Want create site? Find Free WordPress Themes and plugins.
மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட மாடல் ஒருவர் கால் தெரியும் வகையில் சேலை அணிந்து ”ஜோடி” என்ற தெற்கு ஆசிய நாளிதழ் ஒன்றுக்கு போஸ் கொடுத்திருப்பது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த பத்திரிக்கையின் கவர் போட்டோவில் இருப்பவர் மாடல் தனுஷ்கா சுப்பிரமணியம். மணப்பெண் போல பட்டுப் புடவை உடுத்தி, நகைகள் அணிந்து, நிறைய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பேக்ரவுண்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், இந்த இதழின் அட்டையில் வெளியானது.
இந்த புகைப்படத்தில் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டவர், ஒரு புறத்தில் கால் முழுவதும் தெரிவது போல போஸ் கொடுத்து தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது உலக அளவில் இருக்கும் தமிழர்கள் மட்டுமில்லாமல், பண்பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இவர்கள், சமூக ஊடகங்களில் தங்களது வெறுப்பையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த இதழ் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
சிலர் , ”எந்த நாட்டில் மணப்பெண் இவ்வாறு சேலை அணிந்து இருக்கிறார். காட்டுங்கள் பார்க்கலாம்” என்று தங்களது பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலரோ, ”இது தமிழர்களின் பண்பாடு கிடையாது” என்று பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் , ”நீங்கள் ஆடை இல்லாமல் கூட இருங்கள் பரவாயில்லை, அதற்காக, பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழிக்க வேண்டாம்” என்று திட்டி கிழித்துள்ளனர்.மேலும், ”ஜோடி இதழின் மணப்பெண் ஷோவை புறந்தள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.
இதற்கு எதிர்மறையாக ஒரு சிலர், ”இந்த ஷோவுக்கு பின் இருக்கும் உழைப்பு பற்றி தெரிந்து கொள்ளாமல், ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு எதற்கு,எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று ஆதரவாகவும் பதிவிட்டுள்ளனர்.
#JodiBridalShow2017 என்ற தலைபில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், நன்றி தெரிவித்து பதிவிட்ட ஜோடி நாளிதழ் , மாற்றத்துக்கு தயாராகுங்கள் என்று தைரியமாக, செய்தியை அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment