அடுத்த மெரினாவாகும் ஜந்தர்மந்தர்.. அதிரபோகும் டெல்லி.. படையெடுக்கும் ஜல்லிக்கட்டு இளைஞர்கள்..
Want create site? Find Free WordPress Themes and plugins.
விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 14வது நாளாக இன்றும் தொடர்கிறது.
விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து மனு அளித்தனர். அதே போல தமிழக எம்.பிக்களும் ஆதரவு அளித்து உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக அரியானா மாநில விவசாயிகளும் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக கைகோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று தமிழக விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எலியை வாயில் கவ்வியபடியும், மண்டை ஓடுகளை வைத்து கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர். இதற்கிடையில், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தமிழக இளைஞர்கள் பலரும் டெல்லி ஜந்தர்மந்தரை நோக்கி படையெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் மெரினா போராட்டத்தை போல விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல உள்ளது. இதன் மூலம் மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் டெல்லி ஜந்தர்மந்தரை அதிர வைக்க போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
No comments:
Post a Comment