Monday, 20 March 2017


வித்தியாசமாக வேட்பாளர் தேர்வு! ஜல்லிக்கட்டு இளைஞர்கள் கட்சி அசத்தல்! அனல் பறக்கும் ஆர்.கே.நகர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
ஜல்லிக்கட்டு புரட்சியில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ‘‘என் தேசம் என் உரிமை’’ என்ற கட்சியை துவங்கி செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, திமுக, தீபா என கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் என் தேசம் என் உரிமை கட்சியும் களம் இறங்குகிறது. அதற்கான வேட்பாளரையும் அறிவித்துள்ளனர். வேட்பாளர் தேர்வையே வித்தியாசமாக செய்திருக்கிறார்கள்.
அதாவது ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கருத்து மற்றும் அவர்கள் அளித்த மதிப்பெண் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இதில், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயந்திசந்திரன் என்பவர் தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு எம்.ஏ., பட்டதாரி ஆவார்.
மேலும் ஆர்.கே.நகர் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி கற்று கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
ஜெயந்திசந்திரனுக்கு திருமணமாகி சந்திரன் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். வரும் 22ம் தேதி வேட்புமனு செய்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இளைஞர்கள் கட்சியும் இறங்கியிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.
நன்றி : லைவ்டே

No comments: