Friday, 24 March 2017

அப்படிப்போடு, பொது இடங்களில் துப்பினால் ரூ.5000 அபராதம் – இந்தியா வல்லரசு ஆயிடும்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அரசு அலுவலகங்களின் செயல்பாடு குறித்து பார்வையிட்ட யோகி, தலைமை அலுவலகத்தின் சுவர்களில் இருந்த பான் மசாலா, புகையிலை பயன்படுத்தி துப்பிய கறைகளை கண்டு முகம் சுளித்தார்.
இதனையடுத்து, அவர் அலுவலக பணியின் போது பான், புகையிலையை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். யோகி அரசின் இந்த அதிரடி உத்தரவை, உத்தரகண்டின் திரிவேந்திர சிங் ரவாத் தலைமையிலான அரசு கடுமையாக பின்பற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் பான் மசாலா, புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் கடந்த நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட புகையிலை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரூ.5000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பேசிய நகர மேம்பாட்டு துறை அதிகாரி ஒருவர் தற்போதைய பாஜக அரசு அனைத்து மாநகராட்சிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து அறிவுறுத்தி வருகிறது.
இதனால், பான், புகையிலை போன்றவற்றால் சுற்றுப்புற சீர்கேடு உருவாக்குவோர் மீது ரூ.5000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த செயல் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

No comments: