Sunday, 22 January 2017

மும்பை, டெல்லி, குஜராத்தில் சீறி எழும் காளைகள் : வாய்பிளக்குது வடமாநிலம்


தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது.
இளைஞர்கள், பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு வெளி மாநிலங்களிலும் தீயாக  ஆதரவு பெருகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று காந்தி சிலை அருகே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில்,
இன்று மும்பையில் போராட்டம் நடந்தது. அங்கு வசிக்கும் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய அவர்கள், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனக்கூறினர்.
பீட்டா அமைப்புக்கு எதிரான பதாகைகளுடன் வந்த அவர்கள் அந்த அமைப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக டில்லியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் உலக அளவில் மட்டும் அல்லாமல். முதலில் பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கா்நாடகா போன்ற மாநிலங்களில் தமிழா்களுக்கு ஆதரவாக நடந்து.
இதனைத் தொடா்ந்து போராட்டம் டெல்லி, மும்பை, குஜராத் என விரிவடைந்துள்ளது. தமிழகத்தில் நடைப்பெற்று வரும் இளைஞா்களின் போராட்டம் வட மாநிலங்களிலும் தொடருது.
இதனைக்கண்டு வடமாநிலங்கள் வாய்பிளந்த பார்த்துக் கொண்டு இருக்கிறது.

No comments: