Sunday, 19 March 2017

யோகி ஆதித்யாநாத் உ.பி.முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்!



5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பா.ஜ.கவின் யோகி ஆதித்யாநாத் உத்தரப்பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருடன் 46 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆளுநர் ராம் நாயக் லக்னோ ஸ்மிருதி உப்வான் பூங்காவில் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்களில் 6 பேர் பெண்கள். அமைச்சர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரரான மொஹ்ஷின் ரஸா மட்டும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: