மீனவரை சுட்டு கொன்ற சிங்கள கடற்படை! டிஜிபி எடுத்த அதிரடி ஆக்ஷன்!

கடந்த 6ம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் 300 படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
இந்திய கடல் எல்லையான ஆதம்பாலம் என்ற பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்கள கடற்படை மீனவர்கள் மீது சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ (22) என்ற மீனவர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆபத்தான நிலையில் கரைக்கு திரும்பிய போது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் மற்றொரு மீனவரான சரோன் காயமடைந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற சிங்கள கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தமிழக கடலோர காவல் படை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment