Friday, 24 March 2017

பாகிஸ்தான் பாடகி, உபி முதல்வர் யோகிக்கு பாராட்டு! நவாஸ் ஷெரீப்புக்கே காயத்ரி மந்திரம் ஓதியவா்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் பாடகி நரோதா மாலினி.  இந்து மதத்தினை சேர்ந்த இவர், யோகி ஆதித்யநாத் முதல் மந்திரியானது உத்தர பிரதேசத்திற்கு நல்லது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் ராய்ப்பூர் நகரில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.  அவர் வாகா எல்லை வழியே இந்தியாவிற்குள் வந்தபொழுது, உத்தர பிரதேசத்தின் புதிய முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று கொண்ட செய்தியை அறிந்துள்ளார்.
கராச்சி நகரில் வசித்து வரும் இவர் கடந்த மார்ச் 15ந்தேதி ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பாடியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.  இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதுபற்றி கூறிய மாலினி, அதிக மதிப்புமிக்க இந்த மந்திரத்தினை உச்சரித்தது ஷெரீப்பிற்கு மன அமைதியை கொண்டு வந்துள்ளது.
இந்த மந்திரத்தினை கேட்டு கொண்டிருந்த அவர் வேறு உலகத்திற்கு சென்று விட்டார் என கூறினார்.  இந்தியாவை அதிகம் நேசிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments: