3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தந்தை!
Want create site? Find Free WordPress Themes and plugins.
தன் மனைவி கண் முன்னே பெற்ற குழந்தையை தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெர்த் நகரை சேர்ந்த ஹெர்பர்ட் குடி பழக்கம் உடையவர். இவருக்கு 7 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று பகல் முழுவதும் அளவுக்கு அதிகமாக குடித்த அவர், பின்னர் கஞ்சா புகைத்துள்ளார். குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றிய ஹெர்பர்ட் , பின்னர் தனது 3 வயது குழந்தை மீது நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் என்பவர் குழந்தைகளை மீட்டுள்ளார். அப்போது, குழந்தை அழகாக உள்ளதால் கொளுத்தினேன், அது என் குழந்தை என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று ஹெர்பர்ட் திமிறாக பதில் கூறி இருக்கிறார். குழந்தையின் முகம் மற்றும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்ட நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ஹெர்பர்ட்டை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment