Tuesday 24 October 2017

உறவில் துணையை ஏமாற்ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்!



"Whisper" எனும் சாட்டிங், ஃப்ளர்டிங் செய்யும் செயலியில் தங்கள் துணையை ஏமாற்றுவது குறித்து பெருமிதமாக பெண்கள் கூறிய சில ஒப்புதல் கூற்றுகள் கொஞ்சம் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கிறது. நமது சமூகத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஆண்கள், செய்யும் அதே தவறை பெண்கள் செய்யும் போது அதன் தாக்கம் பன்மடங்கு பெரிதாக தான் காணப்படுகிறது. 

புகை, மது போல துணையை ஏமாற்றுவதிலும் இந்த தாக்கத்தை நாம் வெகுவாக காண முடிகிறது. ஓர் தான் துணையை ஏமாற்றுவது பெரும்பாலும் நான்கு சுவர்களுள் முடிந்து விடும். அதுவே பெண்ணாக இருந்தால், பெரும்பாலும் ஒன்று அவளது உயிர் பிரியும் அல்லது அந்த உறவு பிரியும். 

 உறவுகளில் அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்கு 50:50 என்பது தான் பதில். யார் ஒருவரும் வேண்டுமென்றே துணையை ஏமாற்றுவதில்லை. ஏதோ ஒரு காரணம், உறவில் அவருக்கு கிடைக்காத ஒன்று, வேறுபக்கம் மிகுதியாக கிடைக்கும் போது, அவர்கள் ஏமாற்ற துணிகிறார்கள். இதோ! தங்கள் துணையை ஏமாற்றியது குறித்து சில பெண்கள் பெருமிதமாக கூறிய பதிவுகள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...


  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...

 "நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் கணவரை ஏமாற்றுவேன். ஏனென்று எல்லாம் தெரியவில்லை, ஆனால், திருமணத்திற்கு பிறகு வேறு நபருடன் உறவில் ஈடுபடுவது என்னை ஊந்துகிறது..." காரணம்: புகை, மது போல செக்ஸ் என்பது ஒரு வகையிலான அடிக்ஷன் தான். ஒருவேளை அவரது செக்ஸ் ஆசைகள் துணையால் தீர்த்து வைக்க முடியவில்லை, அல்லது தீரவில்லை எனில், அவர் நிச்சயம் வேறு நபரை தேட தான் செய்வார். இந்த அடிக்ஷன் புகை, மதுவை விட கொடியது. 

 வருந்தவில்லை... 

"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஏனெனில், என் காதலனுக்கு என் மீது அக்கறையே இல்லை. அது ஒரு சிறந்த இரவாக (அனுபவமாக) அமைந்தது. அந்த செயலுக்காக நான் எப்போதும் வருந்தவில்லை." காரணம்: பெண்கள் ஓர் ஆணிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது மன ரீதியான நெருக்கத்தை தான். நீங்கள் தொலைதூரம் தாண்டி இருப்பினும். உங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு அந்த அன்பை கொடுத்தாலும் போதும், பெண்கள் உங்களை ஏமாற்ற முனைய மாட்டார்கள்.

 சுவாரஸ்யம்!

 "என்னால் என் துணையை ஏமாற்றுவதை நிறுத்த முடியாது. நான் இதை விரும்புகிறேன். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது." காரணம்: இதுவும் செக்ஸ் அடிக்ஷனின் வெளிபாடு தான். இதற்கு கவுன்சிலிங் தான் அளிக்க வேண்டும். இளம் வயதில் சுவாரஸ்யமாக இருக்கும், சில காலங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இதை எண்ணி எண்ணி வருந்த வைக்கும். 

 ஜஸ்ட் ஃபார் ஃபன்!

 "எனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனுக்கு பின்னால் தொடர்ந்து நான் ஏமாற்றி வருகிறேன். இதை எண்ணி நான் தவறாக உணரவே இல்லை. நான் எனது இளமை பருவத்தை அனுபவிக்கிறேன். ஜஸ்ட் ஃபார் ஃபன்." காரணம்: இது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. வயதிருக்கிறது என ஆடுவார்கள். வயதான பிறகு தான் நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என தெரியும். இவர்கள் சூடுபட்டு திருந்தும் பூனைகளாக மாறுவார்கள்.

 போரிங்...

 "நான் எனது கணவனை ஏமாற்றுகிறேன். நான் இதை தொடர விரும்புகிறேன். காரணம், எனது கணவர் எப்போதும் போராக செயல்படுகிறார்..." காரணம்: ஒரு சில நேரங்களில் துணை ஏமாற்றும் செயலில் ஈடுபட கணவர்களே காரணமாகிவிடுகிறார்கள். வெறும் பணம், வீடு, நகை மட்டுமே துணையை திருப்திப்படுத்திவிடாது. உங்கள் அரவணைப்பு, கொஞ்சல்களும் தேவைப்படும். ஆண்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

செக்ஸ்!

 "நான் கடைசியாக என் காதலனை ஏமாற்றினேன். என்னால் இனிமேலும், அவரது குறைந்தளவிலான செக்ஸ் ஈடுபாட்டை கையாள முடியாது. நான் ஏமாற்றிய போது கொண்ட உறவே சிறந்ததாக இருந்தது. இதற்காக நான் வருந்தவில்லை." காரணம்: செக்ஸ் எனது அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் இருக்கும் இயற்கையான செயற்பாடு. இந்த காலத்தில் ஆண்மை குறைபாடு என்பது பலர் மத்தியில் இருக்கிறது. செக்ஸ் தான் வேண்டும் என்றால், அதற்கு காதல் என்ற பெயர் சூட்ட வேண்டாம்

 சிறையில் இருந்த போது...

 "என் கணவர் சிறையில் இருந்த போது, நான் அவரை ஏமாற்றினேன். நான் அப்போதைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். நான், அவர் இதை கண்டுபிடிக்க முடியாது என கருதினேன். நான் என் கணவரை விரும்புகிறேன். ஆனால், மற்ற ஆண்கள் படுக்கையில் சிறப்பாக இருக்கிறார்கள்." காரணம்: கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் தவிர்க்கலாம் ஆயினும், இது போன்ற சூழல்களை தவிர்ப்பது கடினம்.

 தோழியுடன்...

 "நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஆனால், நான் எனது நெருங்கிய தோழியுடன் தான் உறவு கொண்டேன். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் எனக்கு பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. " காரணம்: பை-செக்சுவல் நபராக இருப்பின், அவர்களால் இதை தவிர்க்க முடியாது. சிலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர். சிலர், ஆண்களுடனும், பெண்களுடனும் என இருபாலருடனும் உறவில் ஈடுபடுவார்கள். 

 பெஸ்ட் பிரெண்ட்! 

"கடந்த இரவை நான் எனது கணவரை ஏமாற்றி, எனது நெருங்கிய தோழியுடன் கழித்தேன். கடந்த பத்து வருடங்களாக என் கணவரால் திருப்தி செய்ய முடியாததை, எனது தோழி செய்தால். நான் முழுமையாக அதை அனுபவித்தேன்." காரணம்: சில ஆண்கள் ஃபோர் ப்ளேவில் ஈடுபட தவிர்ப்பார்கள். ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை ஆண்கள் செய்ய தவறும் போது, பெண்களே இவ்வாறான உறவில் இணைவது அதிகரிக்கிறது.


 என் தோழிகளும்...

 "நான் எனது கணவரை ஏமாற்றிவிட்டு, வேறொரு ஈர்ப்பான ஆணுடன் உறவு கொண்டேன். ஏனெனில், எனது தோழிகள் அனைவரும் இதை செய்கிறார்கள்." காரணம்: அவர் செய்கிறார் என தானும் செய்வேன் என்பது தவறு. சோசியலிசம், மேற்கத்தியம் என போலி சாயம் பூசிக் கொண்டு சிலர் இவ்வாறு ஈடுபடுவதை நியாப்படுதுவதை ஏற்க முடியாது. 

 திருமண நாளில்... 


"நான் எங்கள் திருமண நாளில் என் கணவரை ஏமாற்றிவிட்டு, அவரது நெருங்கிய தோழருடன் உறவு கொண்டேன். நான் இதற்கு வருந்த வேண்டும். ஆனால், நான் கொண்டதிலேயே சிறந்த உறவு அதுதான்." 

 என் கணவரால் தான்...

"என் கணவர் ஒவ்வொரு முறையும் என்னை வெறுபேற்றும் போதும், நான் அவரை அதிகமாக ஏமாற்ற காரணங்கள் கிடைக்கின்றன." காரணம்: சில சமயங்களில் கணவனின் கோபமே, துணை அவரை ஏமாற்ற காரணமாகிவிடும். இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

 திருமணத்திற்கு முன்...

 "நான் திருமணத்திற்கு முன், என் வருங்கால கணவரை ஏமாற்றினேன். எனது பாஸுடன் உறவு கொண்டேன். நான் சிறிது காலம் காதலில் இருந்தேன்."

பில்லி சூனிய பொம்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்!

நாம் இதுவரை பில்லி சூனிய மாந்திரீகத்தைப் பற்றி திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். இது ஒருவருக்கு கேடு விளைவிக்க செய்யும் தீய செயலாகும். இது மிகவும் பயங்கரமாக இருக்கும். என்ன தான் இது ஒரு மூடநம்பிக்கையாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இதன் மேல் ஒரு நம்பிக்கை உண்டு

Shocking Things About Voodoo Witchcraft That You Should Know

பில்லி சூனியம் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு மதம். பேகன் காலம் வரை இந்த மதம் இருந்தது. நாளடைவில், அது மாற்றமடைந்து, தற்போது இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மாந்திரீகத்தை கற்றுக் கொண்டு, ஒருவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்படுகிறார்கள். பில்லி சூனியம் மாந்திரீகத்தில் பொம்மைகள் மூலம் எதிரிகளை பழி வாங்குவது தான் வழக்கம். இக்கட்டுரையில் பில்லி சூனிய பொம்மைகள் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


விஷயம் #1 

பில்லி சூனிய மாந்திரீகத்தில் பொம்மைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக நம்பப்படுகிறது. இந்த பொம்மையைக் கொண்டு எதிரிகளை அழிப்பார்களாம். 

விஷயம் #2 

பில்லி சூனிய பொம்மைகளானது யாரைக் குறி வைக்கிறோமோ, அவர்களது நகம், தலைமுடி, உடுத்திய துணி அல்லது இரத்தம் கொண்டு மாந்திரீகவாதிகள் செய்வார்களாம். இதனால் எதிரியின் ஆத்மா எளிதில் கட்டுப்படுத்தப்பட்டு, நாம் நினைப்பதை செய்ய முடியுமாம். 

விஷயம் #3 

பில்லி சூனிய சடங்கு ஆரம்பித்த பின், பொம்மைக்கு உயிருள்ள ஒரு விலங்கின் இதயத்தை எடுத்து பொம்மையினுள் வைக்கப்படும். இப்படி செய்வதால், பொம்மை உயிர் பெற்று, பின் அது எதிரியின் ஆத்மாவுடன் இணைக்கப்பட்டு, எதிரியை துன்புறுத்த உதவுமாம். 

விஷயம் #4 

பொம்மை எதிரியின் ஆத்மாவுடன் இணைந்த பின், 1/2 இன்ச் நீளமுள்ள ஊசியை, பொம்மையின் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் துளையிடுவார்களாம். 

விஷயம் #5 

பில்லி சூனியத்தால் குறி வைக்கப்பட்ட எதிரி, எவ்வளவு மைல் தொலைவில் இருந்தாலும், 28 நாட்களுக்குள் அழிவை சந்திப்பார்களாம். 


விஷயம் #6 

பில்லி சூனிய பொம்மைகள் ஒருவரை அழிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுமாம். 


விஷயம் #7 

உலகிலேயே ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் இந்த பில்லி சூனியம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

Friday 6 October 2017

காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்


அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும், அதுகுறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் அவர் கூறியிருந்தார். 

‘மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரித்த ஜே.எல். கபூர் கமிஷன், காந்தி கொலையின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியையும் வெளிக்கொண்டு வரவில்லை. மகாத்மா காந்தியை நோக்கி கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்தான் என்று விசாரணை அறிக்கையில் உள்ளது. ஆனால், அவர் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே, நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது என்பது குறித்து விசாரித்து கண்டறியப்பட வேண்டும்’ என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பத்னிஸ் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியார் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின்போது, காந்தியை சுட்டதில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மனுதாரர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நாங்கள் அரசியலுக்குள் போக விரும்பவில்லை, சட்டப்படி போகவே விரும்புகிறோம். இப்போது ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். 

அப்போது வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்தார். 

இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் நடந்த வாதத்தின் முடிவில், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்யும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்தர் சரணிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.  

அப்போது நீதிமன்ற அறையில் இருந்த அமரேந்தர் சரண், நீதிமன்றத்திற்கு உதவி செய்வதாக கூறினார். அத்துடன், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை படித்துப் பார்க்க போதிய அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Sunday 1 October 2017

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன். யாரும் இந்த தவறை செய்யாதீர்கள். விழிப்புணர்வு

ரஷ்ய பெண்மணி (வேரா) தனது கடுமையான உணவுக்கட்டுப்பாட்டால் அவளது உடல்நிலையை மோசமானது. இதனால் அவர் பல மடங்கு தனது உடல் எடையை இழந்துள்ளார்.




18 வயதான பெண் மோசமான நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தார் . இப்போது ஒரு உடற்பயிற்சி பயிற்றுநராக உள்ளார் வேரா.



தீடிர் என்று அவரது உடல் 30 கிலோ குறைந்தது. பின்னர் பல வித பயிற்சிகளை செய்து தன்னை மீண்டு எடுத்துள்ளார்.
தான் உண்ண உணவுகள் தான் அவருடைய எடைஇழப்பிற்கு காரணம் என தெரிந்து கொண்ட அந்த பெண்மணி.
உடற்பயிற்சியின் நடைமுறைகளை உடனடியாகக் கழற்றிவிட்டு தசைகளை கட்டியெழுப்பி, உடலை நேசிக்கத் தொடங்கினார்.
ஜிம்மில் வேலை செய்வதற்குப் பதிலாக, வேரா தனது உணவை மிகவும் தேவைக்கு ஏற்ப மாற்றினார், மேலும் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட ஆரம்பித்தார்.

அவர் இப்போது ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக வேலைக்கு வந்திருக்கிறார்.
ஏறக்குறைய அவரது எடை இருமடங்கு உயர்ந்துவிட்டது இப்போது,
வேராவின் இந்த ஊக்கத்தினால் அவரது ஆதரவாளர்களால் இப்போது 22,000 க்கும் அதிகமானனோர் இஸ்டாகிராமில் தொடருகின்றனர்.