Saturday, 11 March 2017

அமானுஷ்ய அதிர்ச்சியூட்டும் சுற்றுலாத்தளங்கள்



சுற்றுலாத் தளங்கள் பெரும் பாலும் அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். ஆனால் சில இடங்களைப்பற்றி சொல்லப்படும் கதைகள் உண்மையாகவே பயமுறுத்துபவை. அப்படி அமானுஷ்ய கதைகள் சொல்லப்படும் சில அழகிய சுற்றுலாதளங்களுக்கு ஒரு திகில் பயணம் செல்லலாம் வாருங்கள்... 

ராஜஸ்தானில் உள்ள பங்கார்க்ஹ் கோட்டை என அழைக்கப்படும் இந்த நகரில் சூரியன் மறைந்த பிறகு யாரும் செல்வதில்லையாம். அக்பருடைய இளைய சகோதரரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. இரவு நேரங்களில் சுற்றுலாப்பயணிகள் அவ்வபோது கோட்டைக்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லையாம். 

ராஜஸ்தானில் உள்ள குல்தாரா எனும் சுற்றுலாத்தளம் ஒரு காலத்தில் ராஜஸ்தானின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால் திடீரென ஓர் இரவில் அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு, வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்கள். 

புது டில்லியில் உள்ள ஆக்ராசென் கி பவோலி மகாபாரதகாலத்தில் ஆக்ராசென் என்னும் பேரரசனால் கட்டப்பட்டதாகவும் பின்னர் 14ஆம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதாகவும் கூறப்படும் இந்தக்கட்டிடம் காலப்போக்கில் அதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது. இந்த இடத்தில் உள்ள கிணத்தடி பகுதியில் என்னவென்று தெரியாத கருப்பு நிறமான நீர் ஊறியதாகவும், இந்த வழியாக வரும் பயணிகள் அதை அருந்திய போது மயங்கி தற்கொலை செய்துகொண்டதாகவும் இந்த இடத்தைப்பற்றிய ஒரு கதை உலாவுகிறது. 

மைசூர் அருகே குக்கரஹல்லி ஏரிக்கு அருகில் தனியாக பயணிப்பவர்கள் ஒரு வித அமானுஷ்யத்தை உணருகிறார்களாம். அருமையான இயற்க்கை காட்சிகளை கொண்ட இந்த ஏரியை காண பல சுற்றுலாப்பயணிகள் வந்தாலும் அவர்கள் யாரும் சூரியன் மறைந்த பிறகு இங்கு இருப்பதில்லையாம்.

No comments: