அவமானப்படுத்திய அலங்காநல்லூர் மக்களை பழிதீர்த்த ஓ.பி.எஸ்’
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாநில அரசு அவசர சட்டம் இயற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மேலும் முதல்வர் பன்னீர்செல்வம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தான் துவக்கி வைப்பேன் என்று அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மதுரைக்கு கிளம்பி சென்றார் பன்னீர்செல்வம். ஆனால் அலங்காநல்லூர் கிராம மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மக்கள் விரும்பும் போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அவசரச் சட்டம் நாளை கூடும் சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவாக தாக்கல் செய்யப்படும். தமிழக அரசு எடுக்கும் சட்டத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்’, என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்ப்பால் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிவிட்டார். ஆனால் இன்று சென்னை மட்டுமல்லாமல் அலங்காநல்லூரில் பொதுமக்கள் மீது போலீஸ் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும் பன்னீரை அவமானப்படுத்திய அலங்காநல்லூரில் கடும் தாக்குதல் நடந்திருப்பது பழிதீர்க்கும் படலமாகவே போராட்டக்கார்களால் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment