தாமிரபரணியை காக்க போராட்டம் அவசியம்! நல்லகண்ணு ஆவேசம்!

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுத்து கொள்ள அனுமதியளித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உயர்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்யக்கோரியும் பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், தாமிரபரணி தண்ணீரை காக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் நெல்லையில் போராட்டம் நடைபெற்றது.
வறட்சி நிலவும் நேரத்தில் வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு, தாமிரபரணி தண்ணீரை விற்பது கண்டிக்கத்தக்கது.
குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீரை வழங்கும் ஒப்பந்தத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment