Tuesday 28 February 2017

சுற்றி நடப்பது ஏன்




சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'என்று கூறுவார்கள். 
அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த‌னது பிரார்த்தனையைச்சொல்கிறான்!


"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"

"இரண்டாம் அடியில்: ஆரோக்யமாக வாழ வேண்டும்"

"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"

"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"

"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"

"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்"

"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.இந்த சம்பிரதாயத்தில்மனிதர்களிடம் 
இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் 
நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம் உண்டாகும்  என்பது சாஸ்திரம்.
உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை
கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். 
ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டுவிடுவோம்.முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை.
பல நுணுக்கமான அறிவியல் மற்றும்மனோவியல்விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம்.
இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் முயற்சிப்போம்....


 அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால்
 


நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம்.

பொதுவாக அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.
பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது.மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.
பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. எனவே தான், கோயிலுக்குச் செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் கூறுகிறார்கள்.


ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோயிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்வது நல்லது...

செல்ஃபி உலகில் புது சகாப்தம்


எந்த கோணத்தில் இருந்தும், எவ்வளவு தூரத்தி்ல் இருந்தும் சரியான செல்ஃபி எடுக்க உதவும் கேமரா பொருத்தப்பட்ட சுயமாக பறக்கும் டிரோன் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'SELFLY' என்று 
அழைக்கப்படும் தனித்திறனுடன் அமைக்கப்பட்டுள்ள விசித்திரமான பொறியை எந்த ஸ்மார்ட்போனில் வேண்டுமானில் பொருத்திக் கொள்ளலாம். இந்த SELFLY சாதனம் உங்களின் ஸ்மார்ட்போனை சுற்றியும் மறைத்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். அதன் பின்னர் சுதந்திரமாக உயர் மட்டத்தில் சுற்றி திரியும். அதனால் பயனர்கள் பல்வேறு கோணங்களில் இருந்து செல்ஃபியை எடுக்கலாம்.

இந்த சாதனம் $99 (£79) விலையில் தற்போது கிக்ஸ்டாரில் கிடைக்கும். செல்ஃபியை கொண்ட SELFLY சாதனம், மிக பெரிய மேலோட்ட பார்வையில் இருந்து படங்களை எடுக்க முடியும். மேலும் SELFLY மூலம் பல்வேறு அம்சங்கள் மற்றும் மிக அற்புதமான தருணங்களையும் கைப்பற்ற முடியும். இது உங்களுடைய பாக்கெட்டில் பொருந்தக்கூடிய வகையில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி ஸ்டிக் மற்றும் டிரான்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும்.

SELFLY சாதனம், ஒன்பது மில்லிமீட்டர் தடினமான உடல் கொண்டிருக்கும் மற்றும் உயர் மட்டத்தில் தன்னிச்சையாக பறந்து மிக துல்லியமாக புகைப்படம் எடுக்க ஸ்மார்ட் கேமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய கோணங்களில் இருந்து அற்புதமான காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை கைப்பற்றும்.

இந்த சாதனம் ஏற்கனவே, அதன் நிதி இலக்கை முறியடித்துள்ளது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட $ 125,000 (£ 99,700) இலக்கில் இருந்து, தற்போது கிட்டத்தட்ட $ 200,000 (£ 175,500) வரை அதிகரித்துள்ளது. இந்த சாதனத்தை வாங்கும் முதல் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
THANKS: KNILA

ரிலையன்ஸ் ஜியோவில் இலவச வாய்ஸ் கால் பெற போர்ட் செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31, 2017 உடன் நிறைவு பெறுகிறது. இருந்தும் ஜியோ மூலம் 
மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்ஸ் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட்டுள்ள ஜியோ புத்தாண்டு சலுகையினை ஒரு வருடத்திற்கு நீட்டித்து கொள்ள புதிய ஜியோ பிரைம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2017க்குள் ரூ.99க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ஜியோ புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட்டு விடும். தற்சமயம் ஜியோ சேவைகளை பயன்படுத்தி வருவோருக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு மாதம் ஒன்றிற்கு ரூ.303க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா (நாள் ஒன்றிற்கு 1ஜிபி), அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ், குறுந்தகவல் மற்றும் ஜியோ செயலிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். எனினும் ஜியோ செயலிகள் பயன்படுத்தும் போது டேட்டா தினசரி பயன்பாட்டில் இருந்தே குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 2017க்குள் ஜியோ பிரைம் சலுகையில் முன்பதிவு செய்யாதவர்கள் ஜியோ ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டங்களின் விலை ரூ.149 முதல் துவங்குகிறது. ஜியோ பிரைம் சலுகையின் கீழ் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையினை மேலும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் ஜியோ பிரைம் சலுகை பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

அவ்வாறு ஜியோ சிம் இன்னும் பெறாதவர்கள், தங்களது பழைய நம்பரை மாற்றாமல் ஜியோ சேவைகளை போர்ட் செய்வது எப்படி என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் 'PORT' என டைப் செய்து 1900 என்ர எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு பிரத்தியேக போர்டபிலிட்டி கோடு அனுப்பப்படும் (Unique Portability Code), இது உங்கள் கோரிக்கைக்கு அடையாள எண் ஆகும்.

அடுத்து மைஜியோ செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பார்கோடினை ஜெனரேட் செய்ய வேண்டும். கோடு பெற்றதும் அருகாமையில் இருக்கும் ரிலையன்ஸ் விற்பனை மையத்திற்கு அடையாள சான்று மற்றும் eKYC தரவுகளை எடுத்து செல்ல வேண்டும். இதன் பின் eKYC சார்ந்த வெரிபிகேஷன் செய்யப்பட்டு ஜியோ சிம் கார்டு வழங்கப்படும். இந்த சமயத்தில் உங்களது ரெபெரன்ஸ் கோடினை வழங்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் டெலிகாம் நிறுவனத்தின் ஒப்புதலின் படி உங்களது போர்ட் கோரிக்கை செயல்படுத்தப்படும். இவை நிறைவுற்றதும் பழைய நம்பரில் ஜியோ சிம் கார்டினை பயன்படுத்த முடியும். இதனை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

நன்றி: KNILA

பத்திரமாக வைப்போம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது


மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
        https://en.wikisource.org/wiki/Author:Charles_Webster_Leadbeater
 இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். 
அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது.
 இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார்.
 அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். 
இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். 
இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். 


நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.
 இனிமேலாவது அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம்

  1. நீர்

                                                          
நீர் 

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை
 பிடித்துவைப்பார்கள்ஆனால் இன்றோநாடே நவீன மயமாகிவிட்டதால்கேன் 
வாட்டர்மினரல்வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் 
இருந்த இடம்தெரியாமல் போய் விட்டன.
 
சித்தர்கள் தண்ணீரை செம்பு குடங்களில்பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம்குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப்பார்த்ததில்மனிதர்களுக்குப் பாதிப்புஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்தநீரில் இல்லை என்று தெரியவந்தது.கிணத்துல கிடைக்கின்ற தண்ணிசெம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்'மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும்.
அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான்இன்றைக்கும் சில 
கிராமங்களில்செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம்
ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும்
நம்பிக்கையாகும்பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் 
நம்தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை
பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர்
ஆனால்இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா
வாங்க பார்க்கலாம்!
பண்டைய அறிவியல் படிஉடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம்பித்தம்
கபம்போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் 
உதவுகிறது.அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால்உங்கள் 
உடலில் உள்ள இந்ததோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.
இதுப்போகதண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக
செயல்படும்அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர்நாட்கணக்கில்
நற்பதத்துடன் விளங்கும்தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால்
கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் 
குணத்தைகொண்டுள்ளது தாமிரம்முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் -கோலி போன்றபாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும்அதனால் 
தாமிர பானையில்வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக 
இருக்கும்.

2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும்.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது
பலநேரங்களில்தாமிர குறைபாடு இருக்கையில்தைராய்டு சம்பந்தப்பட்ட 
பிரச்சனைகள்உண்டாகும்தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல 
பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு
அதிகமாக அடங்கியுள்ளதுகீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை
குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை 
வேகமாகவளரச் செய்ய தாமிரம் உதவும்இதனால் புண்கள் வேகமாக குணமாகும்
இதிலுள்ளவைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் 
வளர்ச்சியை தடுக்கும்.

5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு 
மத்தியில்உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும்
இந்த மயலின்உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க 
தாமிரம் உதவுகிறது.இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும்
அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளதுஇதனால் செரிமானம் சிறப்பாக 
நடைபெறும்அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் 
ஆரோக்கியமான செரிமானஅமைப்பை பெற்றிடலாம்.

7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின்
அதிகரிக்க தாமிரம் உதவுகிறதுஇரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான
கனிமமாகும்இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

8) கர்ப்ப காலத்தில் உங்களையும்உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் 
எதிர்ப்புசக்தி விசேஷ சவாலை சந்திக்கும்அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர 
பானையில் உள்ளதண்ணீரை குடித்தால்தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் 
படாமல் பாதுகாப்போடுஇருக்கலாம்.

9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட்குணங்கள் அடங்கியுள்ளதுஅதனால் தான் புற்றுநோய் அணுக்கள் 
வளர விடாமல் அதுபாதுகாக்கிறதுமேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள 
பாதிப்புகளை சரிசெய்ய இது உதவும்.

10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள்,சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை 
சிறப்பாக கையாளும்கூடுதல்அளவிலான தாமிரத்தால்உங்கள் சருமம் மற்றும் 
முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம்கிடைக்கும்.