Tuesday 24 January 2017

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 3-ம் எண் காரர்கள். `3′ என்ற எண் சக்தியைக் குறிக்கும். இந்த எண்ணுக்கு உரிய நாட்களில் பிறப்பவர்களில் பெரும்பாலோர் தலைவர்களாகப் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களுடைய பரோபகார சிந்தையும், தேச முன்னேற்றத்திலுள்ள ஆர்வமுமேயாகும். தியாகி களும், தேசாபிமானிகளும், கப்பற்படை முதலான மிதமிஞ்சின கட்டுப்பாடுடைய ஸ்தாபனங்களின் தலைவர்களும் இவ்வெண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர் களாகக் காணப்படுவர். இன்னும் சில அன்பர்கள், வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியராகவும் இருப்பார்கள்.
3-ம் தேதியில் பிறந்தவர்கள்: நல்ல சிந்தனா சக்திகள் உடையவர்களாக இருப்பர். இவர்கள் தெய்வ பக்தியை வளர்த்துக்கொள்வதுடன், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். கலைகளை ரசிப்பார்கள்.  வாழ்க்கை கௌரவமாகவும், உயர்வாகவும் அமையும். மத்திம வயதுக்கு மேல் புகழ் உண்டாகும்.
12-ம் தேதியில் பிறப்பவர்கள்: தன்னலம் இல்லாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவர். வாழ்க்கையே உலக நன்மைக்கான தவமாகத் திகழும். பொதுக் காரியங்களில் ஈடுபட வேண்டும். தியாகிக்கான குணங்களெல்லாம் பிறவிலேயே அமைந்திருக்கும். இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.   
21-ம் தேதி பிறந்தவர்கள்: ஓரளவு சுயநலத்துடன் நடந்துகொள்வார்கள். தாங்கள் செய்யும் தியாகத்துக்குப் பலனை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பொது அறிவை வளர்த்துக்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். செய்தியாளர் களாகவும், உலகத்தவரின் அபிப்ராயங் களை மாற்றி அமைப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், மன வலிமையால் முன்னேறுவார்கள்.
30-ம் தேதி பிறந்தவர்கள்: தீர்க்க சிந்தனையுடன், நுட்பமான அறிவும் கொண்டிருப்பார்கள். எதையும் தன் விருப்பப்படியே செய்வார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில் வல்லவர்கள் என்பதால், இவர்கள் பெரும்பாலும் உளவுத் துறைகளில் பணி செய்வார்கள். மிகுந்த துணிச்சலும் நெஞ்சழுத்தமும் கூடிய இவர்கள் தோல்வியைக் கண்டு கலங்கமாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள், தங்களுடைய ஆற்றலை முழுவதும் பயன்படுத்துவார்கள்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 3,9,12,18,21,27,30 தேதிகள் மிகுந்த நன்மை தரும். முக்கிய மான காரியங்களை இந்தத் தேதிகளிலேயே ஆரம்பிக்கவும். நீடித்து பலன் தர வேண்டிய காரியங்களை தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 3 அல்லது 9 எண் வருவதாக உள்ள தினங்களில் தொடங்கலாம்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: 6,15,24 தேதிகள், சில நேரங்களில் சாதகமாகத் தோன்றிப் பின்னர் தீமை விளைவிக்கும். இத்தேதிகள் தடங்கல்களையும், சிரமங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும். தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 6 வரும் தினங்களில் பெரிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் சிவப்பு மற்றும் செந்நிறம் இவர்களுக்கு நன்மை தரும். மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த வண்ணங்களும் நன்மை தரும். கருநீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை ஆகியவை தவிர்க்க வேண்டிய நிறங்கள் ஆகும்.
அதிர்ஷ்ட ரத்தினம்: புஷ்பராகம்
வழிபடவேண்டிய தெய்வம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி

வழிபடவேண்டிய தலம்: ஆலங்குடி

(தொடரும்......)


No comments: