Tuesday 21 February 2017

சசிகலாவை சந்திக்க அனுமதி மறுப்பு : வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதியை திருப்பி அனுப்பிய சிறை நிர்வாகம்!


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த புதன்கிழமை 15ம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள கோர்ட்டில் சரணடைந்தார்.
அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை பார்ப்பதற்காக அதிமுக நிர்வாகிகள் அடிக்கடி சிறைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா மற்றும் வளர்மதி, அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை பார்ப்பதற்காக வந்திருந்தனர்.
அவர்கள் சிறை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சிறை நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பின்னர் ஏமாற்றத்துடன் சிறை வளாகத்தை விட்டு வெளியேறினர்.

No comments: