ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்திடுகிறது மத்திய அரசு : பயனற்றுப் போன நெடுவாசல் போராட்டம்…!
Want create site? Find Free WordPress Themes and plugins.
தமிழகத்தில் நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை என 31 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திடுகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் நாடு முழுவதிலும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இருப்பது தெரியவந்தது. மேலும் இயற்கை எரிவாயு, மீத்தேன், தார், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் இருப்பதாகத் தெரியவந்தது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த கனிம வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டாலும் அரசியல் மற்றும் பல்வேறு காரணங்களால் முந்தைய மத்திய அரசுகள் அவற்றை எடுப்பதற்கான திட்டத்தை முன்னெடுக்காமல் இருந்தன.
ஆனால், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இயற்கை எரிவாயுக்களை எடுக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், காரைக்கால் மற்றும் அசாமில் 9 இடங்கள், குஜராத்தில் 5 இடங்கள், ஆந்திராவில் 4, ராஜஸ்தானில் 2, மும்பை கடல்பகுதியில் 6, மத்தியப் பிரதேசம், கட்ச் கடல்பகுதி, கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து கடந்த 22-ம் தேதி நெடுவாசல் போராட்டக் குழு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடனான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது.
எனினும் துரப்பன பணிகள் தொடங்குவதற்கு முன்பான இறுதி ஒப்பந்தம் இது இல்லை எனவும் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு உட்பட 30 வகையான அனுமதியை ஒப்பந்ததார நிறுவனங்கள் மாநில அரசிடம் பெற வேண்டும் எனவும் பெட்ரோலியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment