Sunday 29 January 2017

சாத்துக்குடி

நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது கையோடு வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்குத்தான் முதல் இடம். அந்த அளவுக்கு ஊட்டச்சத்துக்களைக் கொண்டது சாத்துக்குடி.
செரிமான மண்டலத்தைத் தூண்டக்கூடிய ஃபிளவனாய்ட், சாத்துக்குடியில் அதிக அளவில் உள்ளது. இதனால் வயிறு மற்றும் செரிமானக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. மலமிளக்கியாக மட்டுமல்லாது வயிற்றுப்போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செரிமானக் குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்கலாம்.
sat
இதில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. சாத்துக்குடியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதில் உள்ள லெமனாய்ட்ஸ் என்ற ரசாயனம் பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
untitled
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் எடை குறையும். மேலும் கொழுப்பைக் குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இதில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. இருப்பினும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சருமத்துக்கு இயற்கைப் பொலிவை தருகிறது. இதனால் தோல் சுருக்கம் உள்ளிட்ட சருமப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

No comments: