15 நாட்களில் சிவப்பான தோற்றம் பெற வேண்டுமா
இன்றைய காலகட்டத்தில் பலரும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அது உடல் ஆரோக்கியமாகட்டும் அல்லது அழகு பராமரிப்பாகட்டும்,அதற்கான இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு காரணம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல்கள் தான் காரணம்.

கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால்,பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இதனால் இத்தலைமுறையினர் இயற்கை அழகின் மீது அதிக அக்கறையைச் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வெள்ளையான உடலை பெற அதிகம் விரும்புகின்றனர்.
உடல் வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம்.
எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய்
இம்முறை கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை நீக்க சிறந்த வழி. எலுமிச்சை சாற்றில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளி, முகப்பரு போன்றவை மறைந்துவிடும்.

தேன் + பட்டை பொடி
தினமும் பட்டை பொடியை தேன் உடன் கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 14 நாட்கள் செய்து வந்தால், உங்கள் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
புதினா + வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காய் சாறு மற்றும் புதினா சாற்றினை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தினமும் செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

லெட்யூஸ் + கேரட் ஜூஸ்
லெட்யூஸ் மற்றும் கேரட்டை சாறு எடுத்து ஒன்றாக கலந்து, கை, கால், முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருமை நீங்கி சருமம் நன்கு பொலிவடையும்.
சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர்
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி கை, கால், முகத்தை துடைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும். இம்முறைகளை தொடர்ந்து செய்யும் போது விரைவில் நல்ல பலனை அடைவீர்கள். இங்கு கொடுக்கப்பட்ட அனைத்துக் குறிப்புகளும் பயன்படுத்தி வெண்மயான நிறத்தை விரைவில் அடையலாம்
இன்றைய காலகட்டத்தில் பலரும் இயற்கை வழிகளைத் தான் நாடுகின்றனர். அது உடல் ஆரோக்கியமாகட்டும் அல்லது அழகு பராமரிப்பாகட்டும்,அதற்கான இயற்கை வழிகள் என்னவென்று தான் தேடுகிறோம். இதற்கு காரணம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல்கள் தான் காரணம்.
கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால்,பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. இதனால் இத்தலைமுறையினர் இயற்கை அழகின் மீது அதிக அக்கறையைச் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வெள்ளையான உடலை பெற அதிகம் விரும்புகின்றனர்.
உடல் வெள்ளையாகவும், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றை நீக்கவும் ஒருசில இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம்.
எலுமிச்சை சாறு + வேர்க்கடலை எண்ணெய்
இம்முறை கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருவை நீக்க சிறந்த வழி. எலுமிச்சை சாற்றில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளி, முகப்பரு போன்றவை மறைந்துவிடும்.
தேன் + பட்டை பொடி
தினமும் பட்டை பொடியை தேன் உடன் கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி இரவில் படுக்கும் முன் தடவி மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 14 நாட்கள் செய்து வந்தால், உங்கள் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
புதினா + வெள்ளரிக்காய் சாறு
வெள்ளரிக்காய் சாறு மற்றும் புதினா சாற்றினை ஒன்றாக கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தினமும் செய்து வர, நல்ல மாற்றம் தெரியும்.
லெட்யூஸ் + கேரட் ஜூஸ்
லெட்யூஸ் மற்றும் கேரட்டை சாறு எடுத்து ஒன்றாக கலந்து, கை, கால், முகத்தில் தினமும் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருமை நீங்கி சருமம் நன்கு பொலிவடையும்.
சிட்ரஸ் பழச்சாறு + தண்ணீர்
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, காட்டன் பயன்படுத்தி கை, கால், முகத்தை துடைத்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும். இம்முறைகளை தொடர்ந்து செய்யும் போது விரைவில் நல்ல பலனை அடைவீர்கள். இங்கு கொடுக்கப்பட்ட அனைத்துக் குறிப்புகளும் பயன்படுத்தி வெண்மயான நிறத்தை விரைவில் அடையலாம்
No comments:
Post a Comment