ஜெயிலுக்குள்ள சொகுசு கேட்குதா! சசிகலாவை விளாசிய இலங்கை நடிகர்!
சிவாஜியும், ஜெயலலிதாவும் நடித்த பாட்டும் பரதமும் என்ற படத்தில் ஜெயலலிதா ஆடுகிற போட்டி நடன பாடலில் ‘கலையின் பெருமை இலங்கை வரை கேட்குது’ என ஒரு வரி எழுதப்பட்டிருக்கும்.
அதுசரி இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? கடல் கடந்து இலங்கை வரை சென்றிருக்கிறது சிறையில் இருக்கும் சசிகலா விவகாரம் அதற்காகத்தான் அந்த பாடலின் வரி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
இலங்கையின் சினிமா சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க. நடிகரான இவர் அந்நாட்டின் இணை அமைச்சராகவும் இருக்கிறார். கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ரஞ்சன் ராமநாயக்க, சசிகலா விவகாரம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில், “கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் சசிகலா, தனக்கு தலையணை, போர்வை, மின்விசிறி போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு எந்தவித சலுகைகளும் கொடுக்கப் படவில்லை.
ஆனால், இலங்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில, தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, தலையணை மற்றும் பல சொகுசுகள் வேண்டும் என்றார். நமது அரசு அவருக்கு சலுகைகள் வழங்கியுள்ளது.
இந்திய அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். இலங்கையில் கைதாகும் அரசியல்வாதிகளுக்கு சலுகைகள் அளிக்கிறோம். எந்த அரசியல்வாதியையும் சசிகலாவைப் போல் நடத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.” என்று சசிகலாவைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
ம்ஹும். சசிகலாவின் பெருமையும் இலங்கை வரை கேட்குதே!
No comments:
Post a Comment