Sunday, 26 March 2017

மக்களின் எதிர்ப்பால் தெறித்து ஓடிய அமைச்சர் விஜயபாஸ்கர்…! ஆட்சியாளர்கள் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் ஆர்.கே.நகர் மக்கள்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.
ஒரு தனியார்  தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது மக்கள் கொந்தளித்ததால் அமைச்சர் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடியதோடு நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், உங்கள் (ஆர்.கே.நகர் மக்கள்) வாக்கு யாருக்கு? என்ற தலைப்பில்  தனியார் தொலைக்காட்சி மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடத்தியது.
சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி(ஓபிஎஸ் அணி) சார்பில் கே.பாண்டியராஜன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச ஆரம்பித்ததும் பார்வையாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் அரங்கை விட்டு வெளியேறினர்.
மீதமிருந்தவர்களும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சர் தனது பேச்சின்போது சசிகலா, தினகரன் பெயர்களை உச்சரித்ததும் உச்சகட்ட கொந்தளிப்பை அடைந்த மக்கள், நாற்காலிகளின் மீது ஏறியும் அமைச்சரின் பேச்சை நிறுத்துமாறும் முழங்கினர்.
Video Player
00:00
01:35
ஆனால், மக்கள் மன்றம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு சற்றும் செவி சாய்க்காமல் அமைச்சர், மக்கள் விரும்பாத ஒன்றை தொடர்ந்து பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடுமையாக கூச்சலிட்டனர். நாம் பேசுவதை யாருமே கேட்கவில்லையே என்ற எண்ணம்கூட இல்லாமல் அமைச்சர் தொடர்ந்து பேசினார்.
மக்களின் எதிர்ப்பை அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுமை காக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது பேச்சை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புக் குரலை உச்சகட்ட சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
மக்களின் எதிர்ப்பை அடுத்து அரங்கை விட்டு வெளியேறினால் போதும் என்ற எண்ணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெறித்து ஓடினார். இதையடுத்து மக்கள் மன்றம் நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் எந்த அளவிற்கு கோபமாக இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்விலிருந்து தெரிகிறது. ஆட்சியாளர்கள் மீதான மக்களின் உச்சகட்ட அடக்க முடியாத கோபத்தின் வெளிப்பாடே இந்த கொந்தளிப்பான கோஷங்கள். இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எதிர்ப்பு.
ஆர்.கே.நகர் மக்கள் தினகரன் சார்ந்துள்ள அணியைச் சேர்ந்தவருக்கு அதுவும் ஒரு அமைச்சருக்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சசிகலா மற்றும் தினகரன் பெயரை உச்சரிக்கும்போது கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
வேட்பாளர் பெயரைக்கூட தொகுதிக்குள் அவர்கள் சார்ந்த அணியினரை மக்கள் பயன்படுத்த விடவில்லை என்கிறபோது தினகரன் எப்படி அந்த தொகுதியில் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

No comments: