Sunday, 26 March 2017

அரசியல்வாதிகளை மிஞ்சிய ரஜினி -“என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை சந்தித்து…

Want create site? Find Free WordPress Themes and plugins.
ரஜினி 2.0 படத்தில் லைக்கா ப்ரொடக்ஷனில் நடிக்கிறார். சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 150 வீடுகள் வழங்குவதாக இருந்த விழாவிற்கு, நம்ம கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆச்சே என்று சும்மா இல்லாமல் ரஜினியை,’ தமிழ் மக்களுக்காக நான் இலங்கையில் கட்டியிருக்கிற வீட்டை நீங்க திறந்து வைங்க’ என்று சொல்லவும், இவரும் ஓகே என்றுவிட்டார்.
அப்புறம் பார்த்தால், திருமாவளவன், வேல்முருகன்,வைக்கோன்னு எல்லோரும் அங்கிட்டு போகாதீங்க ன்னு சொல்லவும், இன்னிக்கு ரஜினி ஒரு அறிக்கை விட்டு பயணம் ரத்து.
அதில சொல்லி இருக்கிற விஷயம் தான் வேடிக்கை.
நான் ஏன் போகணும்ன்னு நினைச்சேன் தெரியுமா?
“இந்த 2.0 படம் எடுத்து, அதன் மூலம் ராசபக்சேவுக்கு வேண்டியவர் என்று கருதப்படும் 2.0 ப்ரொடியூசர் சுபாஷ்காரன் அறிமுகமாகும் வரை ரஜினிக்கு இலங்கை சென்று இப்படி பார்க்கவேண்டும் என்று ஆசை இல்லாதது போலவும்,
அவர் கூப்பிட்டவுடன் தான் இந்த ஆசை வந்தது போலவும்,
எல்லாத்தையும் தமிழ் மக்கள்கிட்ட, மக்களை விடுங்க ஜி…தன் ரசிகர்கள்கிட்ட பகிர்ந்துகொள்ளுகிற மாதிரியும், அது போலவே இந்த பயணத்தையும் பகிர்ந்துகொள்ள நினைத்தது போலவும்…
ஆஹா, அரசியல்வாதிகளை மிஞ்சிட்டீங்க தலைவா” என்று ஒரே கமெண்ட்.
அடுத்தமுறை நான் போகணும்ன்னா…நீங்க யாரும் தடுக்காதீங்கன்னு சொல்லியிருக்கார். யப்பா, டிராவல் விசால்ல போய் சுத்தி பார்க்கப்போற ரஜினியை தடுத்திடாதீங்கப்பு…என்றெல்லாம் கமெண்ட்ஸ்.
ரஜினி என்ன பண்ணாலும் செய்திதான்…நமக்கு!

No comments: