Sunday, 19 March 2017

‘‘காபி வித் எம்.எல்.ஏ.’’ அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி! அறப்போராட்ட இளைஞர்கள் அதிரடி!

ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பிறகு இளைஞர்களால் தமிழகம் புதிய பாதையை நோக்கி பயணித்து வருகிறது. இனியும் அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. நாமே களத்தில் இறங்கினால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு இளைஞர்கள் வந்துவிட்டனர்.
இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காபி வித் எம்எல்ஏ என்ற வினோத நிகழ்ச்சிக்கு அறப்போராட்ட இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு நல்லுறவு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் போல முகமூடி அணிந்து கொண்டு இளைஞர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் கேள்வி கேட்பது போலவும், காபி அருந்துவது போலவும் இளைஞர்கள் நடித்து காட்டினார்கள்.
வாக்களித்த மக்கள் எம்எல்ஏக்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அதேபோல் தேர்தல் நேரத்தில் மக்களை தேடி வரும் எம்எல்ஏக்கள் அதன்பிறகு கண்டு கொள்வதே இல்லை. எம்எல்ஏக்களும் மக்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் நடந்த அரசியல் கூத்துக்கள் நிகழ்ச்சியின் கருவாக அமைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட நிகழ்ச்சிகள் இனி மாவட்டங்கள் தோறும் நடத்துவதற்கு முயற்சி எடுத்து வருவதாக அறப்போராட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதிகளை வறுத்தெடுத்தனர் இளைஞர்கள். எம்எல்ஏக்கள் போன்று முகமூடி அணிந்திருந்த இளைஞர்கள் அவர்களை போலவே பதில் கூறியதை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்.

No comments: