நெடுவாசலுக்கு ஆதரவாக சேலத்தில் ஒன்றினைந்த மாணவர்கள் சுற்றி வளைத்த போலீஸ்!

புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், பல்வேறு அமைப்பினரும் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயத்தை பாதிக்கும் மத்திய அரசின் இந்த திட்டத்தை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேலத்தில், தமிழ்நாடு மாணவ- இளைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவ மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்த மாணவ மாணவியர்களை காவல்துறையினர் வழியிலேயே மறித்து சுற்றி வளைத்து கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.
இதனையடுத்து மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை நிறுத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அவர்கள் கூறும் போது, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் இந்த திட்டத்தை நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், ஜல்லிக்கட்டுக்காக நடத்தபட்ட போராட்டத்தை போன்று இந்த போராட்டமும் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
மாணவ மாணவியர்களின் திடீர் போராட்டம் மற்றும் காவல்துறையினரின் கைது நடவடிக்கையினால் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி : லைவ்டே
No comments:
Post a Comment