தனது நன்மைக்காக இந்தியாவை பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா!

வேற்று நாட்டவர்களை விரட்டும் பண்பு கொண்ட டொனால்டு டிரம்ப் இந்தியாவை மட்டும் ஆதரிக்கிறார்.
ஏன் என்றால் இந்திய நிறுவனங்களும், அறிவு ஜீவிகளும் அமெரிக்காவின் நன்மைகளுக்காக பாடுபடுகிறார்களாம்.
இதுகுறித்து தி இந்து ஆங்கில இதழில் வெளியான ஒரு கட்டுரை. “ டிரம்ப் நிர்வாகம் இந்திய அரசுக்கு சாதகமானதாக இருக்கும்” என அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவரும், டிரம்ப் ஆதரவாளருமான Mukesh Aghi தெரிவித்துள்ளார். “ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் உதவி அமெரிக்காவிற்கு தேவைப்படுவதாக” அவர் கூறியுள்ளார். “இந்தியா அமைந்துள்ள நிலப்பகுதி எப்போதும் பரபரப்பு மிகுந்ததாகவே உள்ளது.
இதனால் அமெரிக்காவின் உதவியும் இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. இரண்டு விசயங்கள் இந்தியா –அமெரிக்கா உறவை தீர்மானிக்கின்றன. முதல் ஒன்று இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தி அமெரிக்காவிற்கு நன்மை தருகிறது. இரண்டாவது, இந்தியாவின் ராணுவ வலிமை அமெரிக்காவிற்கு சாதகமாக இருக்கிறது.
அமெரிக்கா வலிமையாக இருப்பதை மோடி நிர்வாகம் விரும்புகிறது. மோடி மற்றும் டிரம்ப் ஆகியோர் அமெரிக்காவில் செயல்படும் இந்திய ஐ.டி நிறுவனங்கள் அமெரிக்கர்களை அதிகமாக வேலைக்கு அமர்த்துவதை விரும்புகின்றனர்.
இந்த கூட்டணி புதிய உச்சத்தை எட்டும். இந்த ஆண்டின் கடைசியில் மோடியும், டிரம்பும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கூட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் இருந்தபடி செய்து வருகிறார். இந்த கூட்டத்தில் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை சார்ந்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
மேக் இன் இந்தியாவும், அமெரிக்க பொருட்களை வாங்கு என்ற முழக்கமும் வேறு வேறாக தெரிந்தாலும், இந்த இரண்டிற்குள்ளும் வேறுபாடுகள் இல்லை. அடிப்படையில் ஒன்றை ஒன்று ஆதரிக்கிறது. மேக் இன் இந்தியா என்பது உள்ளூர் சந்தைக்கானது. இந்தியா மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு அல்ல.
மருந்துத் துறையில் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்க முடியும். இந்திய மருத்து தயாரிப்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களின் செலவுகளை குறைக்கின்றன. டிரம்ப் இந்த விலை குறைப்பை ஆதரிக்கிறார். அந்த விசயத்தில் டிரம்ப் இந்திய கம்பெனிகளை ஆதரிக்கிறார்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி: லைவ்டே
No comments:
Post a Comment