Friday, 10 February 2017

தித்திப்பான பொங்கல் செய்வது எப்படி



தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.


தேவையான பொருட்கள் :

அரிசி  -  1 கப்
பாசிப்பருப்பு  -  2 டேபுள் ஸ்பூன்
பால் - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு -  தேவையான அளவு
காய்ந்த திராட்சை -  தேவையான அளவு
ஏலக்காய்  - 3 பொடி செய்தது

செய்முறை :

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

* அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.

* அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.

* திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும்.

* சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.

No comments: