Thursday, 16 March 2017

நாட்டு மாட்டை காக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு..! அசத்தியது இளைஞா்கள் போராட்டம்..!


தமிழக இளைஞா்களின் போராட்டம் பட்ஜெட்டையும் பாதித்துள்ளது என்பதுதான் மறுக்க முடியாது உண்மை.
இதுவரை தமிழகத்தில் நடந்த  பட்ஜெட் தாக்கலில் இலவச மாடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது  நாம் இதுவரைப் பார்த்திருப்பபோம்.
ஆனால் தமிழக வரலாற்றில் நாட்டு இன மாடுகளை பாதுக்காக்க நிதி ஒதுக்கீடு செய்தது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளா்கள் கூறுகின்றனா்.
தமிழக அரசின் 2017 – 18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். முன்னதாக சசிகலா, தினகரன் பெயர்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று  கோரி திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடும் அமளிக்கு இடையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
தமிழகத்தின்  நாட்டு  இன மாடுகளான காங்கேயம், பர்கூர், உப்பளஞ்சேரி இன மாடுகளை பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும். உள்ளூர் இனமான புலிகுளம் மற்றும் ஆலம்பாடி பேன்ற இதர இனங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2017-18 ஆண்டில் 25 கால்நடை கிளை மையங்கள் தரம் உயர்த்தப்படும் புதிதாக 25 கால்நடை கிளை மையங்களும் அமைக்கப்படும். 2017-18 ஆண்டில் ஏழை பெண்களுக்கு 12 ஆயிரம் கறவை பசுக்கள் வழங்கப்படும்.
1.50 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளும் வழங்கப்படும்.  இலவச ஆடு மாடுகள் வழங்க 182 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடும் செய்யபட்டுள்ளது.
நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம் கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ25 கோடி நிதி, மதுரையில் 40 கோடி செலவில் 25 ஆயிரம் லிட்டர் கொள்ளவு திறன் கொண்ட நறுமண பால் தயாரிக்கும் மற்றும் புதிய உயர் வெப்பநிலையில் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும்.
ஆவின் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும் இவ்வாறு அமைச்சா்நி ஜெயக்குமார் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார்.
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இளைஞா்கள் போராடுகிறார்கள் என்பதற்காக, 8ம் நாள் போராட்டத்தில் போலீசாரை வைத்தே வன்முறையை ஏற்படுத்தி, இளைஞா்களை அடித்து விரட்டிய அரசு, இப்போது இளைஞா்களின் கோரிக்கையான நாட்டு இன மாடுகளை பாதுக்காக்க நிதி ஒதுக்கியுள்ளது.
இது ஆா்.கே.நகா் இடைத் தோ்தலில் இளைஞா்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு நடந்துள்ள சம்பவம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நல்லது செய்தாலும் சந்தேகப்படுகிறார்களே என்ன கொடுமை சார் இது?

No comments: