ல பலன் தரும்.
5.  பத்ம கால அல்லது பாத கால சர்ப்பதோஷம்:  5-ம் வீட்டில் ராகு 11 -ம் வீட்டில் கேது:  இதுதான் புத்திர தோஷத்தை கொடுக்கக் கூடிய மிகவும் பாதகமான சர்ப்பதோஷம் ஆகும். நண்பர்கள், பழகியவர்கள்கூட விரோதியாவார்கள். எடுத்த காரியங்களில் தடை உண்டாகும். 48 வயதுக்கு மேல் நல்ல பலனைக் கொடுக்கும்.
6.  மஹா பத்ம கால சர்ப்பதோஷம்: 6-ம் வீட்டில் ராகு, 12 – ம் வீட்டில் கேது:  இது முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு அமையும். ஏன் என்றால், இது பிற்காலத்தில் நல்ல புகழையும், அதிகாரப் பதவியையும், அந்தஸ்தையும் கொடுக்கவல்லது. இந்த அமைப்பு எதிரிகளால் பிரச்னை, சிறைவாசம், வீண் விரயங்கள், அரச தண்டனை போன்ற பலன்களைத் தரும். பிறகு  54 வயதுக்கு மேல் முன்பு சொன்ன புகழ், அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றைத் தரும். சிலர் தன் கெளவரத்துக்காக கோயில் திருப்பணி, அறக்கட்டளை போன்றவை நிறுவி தொண்டு செய்வார்கள்.
ராகு
7.  தட்சக கால அல்லது கால மிருத்யு சர்ப்பதோஷம்:  7 – ம் வீட்டில் ராகு லக்னத்தில் கேது:  27 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டால், கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும், சிலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தெய்வ திருப்பணியில் ஈடுபடுவதும் உண்டு.
8.  கார்க்கோடக கால சர்ப்பதோஷம்: 8 – வீட்டில்  ராகு   2 – வீட்டில் கேது: மிகவும் கொடிய தோஷம்.  தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக் கொள்வார்.  தந்தையின் பணத்துக்காக அவருக்கு ஆபத்தை விளைவிக்கவும் துணிவார். அதனால், தந்தை வழி சொத்து இவருக்குக் கிடைப்பது கடினம். மற்றவர்களின் இன்ஷூரன்ஸ் பணம் இவருக்கு கிடைக்கும்.
9.  சங்க குட கால சர்ப்பதோஷம்:  9 -ம் வீட்டில் ராகு 3 -ம் வீட்டில்  கேது:  வாழ்க்கை மேடுபள்ளமானதாக இருக்கும். சில நாள்கள் முன்னேற்றம், சில நாள்கள் தாழ்வுநிலை, சில நாள்கள் பிரபலமாகவும், சில நாள்கள் தலைமறைவு வாழ்க்கையும் நடத்துவார்கள். 36 வயதுக்கு மேல் நல்ல பலனைத் தரும்.
சிவன்
10.  கடக கால சர்ப்பதோஷம்:  10 -ம் வீட்டில் ராகு 4 -ம் வீட்டில் கேது:  தொழிலில் தடை , அலுவலகங்களில் அவமரியாதை ஏற்படும். ஆனால்,  47 வயதுக்குப் பிறகு மிகச் சிறந்த தொழிலதிபர் ஆவார். வேலையில் உயர் பதவி கிடைக்கும். ஆனால் சிம்மம், கன்னி லக்னகாரர்களுக்கு இந்த அமைப்பு இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கும்.
11.  விஷ்தார கால சர்ப்பதோஷம்:  11 ம் வீட்டில் ராகு 5 -ம் வீட்டில் கேது:  வெளி நாட்டில் வாசம்.  குழந்தைகள் மூலமாக வருத்தங்கள் ஏற்படும்.  அடிக்கடி பயணம் ஏற்படும்.  48 வயதுக்கு மேல் நல்ல பலன் உண்டு.
12.  சேஷ கால சர்ப்பதோஷம் :  12 -ம் இடத்தில் ராகு  6-ம் இடத்தில் கேது: அசுபர்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பலன் உண்டாகும். கல்வியில் சிறந்த நிபுணத்துவத் தன்மை  ஏற்படும்.வெளிநாட்டில் உயர் கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். வயோதிக காலத்தில் பேரும், புகழும் உண்டாகும்.
திருக்குளம்
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒரு ராசிக்கு 18 மாதங்கள் இருக்கும். பொதுவாகவே ராகு கேதுகள் இருக்கும் இடத்துக்கேற்ப அந்த வீட்டின் அதிபதியைப் போல் பலன் தருவார். உதராணத்துக்கு மேஷத்தில் இருந்தால் செவ்வாயைப் போல் பலனைத் தருவார். ரிஷபத்தில் இருந்தால் சுக்ரனைப் போல் பலனைத் தருவார். அதாவது அந்த வீட்டின் உரிமையாளரைப் போல் பலனை தருவார்.  
மேஷத்தில் அதிக சீற்றத்தையும், ரிஷபத்தில் அதிக ஆசையையும், மிதுனத்தில் அதிக காதலையும், கடகத்தில் குடும்பப் பிரிவையும், சிம்மத்தில் அதிக ஆணவத்தையும், கன்னியில் சுயநல புத்தியையும், துலாத்தில் வியாபார மேன்மையையும், விருச்சிகத்தில் அதிக வேகத்தையும், தனுசில் அதிக ஆன்மிகத்தையும், மகரம், கும்பத்தில் விஷ வாக்கையும், மீனத்தில் அதிக பொருள் ஆசையையும் தரும். ராகு கேது பெயர்ச்சியில் அது எந்த பாவத்தில் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம்.
பொதுவான பரிகாரமாக தோஷத்தின் வீரியம் குறைய, பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.  ராகு கேதுகள் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வதும் நல்லது.  பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் கோயிலில் பரிகாரம் செய்துகொள்வது நல்லது. 
சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள்களில், அருகில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால், ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கும். 
பாம்பை அடித்துக் கொன்றவர்கள்,  பாம்புப் புற்றை இடித்தவர்கள்  இந்த தோஷத்தின் பிடியில் இருப்பார்கள். அவர்கள்  ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது அல்லது நாகர் சிலைக்கு பால் அபிஷேகம்,  மஞ்சள் காப்பிட்டு வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.  
ஜாதக ரீதியாக ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் இடத்தில் ராகு இருப்பவர்கள், விஷத்தன்மை அதிகமுள்ளவர்கள்.  இதனால், அவர்களின் சந்ததி வளர்ச்சி தடைப்படும். அதற்கு இதை முறிக்கக்கூடிய விதமாக,  அருகம்புல் சாறு,  ஆலவ் வீரா எனப்படும் சோற்றுக் கற்றாழைச் சாறு எடுத்துக்கொள்வது நல்லது.  சிவஸ்துதி சொல்வதும் நல்லது.  வைணவர்கள் கருட தண்டகம் படிப்பது நல்லது” என்று தெரிவித்தார்.  

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அரசு விளக்கம்

சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அரசு விளக்கம்

















புதுடெல்லி:

அடுத்த ஆண்டு முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் சமையல் எரிவாயுவின் விலை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சமையல் எரிவாயு குறித்த அறிவிப்பு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல், பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது. 

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். யாருக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்குவது என்பது குறித்து மட்டும் தொடர்ந்து சீரமைக்கப்படும் என்று கூறினார்.