Sunday 26 February 2017

ஹைட்ரோகார்பனுக்கு எதிர்ப்பு ; நாகையில் 50 இளைஞர்கள் அதிரடி கைது


ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் புதுக்கோட்டை மற்றும் நாகையிலும் உண்ணாவிரதப்போராட்டம் இன்று இளைஞர்களால் துவக்கப்பட்டது.
நாகை அவுரி திடலில் சுமார் 9 மணியளவில் துவங்கிய உண்ணாவிரதப்போராட்டத்தில், ஏராளமான இளைஞர்களும், கிராமத்தினரும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, தற்போது வந்த தகவலின்படி, நாகையில் உண்ணாவிரதம் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் திடீரென கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: