பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி ‘‘அரசியல் வியாதிகள்’’ வெளுத்து வாங்கிய நிர்மலா!
Want create site? Find Free WordPress Themes and plugins.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலாவின் பதவி ஆசையால் ஓபிஎஸ் அணி, சசி அணி என இரண்டாக பிரிந்தது. இதில் பலர் சசி அணியிலிருந்து பிரிந்து ஓபிஎஸ் அணிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் சசிகலா தரப்பு அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் மோதல் வெடித்துள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியிருக்கிறார். இதனால் ஆவேசமடைந்த பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நிர்மலா பெரியசாமியை கடுமையாக திட்டியுள்ளனர்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சி நிர்மலா பெரியசாமி அளித்த பேட்டியில், சசி அணியில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் சேரப் போவதாக தெரிவித்தார்.
மேலும், சொந்த தொகுதியை தக்க வைக்க வக்கில்லாதவர் வளர்மதி. அதிமுகவை விட்டு என்னை வெளியே போக சொல்ல வளர்மதி யார்? இவர்களை போன்ற போலி அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் போராடியது போல், இந்த மாதிரி போலி அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற மாணவர்கள் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பா.வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி இவர்களெல்லாம் ஒரு அரசியல்வாதியா, அரசியல்வியாதிகள் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு சசி அணியிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment