Tuesday 29 May 2018

ஸ்மார்ட் போன்களில் கொட்டிக்கிடக்கும் ஆபாசம்


ஸ்மார்ட் போன்களில் கொட்டிக்கிடக்கும் ஆபாசம்



நல்ல பழக்க வழக்கங்கள், செயல்கள் கசப்பு மருந்தை போன்றவை. கசப்பு மருந்தை யாரும் விரும்புவதில்லை; ஆனால் உடலுக்கு நல்லது. உண்மையே பேசவேண்டும் என்று உறுதி எடுத்து அதன்படி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து காட்டுவது சிரமம்.

கெட்ட விஷயங்கள்-பழக்கங்கள் இனிப்பு மருந்தை போன்றவை. அவை எளிதில் நம்மை ஒட்டிக்கொளம்.

சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்ததற்கு சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகை இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இந்த போன்கள் இல்லாத இளைய சமுதாயத்தை இப்போது பார்க்க முடியாது. பஸ், ரெயில் பயணங்கள், பூங்கா போன்ற பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் தலைகுனிந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு-தேடிக்கொண்டு இருப்பதை காணலாம். எங்கிருந்தபடியும் உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலம் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த வரப்பிரசாதம் இது.

அறிவுக்களஞ்சியமான இணையதளங்களில் எண்ணிலடங்கா தகவல்கள், படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. ஆனால் பலர் பாலுணர்வை தூண்டும் ஆபாச தளங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் செய்யும் சேட்டையால் சிறுவர்கள், விடலைப்பருவ பையன்கள், இளைஞர்கள் பலர் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் தூண்டப்படும் சிலர் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள், சிறுமிகள் என்றுகூட அந்த கயவர்கள் பார்ப்பது இல்லை.



சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாலியல் தொடர்பான விஷயங்களை பேசுவது, படிப்பது, படங்களை பார்ப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்று குதிரை கொம்பாக இருந்த விஷயம் இப்போது தண்ணீர்பட்ட பாடாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் கைங்கர்யத்தால் ஆபாசங்கள் இப்போது கைக்குள் வந்து, வயது வித்தியாசம் இன்றி எளிதாகிவிட்டது. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் மற்றவர்கள் அதிலேயே லயித்து விடுகிறார்கள். சிறுவர்கள் கூட ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டதால் சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக சமீப காலங்களில் அடிக்கடி வெளியாகும் செய்திகள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பிஞ்சிலே பழுத்தால் காய் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவைக்காது.

பாலியல் குற்றசெயல்களில் ஈடுபடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்துவதில் சட்டத்துக்கு மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு
















மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

ஆனால், நாட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை பார்த்தால், இந்த சமுதாயம் எங்கே போகிறது? என்ற கேள்வி எழுகிறது. பெண் குழந்தைகளை பெற்றோர்கள் மிகவும் கண்ணும், கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

* அறிமுகம் இல்லாதவர்கள் குழந்தைகளை கொஞ்சவோ, பேசவோ அனுமதிக்கக்கூடாது.

* உறவினர்கள், தெரிந்தவர்கள் என்றாலும் யாரையும் முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கக்கூடாது.

* பிற ஆண்களுடன் குழந்தை பேசும் போதும், பழகும் போது பெற்றோர் கவனத்துடன் இருக்கவேண்டும்.

* நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

* தெரிந்தவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது தனியாக அழைத்தால் அவர்களுடன் செல்லக்கூடாது என்று சொல்லி வைக்க வேண்டும்.

* யாராவது தேவை இல்லாமல், தவறான நோக்கத்தில் பேசினாலோ, தொட்டாலோ அதுபற்றி எந்த தயக்கமும் இன்றி கூறுமாறு சொல்லி வைக்க வேண்டும்.

* விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, பெண் குழந்தைகளை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பிறரை மதித்தல் போன்ற நல்ல பழக்க வழங்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். பையன் எங்கே போகிறான்? யார்-யாருடன் பழகுகிறான்? என்ன மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துகிறான்? என்பதை கண்காணிக்க தவறக்கூடாது.

இன்றைய செடிதான் வளர்ந்து நாளை மரமாகி சுவையான கனியை தரவேண்டும். எனவே, குழந்தை பருவத்திலேயே பிள்ளைகளை பக்குவப்படுத்தி நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை ஆகும். 

பெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது?

பெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது?

















பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதிலும் பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.

ஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ். அவ்விடத்தில் கெமிக்கலைப் பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.



இயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்க, சோப்பை போட்டு நன்கு தேய்த்து கழுவினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.

சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.

பிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.

வேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எல்லையில் இனி மோதல் வேண்டாம் - இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

எல்லையில் இனி மோதல் வேண்டாம் - இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

















புதுடெல்லி:

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.

இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. ஹாட்லைன் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 

2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. 

Sunday 27 May 2018

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

















'நாம் உண்ணும் உணவின் மூலம் நோய் வராமல் காக்கவும், வந்த நோயை விரைவில் போக்கவும் இயலும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் ஓடிவிடும். 

வாதம்/பித்தம்/கபம்: 

வாதம்: ஒருவருக்கு மூட்டு வலி, கழுத்துவலி இருந்தால், வாதம் சீர் கெட்டுள்ளது என்று பொருள். இவர்கள் வாதத்தைக் குறைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கள் வாயுவைத் தரும். 

சேர்க்கவேண்டியவை: வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும். 

தவிர்க்கவேண்டியவை: புளி, உருளைக்கிழங்கு, கொத்தவரை, கொண்டக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், காராமணி, குளிர்பானங்கள். 

பித்தம்: 

பல நோய்க்கு பித்தம் ஒரு முக்கிய காரணம். பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம், ஆரம்பநிலை மதுமேகம் என நோய் பட்டியல் பெரிசு. 

சேர்க்கவேண்டியவை: கைக்குத்தல் அரிசி நல்லது. கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள் இஞ்சி என இவையெல்லாம் பித்தத்தைத் தணிக்கும். இதையெல்லாம் தாண்டி மனதையும் குதூகலமாய் வைத்திருக்கவேண்டியது அவசியம். 

தவிர்க்கவேண்டியவை: உணவில் காரம், எண்ணெயைக் குறைக்கவேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்க்கக் கூடாது. 

கபம்: சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் அதிகம். 

சேர்க்கவேண்டியவை: மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவை எல்லாம் கபத்தைப் போக்க உதவும். கற்பூரவல்லி பஜ்ஜியும், சுக்குக்காபியும்... விடாமல் தும்முபவர்களுக்கு மிகவும் நல்லது. 

தவிர்க்கவேண்டியவை: பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லேட். 

சளி / இருமல்: 

ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்காவது சளி, இருமல் இருக்கும். இவற்றுக்கு பயனளிக்கும் இந்த அஞ்சரைப்பெட்டி அறிவியலையும் கொஞ்சம் அலசுவோம். 

சேர்க்கவேண்டியவை: இரவில் தூங்கும்போது, நான்கு மிளகைத் தூளாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து லேசாக சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் கலந்து பருகலாம். இருமல் நீங்கி இதமான தூக்கம் வரும். மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மோர் பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும். 

தவிர்க்கவேண்டியவை: சுரைக்காய், வெண்பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில காலம் தவிர்க்கலாம். ஒருவேளை அதை சாப்பிடவேண்டும் என்றால், மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம். 

பால், தயிர், இனிப்பு இந்த மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியன என்பதால், தவிர்க்கவும். எலுமிச்சை, கமலா ஆரஞ்சு மற்றும் திராட்சை மற்றும் ஐஸ்கிரீம், சாக்லேட் தவிர்ப்பது நல்லது. இரவில் பாசிப்பயறைத் தவிர்க்கவும்.

சுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்

சுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்

















சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.

என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள். இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.

சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.

சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.



உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.

ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.

தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.

இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பொடுகு தொல்லைக்கு வீட்டு சிகிச்சை

பொடுகு தொல்லைக்கு வீட்டு சிகிச்சை

















கற்றாழைக்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டு. மண்டைப் பகுதியின் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கக்கூடியது. பொடுகு உருவாகக் காரணமான இறந்த செல்களையும் அழித்து விடும். ரெடிமேடாக கிடைக்கிற கற்றாழை ஜெல்லைவிட, வீட்டில் வளர்க்கும் கற்றாழைச் செடியில் இருந்து அதன் உள்ளே உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து நான்கைந்து முறை அலசி வைத்துக் கொள்ளவும். அதைத் தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, மைல்டான ஷாம்பு போட்டு அலசவும்.

அரை கப் வினிகரை, ஒன்றரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் கலக்கவும். ஒவ்வொரு முறை ஷாம்பு குளியல் எடுத்து முடித்ததும், இந்தக் கரைசலை கடைசியாக தலையில் விட்டு அலசி, நன்கு காய விடவும். பொடுகு குறையும்.

வெள்ளை மிளகுப் பொடியை சிறிதளவு தயிரில் குழைத்து, தலையில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளிக்கவும். சிறிதளவு பாதாம் எண்ணெயில் கொஞ்சம் நெல்லிக்காய் சாறு விட்டுக் கலந்து தலையில் தடவி, விரல் நுனிகளால் மிதமாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்கலாம்.



முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி ஊற வைத்தும் குளிக்கலாம். கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். வேப்பிலையை அரைத்து, தலையில் தடவி, ஊற வைத்தும் அலசலாம். இரண்டு சிகிச்சைகளுமே பொடுகை விரட்டும்.

வெயிலே படாமல் வாழ்வது சருமத்தை அழகாக வைக்கலாம். ஆனால், பொடுகுப் பிரச்சனைக்கு சூரிய வெளிச்சம் இல்லாததும் ஒரு காரணம். எனவே தினமும் காலை மற்றும் மாலை வெயில் சிறிதாவது நம் மேல் படும்படி இருப்பதுகூட பொடுகை விரட்ட உதவும்.

தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து, மிதமான ஷாம்பு கொண்டு கழுவினாலும் பொடுகு மறையும்.

சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி

சத்து நிறைந்த வெள்ளரிக்காய் இட்லி

















தேவையான பொருட்கள்  :
வெள்ளரிக்காய் - 250 கிராம்
ரவை - 250 கிராம்
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
புளித்த தயிர் - 3 தேக்கரண்டி 
பச்சை மிளகாய் - 4 
உப்பு - தேவைக்கு



செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி கொள்ளவும். 

துருவிய வெள்ளரிக்காயுடன் ரவையை போட்டு கலந்து கொள்ளவும். 

பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், தயிர், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றவும் இதனை அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். 

அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் இட்லி தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

வேக வைத்த இட்லியை தட்டில் வைத்து சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சுவையுங்கள்.

சூப்பரான வெள்ளரிக்காய் இட்லி ரெடி.


Friday 25 May 2018

இரண்டே நிமிடங்களில் ஆரோக்கியம்

ப்போதான் தேதி இருபதாகுது. அதுக்குள்ள பட்ஜெட்ல பள்ளம்…’ மாதச் சம்பளம் வாங்கு பவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்புகிற வாசகம். ஆனால், இதைவிடப் பெரிய பிரச்னை ஒன்றும் இருக்கிறது. பணம் அல்ல, மாதம் முழுவதுமே நாம் எதிர்கொள்ளும் பிரச்னை. அது, ‘நேரமின்மை.’
‘டைமே இல்லை பாஸ்…’ என்பது நம்மில் பலரும் குறைபட்டுக் கொள்ளும் விஷயம். நேரம் விலைமதிப்பற்றது. எந்த அளவுக்கு நேரம் நமக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அது குறித்த நம் பார்வையும் முக்கியம். ‘எனக்கு டைமே இல்லை…’ என்று சொல்லிக்கொண்டு அன்றாட வாழ்வில் அவசர அவசரமாக நாம் செய்யும் செயல்கள், சில நேரங்களில் உடல்ரீதியான பல இன்னல்களை நமக்குக் கொடுத்துவிடும். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், மன அழுத்தம் என்று பல பிரச்னைகள் ஏற்படக் காரணமாகிவிடும்.
தீர்வுதான் என்ன?
அன்றாட வாழ்வில் செய்யும் சில வேலைகளில் உங்களுக்கென இரண்டு நிமிடங்களை ஒதுக்க முடிந்தால் போதும். அது செரிமானம்,  எடைக் குறைப்பு, இன்சுலின் அளவைச் சீராக வைத்திருப்பது என  நன்மைகளை அள்ளித் தரும்.  நம்மில் பலர் காலை உணவைப் போகிற போக்கில் அள்ளிப் போட்டுக்கொண்டு போவார்கள்; இரவு உணவை அடுத்தடுத்த வேலைகளுக்கு இடையே அவசரமாக உட்கொள்வார்கள். இந்தப் பழக்கங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. இவற்றையெல்லாம் நம்மால் தவிர்க்க முடியும்; எப்படி?
tooth cleaning க்கான பட முடிவு 
பல் துலக்கும்போது வேறு சிந்தனைகள் வேண்டாமே!
பற்களைத் துலக்கும்போது கவனத்தை அதில் மட்டும் செலுத்த வேண்டும். நேற்று நடந்தது, அடுத்து செய்யவேண்டியது என்று மனதை அலைபாயவிடாமல் பற்களை மட்டும் கவனித்துத் துலக்க வேண்டும். இப்படி அக்கறையோடு பல் துலக்குவது, பற்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவதுடன் அவை பளிச்சிடவும் செய்யும்.


காலை நேரத்தில் கறார்!
சாப்பிடும் உணவை நன்கு மென்று, சுவைத்துச் சாப்பிடுங்கள். எதை அருந்தினாலும் மெதுவாக ரசித்துக் குடியுங்கள். பொறுமையாக, மூச்சை இழுத்துவிட்டுச் சாப்பிடும்போதும், பானங்களை அருந்தும்போதும் இதயத் துடிப்பு சீராகும். இதற்கெல்லாம் இரண்டே நிமிடங்கள்தான் தேவை. இதற்காக உங்கள் தூக்கத்தைத் துறந்துவிட்டு, சீக்கிரமே எழுந்துகொள்ள வேண்டும் என்கிற தேவையும் இல்லை.


prayer god க்கான பட முடிவு 
கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்!
மன அழுத்தத்தோடு இருக்கும்போது உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துகள் கிடைப்பதிலும் பிரச்னைகள் வரலாம். சாப்பிடும்போது, உணவுக்கும் அருகிலிருப்பவர்களுக்கும் சின்னதாக ஒரு நன்றி சொல்லிட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். அது, உங்களுக்கு  மன அமைதியைக் கொடுக்கும். குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட முடியாத நேரங்களிலும் இதைச் செய்யலாம். இதற்கு எந்தக் குறிப்பிட்ட வழிமுறையும் இல்லை. ஏனென்றால், மதம் என்பது தனிமனித விருப்பம், ஆனால் நம்பிக்கை, எல்லோருக்குமானது
.hand washing க்கான பட முடிவு
கை கழுவலாமே!
நம் மனதைக் குளிர்விக்கவும், எண்ணங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கவும், டென்ஷனைக் குறைக்கவும் தண்ணீரைவிடச் சிறந்த மருந்து வேறு இல்லை. குறிப்பிட்ட இடைவெளிகளில் கைகளையும் முகத்தையும் கழுவுவதுகூட நல்லது.
before sleeping க்கான பட முடிவுஉறக்கத்துக்கு முன்னர்
தூங்கப் போவதற்கு முன்னதாக, அன்றைய தினம் எதிர்கொண்ட பிரச்னைகளை விட்டுவிட்டு, சந்தோஷமான சின்னச் சின்ன நிகழ்வுகளை மட்டும் நினைவுபடுத்திக்கொண்டு, புன்னகையோடு உறங்கப் போகவும். இது உங்கள் மனதை லேசாக்கும். முடிந்தால், உங்கள் வாழ்க்கையில் நடந்த அற்புதத் தருணங்களை அசைபோடுங்கள். அவை, உங்களை இனிய நித்திரையில் ஆழ்த்தும். மேலே குறிப்பிட்டவற்றுக்கெல்லாம் அதிகபட்சமாக நீங்கள் ஒதுக்கப்போவது இரண்டு நிமிடங்கள்தான். இது, உங்கள் அன்றாடப் பணிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறு தரப்போவதில்லை. ஆனால், இந்த இரண்டு நிமிடங்கள் உங்களுக்கு நிறைய ஆச்சர்யங்களையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் உதவும்.
Advertisements

Thursday 24 May 2018

பெண் குழந்தைகளை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை

பெண் குழந்தைகளை மதிக்க ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியவை

















பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஆண்கள் என்றால், இன்னொரு பக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. இதனை தடுக்க சிறுவயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும் என்று மனநல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆண், பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவை:-

குழந்தைப் பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண், பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள். ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிக்கும் பட்சத்தில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.

ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் கிரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான். நீ ஆண், அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள். 

மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும். தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுகளை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள். தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள். 



அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும். மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம் சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள். 

அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண், பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள். இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.

பெண் குழந்தைகளை திட்டினாலோ அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள். உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள். ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இல்லையேல் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்து விடும்.

ஆண் குழந்தை என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி, தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள். குழந்தைப் பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாடட்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் நல்ல பலனைத்தரும். 

குண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம் வாங்க

குண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம் வாங்க

















சிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சில சுலப வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை, நம்மை அறியாமலே கொறித்துக் கொண்டிருப்போம். இவ்வாறு நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உடல் எடை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்காக, நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும், ஒரு பேப்பரில் எத்தனை மணிக்கு, என்ன வகையான நொறுக்குத் தீனி, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் எவ்வளவு நேர இடைவெளியில் சாப்பிடுகிறோம்; எதை அதிகளவு சாப்பிட்டுள்ளோம் என்பதை தெரிந்து, அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளையும் கட்டுப்படுத்தலாம்.

‘டிவி’ நிகழ்ச்சிகள் போன்றவற்றை பார்க்கும் போது, ஒரே இடத்தில் எவ்வித அசைவும் இன்றி இருக்காமல், ஸ்கிப்பிங், நடனமாடுதல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் போன்றவற்றை செய்யலாம். இவற்றை, ‘டிவி’ நிகழ்ச்சிகளின் இடைவேளை நேரங்களில், இரண்டு நிமிடங்கள் செய்தாலே போதும். உடலில் எடையைக் குறைக்க, இது ஒரு நல்ல வாய்ப்பு.



தினசரி 30 நிமிடங்கள், உடற்பயிற்சி செய்வதால், 120 கலோரிகள் கூடுதலாக குறைகிறது. ஆனால், இதை அவ்வளவு எளிதில் எட்டி விடமுடியாது. இதற்கு நடந்து செல்லுதல் உட்பட சில சுலப வழிகளை கடைபிடிக்கலாம். அருகில் உள்ள கடைகள் மற்றும் கோவில் என்று எங்கு செல்வது என்றாலும், பலரும் வாகனங்களில் செல்ல தான் விரும்புகின்றனர். 

அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட, நடந்து செல்ல விரும்புபவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. நடைபயிற்சிக்கென தனியே நேரத்தை ஒதுக்காமல், நமக்கு தேவையான பொருளை வாங்க, அருகில் உள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மதிய உணவு நேரம் மற்றும் இரவு உணவுக்கு பின், சிறிது நேரம் நடக்கலாம். உணவை மெதுவாக சாப்பிடுவதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்கலாம். அதாவது, முதலில் உணவின் வாசனையை முகர்ந்து பார்க்க வேண்டும். 

பின்னர், அந்த உணவில் சிறிதை எடுத்து வாயில் வைத்து, மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். முழு உணவையும் சாப்பிட்டு முடிக்கும் வரை, இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இவ்வாறு உணவை சாப்பிட மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, அதனால், மனதுக்கு முழு திருப்தி கிடைக்கும். குறைவாக சாப்பிட விரும்பினால், மெதுவாக சாப்பிட வேண்டும் என்பதே, உணவு முறையாளர்கள் கருத்து. ஏனென்றால், வயிறு முழுமையடைந்து விட்டது என்பதை உணர, சில நிமிடங்கள் ஆகும்.  

Wednesday 23 May 2018

நோய், நொடிகள் அகல.. பரிகார தலங்கள்

நோய், நொடிகள் அகல.. பரிகார தலங்கள்

















மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

* இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

* தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

* பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

* வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

* வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை.

* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.

தூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் தடியடி - அரசு மருத்துவமனையில் திரண்ட மக்கள் விரட்டியடிப்பு

தூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் தடியடி - அரசு மருத்துவமனையில் திரண்ட மக்கள் விரட்டியடிப்பு

















தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். 


ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.  #SterliteProtest #ThoothukudiFiring

Thanks to maalai malar